அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, November 21, 2017

துணிச்சல் மிக்க இறைப்பணியாளர்களாய் வாழ்வோம்!

துணிச்சல் மிக்க இறைப்பணியாளர்களாய் வாழ்வோம்!

கப்பலில் முதன்முதலாகப் பயணம் செய்தார் ஒருவர். பரந்து கிடக்கும் கடலில் எப்பொழுது வேண்டுமானாலும் கப்பல் மூழ்கிவிடலாம், பயணம் வெற்றியாக அமைந்து ஊர் போய்ச் சேர்வோம் என்ற உறுதி யாருக்கும் இல்லை. கப்பலிலேயே எப்பொழுதும் பணிபுரிகின்ற மாலுமிகள் நிலை இதைவிட மோசம் என்று திகைத்தார் அவர்.

அங்கிருந்த மாலுமி ஒருவனை அழைத்த அவர், “உன் தந்தையார் என்ன பணிபுரிந்தார்?” என்று கேட்டார். “என் தந்தையாரும் என்னைப் போல கப்பலில் மாலுமியாகப் பணிபுரிந்தார். ஒருநாள் அவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கி மூழ்கியதால் அவர் இறந்துவிட்டார்” என்றார்.

“சரி, உன் தந்தையாரின் தந்தையார் என்ன செய்தார்?” என்று கேட்டார் அவர்.  “அவரும் மாலுமியாகத்தான் பணிபுரிந்தார். அவரும் கப்பலோடு மூழ்கி இறந்து போய்விட்டார்” என்று பதில் சொன்னான் மாலுமி. “என்ன? உன் தந்தையாரும் அவர் தந்தையாரும் கப்பலில் பயணம் செய்யும்போது இறந்து விட்டார்கள் என்கிறாய். நீயும், மாலுமியாக இருக்கின்றாய், கடலில் மூழ்கி இறந்துவிடுவோம் என்ற அச்சம் உனக்கு இல்லையா?” என்று கேட்டார்.

“உங்கள் தந்தை எப்படி இறந்தார்” என்று மாலுமி பதிலுக்கு அவரிடம் கேள்வியைக் கேட்டான். “படுக்கையில் படுத்திருக்கும்போது...” என்று பதிலளித்தார் அந்த மனிதர். “அவருடைய தந்தையார் எப்படி இறந்தார்” என்று கேட்டான் மாலுமி. “அவரும் படுக்கையில் படுத்திருக்கும்போதுதான் இறந்தார்” என்றார். “உங்கள் தந்தையாரும் அவர் தந்தையாரும் படுக்கையில் படுத்திருக்கும்போதுதான் இறந்து இருக்கின்றார்கள். நீங்கள் எப்படி அச்சமில்லாமல் படுக்கையில் படுத்து உறங்குகின்றீர்கள்” என்று கேட்டான் மாலுமி. அப்பொழுதான் அவருக்கு உண்மை புரிந்தது. உயிரை எப்பொழுதும் காப்பாற்றி வைக்க முடியாது. அது நம் உடலை விட்டு நீங்கியே தீரும். நமக்குரிய கடமைகளை செய்து கொண்டு அச்சமின்று வாழ்வதே மேலான வாழ்க்கை என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகள் போகும், வரும். அதற்காக உயிருக்குப் பயந்து அஞ்சி வாழாமல், துணிச்சலோடு வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டும் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் பரிசேயர் சில இயேசுவிடம் வந்து,  “இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கின்றான்” என்கின்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்” என்கிறார்.

பரிசேயர்களுக்கும் இயேசுவுக்கும் இடையே நடக்கக் கூடிய இந்த உரையாடல் நமக்கு ஒருசில உண்மைகளை எடுத்துக்கூறுகின்றது. அதில் முதலாவது உண்மை. பரிசேயர்களில் எல்லாருமே தீயவர்கள் கிடையாது என்பதே ஆகும். விவிலிய அறிஞராகிய வில்லியம் பார்க்லே ஏழு விதமான பரிசேயர்கள் இருப்பதாகச் சொல்வர். இந்த  ஏழு விதமான பரிசேயர்களில் ஒருசில நல்லவர்களும் இருந்தார்கள் என்பது உண்மை. சேற்றிலே பூத்த செந்தாமரை போன்று பரிசேயர்களிலும் நிக்கதேம் போன்ற நல்ல மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் ஆண்டவர் இயேசுவின்மீது தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர்கள்தான் இயேசுவுக்கு எதிராகச் சூழ்ச்சி நடப்பதை அறிந்து, அவரை அங்கிருந்து போகச் சொல்கிறார்கள்.

தன்னிடம் இவ்வாறு சொன்ன பரிசேயர்களிடம் இயேசு, இன்றும் நாளையும் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன; மூன்றாம் நாள் பணிகள் நிறைவுபெறும். இவற்றையெல்லாம் அந்த ஏரோது என்ற அந்த நரியிடம் போய் சொல்லுங்கள் என்கிறார். யூதர்களைப் பொறுத்தளவில் நரி என்பது தந்திரம் நிறைந்ததாகவும், விலங்குகளிலேயே மிக மோசமான விலங்காகவும், ஒன்றுக்கும் உதவாத விலங்காகவும் பார்க்கப்பட்டது. இயேசு ஏரோதை நரி என்று சொல்வதன் வழியாக அவன் தந்திரம் மிகுந்தவன், சூழ்ச்சிக்க்காரன் என்று யாருக்கும் பயப்படாமல், மிகச் துணிச்சலாக எடுத்துரைக்கின்றார். இங்கே இயேசுவிடம் விளங்கிய துணிச்சல், அதிகாரத்திற்கு அஞ்சாமல் உண்மையை எடுத்துரைக்கும் நிலை போன்றவை எல்லாம் நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

பணிவாழ்வில் ஈடுபட்டிருக்கக் கூடிய ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவைப் போன்று யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொல்லி, துணிச்சலோடு பணி செய்யவேண்டும் என்பது நியதியாக இருக்கின்றது.

எனவே, ஆண்டவருடைய பணியைச் செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நாம், இயேசு விட்டுச் சென்ற பணியை துணிச்சலோடு செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

No comments:

Post a Comment