அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, November 18, 2017

வாழ்வு விலைமதிப்பில்லாதது

வாழ்வு விலைமதிப்பில்லாதது - மத்தேயு நற்செய்தி 25: 14-30

தாலந்து என்பது நாணயம் அல்ல, அது எடையைக்குறிப்பதாகும். எனவே, நாணயம் வெள்ளியா, தங்கமா, செப்புக்காசா என்பதைப்பொறுத்து, அதன் மதிப்பு அமையும். பெரும்பாலும் வெள்ளிக்காசுகளைத்தான் எடைபோடுவார்கள். அப்படிப்பார்த்தால் ஒரு தாலந்தின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு தொழிலாளியின் 15 வருட உழைப்பால் பெற்ற வருமானத்திற்கு சமம். இந்த தாலந்து உவமையில், பூமிக்குள் புதைத்து வைத்த அறிவீனமான பணியாளர் பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் ஒப்பிடப்படுகிறார்.

எவ்வாறு அறிவீனனான பணியாளர் தான் பெற்றிருந்த அந்த தாலந்தை, மண்ணில் புதைத்து வீணாக்கினானோ, அதேபோல பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் சட்டத்தை ஒன்றுக்கும் பயனில்லாமல் மாற்றிவிட்டார்கள். சட்டத்தைக்காப்பாற்ற வேண்டும் என்ற போர்வையில், அதற்கு வேலிகளாக பல சட்டங்களை அமைத்து, அந்த சட்டத்தை முழுமையாகப்பயன்படுத்தாமல், தாங்களும் பயன்பெறாமல், மற்றவர்களுக்கும் பயனில்லாமல் மாற்றிவிட்டனர். இத்தகைய அறிவீனமான நிலையில் சட்டத்தைப்பேணிக்காக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்று இயேசு எச்சரிக்கிறார்.

இந்த தாலந்தை நமது வாழ்விற்கு ஒப்பிடலாம். வாழ்வு என்பது விலைமதிப்பில்லாத சொத்து. அந்த வாழ்வை நாம் இப்படித்தான் யாருக்கும் பயனில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் வாழ்வின் மகிமை, அதன் மகத்துவம் நமக்குத்தெரியவில்லை. வாழ்வின் மதிப்பை உணர்ந்து வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment