கல்லறை பேசினால்......
களை பிடுங்கப்பட்டு
படர்ந்த கொடி அகற்றப்பட்டு
உடைந்தவை செப்பனிடப்பட்டு
முழுவதும் வெள்ளையடிக்கப்பட்டு
பக்கத்து கல்லறை பஞ்சாயத்து முடிக்கப்பட்டு
மலர்களால் கல்லறை மறைக்கப்பட்டு
மெழுகு திரிகள் கட்டுகட்டாக எரிக்கப்பட்டு
ஊதுபத்திகள் சாம்பிராணிகள் நறுமணம் பரப்பப்பட்டு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் மாற்றப்பட்டு
சொந்தங்கள் நலம் விசாரிக்கப்பட்டு
பலி பூசை பக்தியாய் அனுசரிக்கப்பட்டு
திருவிழாவாம் திருவிழா......
கல்லறை திருவிழா முடிந்ததது
உறவே ? உயிரே ?
இனி என்று வந்து எனை சந்திப்பாய் ?
அடுத்த நாள் ?
அடுத்த வாரம் ?
அடுத்த வருடம் ?
உன் செபத்துக்காக தினமும் காத்திருக்கிறேன்.
களை பிடுங்கப்பட்டு
படர்ந்த கொடி அகற்றப்பட்டு
உடைந்தவை செப்பனிடப்பட்டு
முழுவதும் வெள்ளையடிக்கப்பட்டு
பக்கத்து கல்லறை பஞ்சாயத்து முடிக்கப்பட்டு
மலர்களால் கல்லறை மறைக்கப்பட்டு
மெழுகு திரிகள் கட்டுகட்டாக எரிக்கப்பட்டு
ஊதுபத்திகள் சாம்பிராணிகள் நறுமணம் பரப்பப்பட்டு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் மாற்றப்பட்டு
சொந்தங்கள் நலம் விசாரிக்கப்பட்டு
பலி பூசை பக்தியாய் அனுசரிக்கப்பட்டு
திருவிழாவாம் திருவிழா......
கல்லறை திருவிழா முடிந்ததது
உறவே ? உயிரே ?
இனி என்று வந்து எனை சந்திப்பாய் ?
அடுத்த நாள் ?
அடுத்த வாரம் ?
அடுத்த வருடம் ?
உன் செபத்துக்காக தினமும் காத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment