மன்னிப்போம்... மன்னிப்பை பெற்றுக்கொள்வோம்...
✠✠✠ ✠✠✠ ✠✠✠ ✠✠✠
துன்பங்களிலிருந்து நாம் விடுபட குணமளிக்கும் வழிபாடுகள், உள்ளிருப்பு தியானங்கள் மற்றும் பலவிதமான பக்தி முயற்சிகள் செய்கிறோம்.
பக்தி சிரத்தையோடு இறைவனுக்கு திருப்பலி ஒப்புகொடுத்து, கண்ணீரோடு செபிக்கிறோம்.
புனித ஸ்தலங்களுக்கு புனித பயணமாக சென்று, நேர்ச்சைகள் செலுத்தி நோன்பிருந்து செபிக்கிறோம்.
முழு விசுவாசத்தோடு இத்தகைய பக்தி முயற்சிகளில் நாம் ஈடுபடும்போது, விடுதலை உண்டு என்பது சத்தியம்.
அதேவேளையில் பாவமற்ற நிலையில் நாம் இத்தகைய வழிபாடுகளை இறைவனுக்கு செலுத்த வேண்டும்.
ஆண்டவர் இயேசுகிறிஸ்துவிடம்; நலம் வேண்டி வந்த மக்களின் பாவங்களை மன்னித்ததை தொடர்ந்து அவர்கள் நோயிலிருந்து விடுதலைபெற்றனர் என்பதை நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.. [உ.ம்-மத்தேயு9:2]
நாமும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும்.
முதலில நாம் பாவி என்பதை ஏற்று மனம் வருந்த வேண்டும்.
இனிமேல் பாவங்கள் செய்வதில்லை என்பதில் உறுதியாய் இருத்தல் வேண்டும்.
இதுவரை அறிந்தோ அறியாமலோ செய்த அனைத்து பாவங்களுக்கும் இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அதற்காக நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்யவேண்டும்.
அதற்கும் முன்னால் நமக்கெதிராக பாவம் செய்தவர்களை,நாம் மனதார மன்னிக்க வேண்டும்.
மத்தேயு 18:35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதிரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்’’
ஆக நாம் இறைவனிடமிருந்து பெற்று கொள்ள வேண்டிய நற்கொடைகளின் ஆதிமூலம் நம் கையில் தான் இருக்கிறது.
அது தான் மன்னிப்பு
ஐயோ இவனால் தான், நான் அழிந்தேன். இவன் நல்லாயிருப்பானா?.. என்று எப்போதும் உங்கள் பகைவர்களையும், அதோடு உங்கள் பாவத்தையும் ஏன் நீங்கள் சுமந்து கொண்டேயிருக்க வேண்டும்?
வயதான ஒரு அப்பா சொல்கிறார் "நான் என் மகனை தோளில் போட்டு வளர்த்தேன். ஆனால் அவன் என்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை கேட்டான் பாருங்கள்..அதோடு என் நெஞ்சே வெடித்தது போல் இருந்தது.என் கட்டை எரிந்தாலும் என் நெஞ்சில் அவன் உண்டாக்கிய வடு மறையாது’’
என்னவொரு வைராக்கியம்?
ஒரு கணவனும் மனைவியும் இரண்டு வருடங்களாக பேசாமலே ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னுமொரு வீட்டில் அண்ணன் தம்பிகளுகிடையில் சண்டை.
‘’அவன கண்டம் துண்டமாக்கினா தான் என் மனம் சமாதானமாகும்’’ என கொக்கரிக்கிறார் தம்பி.
இவ்வாறு பிறரை மன்னிக்காமல் வைராக்கியத்தோடு நாமலிருந்தால், கடவுள் எப்படி நம்மை மன்னிப்பார்?
சிந்தித்து பாருங்கள்...
இப்படிப்பட்ட நாம்தான் இறைவனை நோக்கி,தினமும் இவ்வாறு செபிக்கிறோம்.
"....எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களையும், மன்னியும்..."
ஆம்.கடவுளிடமிருந்து மன்னிப்பை நாம் பெற்று கொள்ளவேண்டுமென்றால் நமக்கெதிராக குற்றம் செய்பவர்களையும், நாம் மனமார மன்னிக்கவேண்டும்.
மத்தேயு 7:2, "நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ,அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்’’
-ஆமென்.
✠✠✠ ✠✠✠ ✠✠✠ ✠✠✠
துன்பங்களிலிருந்து நாம் விடுபட குணமளிக்கும் வழிபாடுகள், உள்ளிருப்பு தியானங்கள் மற்றும் பலவிதமான பக்தி முயற்சிகள் செய்கிறோம்.
பக்தி சிரத்தையோடு இறைவனுக்கு திருப்பலி ஒப்புகொடுத்து, கண்ணீரோடு செபிக்கிறோம்.
புனித ஸ்தலங்களுக்கு புனித பயணமாக சென்று, நேர்ச்சைகள் செலுத்தி நோன்பிருந்து செபிக்கிறோம்.
முழு விசுவாசத்தோடு இத்தகைய பக்தி முயற்சிகளில் நாம் ஈடுபடும்போது, விடுதலை உண்டு என்பது சத்தியம்.
அதேவேளையில் பாவமற்ற நிலையில் நாம் இத்தகைய வழிபாடுகளை இறைவனுக்கு செலுத்த வேண்டும்.
ஆண்டவர் இயேசுகிறிஸ்துவிடம்; நலம் வேண்டி வந்த மக்களின் பாவங்களை மன்னித்ததை தொடர்ந்து அவர்கள் நோயிலிருந்து விடுதலைபெற்றனர் என்பதை நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.. [உ.ம்-மத்தேயு9:2]
நாமும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும்.
முதலில நாம் பாவி என்பதை ஏற்று மனம் வருந்த வேண்டும்.
இனிமேல் பாவங்கள் செய்வதில்லை என்பதில் உறுதியாய் இருத்தல் வேண்டும்.
இதுவரை அறிந்தோ அறியாமலோ செய்த அனைத்து பாவங்களுக்கும் இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அதற்காக நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்யவேண்டும்.
அதற்கும் முன்னால் நமக்கெதிராக பாவம் செய்தவர்களை,நாம் மனதார மன்னிக்க வேண்டும்.
மத்தேயு 18:35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதிரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்’’
ஆக நாம் இறைவனிடமிருந்து பெற்று கொள்ள வேண்டிய நற்கொடைகளின் ஆதிமூலம் நம் கையில் தான் இருக்கிறது.
அது தான் மன்னிப்பு
ஐயோ இவனால் தான், நான் அழிந்தேன். இவன் நல்லாயிருப்பானா?.. என்று எப்போதும் உங்கள் பகைவர்களையும், அதோடு உங்கள் பாவத்தையும் ஏன் நீங்கள் சுமந்து கொண்டேயிருக்க வேண்டும்?
வயதான ஒரு அப்பா சொல்கிறார் "நான் என் மகனை தோளில் போட்டு வளர்த்தேன். ஆனால் அவன் என்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை கேட்டான் பாருங்கள்..அதோடு என் நெஞ்சே வெடித்தது போல் இருந்தது.என் கட்டை எரிந்தாலும் என் நெஞ்சில் அவன் உண்டாக்கிய வடு மறையாது’’
என்னவொரு வைராக்கியம்?
ஒரு கணவனும் மனைவியும் இரண்டு வருடங்களாக பேசாமலே ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னுமொரு வீட்டில் அண்ணன் தம்பிகளுகிடையில் சண்டை.
‘’அவன கண்டம் துண்டமாக்கினா தான் என் மனம் சமாதானமாகும்’’ என கொக்கரிக்கிறார் தம்பி.
இவ்வாறு பிறரை மன்னிக்காமல் வைராக்கியத்தோடு நாமலிருந்தால், கடவுள் எப்படி நம்மை மன்னிப்பார்?
சிந்தித்து பாருங்கள்...
இப்படிப்பட்ட நாம்தான் இறைவனை நோக்கி,தினமும் இவ்வாறு செபிக்கிறோம்.
"....எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களையும், மன்னியும்..."
ஆம்.கடவுளிடமிருந்து மன்னிப்பை நாம் பெற்று கொள்ளவேண்டுமென்றால் நமக்கெதிராக குற்றம் செய்பவர்களையும், நாம் மனமார மன்னிக்கவேண்டும்.
மத்தேயு 7:2, "நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ,அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்’’
-ஆமென்.
No comments:
Post a Comment