அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, November 21, 2017

மனம் மாறுவோம், இறைவழியில் நடப்போம்

மனம் மாறுவோம், இறைவழியில் நடப்போம் - லூக்கா  19: 1-10

குரு ஒருவர் தன்னுடைய சீடர்களோடு பக்கத்து ஊருக்கு பயணமானார். அங்கே அன்பர் ஒருவர் அவர்களுக்கும், ஊர் மக்கள் எல்லாருக்கும் சேர்த்து உணவு கொடுப்பதால் தட்டும், டம்ளரையும் தவிர வேறு எதுவும் எடுத்துகொண்டு போகவில்லை. சீடர்களும் தங்களுக்கு உரிய தட்டையும், டம்ளரையும் தங்களோடு எடுத்துகொண்டு சென்றனர்.

நேரமானதால் இரவு அவர்கள் வழியில் இருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். அப்போது எல்லாரும் தூங்கிகொண்டிருந்த நேரம் பார்த்து, திருடன் ஒருவன் குரு வைத்திருந்த தட்டைத் தூக்கிக்கொண்டு ஓடினான். சத்தம் கேட்டு விழித்தெழுந்த சீடர்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். அதற்குள் சத்தம்கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த குருவும் திருடனைத் துரத்திக்கொண்டு ஓடினார். ‘நாம்தான் திருடனுக்குப் பின்னால் ஓடுகிறோமே, எதற்காக குரு ஓடிவரவேண்டும். என்ன இருந்தாலும் குருவுக்கு இது ஆகாது என்று சொல்லிக்கொண்டே ஓடினார்கள்.

ஆனால் குரு அவர்களது பேச்சை எல்லாம் சட்டை செய்யாமல், அவர்களைவிட வேகமாக ஓடி திருடனைப் பிடித்தார். பின்னாலே வந்தே சீடர்கள் திருடனை சூழ்ந்துகொண்டார்கள். அவன் அவ்வூரில் வாழ்ந்த மிகப்பெரிய திருடன். குரு வைத்திருந்தது தங்கத்தட்டு என்று நினைத்துதான் அதைத் திருடினான் என்ற உண்மை அவனை விசாரித்தபிறகு தெரிந்தது.. அப்போது குரு திருடனைப் பார்த்து, “மகனே! அது தங்கத்தட்டு எல்லாம் ஒன்றும் கிடையாது. அது ஓட்டை விழுந்த பழைய தட்டு. மேலும் அப்படிப்பட்ட ஓட்டைத்தட்டை நீ தூக்கிக்கொண்டு போனால் அது உனக்குப் பயன்படாது என்பதற்காகத்தான் என்னிடம் இருந்த புதுத்தட்டை உன்னிடம் கொடுப்பதற்காக வந்தேன்” என்றார்.

குருவின் பேச்சைக் கேட்ட திருடன், “இப்படிப்பட்ட ஒரு மகானிடமா திருட வந்தோம் என்று தன்னுடைய தவறை உணர்ந்தான். அதன்பிறகு மனந்திரும்பி சீடராக வாழ்ந்துவந்தான். அன்போடும், கரிசனையோடும் ஒருவரிடம் நடந்துகொண்டால் எப்படிப்பட்ட தீயவனும் மனம்திருந்துவான் என்பதை இக்கதையானது நமக்கு அருமையாக விளக்குகின்றது.

நற்செய்தியில் சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வைக் குறித்து வாசிக்கின்றோம். சக்கேயு வரிதண்டுபவர்களுக்கு எல்லாம் தலைவன். வரிதண்டுபவர்கள் யூத மக்களால் ‘நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கு இணையாக’ சித்தரிக்கப்பட்டார்கள்; அவர்கள் மக்களால் பாவிகள் என்றே கருதப்பட்டார்கள்.. அதனால் சக்கேயு தன்னுடைய உள்ளத்தில் ஒரு வெறுமையை உணர்கிறான். இயேசுவைப் பற்றிக் கேள்விப்படும் அவன், அவரை எப்படியாது பார்த்துவிடவேண்டும் என நினைக்கிறான்.

அவ்வேளையில் அந்த வழியாக வரும் இயேசு, “சக்கேயுவே இறங்கிவா, இன்று நான் உன்னுடைய வீட்டில் தங்கவேண்டும்” என்கிறார். இதைச் சற்றும் எதிர்பாராத அவன் தன்னுடைய பாவத்தை உணர்ந்து, “ஆண்டவரே! என் உடமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர்மீதாவது பொய்குற்றம் சுமத்தி, எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு மடங்காத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்கிறான். உடனே இயேசு அவரைப் பார்த்து, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்கிறார்.

சக்கேயுவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு நாம் எப்படி மனமாற்றம் அடையவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகிறது. சக்கேயு முதலில் தன்னுடைய தவறை உணர்கிறான்; அதன்பின்னர் ஆண்டவரிடம் அறிக்கையிடுகிறான்.

த்திற்கான பரிகாரம் செய்கிறான். இனிமேல் இப்படிப்பட்ட தவறு செய்வதில்லை என்று உறுதியேற்று மனம்திருந்தி வாழ்கிறான். இயேசுவின் அன்பை விட்டுவிலகி வெகுதொலைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், நமது தவறை உணர்ந்து, அதை இறைவனிடம் அறிக்கையிட்டு மனம்திரும்பி வாழ்வோம்.

திருப்பாடல் 51:17 ல் வாசிக்கின்றோம், “கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை”. ஆம் ஆண்டவர் மனந்திரும்பி வரும் தன்னுடைய பிள்ளையை அன்போடு ஏற்றுகொள்கிறார்.

ஆதலால் மனந்திரும்பி வாழ்வோம், இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr.  Maria Antonyraj, Palayamkottai.



குற்றமில்லாத மனிதர் உலகினில் இல்லை.

தன் குற்றத்தை ஒப்புக் கொள்பவர் தன்னை உணர்ந்தவராகிறார்.

தன்னை உணர்ந்தவரே, தரணியில் சிறந்தவராகிறார்.

சக்கேயு, தன்னை உணர்ந்தார். தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதற்கு தானாக முன்வந்து பரிகாரம் தேடினார். இறைபார்வையில், இறைஒளியில் சிறந்தவராகிறார்.

இவர் ஒருவருடைய மனமாற்றம் இவருடைய குடும்பத்திற்கே மீட்பினை தேடித் தந்தது.

நீ உன்னையறிந்தால், உலகினில் போராடலாம். வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் தலைநிமிர்ந்து நீ வாழலாம்

No comments:

Post a Comment