அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, November 21, 2017

மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழா

மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழா (நவம்பர் 21)

பொன்மொழி 

பயணமாகும் திருச்சபையாகிய நாம் விண்ணகத்தை அடைவதற்கான படகுதான் அன்னை மரியா – தூய ஜெர்மானுஸ்.

இன்று நாம் மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். மகிழ்ச்சி மிகுந்த இந்த பொன்னாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்பதைச் சந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

வரலாற்றுப் பின்னணி 

இஸ்ரயேலில் பிறந்த ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்தம் என்பதைப் போன்று, பெண்தலைப்பேற்றை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற எந்தவொரு விதிமுறை இல்லை. ஆனாலும் மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் அவரை ஆண்டவருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்றார்கள்.

மரியா ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதைப் பற்றியா செய்தி விவிலியத்தில் எங்கும் காணக்கிடைக்கவில்லை. ஆனால் திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் இதைப் படிக்கின்றோம். மரியாவின் பெற்றோருக்கு நீண்டநாட்களாக குழந்தைப் பாக்கியம் இல்லை. எனவே இருவரும் குழந்தைக்காக ஆண்டவரிடத்தில் இடைவிடாது வேண்டிவந்தார்கள். அதன் பயனாக அவர்களுடைய முதிர்ந்த வயதில் மரியா பிறந்தார். எனவே இறையருளால் பிறந்த மரியாவை, அவருடைய பெற்றோர் அவருக்கு மூன்று வயது நடந்துகொண்டிருந்தபோது ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர். இப்படித்தான் யாக்கோபு நற்செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.

543 ஆம் ஆண்டு ஜஸ்டினியன் என்ற மன்னன் மரியாவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தை நினைவுகூரும் வகையில் எருசலேமில் மரியாவுக்கென்று ஓர் ஆலயத்தைக் கட்டிஎழுப்பினான். அந்த ஆலயம் கட்டப்பட்டதிலிருந்து மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது ஒரு விழாவாகக் கொடுக்கப்பட்டது. 1166 ஆம் ஆண்டு மனுவேல் கமீனஸ் என்பவரால் இவ்விழா கொண்டாடப்பட்டதற்கான ரலாற்றுக் குறிப்பு இருக்கின்றது. இப்படியாக பல்வேறு நபர்களால், பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்ட இவ்விழா 1585 ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்பவரால் உலகம் கொண்டாடப் பணிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இவ்விழா நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பாவ மாசின்றிப் பிறந்த மரியா, ஆண்டவர் இயேசு அவருடைய வயிற்றில் பிறக்க சிறந்த விதமாய் தயாரிக்கப்படுகின்றார், அதன் ஒரு படிதான் அவர் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மரியா தன்னுடைய உள்ளத்தை/ உதிரத்தை எப்போதும் இறைவன் தாங்கும் இல்லிடமாகவே வைத்திருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்   

மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்னவென்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

No comments:

Post a Comment