அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, November 19, 2017

நிபந்தனையற்ற அன்பு!


கட்டுரை-நிபந்தனையற்ற அன்பு!


அருட்தந்தை தம்புராஜ் சே.ச.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் கொடுக்கும் உரைகளில் அவர் அதிக அளவில் பயன்படுத்தும் ஒரு வார்த்தை 'இரக்கம்' என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர் இறையியலார்கள்.

விவிலியத்தில் இயேசு சொன்ன உவமைகளயில் மிகச்சிறந்த உவமை 'ஊதாரி மகன்' என்ற உவமை. உலகத்திலேயே இலக்கியங்களில் நாம் சந்திக்கும் சிறுகதைகளில் இக்கதை தான் மிகப்பெரிய இடத்தை, முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பர் இலக்கிய மேதைகள்.

தந்தையை விட்டுப் பிரிந்து தான்தோன்றித்தானமாக வாழ விரும்பி, தனது சொத்தை வலுக்கட்டாயமாய் தன் தந்தையிடமிருந்து பெறுகின்றான். அயல்நாட்டிற்குச் செல்கின்றான் இந்த இளயமகன். தன் சொத்தையெல்லாம் அழித்து விரயமாக்கி, ஒர் அடிமைபோல் அந்நிய நாட்டில் இருந்த ஒருவனிடம் தஞ்சம் புகுகின்றான். பன்றிகளை மேய்க்கும் அளவுக்கு அவமானத்திற்கு உட்படுகின்றான். பசியால் வாடுகின்றான். தனிமை என்ற கொடூரத்தைத் தழுவுகின்றான். அறிவு தெளிந்து தன் தந்தையிடம் திரும்புகிறான். தந்தை அவனுக்கு எந்த தண்டனையையும் கொடுக்காமல், அவனைத் தன் மகனாக மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார், மூத்த மகனோ தனது தம்பியை மன்னிக்க மறுக்கின்றான். அவனை ஏற்றுக்கொள்ளாமல் மூத்தமகன் தனது வீட்டை விட்டு வெளியேறுகின்றான். ஊதாரி மகனின் தந்தை அவனை மன்னித்து மீண்டும் தன் மகனாக ஏற்றுப்கொள்கின்றார்.

தனது கனிவிரக்கத்தைப் பத்து செயல்களால் தந்தை வெளிப்படுத்துகின்றார். 1.அவனைக் கண்டு 2.மனமுருகி 3ஓடிப்போய் 4.கட்டி அரவணைத்து 5.முத்தமிடுகின்றார். 6.கைக்கு மோதிரமும் 7.காலுக்கு மிதயடிகளும் தருகின்றார். 9.விருந்து படைக்கின்றார், 10 இசையும் நடனமும் இந்த விருந்தில் அளிக்கப்படுகின்றன.

பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும், ஏழைகளோடும், சட்டத்தைப் படிக்க இயலாத பாமரமக்களோடும் இயேசு உறவாடுகின்றார். சமபந்தியில் பங்கேற்கின்றார் என்று இயேசுவைச் சாடிய பரிசேயர்களைப் பார்த்து இந்த இறை இரக்கத்தின் உவமையைச் சொன்னார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


சிந்திப்போம், செயல்படுவோம்! வரப்போகிற இந்த தவசுகாலத்தில்  நான் யாரையாவது இன்னும் மன்னிக்காமல் இருக்கிறேனா? என் மனதைப் புண்படுத்தியவர்களுக்காக நான் செபம் செய்கின்றேனா? மூத்த மகனைப் போல் என் உள்ளத்தில் இன்னும் கோபம் தாண்டவமாடுகின்றதா? தீய வழியில் செயல்பவர்களை நான் நீதித் தீர்ப்புக்குள்ளாக்குகின்றேனா? என்னால் கூடுமானால் அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முயல எனக்குத் தைரியம் உண்டா? 'பகைவர்களையும் மன்னியுங்கள்” என்ற இயேசுவின் சொற்கள் என் மனதில் நேர்மாறான எண்ணங்களை உருவாக்குகின்றனவா? எனக்குப் பிடிக்காதவர்கள் மேல் வெறுப்புக் காட்டாமல் அவாகளை நான் அன்புசெய்ய என்ன யுக்தியைப் பயன்படுத்தப் போகின்றேன்? என்று சிந்திப்போம்

No comments:

Post a Comment