கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளை நாம் எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றோம்? - லூக்கா 19: 11-28
ஒரு மாலைப் பொழுதில் தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் உலவிக்கொண்டிருந்தன.
குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். தாய் ஒட்டகம் அவற்றிற்கெல்லாம் மிகப் பொறுமையாகப் பதில்சொல்லும்.
அன்றைக்கும் அப்படித்தான். குட்டி ஒட்டகம் தாய் ஒட்டகத்தைப் பார்த்து “அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?” என்றது. “நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் தண்ணீர் கிடைக்கும். அதுவும் தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துகொண்டு, வேண்டும்போது உபயோகப்படுத்திக் கொள்வதற்காக. தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்க்கை திமிலைக் கொடுத்திருக்கு” என்றது தாய் ஒட்டகம்.
குட்டி ஒட்டகம் திரும்பவும் கேட்டது. “அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக்கொள்ள மூடி இருக்கே? மற்ற மிருகங்களுக்கு அப்படி இல்லையே. அது ஏன்?”. தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக்கொண்டு சொன்னது. “பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும். அப்போது சற்றென்று ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைனா கண்ணுலயும் மூக்குலயும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு”.
குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது, “இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?”. “அது கண்ணு... மணல்ல நடக்கும்போது நம் கால் மணல்ல புதையாம நடக்கத்தான்” பொறுமையாகப் பதில் சொன்னது தாய் ஒட்டகம். “பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே, அது ஏன்? இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி. அதற்கு தாய் ஒட்டகம் சொன்னது, “பாலைவனத்தில் செடி கொடி எல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சுவைத்துத் தின்ன வேண்டாமா?”.
இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக்கொண்டு இலண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம இரண்டு பேரும் என்ன செஞ்சிக்கிட்டு இருக்கும்?”. குட்டி ஒட்டகம் கேட்ட இந்தக் கேள்விக்கு தாய் ஒட்டகத்தால் பதில் சொல்ல முடியவில்லை.
ஆம், நாமும்கூட இந்த ஒட்டகங்களைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் அளப்பெரிய திறமைகளைக் கொண்டிருந்தும், நம் திறமைகளை சரியாகப் பயன்படுத்தாமல் வீணடித்துக்கொண்டு தேவையில்லாத இடத்தில் பயனில்லாத வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா நாணய உவமையை எடுத்துக்கூறுகின்றார். இயேசு கூறிய மற்றெல்லா உவமைகளை விடவும் இந்த உவமை வரலாற்றில் நிகழ்ந்தவற்றோடு மிகவும் ஒத்துப் போகின்றனது. எப்படி என்றால், பெரிய ஏரோதுவின் இறப்புக்குப் பிறகு அவருடைய மூன்று மகன்களான அந்திப்பா, பிலிப் அர்கிலஸ் ஆகியோர் தங்களுக்கென்று குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு ஆண்டு வந்தார்கள். இதற்கிடையில் அற்கிலஸ் உரோமை நகருக்குச் சென்று, அங்கிருந்த உரோமை அரசனாகிய அகுஸ்துஸ் என்பவரிடம் தன்னை யூதேயாவிற்கு அரசனாக ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார். இதற்கு யூதர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. அவர்கள் அர்கிலசை அரசராக ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு ஆண்டவர் இயேசு மினா நாணய உவமைச் சொல்கின்றார்.
உவமையில் வரும் உயர்குடிமகன் தன்னுடைய பணியாளர்களை அழைத்து மினாக்களைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு வாணிபம் செய்யச் சொல்லிவிட்டு, ஆட்சியுரிமை பெறப் போகின்றார். ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தபிறகு தன்னிடம் மினாக்களை பெற்றவர்களிடமிருந்து கணக்கைக் கேட்கின்றார். அவர்களில் இருவர் சரியாகக் கணக்கைக் கொடுக்க, கடைசியில் வரும் பணியாளர் பெற்ற மினாவை அப்படியே திரும்பக் கொடுக்கின்றார். இதனால் சினங்கொள்ளும் அவர், அந்தப் பணியாளருக்கு உரிய தண்டனையைக் கொடுக்கின்றார்.
இந்த உவமை நமக்கு மூன்று முக்கியமான உண்மைகளை எடுத்துக்கூறுகின்றது. ஒன்று, கடவுள் நம்மை நம்பி பொறுப்புகளை/ திறமைகளை கொடுக்கின்றார் என்பதாகும். இரண்டு, கொடுத்த பொறுப்புகளுக்குக் கணக்குக் கேட்கின்றார் என்பதாகும். மூன்று, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகின்றோமோ அதனடிப்படையில் நமக்கு வெகுமதி வழங்கப்படும் என்தாகும். ஒருவேளை, கடவுள் நமக்குக் கொடுத்த பொறுப்புகளை நாம் திறம்படச் செய்திருந்தால் ஆசிர்வாதத்தைப் பெறுவது என்பது உறுதி.
எனவே, கடவுள் நம்மை நம்பிக் கொடுத்திருக்கும் பொறுப்புகளை/ திறமைகளை நல்லவிதமாய் பயன்படுத்துவோம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.
ஒரு மாலைப் பொழுதில் தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் உலவிக்கொண்டிருந்தன.
குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். தாய் ஒட்டகம் அவற்றிற்கெல்லாம் மிகப் பொறுமையாகப் பதில்சொல்லும்.
அன்றைக்கும் அப்படித்தான். குட்டி ஒட்டகம் தாய் ஒட்டகத்தைப் பார்த்து “அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?” என்றது. “நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் தண்ணீர் கிடைக்கும். அதுவும் தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துகொண்டு, வேண்டும்போது உபயோகப்படுத்திக் கொள்வதற்காக. தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்க்கை திமிலைக் கொடுத்திருக்கு” என்றது தாய் ஒட்டகம்.
குட்டி ஒட்டகம் திரும்பவும் கேட்டது. “அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக்கொள்ள மூடி இருக்கே? மற்ற மிருகங்களுக்கு அப்படி இல்லையே. அது ஏன்?”. தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக்கொண்டு சொன்னது. “பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும். அப்போது சற்றென்று ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைனா கண்ணுலயும் மூக்குலயும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு”.
குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது, “இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?”. “அது கண்ணு... மணல்ல நடக்கும்போது நம் கால் மணல்ல புதையாம நடக்கத்தான்” பொறுமையாகப் பதில் சொன்னது தாய் ஒட்டகம். “பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே, அது ஏன்? இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி. அதற்கு தாய் ஒட்டகம் சொன்னது, “பாலைவனத்தில் செடி கொடி எல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சுவைத்துத் தின்ன வேண்டாமா?”.
இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக்கொண்டு இலண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம இரண்டு பேரும் என்ன செஞ்சிக்கிட்டு இருக்கும்?”. குட்டி ஒட்டகம் கேட்ட இந்தக் கேள்விக்கு தாய் ஒட்டகத்தால் பதில் சொல்ல முடியவில்லை.
ஆம், நாமும்கூட இந்த ஒட்டகங்களைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் அளப்பெரிய திறமைகளைக் கொண்டிருந்தும், நம் திறமைகளை சரியாகப் பயன்படுத்தாமல் வீணடித்துக்கொண்டு தேவையில்லாத இடத்தில் பயனில்லாத வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா நாணய உவமையை எடுத்துக்கூறுகின்றார். இயேசு கூறிய மற்றெல்லா உவமைகளை விடவும் இந்த உவமை வரலாற்றில் நிகழ்ந்தவற்றோடு மிகவும் ஒத்துப் போகின்றனது. எப்படி என்றால், பெரிய ஏரோதுவின் இறப்புக்குப் பிறகு அவருடைய மூன்று மகன்களான அந்திப்பா, பிலிப் அர்கிலஸ் ஆகியோர் தங்களுக்கென்று குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு ஆண்டு வந்தார்கள். இதற்கிடையில் அற்கிலஸ் உரோமை நகருக்குச் சென்று, அங்கிருந்த உரோமை அரசனாகிய அகுஸ்துஸ் என்பவரிடம் தன்னை யூதேயாவிற்கு அரசனாக ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார். இதற்கு யூதர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. அவர்கள் அர்கிலசை அரசராக ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு ஆண்டவர் இயேசு மினா நாணய உவமைச் சொல்கின்றார்.
உவமையில் வரும் உயர்குடிமகன் தன்னுடைய பணியாளர்களை அழைத்து மினாக்களைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு வாணிபம் செய்யச் சொல்லிவிட்டு, ஆட்சியுரிமை பெறப் போகின்றார். ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தபிறகு தன்னிடம் மினாக்களை பெற்றவர்களிடமிருந்து கணக்கைக் கேட்கின்றார். அவர்களில் இருவர் சரியாகக் கணக்கைக் கொடுக்க, கடைசியில் வரும் பணியாளர் பெற்ற மினாவை அப்படியே திரும்பக் கொடுக்கின்றார். இதனால் சினங்கொள்ளும் அவர், அந்தப் பணியாளருக்கு உரிய தண்டனையைக் கொடுக்கின்றார்.
இந்த உவமை நமக்கு மூன்று முக்கியமான உண்மைகளை எடுத்துக்கூறுகின்றது. ஒன்று, கடவுள் நம்மை நம்பி பொறுப்புகளை/ திறமைகளை கொடுக்கின்றார் என்பதாகும். இரண்டு, கொடுத்த பொறுப்புகளுக்குக் கணக்குக் கேட்கின்றார் என்பதாகும். மூன்று, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகின்றோமோ அதனடிப்படையில் நமக்கு வெகுமதி வழங்கப்படும் என்தாகும். ஒருவேளை, கடவுள் நமக்குக் கொடுத்த பொறுப்புகளை நாம் திறம்படச் செய்திருந்தால் ஆசிர்வாதத்தைப் பெறுவது என்பது உறுதி.
எனவே, கடவுள் நம்மை நம்பிக் கொடுத்திருக்கும் பொறுப்புகளை/ திறமைகளை நல்லவிதமாய் பயன்படுத்துவோம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.
No comments:
Post a Comment