அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, November 18, 2017

இயேசுவின் துணிச்சல்

இயேசுவின் துணிச்சல்

ஓய்வுநாள் ஒன்றில், இயேசு பரிசேயர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கே நீர்க்கோவை நோயுற்ற ஒரு மனிதரும் இருக்கிறார். அந்த பரிசேயரின் வீட்டில் இருந்த அனைவரும், இயேசுவையும், அந்த நோயுற்ற மனிதரையும் கூர்ந்து கவனிப்பதாக, நற்செய்தியாளர் எழுதுகிறார். அந்த நோயுற்ற மனிதனுக்கு பரிசேயரின் வீட்டில் என்ன வேலை? பரிசேயர் எப்படி நோயுற்ற மனிதனை தனது வீட்டிற்குள்ளாக அனுமதித்தார்? அதுவும் ஓய்வுநாளன்று. இது பரிசேயரின் கயமைத்தனத்தை எடுத்துரைப்பதாக இருக்கிறது.

பரிசேயர்கள் வேண்டுமென்றே அந்த மனிதனை அங்கே வைத்திருக்கிறார்கள். காரணம் அவர்கள் இயேசுவிடத்தில் குற்றம் காண, அங்கே நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு. நற்செய்தியிலே, இயேசு ஏழு இடங்களில் ஓய்வுநாளில் குணப்படுத்துகிறார். தான் குணப்படுத்தினால், அதன் மூலமாக தன் மீது தவறு கண்டுபிடிக்கப்பட்டு, தேவையில்லாத குற்றச்சாட்டுக்கள் எழும் என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆனால், அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தொடர்ந்து தன் மேல் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி கொண்டு, தன்னை வம்பில் மாட்டிவிடக்கூடிய பரிசேயர்களுக்கு மத்தியில் வாழ்வது பற்றி, அவர் வெறுப்பு கொள்ளவும் இல்லை. அதை துணிவோடு எதிர்கொள்கிறார். மகிழ்வோடு, சவாலாக ஏற்றுக்கொள்கிறார். ஒவ்வொருமுறையும் அவர்களுக்கு, அவர்களின் சட்டத்தைக் கொண்டே, சவுக்கடி கொடுக்கிறார். இன்றைய நற்செய்தியிலும் அப்படிப்பட்ட சவுக்கடி, அங்கே தரப்படுகிறது. ”உங்களில் யாருடைய பிள்ளையோ, மாடோ, கிணற்றில் விழுந்தால், அதனை உடனே தூக்கிவிட மாட்டாரா?” என்ற கேள்வி, அவர்களுக்கான சவுக்கடி. அவர்களின் சட்டத்தைக்கொண்டு, அவர்கள் மீதே குறிபார்த்து, அடிக்கப்பட்ட அடி. அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

தேவையில்லாத வீண் வார்த்தைகளையும், வெற்றுவார்த்தைகளையும் உதிர்த்துக் கொண்டிருக்கிற வீணர்கள் பலர், கரை வேட்டிகளோடு, நாட்டையும், வெளிநாட்டையும் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தில், ஊர் சுற்றிக்கொண்டு, குடும்பத்தோடு கொட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே, நமது வாக்குச்சீட்டு சவுக்கடிகளாக இருக்க வேண்டும். நேர்மையான, உண்மையான தலைவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் சார்பாக நாம் நிற்க வேண்டும். ஒவ்வொருவரும் அப்படி எண்ண வேண்டும். முடியுமா? தனி ஒருவன் நினைத்தால் முடியும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment