அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, November 18, 2017

பலன் தந்திடவே...

பலன் தந்திடவே...

கருமேகத்தின் கூட்டம்
மழையின் எதிர்பார்ப்பு
ஓடை நீரின் சத்தம்
விவசாயத்தின் எதிர்பார்ப்பு
கோவில் மணியின் ஓசை
கடவுள் அழைப்பின் எதிர்பார்ப்பு
புத்தகப் பையும் எழுதுகோலும்
கல்வியின் எதிர்பார்ப்பு
ரோஜா மலரும் புன்னகையும்
காதலின் எதிர்பார்ப்பு
புன்முறுவலும் புன்னகையும்
அன்பின் எதிர்பார்ப்பு
சிணுகலும் முகச்சுழிப்பும்
பாசத்தின் எதிர்பார்ப்பு
இப்படியாய்
அடுக்கிக்கொண்டே போகும்
அட்டவனையின்
இறுதியில்
நம்மைப் படைத்தவரும்
எதிர்பார்க்கிறார்...
என்றாவது சிந்தித்திருப்போமா?
காலையில் விழிக்கிறோம்
இரவு உறங்குகின்றோம்
பகலில் வேலை செய்கின்றோம்
இதோடு நம் கடமை முடிந்துவிட்டதா?
தலைவனின் வருகை
பணியாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை
திரும்பி வராத மானுடத்தின் நாள்கள்
தினசரி நாளிதழில் வர
எத்தனை யுகங்கள் எடுக்கும்?
கண்முன் நடக்கும்
சமூக அவலத்தை
கண்டும் காணாமலும் போகும்
கூட்டத்தில் ஒருவராய் இருந்துவிட்டால்
நான் கண்ணைப் படைத்தேனே
அதை வைத்து என்னச் செய்தாய்?
கெட்ட வார்த்தைகளும்
ஏழைகளை அச்சுறுதத்தும் வார்த்தைகளும்
ஒடுக்கமுறையின் உச்சநிறை வார்த்தைகளும்
மற்றவர்களைச் சாவுமட்டும் தாழ்த்திருக்க
நான் காதுகளைப் படைத்திருந்தேனே
அதை வைத்து என்னச் செய்தாய்?
அடிமைகளை அதட்டுவதும்
பெண்களை ஒடுக்குவதும்
குழந்தைகளைத் திட்டுவதும்
இளையோரை அவமதிப்பும்
இளம்பெண்களைச் சீண்டுவதும்
எதார்த்தமாகிப்போன சூழலில்
வாய்;த்திறக்காத மனிதனாய் வாழ்கிறாயே
நான் படைத்த வாய் எங்கே?
வாய்த்திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?
அதிகாரத்தின் கைகள் ஓங்குகின்றது
முதலாளித்துவத்தின் இருக்கைகள் நீள்கிறது
அரசியல்வாதிகளின் அசிங்கள்
அன்றாடம் பரப்புரையாய் மாறுகிறது
சின்னச் சின்ன சிதறல்கள்
குடும்பத்தையே சிதைக்கிறது
இத்தனை நடக்கையில்
நான் படைத்த கைகள் என்னச் செய்கிறது?
தட்டிக்கேட்க வேண்டிய கைகள்
ஓங்கி உயர்த்த வேண்டிய கைகள்
தொடர்ந்து தட்ட வேண்டிய கைகள்
உரிமைகள் பெற தூக்க வேண்டிய கைகள்
எங்கே சென்றன?
அதை வைத்து என்னச் செய்தாய்?
ஆண்டவரின் கேள்விகள் மலையென குவிய
இன்றைய வழிபாட்டின் உள்யே நுழைக...
தாலந்து உவமையின் உட்பொருள்
ஒன்றாகினும்
எதார்த்தத்தை அலசிப் பார்த்து
ஆண்டவரின் வார்த்தையை விளக்கிட
அடியேன் எண்ணுகிறேன்
தாலந்துகள் வௌ;வேறானவை
அவற்றை நம் உடல் உறுப்போடு
பொருத்திப் பார்க்கலாமா?
கண்கள்
காதுகள்
கைகள்
வாய்
இவை படைக்கப்பட்டதன் நோக்கமென்ன?
கண்மூடிக்கொண்டு
காதுகளைப் பொத்திக்கொண்டு
கைகளைக் கட்டிக்கொண்டு
வாயைத்திறக்காமல் வாழ்வதற்காய்
கடவுள் நம்மைப் படைத்தார்?
தெரிந்தவற்றைகூட தெரியாது என்றுகூறி
பிதற்றும் உலகம் இது...
ஐந்து தாலந்து பெற்றவன் பத்தாக்கினான்
இரண்டு தாலந்து பெற்றவன் நான்காக்கினான்
ஒரு தாலந்து பெற்றவன்கூட
ஒன்றையாவது கொடுக்க எண்ணினான்...
ஆனால் நாம் இன்று?
கொடுத்ததையே மறந்துவிட்டு
வாழ்வைத் தொடங்கிவிட்டோம்...
பலன் தந்திட
படைக்கப்பட்ட மனித இனம்
படைத்தவனையும் மறந்துவிட்டது
படைப்புப்பொருள்களையும்
மகத்துவமாய் எண்ணுவதில் சிதறிவிட்டது!
கலகங்கள் காலங்களை நிரப்பி
கண்ணீர்கள் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓட
ஓவியாவின் மிக் பாஸாவும்
ஜோடி நம்பர் ஒன்னும்
நம் கண்களுக்குத் தோன்றினால்
தாலந்துக்குப் பதில் தாலந்து
எப்படி நம்மிடத்தில் பெருகும்!
புதைக்கப்பட்ட உண்மைகளும்
புரையோடிய கருத்துகளும்
புண்பட்ட மனங்களும்
மண்ணில் வலம் வர
மட்டைப்பந்து விளையாட்டும்
கால்பந்து போட்டிகளும்
கைக்கு அருகில் இருந்தால்
வாழவே வழியில்லாதவனைப் பற்றி
எப்படி யோசிக்க தோன்றும்
கொடுத்த தாலந்தை எப்படி அதிகரிக்க தோன்றும்?
இருளில் சுற்றிக்கொண்டு
ஒளியைத் தேடாமல் வாழ்வதும்
வெளிச்சத்தில் நின்றுகொண்டு
விபரீதத்தை நாடுவதும்
பொழுதுபோக்காய் மாறிவிட்டால்
வைத்த தாலந்து அப்படியே வருமேதவிர
அதிகரிக்கவும் செய்யாது
ஒன்றுக்கு இரண்டாக மாறவும் செய்யாது...
செவியுள்ளவர்களே கேளுங்கள்
நம்முடைய படைப்பு
பலனைக் கொடுத்திட
பரமனின் கையால் உருவாக்கப்பட்டவைகள்...
தாலந்துகளால் நிரப்பப்பட்டவைகள்
நிதானமாய் யோசியுங்கள்
வார்த்தை வாழ்வாக்கிட முயற்சியுங்கள்
பலன் தந்திட வாழ்வை அலங்கரியுங்கள்
கொடுக்கப்பட்ட தாலந்துகள்
எங்கே என்று தேடுங்கள்
பத்திரமாய் வைத்து பாதுகாக்க அல்ல
காலம் முழுவதும் பலன் தரவே
கடவுள் கொடுத்தார்... ஆகவே,
இன்றைய நாளில் நாம்
பலன் தந்திட... பரமனின் துணைவேண்டிடுக!
யாம் பெற்ற
பலனை மற்றவருக்கு கொடுக்க
பரமனின் இறையாசீர் வேண்டிடுக – ஆமென்!!

No comments:

Post a Comment