அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, November 17, 2017

“வலிமைமிக்க ஆற்றலுடன் எம்மை மீட்க வாரும்!”

“வலிமைமிக்க ஆற்றலுடன் எம்மை மீட்க வாரும்!”

ஒரு மறைக்கல்வி பாடச்சாலையில் அருட்சகோதரி கூறியது;
உன்னையே நம்பு, நீ ஏமாற்றம் அடைவாய்……….
உன் நண்பர்களை நம்பு, அவர்கள் இறந்த பிறகு அவர்களை நீ இழந்து விடுவாய்………..
பணத்தை நம்பு, உன்னிடமிருந்து யாராவது திருடிச் சென்று விடுவார்கள்…………
புகழை நம்பு, சிலரது தவறான பேச்சுக்கள் அதை அழித்து விடும்…….ஆனால் கடவுளை நம்பு, இவ்வுலகிலும் அடுத்த உலகிலும் நீ ஏமாற்றம் அடையமாட்டாய்.

ஆம் கடவுளை நமது வாழ்வை பாவத்தில் இருந்து மீட்டுக் கொண்டார். அதிலிருந்து நாம் வலிமைமிகு ஆற்றல் பெற்றுள்ளோம் .இதனை எவராலும் அழித்துவிட முடியாது. திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல் என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்; திருப்பா(59:17) என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே. திருப்பா(62:7)

இஸ்ரேலின் கடவுள், யாக்கோப்பின் கடவுள், ஈசாக்கின் கடவுள் வலிமைமிக்க ஆற்றலுடன் நம்மில் செயல்படுகிறார். செயலாற்றும் கடவுளாக இருக்கிறார். நாம் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை, விசுவாசம், இவற்றில் உறுதிக் கொண்டவர்களாக வாழ்வோம். வலிமைகுற்றிய நேரத்தை தவிர்த்து வலிமைமிக்க இறைவனால் எப்போதும் ஆற்றல் உண்டு என்பதை விசுவசிப்போம்.

செபம்:-
வலிமையின் மன்னரே! வாழ்வில் வலிமையின்றி இருக்கும் மானிடருக்கு திடத்தை கொடுக்க உமது திருக்கை வல்லமையோடு எங்களை ஆட்சி செய்ய வந்தருளும் இறைவா வந்தருளும்!

No comments:

Post a Comment