அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, November 21, 2017

செசீலியம்மாவுக்கு கவிப்பா

செசீலியம்மாவுக்கு கவிப்பா

இறைவன் தந்த அருட்கொடையை
இறைவனுக்கே அர்ப்பணித்த குயிலே

கற்பு என்ற உன்னதத்தை உவப்புடன்
கடவுளுக்குக் காணிக்கையாக்கிய கீதமே

பாடலால் மட்டுமல்ல தவத்தாலும்
பார் போற்ற வாழ்ந்த நற்பாடகியே

மணந்த மணவாளனையே இயேசு
மன்னவனைத் துதிக்க வைத்த சௌந்தர்யமே

வலேரியன் என்ற கணவரை மனமாற்றி
வாழ்வையே அர்ப்பணித்தத்  தூண்டுகோலே

கணவர் மட்டுமல்லாது குடும்பத்தையே மறைசாட்சியாக்கிய ஞானப்பறவையே

எம் பாடகருக்கு இன்றளவும் பாதுகாவலான
எம் மனங்கவர் பண்ணிசையே

பாடல்களாலும் இன்னிசையாலும் திரு அவையால் போற்றப்படும் இறை நாதமே

வாழிய வாழியவே !

அன்புடன்,

கஸ்மீர் ரோச், சின்னமலை,சென்னை 9382709007

No comments:

Post a Comment