இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள்
ஓர் ஊரில் தந்தையும் மகளும் வாழ்ந்து வந்தார்கள். தந்தை தன்னுடைய மகளை அதிகமாக அன்பு செய்துவந்தார். அவளை தன்னுடைய உயிராக நினைத்து வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் அன்பு மகள் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானாள். அப்போது அந்த தந்தை நகரில் இருந்த எல்லா மருத்துவர்களிடமும் சென்று சிகிச்சை அளித்துப் பார்த்தார். ஆனால் யாராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் இரவில் மகள் இறந்துபோனாள். அப்போது அந்த தந்தை அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய உலகமே இருண்டுபோய்விட்டது என நினைத்தார். எல்லாரிடமிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு தனிமையான வாழ்வு வந்தார். தன்னுடைய மகளின் ஞாபகம் வரும்போதெல்லாம் கண்ணீர் விட்டு அழுதார்.
ஒருநாள் அவர் தூங்கும்போது கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் அவர் மேலுலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே வெண்ணிற ஆடை அணிந்த குழந்தைகள் தங்களுடைய கைகளில் எரியும் மெழுகுதிரியை ஏந்தி கடவுளின் திருமுன் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ஒரே ஒரு குழந்தை மட்டும் அணைந்த மெழுகுதிரியோடு நின்றுகொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அது தன்னுடைய குழந்தை என்று.
உடனே அவர் அந்தக் குழந்தையை (மகளை) அள்ளி எடுத்துக்கொண்டு, “மகளே எல்லாருடைய திரியும் எரிந்துகொண்டிருக்க, உன்னுடைய திரி மட்டும் ஏன் அணைந்துபோய் இருக்கின்றது?” என்று காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த குழந்தை, “அப்பா! என்னுடைய திரி மற்ற குழந்தைகளின் திரிகளைப் போன்று நன்றாகத்தான் எரியும். ஆனால் நீ தொடர்ந்து வடிக்கும் கண்ணீர் பட்டுதான் என்னுடைய திரி அணைந்துபோய்விடுகிறது?” என்றது.
தொடர்ந்து அந்தக் குழந்தை தன்னுடைய தந்தையைப் பார்த்துச் சொன்னது, “அப்பா எதற்காக இப்படி அழுதுகொண்டே இருக்கிறாய். நான் உன்னைவிட்டுப் பிரிந்தாலும், இங்கே உயிரோடுதானே இருக்கிறேன். அதனால் என்னைப்பற்றி நினைத்து நீ இனிமேலும் அழுதுகொண்டிருக்காதே” என்று. உடனே அந்த தந்தை தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். தன்னுடைய மகள் விண்ணகத்தில் உயிரோடுதான் என்று ஆறுதல் அடைந்தார்.
“வாழ்வு மாறுபடுகிறதே அன்றி, அழிந்து போவதில்லை” என்பதற்கு இந்த நிகழ்வு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.
இன்று அன்னையாம் திரு அவை இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்ல நாளில் நம்முடைய குடும்பங்களில் இறந்த அன்பான உறவுகளுக்காக, இன்னும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.
இன்று நாம் கொண்டாடும் இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாள் தொடக்கத்தில் ‘குளூனி’ நகரில் பிறந்த ஓடிலோ என்ற துறவியால் கி.பி.906 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதன்பின் இவ்விழா படிப்படியாக எல்லா துறவுமடங்களுக்கும் பரவி, இறந்த ஆன்மாக்களுக்காக விழா எடுத்துக் கொண்டாடும் நிலை உருவானது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து இவ்விழா நவம்பர் 2 ஆம் தேதி கொண்டாடும் நிலை உருவானது. விவிலியத்தில் கூட இறந்த ஆன்மாக்களுக்காக பலிகொடுக்கும் நிலை இருந்ததை நாம் வாசிக்கின்றோம் (2 12: 43-45).
இப்போது இவ்விழா நமக்கு உணர்த்து செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
முதலாவதாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றது. உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை” என்று. ஆகவே நம்முடைய மண்ணுலக வாழ்க்கை சாவோடு முடிந்துபோகின்ற ஒன்று அல்ல, மாறாக நாம் இறந்தபின்னும் உயிர்வாழ்வோம் என்பதே ஆகும். அத்தகைய நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையாகும்.
இரண்டாவதாக இவ்விழா இறந்த ஆன்மாகளுக்காக, குறிப்பாக உத்தரிக்க தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைப்புத் தருகின்றது. “புனிதர்களின் சமூக உறவை விசுவாசிக்கிறோம்” என்று சொல்லும் நாம் துன்புறும் திருச்சபையில் உள்ள (உத்தரிக்க தலத்தில் உள்ளவர்கள்) ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். அவர்களுக்கான நம்முடைய ஜெபம், அவர்களுடைய தண்டனையைக் குறைத்து அவர்களை வெற்றிபெற்ற திருச்சபையில் (விண்ணகம்) சேர்த்துக்கொள்ளும். எனவே நாம் அவர்களுக்காக ஜெபிப்போம்.
மூன்றாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாம் இறைவன் தரும் மகிமையை, விண்ணகத்தைப் பெறவேண்டும் என்றால், நம்மோடு வாழக்கூடிய சின்னஞ் சிறிய சகோதரிகளுக்கு நம்மாலான உத்திகளைச் செய்யவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சின்னஞ் சிறிய சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்தவர்களுக்குத்தான் விண்ணகத்தை பரிசாகத் தருகின்றார்.
எனவே, இந்த நல்ல நாளில் இறந்த ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிப்போம். அதோடு நாமும் இறைவனுக்கு உகந்த நல்ல வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
“If Job’s sons were purified by their father’s sacrifice, why should we doubt that our offerings for the dead bring them some consolation? Let us not hesitate to help those who have died and to offer our prayers for them” – ஜான் கிரிஸ்சோஸ்டம். - Fr Palay Mariaantonyraj, Palayamkottai. 2016
Fr Palay Mariaantonyraj, Palayamkottai - மறையுரைச் சிந்தனை (நவம்பர் 02) – 2015
இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவுவிழா
1644 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நிமோர்ஸ் என்ற ஒரு நிலபிரபு இருந்தான். அவனுக்கும், இன்னொரு நிலபிரபுவுக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது. ஒருநாள் கோபம் தாங்காமல் நிமோர்ஸ் என்ற அந்த நிலபிரபு எதிரியின் மீது படையெடுத்துச் சென்றான். இருவருக்குமான சண்டை நீண்டநேரம் நீடித்தது. இறுதியில் நிமோர்ஸ் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டான்.
இதனைக் கேள்விப்பட்ட மக்கள் அருட்சாதனம் எதுவும் பெறாமல், பாவ மன்னிப்புப் பெறாமல் இறந்ததால் நிமோர்ஸ் நிச்சயம் நரகத்திற்குத்தான் போவான் என்று பேசிக்கொண்டார்கள்.
அந்நேரத்தில் இறை ஏவுதலால் அங்கு வந்த மேரிமார்டிக்னேட் என்ற அருட்சகோதரி, “நிமோர்ஸ் தான், இறப்பதற்கு முன்பாக தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதாலும், மக்கள் அவனுக்காக இறைவனிடம் வேண்டியதாலும் அவன் நரகம் செல்வதிலிருந்து காப்பாற்றப்பட்டான்” என்றார். தொடர்ந்து அந்த அருட்சகோதரி அவர்களிடம், மக்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் ஜெபத்தினால்தான் நிமோர்ஸ் நரகத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்டு, உத்தரிக்கிற தலத்தில் ஆன்ம தூய்மைக்காக வைக்கப்பட்டிருக்கிறான்” என்றார். அதைக்கேட்ட மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இறந்த ஒருவருக்காக நாம் ஜெபிக்கின்றபோது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர் இறைவனின் பேரின்ப வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இன்று திருச்சபையானது இறந்த அனைத்து விசுவாசிகளின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளிலே நம்முடைய குடும்பங்களில், சமுதாயத்தில் வாழ்ந்து மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காக அதிலும் சிறப்பாக உத்தரிக்கிற தலத்தில் இருக்கக்கூடிய ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.
திருச்சபைத் தலைவர்கள் மூன்றுவிதமான திருச்சபை இருப்பதாக சொல்வார்கள். முதலாவது மீட்கப்பட்ட அல்லது வெற்றிபெற்ற திருச்சபை (Triumphant Church), இரண்டாவது பயணமாகும் திருச்சபை (Pilgrim Church), மூன்றாவது போராடும் திருச்சபை ( Suffering Church). மீட்கப்பட்ட திருச்சபை என்பது விண்ணகத்தையும், பயணமாகும் திருச்சபை என்பது மண்ணகத்தையும், துன்புறும் திருச்சபை என்பது உத்தரிக்கும் தலத்தில் இருக்கும் ஆன்மாக்களைக் குறிக்கின்றது. இதில் பயணமாகும் திருச்சபையில் இருக்கும் நாம் துன்புறும் திருச்சபையில் இருக்கும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய ஜெபஉதவியை நாடி நிற்கின்றார்கள். நாம் அவர்களுக்காக ஜெபிக்கின்றபோது இறைவன் அவர்களது குற்றங்களை மன்னித்து, அவர்களை விண்ணகத்தில் ஏற்றுக்கொள்வார்.
இன்று நாம் கொண்டாடும் இறந்த விசுவாசிகளின் நினைவு நாள் விழாவானது கி.பி. 962 ஆம் குளூனி என்ற இடத்தில் வாழ்ந்த ஒடில்லோ என்ற துறவியால் நவம்பர் மாதம் இரண்டாம் தேதியானது நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்டு, பின்னர் அது எல்லாத் துறவற சபைகளுக்கும் பரவியது. பதினான்காம் நூற்றாண்டில் இருந்துதான் இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் விவிலியத்திலே மக்கபேயர் காலத்திலிருந்தே இறந்தவர்களுக்காக பாவப்பரிகார பலிகள் ஒப்புக்கொடுக்கும் வழக்கம் இருந்துவருவதை வாசிக்கின்றோம் (2 மக் 12:42-46).
இவ்விழா நாளிலே இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம். இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது கிடந்த துயரத்தின் முக்காட்டை, துன்பத்தைத், சாவை, கண்ணீரை, நிந்தனையைத் துடைத்துவிட்டு, புதுவாழ்வு தருவதாக வாக்களிக்கின்றார். இதனை இயேசு நற்செய்தி வாசகத்தில் நயின் நகரக் கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர் பெற்றெழச் செய்வதன் வழியாக நிரூபித்துக் காட்டுகின்றார். ஆம், ஆண்டவராகிய இயேசு தன்னுடைய பாடுகள், சிலுவைச்சாவின் வழியாக சாவை வென்று நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். அதனால்தான் பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15:55 ல் கூறுகின்றார், “சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?” என்று.
ஆதலால் இயேசு தன்னுடைய பாடுகளின் வழியாக மரணத்தை வென்றதால் நாம் மரணத்தைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இதுவே இறைவார்த்தை நமக்குத் தரும் முதன்மையான சிந்தனையாக இருக்கின்றது.
இரண்டாவதாக நாம் பாவிகளாக இருந்தபோதும் இயேசு நம்மீது கொண்ட அளவுகடந்த அன்பினால் நமக்காக உயிரைத் தந்தார் என்று சொன்னால், நாமும் அளவு கடந்த விதத்தில் அன்புகொண்டு ஒருவர் மற்றவருக்காக வாழவேண்டும் என்பதே நாம் புரிந்துகொள்ளக்கூடிய காரியமாக இருக்கின்றது.
இப்படி நாம் ஒருவர் மற்றவருக்காக வாழும்போதுதான் நாம் இறைவன் தரும் விண்ணரசைப் பெறமுடியும்.
நாம் அப்படி பிறருக்காக தியாக மனப்பான்மையோடு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் ஒருமுறைக் கூறினார், “சொர்க்கமும், நரகமும் நம் வாழ்க்கையில் தான் இருக்கின்றன. எப்போது மனம் நிறைவு அடைகின்றதோ அப்போது முக்தியை அடைந்துவிட்டோம் என்று பொருள். இந்த முக்தியை, மனநிறைவை மக்களுக்குச் சேவை செய்வதில்தான் காணமுடியும்” என்று குறிப்பிடுகின்றார். ஆம், நாம் பிறருக்கு சேவை செய்கிறபோதுதான் முக்தியை, சொர்க்கத்தை அடையமுடியும் என்பது கவிஞர் சிற்பியின் அருமையான கருத்து.
ஒரு கிராமத்திலே தச்சர் ஒருவர் வாழ்ந்துவந்தார். ஒருநாள் அவரிடம் வானதூதர் ஒருவர் வந்து, “உன் வாழ்நாட்கள் முடிந்துவிட்டது, சொர்க்கம் செல்வதற்கு நேரம் வந்துவிட்டது” என்றுசொல்லி அழைத்துப் போக வந்தார். அதற்கு அந்த தச்சர், “ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஊரில் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. அதனால் நிலத்தை உழ ஆரம்பித்திருக்கும் விவசாயிகளுக்கு கலப்பை செய்து தந்துவிட்டு, பின்னர் வருகிறேன்” என்றார். உடனே வானதூதர் அவ்விடத்திலிருந்து அகன்றார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டுமாக அந்த வானதூதர் அவரிடம் வந்து, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துப் போக வந்தார். ஆனால் அவரோ, “இப்போதுதான் உழவர்கள் வயலில் உழ ஆரம்பித்திருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கு மாட்டுவண்டி செய்து தந்துவிட்டு, வருகிறேன்” என்றார். இதைக்கேட்டதும் வானதூதர் அவ்விடம் இருந்து அகன்றார். மீண்டுமாக மூன்றுமாதம் கழித்து அவரை அழைத்துப் போக வானதூதர் அவரிடம் வந்தார். அதற்கு அந்த தச்சர், “இன்னும் மண்வெட்டி மட்டும் செய்துகொடுத்துவிட்டால் என்னுடைய வேலை முடிந்துவிடும். அப்புறம் நானே வந்துவிடுகிறேன்” என்று கெஞ்சிக்கொண்டார். அவரது வேண்டுதலைக் கேட்டு வானதூதர் அங்கே இருந்து அகன்றார்.
அடுத்த மூன்று மாதம் கழித்து மீண்டுமாக வானதூதர் அவரிடம் வந்தார். அப்போது தச்சர், “நான் விவசாயிகளுக்குத் தேவையான கலப்பை, மாட்டுவண்டி, மண்வெட்டி எல்லாவற்றையும் செய்து தந்துவிட்டேன். இப்போது என்னை நீங்கள் சொர்க்கத்திற்க்கு அழைத்துக்கொண்டு போகலாம்” என்றார். அதற்கு அந்த வானதூதர் வேண்டாம் என்று சொன்னது. அவர் ஏன் என்று அதனிடம் கேட்டதற்கு, “எல்லாருக்கும் நீ உதவிசெய்து வாழ்வதால் இந்த மண்ணுலகமே உனக்கு சொர்க்கம், ஆதலால் எதற்கு உனக்கு இன்னொரு சொர்க்கம்” என்று சொல்லி, அவ்விடத்திலிருந்து அகன்றது.
உண்மையான அன்போடு எல்லாருக்கும் உதவிசெய்து வாழ்ந்தால் நாம் வாழும் இடமே சொர்க்கம்தான்.
ஆகவே இறந்த அனைத்து ஆன்மாக்களுடைய நினைவுநாளைக் கொண்டாடும் வேளையில் இறந்த அவர்களுக்காக ஜெபிப்போம். அத்தோடு நாம் வாழும் இந்த மண்ணுலக வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம். அன்பு செய்து வாழ்வோம். அதன் வழியாக இறைவன் தரும் விண்ணக மகிமையைப் பெறுவோம்.
அனைத்து ஆன்மாக்கள்
கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர் சாவைக் கடந்து வாழ்வுக்கு வருவர் என்று இயேசு கூறுகிறார். மகனில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர் நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன் என்று கடவுள் கூறுகிறார். நானே உயிர்தரும் உணவு. என்னை உண்பவர் இறப்பினும் உயர் வாழ்வர் என்று இயேசு கூறுகிறார்.
இயேசு உடலோடு உயிர்த் தெழுந்தார். அவர் என்றென்றும் வாழ்கிறவர். நேற்றும் இன்றும் என்றென்றும் நிலைத்து நிற்பவர். அவரில் வாழ்ந்து அவரில் மரிக்கின்றபோது அவரோடு நிலைவாழ்வுக்கு உயிர்த்தெழுவோம்.
கடந்து செல்லும் உயிர்ப்பு; வாழ்வை அனைத்து ஆன்மாக்களும் இயல்பாகப் பெற்றிட வரம் வேண்டுவோம். வாழும் காலத்தில் ஏற்புடைய நம்பிக்கையினால் நமது வாழ்வும் வெற்றியடைய மன்றாடுவோம்.
ஓர் ஊரில் தந்தையும் மகளும் வாழ்ந்து வந்தார்கள். தந்தை தன்னுடைய மகளை அதிகமாக அன்பு செய்துவந்தார். அவளை தன்னுடைய உயிராக நினைத்து வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் அன்பு மகள் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானாள். அப்போது அந்த தந்தை நகரில் இருந்த எல்லா மருத்துவர்களிடமும் சென்று சிகிச்சை அளித்துப் பார்த்தார். ஆனால் யாராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் இரவில் மகள் இறந்துபோனாள். அப்போது அந்த தந்தை அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய உலகமே இருண்டுபோய்விட்டது என நினைத்தார். எல்லாரிடமிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு தனிமையான வாழ்வு வந்தார். தன்னுடைய மகளின் ஞாபகம் வரும்போதெல்லாம் கண்ணீர் விட்டு அழுதார்.
ஒருநாள் அவர் தூங்கும்போது கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் அவர் மேலுலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே வெண்ணிற ஆடை அணிந்த குழந்தைகள் தங்களுடைய கைகளில் எரியும் மெழுகுதிரியை ஏந்தி கடவுளின் திருமுன் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ஒரே ஒரு குழந்தை மட்டும் அணைந்த மெழுகுதிரியோடு நின்றுகொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அது தன்னுடைய குழந்தை என்று.
உடனே அவர் அந்தக் குழந்தையை (மகளை) அள்ளி எடுத்துக்கொண்டு, “மகளே எல்லாருடைய திரியும் எரிந்துகொண்டிருக்க, உன்னுடைய திரி மட்டும் ஏன் அணைந்துபோய் இருக்கின்றது?” என்று காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த குழந்தை, “அப்பா! என்னுடைய திரி மற்ற குழந்தைகளின் திரிகளைப் போன்று நன்றாகத்தான் எரியும். ஆனால் நீ தொடர்ந்து வடிக்கும் கண்ணீர் பட்டுதான் என்னுடைய திரி அணைந்துபோய்விடுகிறது?” என்றது.
தொடர்ந்து அந்தக் குழந்தை தன்னுடைய தந்தையைப் பார்த்துச் சொன்னது, “அப்பா எதற்காக இப்படி அழுதுகொண்டே இருக்கிறாய். நான் உன்னைவிட்டுப் பிரிந்தாலும், இங்கே உயிரோடுதானே இருக்கிறேன். அதனால் என்னைப்பற்றி நினைத்து நீ இனிமேலும் அழுதுகொண்டிருக்காதே” என்று. உடனே அந்த தந்தை தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். தன்னுடைய மகள் விண்ணகத்தில் உயிரோடுதான் என்று ஆறுதல் அடைந்தார்.
“வாழ்வு மாறுபடுகிறதே அன்றி, அழிந்து போவதில்லை” என்பதற்கு இந்த நிகழ்வு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.
இன்று அன்னையாம் திரு அவை இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்ல நாளில் நம்முடைய குடும்பங்களில் இறந்த அன்பான உறவுகளுக்காக, இன்னும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.
இன்று நாம் கொண்டாடும் இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாள் தொடக்கத்தில் ‘குளூனி’ நகரில் பிறந்த ஓடிலோ என்ற துறவியால் கி.பி.906 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதன்பின் இவ்விழா படிப்படியாக எல்லா துறவுமடங்களுக்கும் பரவி, இறந்த ஆன்மாக்களுக்காக விழா எடுத்துக் கொண்டாடும் நிலை உருவானது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து இவ்விழா நவம்பர் 2 ஆம் தேதி கொண்டாடும் நிலை உருவானது. விவிலியத்தில் கூட இறந்த ஆன்மாக்களுக்காக பலிகொடுக்கும் நிலை இருந்ததை நாம் வாசிக்கின்றோம் (2 12: 43-45).
இப்போது இவ்விழா நமக்கு உணர்த்து செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
முதலாவதாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றது. உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை” என்று. ஆகவே நம்முடைய மண்ணுலக வாழ்க்கை சாவோடு முடிந்துபோகின்ற ஒன்று அல்ல, மாறாக நாம் இறந்தபின்னும் உயிர்வாழ்வோம் என்பதே ஆகும். அத்தகைய நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையாகும்.
இரண்டாவதாக இவ்விழா இறந்த ஆன்மாகளுக்காக, குறிப்பாக உத்தரிக்க தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைப்புத் தருகின்றது. “புனிதர்களின் சமூக உறவை விசுவாசிக்கிறோம்” என்று சொல்லும் நாம் துன்புறும் திருச்சபையில் உள்ள (உத்தரிக்க தலத்தில் உள்ளவர்கள்) ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். அவர்களுக்கான நம்முடைய ஜெபம், அவர்களுடைய தண்டனையைக் குறைத்து அவர்களை வெற்றிபெற்ற திருச்சபையில் (விண்ணகம்) சேர்த்துக்கொள்ளும். எனவே நாம் அவர்களுக்காக ஜெபிப்போம்.
மூன்றாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாம் இறைவன் தரும் மகிமையை, விண்ணகத்தைப் பெறவேண்டும் என்றால், நம்மோடு வாழக்கூடிய சின்னஞ் சிறிய சகோதரிகளுக்கு நம்மாலான உத்திகளைச் செய்யவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சின்னஞ் சிறிய சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்தவர்களுக்குத்தான் விண்ணகத்தை பரிசாகத் தருகின்றார்.
எனவே, இந்த நல்ல நாளில் இறந்த ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிப்போம். அதோடு நாமும் இறைவனுக்கு உகந்த நல்ல வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
“If Job’s sons were purified by their father’s sacrifice, why should we doubt that our offerings for the dead bring them some consolation? Let us not hesitate to help those who have died and to offer our prayers for them” – ஜான் கிரிஸ்சோஸ்டம். - Fr Palay Mariaantonyraj, Palayamkottai. 2016
Fr Palay Mariaantonyraj, Palayamkottai - மறையுரைச் சிந்தனை (நவம்பர் 02) – 2015
இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவுவிழா
1644 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நிமோர்ஸ் என்ற ஒரு நிலபிரபு இருந்தான். அவனுக்கும், இன்னொரு நிலபிரபுவுக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது. ஒருநாள் கோபம் தாங்காமல் நிமோர்ஸ் என்ற அந்த நிலபிரபு எதிரியின் மீது படையெடுத்துச் சென்றான். இருவருக்குமான சண்டை நீண்டநேரம் நீடித்தது. இறுதியில் நிமோர்ஸ் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டான்.
இதனைக் கேள்விப்பட்ட மக்கள் அருட்சாதனம் எதுவும் பெறாமல், பாவ மன்னிப்புப் பெறாமல் இறந்ததால் நிமோர்ஸ் நிச்சயம் நரகத்திற்குத்தான் போவான் என்று பேசிக்கொண்டார்கள்.
அந்நேரத்தில் இறை ஏவுதலால் அங்கு வந்த மேரிமார்டிக்னேட் என்ற அருட்சகோதரி, “நிமோர்ஸ் தான், இறப்பதற்கு முன்பாக தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதாலும், மக்கள் அவனுக்காக இறைவனிடம் வேண்டியதாலும் அவன் நரகம் செல்வதிலிருந்து காப்பாற்றப்பட்டான்” என்றார். தொடர்ந்து அந்த அருட்சகோதரி அவர்களிடம், மக்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் ஜெபத்தினால்தான் நிமோர்ஸ் நரகத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்டு, உத்தரிக்கிற தலத்தில் ஆன்ம தூய்மைக்காக வைக்கப்பட்டிருக்கிறான்” என்றார். அதைக்கேட்ட மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இறந்த ஒருவருக்காக நாம் ஜெபிக்கின்றபோது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர் இறைவனின் பேரின்ப வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இன்று திருச்சபையானது இறந்த அனைத்து விசுவாசிகளின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளிலே நம்முடைய குடும்பங்களில், சமுதாயத்தில் வாழ்ந்து மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காக அதிலும் சிறப்பாக உத்தரிக்கிற தலத்தில் இருக்கக்கூடிய ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.
திருச்சபைத் தலைவர்கள் மூன்றுவிதமான திருச்சபை இருப்பதாக சொல்வார்கள். முதலாவது மீட்கப்பட்ட அல்லது வெற்றிபெற்ற திருச்சபை (Triumphant Church), இரண்டாவது பயணமாகும் திருச்சபை (Pilgrim Church), மூன்றாவது போராடும் திருச்சபை ( Suffering Church). மீட்கப்பட்ட திருச்சபை என்பது விண்ணகத்தையும், பயணமாகும் திருச்சபை என்பது மண்ணகத்தையும், துன்புறும் திருச்சபை என்பது உத்தரிக்கும் தலத்தில் இருக்கும் ஆன்மாக்களைக் குறிக்கின்றது. இதில் பயணமாகும் திருச்சபையில் இருக்கும் நாம் துன்புறும் திருச்சபையில் இருக்கும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய ஜெபஉதவியை நாடி நிற்கின்றார்கள். நாம் அவர்களுக்காக ஜெபிக்கின்றபோது இறைவன் அவர்களது குற்றங்களை மன்னித்து, அவர்களை விண்ணகத்தில் ஏற்றுக்கொள்வார்.
இன்று நாம் கொண்டாடும் இறந்த விசுவாசிகளின் நினைவு நாள் விழாவானது கி.பி. 962 ஆம் குளூனி என்ற இடத்தில் வாழ்ந்த ஒடில்லோ என்ற துறவியால் நவம்பர் மாதம் இரண்டாம் தேதியானது நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்டு, பின்னர் அது எல்லாத் துறவற சபைகளுக்கும் பரவியது. பதினான்காம் நூற்றாண்டில் இருந்துதான் இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் விவிலியத்திலே மக்கபேயர் காலத்திலிருந்தே இறந்தவர்களுக்காக பாவப்பரிகார பலிகள் ஒப்புக்கொடுக்கும் வழக்கம் இருந்துவருவதை வாசிக்கின்றோம் (2 மக் 12:42-46).
இவ்விழா நாளிலே இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம். இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது கிடந்த துயரத்தின் முக்காட்டை, துன்பத்தைத், சாவை, கண்ணீரை, நிந்தனையைத் துடைத்துவிட்டு, புதுவாழ்வு தருவதாக வாக்களிக்கின்றார். இதனை இயேசு நற்செய்தி வாசகத்தில் நயின் நகரக் கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர் பெற்றெழச் செய்வதன் வழியாக நிரூபித்துக் காட்டுகின்றார். ஆம், ஆண்டவராகிய இயேசு தன்னுடைய பாடுகள், சிலுவைச்சாவின் வழியாக சாவை வென்று நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். அதனால்தான் பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15:55 ல் கூறுகின்றார், “சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?” என்று.
ஆதலால் இயேசு தன்னுடைய பாடுகளின் வழியாக மரணத்தை வென்றதால் நாம் மரணத்தைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இதுவே இறைவார்த்தை நமக்குத் தரும் முதன்மையான சிந்தனையாக இருக்கின்றது.
இரண்டாவதாக நாம் பாவிகளாக இருந்தபோதும் இயேசு நம்மீது கொண்ட அளவுகடந்த அன்பினால் நமக்காக உயிரைத் தந்தார் என்று சொன்னால், நாமும் அளவு கடந்த விதத்தில் அன்புகொண்டு ஒருவர் மற்றவருக்காக வாழவேண்டும் என்பதே நாம் புரிந்துகொள்ளக்கூடிய காரியமாக இருக்கின்றது.
இப்படி நாம் ஒருவர் மற்றவருக்காக வாழும்போதுதான் நாம் இறைவன் தரும் விண்ணரசைப் பெறமுடியும்.
நாம் அப்படி பிறருக்காக தியாக மனப்பான்மையோடு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் ஒருமுறைக் கூறினார், “சொர்க்கமும், நரகமும் நம் வாழ்க்கையில் தான் இருக்கின்றன. எப்போது மனம் நிறைவு அடைகின்றதோ அப்போது முக்தியை அடைந்துவிட்டோம் என்று பொருள். இந்த முக்தியை, மனநிறைவை மக்களுக்குச் சேவை செய்வதில்தான் காணமுடியும்” என்று குறிப்பிடுகின்றார். ஆம், நாம் பிறருக்கு சேவை செய்கிறபோதுதான் முக்தியை, சொர்க்கத்தை அடையமுடியும் என்பது கவிஞர் சிற்பியின் அருமையான கருத்து.
ஒரு கிராமத்திலே தச்சர் ஒருவர் வாழ்ந்துவந்தார். ஒருநாள் அவரிடம் வானதூதர் ஒருவர் வந்து, “உன் வாழ்நாட்கள் முடிந்துவிட்டது, சொர்க்கம் செல்வதற்கு நேரம் வந்துவிட்டது” என்றுசொல்லி அழைத்துப் போக வந்தார். அதற்கு அந்த தச்சர், “ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஊரில் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. அதனால் நிலத்தை உழ ஆரம்பித்திருக்கும் விவசாயிகளுக்கு கலப்பை செய்து தந்துவிட்டு, பின்னர் வருகிறேன்” என்றார். உடனே வானதூதர் அவ்விடத்திலிருந்து அகன்றார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டுமாக அந்த வானதூதர் அவரிடம் வந்து, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துப் போக வந்தார். ஆனால் அவரோ, “இப்போதுதான் உழவர்கள் வயலில் உழ ஆரம்பித்திருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கு மாட்டுவண்டி செய்து தந்துவிட்டு, வருகிறேன்” என்றார். இதைக்கேட்டதும் வானதூதர் அவ்விடம் இருந்து அகன்றார். மீண்டுமாக மூன்றுமாதம் கழித்து அவரை அழைத்துப் போக வானதூதர் அவரிடம் வந்தார். அதற்கு அந்த தச்சர், “இன்னும் மண்வெட்டி மட்டும் செய்துகொடுத்துவிட்டால் என்னுடைய வேலை முடிந்துவிடும். அப்புறம் நானே வந்துவிடுகிறேன்” என்று கெஞ்சிக்கொண்டார். அவரது வேண்டுதலைக் கேட்டு வானதூதர் அங்கே இருந்து அகன்றார்.
அடுத்த மூன்று மாதம் கழித்து மீண்டுமாக வானதூதர் அவரிடம் வந்தார். அப்போது தச்சர், “நான் விவசாயிகளுக்குத் தேவையான கலப்பை, மாட்டுவண்டி, மண்வெட்டி எல்லாவற்றையும் செய்து தந்துவிட்டேன். இப்போது என்னை நீங்கள் சொர்க்கத்திற்க்கு அழைத்துக்கொண்டு போகலாம்” என்றார். அதற்கு அந்த வானதூதர் வேண்டாம் என்று சொன்னது. அவர் ஏன் என்று அதனிடம் கேட்டதற்கு, “எல்லாருக்கும் நீ உதவிசெய்து வாழ்வதால் இந்த மண்ணுலகமே உனக்கு சொர்க்கம், ஆதலால் எதற்கு உனக்கு இன்னொரு சொர்க்கம்” என்று சொல்லி, அவ்விடத்திலிருந்து அகன்றது.
உண்மையான அன்போடு எல்லாருக்கும் உதவிசெய்து வாழ்ந்தால் நாம் வாழும் இடமே சொர்க்கம்தான்.
ஆகவே இறந்த அனைத்து ஆன்மாக்களுடைய நினைவுநாளைக் கொண்டாடும் வேளையில் இறந்த அவர்களுக்காக ஜெபிப்போம். அத்தோடு நாம் வாழும் இந்த மண்ணுலக வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம். அன்பு செய்து வாழ்வோம். அதன் வழியாக இறைவன் தரும் விண்ணக மகிமையைப் பெறுவோம்.
அனைத்து ஆன்மாக்கள்
கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர் சாவைக் கடந்து வாழ்வுக்கு வருவர் என்று இயேசு கூறுகிறார். மகனில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர் நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன் என்று கடவுள் கூறுகிறார். நானே உயிர்தரும் உணவு. என்னை உண்பவர் இறப்பினும் உயர் வாழ்வர் என்று இயேசு கூறுகிறார்.
இயேசு உடலோடு உயிர்த் தெழுந்தார். அவர் என்றென்றும் வாழ்கிறவர். நேற்றும் இன்றும் என்றென்றும் நிலைத்து நிற்பவர். அவரில் வாழ்ந்து அவரில் மரிக்கின்றபோது அவரோடு நிலைவாழ்வுக்கு உயிர்த்தெழுவோம்.
கடந்து செல்லும் உயிர்ப்பு; வாழ்வை அனைத்து ஆன்மாக்களும் இயல்பாகப் பெற்றிட வரம் வேண்டுவோம். வாழும் காலத்தில் ஏற்புடைய நம்பிக்கையினால் நமது வாழ்வும் வெற்றியடைய மன்றாடுவோம்.
No comments:
Post a Comment