அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, November 18, 2017

நிறைவாழ்வு - இறப்பிற்கு முன்!'

நிறைவாழ்வு - இறப்பிற்கு முன்!'

இறப்பிற்குப் பின் வருவதல்ல நிறைவாழ்வு. இருக்கும்போதே வருவதுதான் நிலைவாழ்வு. 'ஆண்டவர்-அடுத்திருப்பவர்-நான்' என்ற புதிய மூவொரு இறைவனை முன்வைக்கின்றன இன்றைய வாசகங்கள். இந்த மூவொரு அன்பில் நான் இணைந்திருந்தால் அதுவே எனக்கு நிலைவாழ்வு. 'நான் ஆண்டவரை அல்லது அடுத்தவரை அல்லது என்னை அன்பு செய்தால் எனக்கு நிறைவாழ்வு கிடைக்கும்' என்று நினைப்பது சால்பன்று. ஆக, அன்பு என்பது நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் கொடுக்கும் விலை அன்று. அப்படி அதை விலை என நான் நினைத்தால், நான் ஆண்டவரையும், அடுத்தவரையும், என்னையும் வியாபாரப் பொருளாக்கிவிடுகிறேன். அடுத்தவரை அல்லது காயம்பட்டவரை அன்பு செய்து நான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்கிறேன் என்றால், அங்கே நான் அவரை ஒரு பொருளாக ஆக்கிவிடுகிறேன் என்றுதானே அர்த்தம். ஒவ்வொரு மனிதரும் ஓர் ஆள். அவரை நான் பொருளாக்க எனக்கு உரிமை இல்லை. நான் செய்யும் அன்பிற்கு எனக்கு நிறைவாழ்வு அல்லது நிலைவாழ்வு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நான் தொடர்ந்து அன்பு செய்வேன் என்ற மனப்பான்மை என்னில் உதிக்கிறதா? நிறைவாழ்வு என்பது பயணத்தின் இறுதியில் நான் கண்டடையும் பொருள் அல்லது இடம் அல்ல. மாறாக, பயணமே நான் கண்டடையும் பொருள். என் இலக்கு பயணத்தின் இறுதி அல்ல, மாறாக, பயணமே. இந்தப் பயணத்தில் வழிப்பாதையில் விழுந்துகிடக்கும் அனைவரும் என் அடுத்திருப்பவரே. அவரைத் தொட்டுத் தூக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு நிறைவாழ்வே!

'உனக்கு அருகில் நான்' என என் ஆண்டவரும், என் அடுத்திருப்பவரும் என்னிடம் சொல்ல,
'உனக்கு மிக அருகில் நான்' என நான் அவர்களிடம் சொல்ல முடிந்தால் அதுவே நிறைவாழ்வு.
இதைச் செய்ய, அவரைப்போல இதைச் செய்ய நான் முனைந்தால் எத்துணை நலம்!

No comments:

Post a Comment