அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, November 19, 2017

ஐந்து காய தந்தை புனித பியோ அவர்களின் புனித படிகள்

ஐந்து காய தந்தை புனித பியோ அவர்களின் புனித படிகள்

1. சிலுவையில் தொங்கும் இயேசுவின் அன்பு துன்புறும் மனிதனுக்காகத் துன்ப படுகிறது

2. கிறிஸ்தவ வாழ்வு என்பது " தான் " என்ற அகஉணர்வுக்கு எதிரான நிரந்தரப் போராட்டம்

3. வேதனை என்னும் விலைக்கொடுக்காமல் ஆன்மாவின் முழுநிறைவின் அழகு மலர்வதில்லை

4. சோதனையின் போது வெற்றி பெறுவது அவசியம் தீமையை விட்டு விலகி நிற்பது மிகவும் அவசியம்

5. தினமும் தியானம் செய்யாதவன் தன்னைக் கண்ணாடியில் பாராதவனை ஒத்திருக்கிறான்

6. அமைதியும் விடாமுயற்சியும் இருந்தால் நம் ஆன்மாவை மட்டும் அல்ல கடவுளையே கண்டு கொள்வோம்

7. கடவுள் நம் எல்லோருக்காகவும் இருக்கிறார். ஒவ்வொருவரும் பிறருக்காக இருக்கிறார்கள்

8. ஜெபத்தை புறக்கனிக்க வேண்டாம் . ஜெபமும் தியானமும் இறைவனை காண உதவும்

9. ஜெபம் ஆன்மாவின் உணவும் உயிரும். இதயத்தின் உயிர் மூச்சும் அதுவே

10. முழுசம்மதத்தோடு செய்யாத எதுவும் பாவம் ஆகாது விருப்பத்திற்க்கு இணங்க செய்யாத பாது அது மனித பல வீணமே.

11. இறைவனின் ஆவி தன்னோடு இருப்பதைப் பாவி உணரும்போது மனம் வருந்தி திருந்தி வாழமுடியும்

12. பரபரப்பூட்டி எரிச்சலை உண்டாக்கும் மனநிலை நம்மீதே நாம் கோபம் கொள்ளச் செய்யும்

13. நீ பிறருக்காகத் துன்புறும்போது உனக்காக உன்னில் இயேசுவும் துன்புறுகிறார் என்பதை நம்பு

14. பாவியை மனந்திருப்ப அன்போடு முயற்சிசெய் எல்லாவற்றையும் செலவிட்டும் பயனில்லாவிடில் விட்டுவிடு

15. நல்ல ஆயனின் பார்வையில் என்றும் வாழ்ந்திடு தீமையின் பள்ளத்தாக்கிலும் ஆபத்தின்றி நடந்திடுவாய்

16. ஒழுங்கை நிலைநாட்ட தவறை அன்புடன் நினைவுப்படுத்தி கண்டிப்பதும் கடமையுணர்வுடன் வாழத் தூண்டுவதும்  சிறந்தது

17. அமைதியான ஜெபம் இறைவனோடு தொடர்பு கொள்ள உதவுகிறது அதுவே இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொலைபேசி

 18. மற்ற மனிதர்களை அன்பு செய்வது கடவுளை அன்பு செய்ய உதவும்

  19. உன் அன்பு பிறரைக் கடவுளிடம் வழி நடத்தாமல் தீமைக்கு வழி நடத்தினால்  அதை விட்டு விடு.

20. விவேகத்திற்க்கு கண்கள் உண்டு அன்பிற்க்கு கால்கள் உண்டு.

21. எப்போதும் விவேகமும் அன்பும் கொண்டிருஇவை சேர்ந்தே செல்ல வேண்டும்

22. நம் இறையன்பும் விசுவாசமும் குறைவின்றி இருந்தால் நம் விணணகப் பயணம் இனிதே தொடரும்

23. அன்பு கடவுளை நோக்கி ஓட விரும்பும்விவேகம் வழி நடத்தாவிட்டால் இடறி விழ நேரிடும்

24. பிறரைத் தூய்மைப்படுத்த முயற்சி செய்யும் முன் உன்னையே தூய்மைப்படுத்த முயற்சி செய்

25. நன்மைகளை நமதாக்கி இறைவனுக்கு ஒப்புக்கொடுப்போம் தீமைகளை அறவே இல்லாதாக்குவோம்

26. வயலில் களை முற்றினாலும் என்ன பயன் ?
பெருமை உள்ள இடத்தில் வெறுமை தான் உண்டு

27. விளைந்த தானியக்கதிர் கீழே விழுந்து கிடக்கும்
தாழ்ச்சி உள்ள இடத்தில் இறைவன் அருள் இருக்கும்

28. நல் நோக்கத்தோடும் நல் மனதோடும் ஏறெடுக்கப்படும் எல்ல ஜெபங்களும் நல்லவைகளே !

29. ஜெபம் என்பது மன உறுதியுடன் இருப்பது மன உறுதி என்பது விசுவாசத்தைக் குறிக்கிறது

30. மனிதனுக்குத் தேவையான யாவும்உடல் நலமும்  இருந்தால் தன்னையே கடவுளை விட உயர்வாக நினைக்கிறான்


இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க




No comments:

Post a Comment