அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, November 21, 2017

அனைத்துப் புனிதர்களின் விழா

அனைத்துப் புனிதர்களின் விழா

புனிதர்கள் – தூயவர்கள் – வானதூதர்களைப் போன்று விண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள் அல்ல, மாறாக அவர்கள் நம்மைப் போன்று மண்ணகத்திலிருந்து தோன்றியவர்கள்; சாதாரண மனிதர்கள். அப்படியிருந்தாலும் தங்களுடைய வாழ்வால், பணியால் புனிதர்களாக உயர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் இன்றைய நாளில் நாம் விழா எடுத்துக் கொண்டாடுகின்றோம். ஆம், இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களுடைய விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது.

இந்த மண்ணுலகத்தில் வாழ்ந்த புனிதர்களின் எண்ணிக்கை வெறும் 365 மட்டுமே, ஏராளமான புனிதர்கள் இருக்கிறார்கள். திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் படிப்பது போன்று, “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான புனிதர்கள் இருக்கிறார்கள் (திவெ 7: 9). எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து பார்ப்பதற்குத்தான் திருச்சபை ஒருநாளை ஒதுக்கி, அவர்களைச் சிறப்பு செய்கிறது.

முதலில் அனைத்துப் புனிதர்களின் விழா தோன்றியதன் வரலாற்றுப் பின்னணியை சிந்தித்துப் பார்த்து, அதன்பின் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இவ்விழா கொண்டாடப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும்போது நான்காம் நூற்றாண்டில் ‘கிறிஸ்த மதத்தைப் பின்பற்றியதற்காக மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாப்பட்டதற்கான ஒரு சில குறிப்புகள் இருக்கின்றன. ஆனாலும் அது சிறிய அளவில்தான் நடந்திருக்கின்றது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தந்தை நான்காம் போனிபெஸ்தான் (608 -615) ரோம் நகரில் இருந்த ‘பந்தேயோன்’ என்று அழைக்கப்படுகின்ற அனைத்துக் கடவுள்களின் கோவிலை இடித்துத் தள்ளி, அந்த இடத்தில் கிறிஸ்துவுக்காக  மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களின் நினைவாக ஆலயம் ஒன்று எழுப்பினார். அன்றிலிருந்துதான் அனைத்துப் புனிதர்களின் விழா படிப்படியாக வளர்ந்தது.

கி.பி 993 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது. இப்படிதான் அனைத்துப் புனிதர்களின் விழா நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடும் நிலை ஏற்பட்டது.

இப்போது இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக இவ்விழா புனிதர்கள் – தூயவர்கள் – ஆகியோரின் எடுத்துகாட்டான வாழ்வை நினைவுகூர்ந்து பார்க்க நமக்கு அழைப்புத் தருகின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 13:7 ல் வாசிக்கின்றோம், உங்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்” என்று. ஆம், இன்றைய நாளில் நாம் அவர்களை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும்.

இரண்டாவதாக புனிதர்கள் – தூயவர்கள் – எப்போதும் இறைவனின் திருமுன் நின்றுகொண்டு எப்போதும் நமக்காக பரிந்துபேசுபவர்களாக இருக்கிறார்கள். எனவே அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.

மூன்றாவதாக புனிதர்களைப் போன்று நாமும் நல்வழியில் நடந்து புனித நிலையை அடையவேண்டும். அதனைத்தான் இவ்விழா நமக்கு சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. தூய அகுஸ்தினார் கூறுவார், “அவனும் அவளும் புனிதராக, புனிதையாக மாறும்போது, ஏன் உன்னால் முடியாது?” என்று. ஆம், நம்மாலும் புனித நிலையை அடையலாம். அதற்கான வழிமுறைகளைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எட்டு விதமான பேறுபெற்றவர்களைப் பற்றி பேசுகின்றார். நாம் ஏழையரின் உள்ளம் கொண்டவராக, இயேசுவுக்காக துயருறுவோராக, கனிவுடையோராக........ இருக்கின்றபோது நம்மாலும் புனித நிலையை அடையலாம் என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது. நாம் இயேசு குறிப்பிடுகின்ற வழிமுறைகளின்படி வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஆசிரியரிடம் பாடம் கற்ற முன்னாள் மாணவன் ஒருவன் அந்த ஆசிரியரை சந்திக்கச் சென்றான். அவர் தன்னிடம் இருந்த உடைமைகள் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்துவிட்டு ஒரு சாதாரண குடிசையில் வாழ்ந்துவந்தார். இதைப் பார்த்த மாணவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “எவ்வளவு பெரிய ஆசிரியர் நீங்கள், எத்தனையோ மனிதர்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றியவர்கள் நீங்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு சாதாரண குடிசையில் வாழ்வதா? என்று கேட்டார். அதற்கு அவர், “இந்த உலகத்தில் நான் ஒரு பயணிதான்” என்றார்.

பின்னர் அவர் மேலே சுட்டிக்காட்டி, “விண்ணகம் என்னுடைய (நம்முடைய) நிலையான வீடு. அங்கே வாழ்வதற்குத்தான் நான் என்னுடைய செல்வத்தை எல்லாம் அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

ஆம், இந்த மண்ணுலகில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நாம் செய்யும் உதவியாவும் விண்ணுலகில் சேர்க்கும் செல்வமாகும். அப்படிப்பட்ட வாழ்வு வாழும்போது நாமும் தூயவர்கள் ஆகின்றோம்.

ஆகவே அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி நாமும் தூயவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2016

Fr Palay Mariaantony, Palayamkottai - மறையுரைச் சிந்தனை (நவம்பர் 01) 2015

புனிதர் அனைவரின் பெருவிழா

இன்று திருச்சபையானது புனிதர் அனைவரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. “ஒவ்வொரு புனிதரும் தங்கள் மனநிலை ஆளுமைத்தன்மையிலும், ஆன்மீக தனிவரங்களிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நின்றாலும் அனைவரும் இயேசுவின் அன்பின் பதிப்புக்களாகவும், சிலுவையின் சாட்சிகளாகவும் ஒன்றிணைந்து நிற்பார்கள்” என்பார் நமது முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள்.

மேலும் இறையடியார் ஒருவர் புனிதர் எனப்படுபவர் யார் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் தருவார், “புனிதர்கள் 1)மனிதராகப் பிறந்தவர்கள், 2) இவ்வுலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் திகழ்ந்தவர்கள், 3) தங்களது சான்று வாழ்வின் வழியாக இறைவனைப் பலருக்கு அறிமுகப்படுத்தியவர்கள், 4) என்றும் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், 5) தம்மை நோக்கி மன்றாடுபவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைப்பவர்கள், 6) தங்கள் உயிரையே இறைமாட்சிக்காகக் கையளித்தவர்கள்” என்று.

ஆம், திருச்சபை பல்வேறு இறையடியார்களை, இறைவழி வாழ்ந்தவர்களைப் புனிதர்களாக அங்கிகரித்திருந்தாலும், இன்னும் எத்தனையோ மனிதர்கள் கிறிஸ்துவின் விழுமியங்களின்படி வாழ்ந்திருக்கிறார்கள். எனவே அவர்களையெல்லாம் நினைவுகூர்ந்து விழா கொண்டாட வேண்டும் என்பதற்குதான் திருச்சபை நவம்பர் ஒன்றாம் தேதியை புனிதர்கள் அனைவரின் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றது.

அனைத்துப் புனிதர்களுடைய பெருவிழா பல்வேறு இடங்களில், பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தபோது திருத்தந்தை மூன்றாம் கிரகோரியார்தான் (827 -844) இதனை ஒழுங்குபடுத்தி, நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப் பணித்தார்.

முன்னதாக கி.பி. 600 ஆம் ஆண்டில் உரோமையில் இருந்த அனைவரும் கிறிஸ்த மதத்தைத் தழுவினார்கள். இதனால் எல்லாக் கடவுளது சிலைகளும் வைக்கப்பட்டிருந்த பான்தேயேன் கோவிலானது அன்னை மரியாளுக்கும், அனைத்துப் புனிதர்களுக்கும் நேர்ந்தளிக்கப்பட்டது. அக்கோவிலில் ஏற்கனவே இருந்த வேற்று தெய்வக் கடவுளின் சிலைகளானது திருந்தந்தை நான்காம் போனிபஸ் அவர்களின் உத்தரவின் பேரில் அடித்து நொறுக்கப்பட்டது. இப்பெருவிழா நாளில் பெந்தேயன் கோவிலுக்குச் சென்று மக்கள் யாவரும் இறையருளைப் பெற்றுச் செல்வார்கள்.

அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் திருச்சபையும், இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியை தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ‘எல்லா இனத்தைச் சேர்ந்த, மொழியைப் பேசக்கூடிய எண்ணிக்கையில் அடங்காத மக்கள் அரியணைக்கும், ஆட்டுக்குட்டுக்கும் இடையில் இருந்து இறைவனை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்’ என்று படிக்கின்றோம். இவர்கள் யார்?. இவர்கள் வேறு யாருமல்ல, இறைவழியில் நடந்து கடவுளையும், அயலாரையும் அன்பு செய்த தூயவர்கள் – புனிதர்கள் – கடவுளின்மக்கள் - ஆவர்.

இவர்களைப் போன்று இறைவனின் திருமுன் நிற்பததற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான பதிலைதான் இன்றைய நற்செய்தி வாசகத்திலே படிக்கின்றோம். ஆண்டவர் இயேசு தந்த மலைப்பொழிவை யாராரெல்லாம் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்து வருகிறார்களோ, அவர்களே இறைவன் தரும் விண்ணரசை உரிமைச் சொத்தாகப் பெறமுடியும். எளிய உள்ளத்தோராய், தூய இதயத்தோராய், நீதியின்மீது தாகமுடையோராய், அமைதிக்காக உழைப்போராய், கனிவுடையோறாய், நீதிக்காக துன்பங்களை அனுபவிப்பவராய், இன்னும் பல்வேறு இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழுகின்றபோது இறைவன் தரும் விண்ணரசு நமக்கு எப்போதும் உண்டு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்து இல்லை.

நாம் நமது அன்றாட வாழ்வில் இயேசுவின் போதனைகளின் படி வாழ்கின்றோமா? நம்மோடு வாழும் எளியோரை, இறைவனை அன்பு செய்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அரசியும், புனிதையுமான புனித ஹங்கேரி நகர எலிசபெத். இவர் 1207 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டு அரசர் அந்திரேயாவுக்கு மகளாகப் பிறந்தவர். 1221 ஆம் லண்ட்ரவேயின் அரசன் நான்காம் லூயி மன்னனுக்கு தன்னுடைய பதிமூன்றாம் வயதிலேயே மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.

அரசியான எலிசபெத் தான் அரசி என்றெல்லாம் பாராது ஏழைகள், வறியவர் யாவருக்கும் உதவி செய்துவந்தார். ஒருமுறை நாட்டில் கொள்ளை நோய் பரவியபோது ஏராளமான மக்கள் மடிந்துபோனார்கள். அத்தகைய வேளையில் அரசி துன்புறக்கூடிய மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்தார். இது அவளுடைய அத்தைக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவளது அத்தை, அதாவது மன்னன் லூயின் தாயார் தன்னுடைய மகனிடம் மருமகளைப் பற்றிக் குறைகூறினாள். ஆனால் மன்னனோ தன் மனைவியின்மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்ததால் அதனை அவன் கண்டுகொள்ளவில்லை.

ஒருநாள் அரசி எலிசபெத் தெருவோரத்தில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தொழுநோயாளி ஒருவரை அழைத்துவந்து, தன்னுடைய வீட்டில்வைத்து சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அவளுடைய அத்தை, தன்னுடைய மகனிடம் சென்று, எல்லாவற்றையும் முறையிட்டாள். உடனே அவன், தன் தாயோடு வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அரசியின் அறைக்கு வந்தான். அங்கே படுக்கையில் இயேசுவின் உருவில் தொழுநோயாளர் படுத்துக் கிடந்தார். அவருக்கு அரசி சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மன்னரின் தாயார், தன்னுடைய மருமகளின் காலில் விழுந்து ‘அவளைத் தவறாகப் புரிந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டார். அதன்பிறகு தன்னுடைய மருமகள் பிறர் நலப்பணிகள் புரிவதற்கு அவர் உறுதுணையாக இருந்து வந்தார்.

அயலாருக்குச் செய்யும் சேவை யாவும் ஆண்டவருக்கு செய்யக்கூடியவை என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது. புனிதர்கள் என்பவர் வேறு யாருமல்ல, அவர்கள் மனிதரை அன்பு செய்து, அவர்களுக்கு சேவைசெய்ததன் வழியாக இறைவனை அடைந்தவர்கள்.

ஆகையில் அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் புனிதர்களைப் போன்று இயேசு நமக்குப் போதித்த விழுமியங்களின் படி – மலைப்பொழிவின் படி – வாழ்வோம். இயேசுவுக்கு நமது வாழ்வால், வார்த்தையால் சான்று பகர்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

சிந்தனை

புனிதர்களின் சமூக உறவை விசுவசிக்கின்றேன்.

ஒவ்வொருவரும் உச்சரிக்கின்ற வார்த்தைகள் இவை.

இதை உணர்ந்து உச்சரிக்கின்றோமா? திருச்சபையில் எல்லாரும் ஒரே குடும்பமாக இருந்து வருகின்றோம். இங்கு தூதர்கள், புனிதர்கள், விசுவாசிகள் என எல்லாரும் திரியேக தேவனோடு உறவு கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றோம் என்பதனையே உச்சரிகின்றோம். இத்தகைய உறவினில் நாம் உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்வோமேயானால் நாமும் புனித நிலையடைந்து பேறுபெற்றவர்களாவோம்.

THE COMMUNION OF THE HOLY: TRUE CONSOLATION OF OUR FAITH

Vatican City, 30 October 2013 (VIS) - “The communion of the holy”, one of the most beautiful aspects of our faith, as it was defined by Pope Francis, was the theme of the catechesis of this Wednesday's general audience, which took place in St. Peter's Square and was attended by more than 80,000 people.

The communion of the holy consists of two related meanings: the communion of holy things and communion between holy people, and the Pope focused on the second, “one of the most consolatory aspects of our faith”. In fact, the term “holy” refers to those who believe in Jesus Christ and who are integrated with him in the Church by baptism”.

The relationship between Jesus and the Father is “the 'matrix' of the link between us as Christians: if we are intimately inserted in this 'matrix', in this ardent fire of love, then we can truly become one heart and one soul, because God's love burns away all our selfishness, our prejudices, our divisions, both internal and external. If we are thus rooted at the source of Love, which is God, we encounter a reciprocal movement: from brothers to God. The experience of fraternal communion leads me to communion with God. God's love burns away our sins”.

Francis moved on to consider the second aspect of the communion of the holy: faith needs the support of others, especially in difficult times, and asked, “Who among us has not experienced insecurity, disorientation, and even doubt along the path of faith? We have all experienced this; I have too, it forms part of the path of faith, the path of our lives. None of this should surprise us, because we are human beings, marked by our frailty and limits. However, in these difficult moments it is necessary to trust in the help of God, through filial prayer and, at the same time, it is important to find the courage and the humility to open ourselves to others. In this communion – because communion means common union – were are a great family, whose members all help and support one another”.

The third aspect of the communion of the holy “goes beyond earthly life, it goes beyond death and lasts forever. It is a spiritual communion, born at baptism, and it is not interrupted by death but, thanks to the risen Christ, is destined to find its full meaning in eternal life. There is a deep and indissoluble bond between those who are still pilgrims in this world, between us, and those blessed who have crossed the threshold of death to enter into eternity. All baptised persons here on earth, the souls in Purgatory and those who are already in paradise form a great and single family. This communion between heaven and earth is achieved above all through intercessory prayer. This communion is ours, it makes us brothers, it accompanies us on our path through life and it means that we meet again in heaven. Let us continue on this path, with joy!” concluded the Holy Father.

புனிதர் அனைவரின் பெருவிழா

புனிதர் அனைவரின் பெருவிழாவை ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1ம் தேதி சிறப்பிக்கின்றது திருஅவை.

பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள்இ எட்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கிரகரியின் காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று கொண்டாடப்பட்டது.  திருஅவையால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்ட புனிதர்கள் பலர் இருக்கும் போதிலும்இ இவ்வகை அங்கீகாரம் பெறாமல்இ ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரை நினைவு கூறும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இறை விருப்பத்தின்படி இவ்வுலகில் வாழ்ந்து விண்ணுலகில் இறையின்பத்தை அனுபவிப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் உற்றுநோக்கினால்இ இலட்சக்கணக்கானவர்களை புனிதர்கள் என்று திடமாக கூறலாம் என்று பலரும் கருத இடமுண்டு.

புனிதர்கள் இவ்வுலகில் சாதாரண மனிதர்களாக வாழ்ந்திருப்பினும் அவர்கள் முன்னுதாரண வாழ்வு வாழ்ந்ததால் சிறப்பான முறையில் போற்றப்படுகின்றார்கள். புனிதர்கள் அனைவரும்இ இறைவனால் தமக்கு வழங்கப்பட்ட தனிப்பட்டக் கொடைகளுக்கு மதிப்பளித்துஇ இறை அழைத்தலுக்கு செவிமடுத்துஇ தன்னலமற்ற தியாக வாழ்வு வாழ்ந்தவர்கள். புனிதர்கள் ஒவ்வொருவரும் இறைமகன் கிறிஸ்துவை தமது மீட்பராக ஏற்றுக் கொண்டவர்கள்.  புனிதர்களில் பலர்இ எண்ணற்ற தியாகங்கள் செய்தது மட்டுமல்ல இரத்தம் சிந்தி தமது உயிரையே தியாகப்பலியாக்கி மறைசாட்சியாக இறந்தவர்கள்.

திருத்தூதர்கள்இ இறைவாக்கினர்கள் மறை சாட்சிகள் ஆகிய புனிதர்களை அடித்தளமாகவும்இ கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்டதே நமது அன்னையாம் திருஅவை. புனிதர்கள் கிறிஸ்துவின் உறவில் கட்டடமாய் எழுப்பப்பெற்றுஇ ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெற்றிருக்கின்றார்கள் என புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமடலில் (எபேசியர் 2:20-22) தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

புனிதர்கள் எனப்படுவோர் சாதாரண மனிதர்களாகஇ நிறைகளும் குறைகளும் கொண்டிருந்தபோதிலும்இ தமது வாழ்வை இறை விருப்பத்திற்கேற்பஇ இறை வார்த்தையின்படி வாழ்ந்ததால்இ புனிதர்கள் என அழைக்கப்படுகின்றனர். புனிதர்களை எந்நாளும் நாம் நினைவு கூர்ந்தால்இ நாமும் புனிதர்களாக வாழ முயற்சி செய்யலாம் என்பதே இவ்விழா தரும் நம்பிக்கை.

புனிதர்கள் வாழ்ந்து சென்ற பாதையில் நாமும் பின்தொடர்ந்து இறைமகன் இயேசுவுக்கு உகந்த வகையில் நமது வாழ்வை மாற்றியமைக்க இந்நாள் அழைப்புவிடுக்கிறது.

No comments:

Post a Comment