கடமையைச் செய், பலனை எதிர்பாக்காதே - லூக்கா 17: 7-10
வறிய குடும்பத்தில் பிறந்தாலும், நன்றாகப் படிக்கும் சிறுவன் அவன். தோட்டத்தில் காய்கறிகளை விளைவித்து, அவற்றைத் தலையில் சுமந்து விற்று, அதில் வரும் வருமானத்தில் குடும்பமும் படிப்பும் நடந்தது. காலையில் தெருத் தெருவாகச் சுற்றி விற்றுவிட்டு, அவசரமாக பள்ளிக்கூடம் ஓடுவான். ஒருநாள் அப்படி பசியோடு பக்கத்து ஊரில் காய்கறிகளை விற்கும்போது, அவனால் நடக்கவே முடியவில்லை. வெட்கத்தைவிட்டு ஏதாவது ஒரு வீட்டில் சாப்பாடு கேட்கலாம் என்று முடிவெடுத்தான். கொஞ்சம் பெரிதாகத் தெரிந்த வீட்டின் கதவைத் தட்ட, திறந்தது ஒரு இளம்பெண்.
அவளைப் பார்த்ததும் வெட்கத்தில் குரல் வர மறுத்தது. சாப்பாடு கேட்கும் எண்ணத்தைக் கைவிட்டு, “கொஞ்சம் தண்ணீர்” என்றான். அவனது முகத்தில் பசியின் ரேகையைப் பார்த்த பெண், உள்ளே கூப்பிட்டு சாப்பாடு போட்டாள். பதிலுக்கு அவன் காய்கறிகள் தர, அவள் மறுத்தாள். “பசியோடு வரும் யாருக்கும் பிரதிபலன் கருதாமல் உணவிடுவது என் கடமை” என்றாள்.
வருடங்கள் உருண்டோட, அவன் இப்போது பக்கத்து நகரத்தில் பிரபல மருத்துவமனையின் தலைசிறந்த மருத்துவர். ஒருநாள் விசித்திரமான நோயோடு நடுத்தர வயதுப் பெண்மணி ஒருத்தி அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தாள். அவள் பிழைக்கவே வாய்ப்பு இல்லை என்று மற்ற மருத்துவர்கள் உதட்டைப் பிதுக்கினார்கள். விஷயம் அவன் காதுக்கு வந்தது. அவளது ஊரைக் கேட்டதும் அவனுக்குள் பொறி தட்டியது. ஓடிப்போய் பார்த்தான். ஆமாம், அவனுக்கு உணவிட்ட அதே பெண்தான் அந்த நோயாளி. தனிப்பட்ட கவனம் எடுத்து அவளைத் தேற்றினான். நம்பமுடியாத அதிசயமாக அவள் பிழைத்தாள். ஆனாலும் அவளுக்குக் கவலை. பெரிய மருத்துவர் தனிப்பட்ட கவனம் எடுத்து சிகிச்சை தந்ததால், கட்டணம் நிறைய வருமே. எப்படித் தருவது என்று.
மருத்துவமனையில் இருந்து வெளியேறும் சமயத்தில் அவளுக்கு பில் வந்தது. “சிகிச்சைக்கான தொகையை, நீங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு சாப்பாடு போட்டு செலுத்திவிட்டீர்கள்” என்று எழுதியிருந்த பெரிய மருத்துவரை இப்போது அவளால் அடையாளம் தெரிந்து கொள்ள முடிந்தது.
நாம் ஒவ்வொருவரும் பிரதிபலன் பாராமல் உதவி செய்யவேண்டும். அப்படி நாம் செய்கின்ற உதவிக்கு இறைவன் ஒருநாள் நிச்சயம் வெகுமதி தருவார் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாம் ஒவ்வொருவரும் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், கடமையுணர்வோடு செய்யவேண்டும் என்று சொல்கின்றார். அதற்கு அவர் சொல்லக்கூடிய விளக்கம் மிகவும் அழகானது. “உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், “நீ உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடுக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைத் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்” என்கிறார் இயேசு.
இயேசுவின் இவ்வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன. மனிதர்களாகிய நாம் நிறைய நேரங்களில் பலனை எதிர்பார்த்தே ஒன்றைச் செய்கின்றோம். இவருக்கு இதைச் செய்தால், பின்னாளில் அவர் நமக்கு உதவி செய்வார் என்ற எதிர்பார்ப்போடும், எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பலனை எதிர்பார்த்தும் தான் ஒன்றைச் செய்கின்றோம். இதில் ஒரு பிரச்சனை இருக்கின்றது. அது என்னவென்றால், ஒன்றை எதிர்பார்த்து ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றபோது, அவர் அதைச் செய்யாமல் இருந்துவிட்டால் அல்லது நமக்கு விசுவாசமாக இல்லாமல் போய்விட்டால் அவரை நன்றிகெட்டவர் என்று இழிவாகப் பேசுகின்றோம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் எந்தவொரு எதிர்பார்ப்பு இல்லாமல் செய்கின்றபோது வருவதில்லை. அதனால்தான் இயேசு ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள், எங்கள் கடமையைத் தான் செய்தோம் எனச் சொல்லுங்கள்” என்கின்றார்.
‘தர்மம் செய்யும்போது கூட வலக்கை செய்வது இடக்கைத் தெரியாதிருக்கட்டும்’ என்றுதான் இயேசு சொல்கின்றார் (மத் 6:3)
ஆகவே, நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும் பலனை எதிர்பார்க்காமல் செய்வோம், இறைவனின் அதிமிக மகிமைக்கே செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.
வறிய குடும்பத்தில் பிறந்தாலும், நன்றாகப் படிக்கும் சிறுவன் அவன். தோட்டத்தில் காய்கறிகளை விளைவித்து, அவற்றைத் தலையில் சுமந்து விற்று, அதில் வரும் வருமானத்தில் குடும்பமும் படிப்பும் நடந்தது. காலையில் தெருத் தெருவாகச் சுற்றி விற்றுவிட்டு, அவசரமாக பள்ளிக்கூடம் ஓடுவான். ஒருநாள் அப்படி பசியோடு பக்கத்து ஊரில் காய்கறிகளை விற்கும்போது, அவனால் நடக்கவே முடியவில்லை. வெட்கத்தைவிட்டு ஏதாவது ஒரு வீட்டில் சாப்பாடு கேட்கலாம் என்று முடிவெடுத்தான். கொஞ்சம் பெரிதாகத் தெரிந்த வீட்டின் கதவைத் தட்ட, திறந்தது ஒரு இளம்பெண்.
அவளைப் பார்த்ததும் வெட்கத்தில் குரல் வர மறுத்தது. சாப்பாடு கேட்கும் எண்ணத்தைக் கைவிட்டு, “கொஞ்சம் தண்ணீர்” என்றான். அவனது முகத்தில் பசியின் ரேகையைப் பார்த்த பெண், உள்ளே கூப்பிட்டு சாப்பாடு போட்டாள். பதிலுக்கு அவன் காய்கறிகள் தர, அவள் மறுத்தாள். “பசியோடு வரும் யாருக்கும் பிரதிபலன் கருதாமல் உணவிடுவது என் கடமை” என்றாள்.
வருடங்கள் உருண்டோட, அவன் இப்போது பக்கத்து நகரத்தில் பிரபல மருத்துவமனையின் தலைசிறந்த மருத்துவர். ஒருநாள் விசித்திரமான நோயோடு நடுத்தர வயதுப் பெண்மணி ஒருத்தி அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தாள். அவள் பிழைக்கவே வாய்ப்பு இல்லை என்று மற்ற மருத்துவர்கள் உதட்டைப் பிதுக்கினார்கள். விஷயம் அவன் காதுக்கு வந்தது. அவளது ஊரைக் கேட்டதும் அவனுக்குள் பொறி தட்டியது. ஓடிப்போய் பார்த்தான். ஆமாம், அவனுக்கு உணவிட்ட அதே பெண்தான் அந்த நோயாளி. தனிப்பட்ட கவனம் எடுத்து அவளைத் தேற்றினான். நம்பமுடியாத அதிசயமாக அவள் பிழைத்தாள். ஆனாலும் அவளுக்குக் கவலை. பெரிய மருத்துவர் தனிப்பட்ட கவனம் எடுத்து சிகிச்சை தந்ததால், கட்டணம் நிறைய வருமே. எப்படித் தருவது என்று.
மருத்துவமனையில் இருந்து வெளியேறும் சமயத்தில் அவளுக்கு பில் வந்தது. “சிகிச்சைக்கான தொகையை, நீங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு சாப்பாடு போட்டு செலுத்திவிட்டீர்கள்” என்று எழுதியிருந்த பெரிய மருத்துவரை இப்போது அவளால் அடையாளம் தெரிந்து கொள்ள முடிந்தது.
நாம் ஒவ்வொருவரும் பிரதிபலன் பாராமல் உதவி செய்யவேண்டும். அப்படி நாம் செய்கின்ற உதவிக்கு இறைவன் ஒருநாள் நிச்சயம் வெகுமதி தருவார் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாம் ஒவ்வொருவரும் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், கடமையுணர்வோடு செய்யவேண்டும் என்று சொல்கின்றார். அதற்கு அவர் சொல்லக்கூடிய விளக்கம் மிகவும் அழகானது. “உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், “நீ உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடுக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைத் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்” என்கிறார் இயேசு.
இயேசுவின் இவ்வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன. மனிதர்களாகிய நாம் நிறைய நேரங்களில் பலனை எதிர்பார்த்தே ஒன்றைச் செய்கின்றோம். இவருக்கு இதைச் செய்தால், பின்னாளில் அவர் நமக்கு உதவி செய்வார் என்ற எதிர்பார்ப்போடும், எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பலனை எதிர்பார்த்தும் தான் ஒன்றைச் செய்கின்றோம். இதில் ஒரு பிரச்சனை இருக்கின்றது. அது என்னவென்றால், ஒன்றை எதிர்பார்த்து ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றபோது, அவர் அதைச் செய்யாமல் இருந்துவிட்டால் அல்லது நமக்கு விசுவாசமாக இல்லாமல் போய்விட்டால் அவரை நன்றிகெட்டவர் என்று இழிவாகப் பேசுகின்றோம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் எந்தவொரு எதிர்பார்ப்பு இல்லாமல் செய்கின்றபோது வருவதில்லை. அதனால்தான் இயேசு ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள், எங்கள் கடமையைத் தான் செய்தோம் எனச் சொல்லுங்கள்” என்கின்றார்.
‘தர்மம் செய்யும்போது கூட வலக்கை செய்வது இடக்கைத் தெரியாதிருக்கட்டும்’ என்றுதான் இயேசு சொல்கின்றார் (மத் 6:3)
ஆகவே, நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும் பலனை எதிர்பார்க்காமல் செய்வோம், இறைவனின் அதிமிக மகிமைக்கே செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.
No comments:
Post a Comment