அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 14, 2017

புனித சவேரியார் மன்றாட்டுமாலை:

புனித சவேரியார் மன்றாட்டுமாலை:

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித இஞ்ஞாசியாருக்கு சமமான தகுதியும். அன்பமுள்ள ஞான மகனாகிய புனித சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாரதநாட்டின் அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஸ்பெய்னில் நவார் பகுதியில் பிறந்தவரான புனித சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

"ஒருவர் உலகமுழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில், அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" என்ற அறிவுரையைப் புனித இஞ்ஞாசியார் அடிக்கடி கூறியதால், இறைப் பணிக்கு உம்மையே அர்ப்பணித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

31 வயதில் குருவாகத் திருநிலை பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

40 நாள்கள் கடுமையான ஒருசந்தி, ஆன்மீகத் தயாரிப்பக்குப் பின் முதற் பூசை நிறைவேற்றியவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித இஞ்ஞாசியாரின் செயலராக உழைத்து வந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இந்திய நாட்டுக்குச் செல்லும்படிக் கட்டளைபெற்றதும், மறுநாளே பயணத்தைத் தொடங்கியவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆல்ப்ஸ் வழியாகவும் ஸ்பெயின் வழியாகவும் மூன்று மாதங்கள் பயணம் செய்து, லிஸ்பன் துறைமுகத்தை அடைந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பதிமூன்று மாதங்களாகப் பயணம் செய்து, பதினோராயிரம் மைல் கடற்பயணத்தை மேற்கொண்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பலநூறு பயணிகள் நோயுற்றபோது, அவர்களுக்கு உதவி செய்து, திருவுரையாற்றி, மறைக்கல்வி போதித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஈராண்டுகள் கார்மணற்றுறைப் பகுதியில் உழைத்து, பரதகுலப் பெருமக்கள் அனைவரையும் கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கையில் சிறுமணிகொண்டு ஒலியெழுப்பி, சிறுவர்களையும் தாய்மார்களையும் கோவிலுக்கு அழைத்து வந்து மறைக்கல்வி ஊட்டியவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இலங்கை, மலாக்கா, இந்தோசீனம், பிலிப்பின்ஸ் வழியாக ஜப்பான் வரை சென்று போதித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சீனாவுக்குள் நுழையும் வாய்ப்பக்காக சான்சியன் தீவில் தங்கியிருந்தபோது, நோய் வாய்ப்பட்டு, 46-வது வயதில் இறந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பத்தாண்டுத் தூதுப் பணியில் 50 ஆட்சிப் பகுதிகளில், பத்து இலட்சம் பேரை இறையரசில் சேர்த்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இந்திய நாடுகளின் அப்போஸ்தலர் என்ற சிறப்பப் பெயருடன், விசுவாசப் பரம்பதல் சபையின் பாதுகாவலராய் நியமிக்கப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மறைப்பணியாளருக்குரிய ஞானத்துக்கும், புனிதத்துக்கும் உத்தம மாதிரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குருடருக்குப் பார்வை கொடுப்பவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சப்பாணிகளின் ஊனந் தீர்ப்பவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நோயாளிகளுக்கு உடல் நலம் அளிப்பவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பஞ்சம், படை, நோயில் ஆதரவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிசாசுகளை ஓட்டுபவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிலுவையால் எதிரிகளின் படையைத் துரத்தினவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறந்தவர்களை உயிர்ப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கடலையும், பயலையும் கீழ்ப்படுத்தி அடக்கும் வல்லமையை கொண்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வறியவருக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாரத நாட்டிற்று ஒளிச்சுடரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பல மொழிகளில் உண்மையை அறிக்கையிட்ட மறை வல்லுநரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சொல், செயல், சிந்தனையில் தூய்மை மிக்கவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அனைத்துப் புனிதர்களுடைய நற்பண்பகளினால் அணி செய்யப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் பருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் பருவையாகிய இயேசுவே
எங்களை் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் பருவையாகிய இயேசுவே
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக, புனித சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

செபிப்போமாக.

அன்பின் இறவைா, வாழ்வளிக்கும் உம் திருமகளின் நற்செய்தியை நாங்கள் எங்கள் மக்களுக்கு அறிவிக்க புனித பிரான்சிஸ்கு சவேரியாரை அனுப்பத் திருவுளமானீர். அவருடைய அயரா உழைப்பினால் பல்வேறு நாட்டு மக்களை உமக்குச் சொந்தமாக்கிக் கொண்டதற்காக நன்றியுடன் உம்மைப் புகழ்கிறோம். அவருடைய மன்றாட்டினால் நாங்கள் உம் அருளாற்றலோடு ஒத்துழைத்து, எங்கள் நற்செய்தி வாழ்வைப் பதுப்பித்துக் கொள்ளவும், உமது அருள்வாக்கை ஏற்று, அதற்குத் துணிவுடன் சான்று பகரவும் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென்.

🙋‍♂ மூவொரு இறைவனுக்கே மகிமை! மரியே வாழ்க!! 🙋⁠⁠⁠⁠

No comments:

Post a Comment