அருட்சாதனங்களின் விளைநிலம் அன்னை மரியாள்
அருளும் வளமும் சமச்சீராய் தந்து பராமரித்தாயே
அருளாத வரங்களில்லை அம்மா உன் திருக்கரத்தாலே
அருளோடு ஒவ்வொரு நாளும் எம்மை பாதுகாத்தாயே
அருளை வாரி வழங்கிடவே நீலக்கடலோரம் காத்திருந்தாயே
அருள் மகன் சொல்வதை நாளும் கேட்டிடவே பகர்ந்தாயே
அருள் தரும் சாதனங்களை யாம் பெற்றிடவே பரிந்துரைத்தாயே
அருளொன்றை பற்றிடும் பக்த சபையினர் நலம் காத்தாயே
அருளற்ற மாந்தரும் மனம் மாறுவர் அம்மா உம்மை பார்த்தாலே
அருளோ,நிறைவோ தாயே நீரின்றி எம்மிடம் தங்கிடாதே
அருள்வாய் வரமே நின் மலரடி நாடும் யாவர்க்கும்.
அருள்வாய் நலமே நின் பாதையில் நடக்கும் யாவர்க்கும்.
வாழ்க மரியே
அருளும் வளமும் சமச்சீராய் தந்து பராமரித்தாயே
அருளாத வரங்களில்லை அம்மா உன் திருக்கரத்தாலே
அருளோடு ஒவ்வொரு நாளும் எம்மை பாதுகாத்தாயே
அருளை வாரி வழங்கிடவே நீலக்கடலோரம் காத்திருந்தாயே
அருள் மகன் சொல்வதை நாளும் கேட்டிடவே பகர்ந்தாயே
அருள் தரும் சாதனங்களை யாம் பெற்றிடவே பரிந்துரைத்தாயே
அருளொன்றை பற்றிடும் பக்த சபையினர் நலம் காத்தாயே
அருளற்ற மாந்தரும் மனம் மாறுவர் அம்மா உம்மை பார்த்தாலே
அருளோ,நிறைவோ தாயே நீரின்றி எம்மிடம் தங்கிடாதே
அருள்வாய் வரமே நின் மலரடி நாடும் யாவர்க்கும்.
அருள்வாய் நலமே நின் பாதையில் நடக்கும் யாவர்க்கும்.
வாழ்க மரியே
No comments:
Post a Comment