அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

நல்ல சமாரியன்

* *நல்ல சமாரியன்

உவமை நாயகன் சமாரியன்
நம் உள்ளத்தை உலுக்கி நம்மை சிந்திக்க வைத்தாரே

நம் பணி நம் வழி என்ற நம் சுயநலத்தை மாற்றி யோசிக்க வைத்தாரே

நமக்கேன் வம்பு சந்திக்க இல்லை தெம்பு என்றிருந்த நம்மை வலியோரை கவனிக்க வைத்தாரே

பார்த்தும் பாராமல்
கேட்டும் கேளாமல் இருந்த நமக்கு உதவும் வழி சொல்லி தந்தாரே

 நலிந்தோர் வறியோர் கண்டிட வாய்ப்பிருந்தும் விலகிய நம்மை அருகமர சொன்னாரே

விபத்தில் விழுந்தோரை
விரைவாய் காப்பாற்ற வேண்டிய ஞானம் பகர்ந்தாரே

கண் வழி ஆறுதல் தராமல் செயல்வழி ஆற்றுப்படுத்த இக்கணம் உரைத்தாரே

வீணே செலவாகும் பணத்தை வீழ்ந்தோர் நலனுக்களிக்க நல் ஆலோசன தந்தாரே

 *ஒவ்வொரு நேரமும் சமாரியனாவோம்.
*
சாமானிய மக்களையும்
சரிநிகராய் காண்போம்

No comments:

Post a Comment