அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, December 20, 2017

சொல்லிக் கொடுப்போம் . . . .

 சொல்லிக் கொடுப்போம் . . . .

பிறந்த மழலையின் காதுகளில்
நம இறைப் பாடல்கள் கேட்க வைப்போம்

காலை மாலை நேரங்களில் குழந்தையின் அருகமர்ந்து திருப்பாடல்கள் தினம் படிப்போம்

ஆலயம் தூக்கி வரும் சமயங்களில் கருத்தாய்
இறைவன் உறைவிடம் நோக்கி காட்டுவோம்

நொறுக்குதீனி அத்தனையும் ஆலயத்தில்
அளிப்பதை தவிர்ப்போம்

தவழும் நாட்களில் ஆலயத்தின் உள்ளமர்ந்து
உன்னத இறைவனோடு உரையாடுவோம்

நடக்கும் வயதில் நாமும் திவ்ய நற்கருணை நாதருக்கு முழு மரியாதை செய்து காட்டுவோம்

படிக்கும் பருவத்தில் கவனமுடன்
மறைக்கல்வி பயில கருத்தாய் அனுப்புவோம்

கேள்வி கேட்கும் காலத்திலே விவிலியக் கதைகள் ஒவ்வொன்றாய் விளக்கி சொல்வோம்

ஒவ்வொரு நாளும் இறை சன்னதியில்
அமர்ந்து செபிக்க நேரம் ஒதுக்குவோம்

வீண்பிடிவாதம் பிடித்தழும் பிள்ளைகளுடன்
சமரசம் செய்து இறைவன் இரக்கம் உரைப்போம்

தனக்குரியதை பிறருக்கு பகிர
செயல்வழி செய்து காட்டுவோம்

அதிகாலையில் விழிக்க சொல்வோம்,
அருமை இயேசுவை துதிக்க சொல்வோம்

அக்கறையாய் படிக்க சொல்வோம்,அத்துடன்
அன்பாய் வாழ சொல்வோம்

ஊக்கத்துடன் இருக்க சொல்வோம், ஊருக்கும் உதவ சொல்வோம்

கண்ணியமாய் வாழ சொல்வோம்,
கவனிப்பில்லாதோரை காண சொல்வோம்

படிப்பில் முதன்மையாய வர சொல்வோம், பரிதவிப்போரையும்  நேசிக்க சொல்வோம்

சுத்தமாக இருக்க சொல்வோம்,             
சுற்றுசூழலை பாதுகாக்க சொல்வோம்

ஆக்கங்கள் பல காண சொல்வோம்,
ஆண்டவருக்கு நன்றி கூற சொல்வோம்

ஜெயிப்பது எப்படி என சொல்லிக்கொடுப்போம்,
ஜெபமாலையின் மகிமையை பகர்ந்திடுவோம்

தினமும் பள்ளிக்கு நேரத்தோடு அனுப்புவோம் அவ்வண்ணமே
திருப்பலிக்கும் சீக்கிரம் போக பயிற்றுவிப்போம்

கை வேலை ஒன்றை பழக்கிடுவோம்,
கைபேசி பயன்பாட்டை குறைக்க சொல்வோம்

விவரமாய் வாழ சொல்வோம்,கண்டிப்பாய்
விவிலியம் வாசிக்க சொல்வோம்

இனியவையாக என்றும் பேசுவோம்,
இரவில் இறை நன்றியோடு படுக்க பழக்குவோம்

அன்புடன்,

கஸ்மீர் ரோச், சின்னமலை,9

குழந்தைகள் தினவிழா

குழந்தைகள் தினவிழா

இயேசுவின் கண்மணியாய்,

அன்னை மரியின் அன்பு வரமாய்,

இசைத் தென்றலாய்,

பவனி வரும் குளிர் நிலவாய்,

தீந்தமிழ் காவியமாய்,

இறைவனின் நற்கனியாய்,

அல்லல் போக்கும் இளங்கதிராய்,

சுகம் தரும் அமுதமாய்,

பார்ப்போர் மயங்கும் அழகொளியாய்,

கை வீசும் கற்கண்டாய்,

கொஞ்சும் குரல் நாதமாய்,

பொக்கை வாய் பளீர் சிரிப்பாய்,

மழலை சொல் கீதமாய்,

பேரானந்த பொக்கிஷமாய்,

இயேசுவின் உண்மை சீடராய்,

கள்ளங்கபடற்ற ஞானக் கதிராய்,

இறைவனின் அருட்கொடையாய்,

வாழ்வின் இன்ப நீரூற்றாய்,

வசந்தம் தரும் செல்லக் குழந்தைகள் தின விழா வாழ்த்துகள்.

அன்புடன்,
கஸ்மீர் ரோச்
சின்னமலை*

நம் திருச்சபை நம் வாழ்வு

நம் திருச்சபை நம் வாழ்வு

திருப் பொழிவில் உருவாக்கி

திருக் கரத்தால் ஆசீரளித்து

திரு விவிலியத்தால் திடப்படுத்தி

திரு சரீரத்தால்  உணவளித்து

திரு இரத்தத்தால் நிறைவளித்து

திருந்தாதோரையும் அரவணைத்து

திரு கட்டளையால் நெறிப்படுத்தி

திரு விழாக்களால் மகிழ்வித்து

திரு தேவதாயின் மக்களாக்கி

திரு புனிதர்களின் உறவினராக்கி

திருப் பலியில் நன்மக்களாகி

திருத்தந்தையின் நல் மந்தையாகி

திருந்த நல் வாழ்வுகளமாகி

திரும்ப திரும்ப பணிவாகி

திரு பயணங்கள் ஆசீராகி

திரு சடங்குகள் உரமாகி

வாழ்விக்கும் எம் திருச்சபையே....

நீ தான் எம் வாழ்வின் வளமே....

நீயின்றி எம் வாழ்வில் ஏது நலமே....

நீக்கமற எம்மில் கலந்திட்ட திருச்சபையே........

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

இறைவா நீ மட்டும் போதுமே.......

 இறைவா நீ மட்டும் போதுமே.......



சஞ்சலம் எனும்போது உன் துணையொன்றே போதுமே.


துன்பம் எனை தகிக்கையில் உன் கரமொன்றே போதுமே


கடினம் எனை நகைக்கையில் உன் பார்வையொன்றே போதுமே


வேதனை எனை வாட்டுகையில் உன் நினைவொன்றே போதுமே


தடுமாற்றம் எனை சூழ்கையில் உன் அருளொன்றே போதுமே


சோதனை எனை தோற்கடிக்கையில் உன் கனிவொன்றே போதுமே


வெட்கம் எனை கொல்கையில் உன் நட்பொன்றே போதுமே


ஏமாற்றம் எனை ஆள்கையில் உன் உறவொன்றே போதுமே


பகை எனை பதம் பார்க்கையில் உன் கடைக்கண் பார்வை போதுமே


பொறாமை எனை தின்கையில் உன் நேசம் எனக்கு போதுமே


ஏமாற்றம் எனை தடுமாறச் செய்கையில் உன் அன்பொன்றே போதுமே...


இறைவா நீ மட்டும் போதுமே.......


அன்புடன்,


கஸ்மீர் ரோச்,

சின்னமலை,

சென்னை

9382709007

அன்னை எப்பொழுதும் நீலநிற உடையில் காட்சியளிப்பது ஏன்?​

அன்னை எப்பொழுதும் நீலநிற உடையில் காட்சியளிப்பது ஏன்?​

அன்னையின் காட்சிகள், ஓவியங்களில் பொதுவாக காணப்படும் நிறம் நீலம். நீலநிறம் விண்ணகத்தையும், உன்னதத்தையும், அற்புதங்களையும் உணர்த்துகிறது. மேலும் எண்ணாகமம் அதிகாரம் 15, 37 முதல் 40 வரை உள்ள வார்த்தைகளில் கடவுள் இவ்வாறு சொல்கிறார்.
​"மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; அவர்கள் தலைமுறைதோறும் தங்கள் உடைகளின் முனைகளில் குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு நீல நாடாவைக் கட்டச்செய்; நீங்கள் ஒழுக்கம் கேட்டு நடப்பதற்கு ஏதுவாய் உங்கள் இதயங்களும் உங்கள் கண்களும் விரும்புவதைப் பின்பற்றாமல் நீங்கள் அவற்றைப் பார்த்து ஆண்டவர் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் நினைவுகூர்ந்து அவற்றைச் செய்திடவே இக்குஞ்சம். அதனால் ​நீங்கள் என் கட்டளைகளையெல்லாம் நினைவில் கொண்டு அவற்றை நிறைவேற்றுவீர்கள், உங்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாயிருப்பீர்கள்.​"​
அன்னையும் தன் வாழ்நாள் முழுவதிலும் கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்து, பாவத்திலிருந்து விலகியே வாழ்ந்தார். கபிரியேல் தூதர் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தபோது தன்னையே அர்ப்பணித்தார். (லூக்கா 1:38)

(எண்ணாகமம் 4:5-6) "பாளையத்தினர் புறப்பட்டுச் செல்லும்போது ஆரோனும் புதல்வரும் உள்ளே சென்று மூடுதிரையை இறக்கி அதனைக் கொண்டு உடன்படிக்கை பேழையை மூடுவர்; பின் வெள்ளாட்டு தோலால் அதனை மூடி கருநீலமான ஒரு துணியை அதன்மேல் விரித்து நிலைக் கால்களில் வைப்பர்."
நாமும் அன்னையை உடன்படிக்கையின் பேழையாக, வாக்குத்தத்தத்தின் பெட்டகமாக உருவகப்படுத்துவதால் மரியாள் நீலநிற உடையில் தோன்றுகிறார்.

மரித்தோரை மறந்தால்...

 மரித்தோரை மறந்தால்...

வாழும் உறவுகளை வருந்தி மறந்திருக்கலாம்

வாழ்வித்தவர்களை தெரிந்து மறந்திருக்கலாம்

நோயுற்றவர்களை காணாமல் மறந்திருக்கலாம்

வீழ்ந்தோரை அருகில் நில்லாமல் மறந்திருக்கலாம்

தாழ்ந்தோரை எள்ளி நகையாடி மறந்திருக்கலாம்

இழந்தோரை இகழ்ந்து பரிகசித்து மறந்திருக்கலாம்

மறந்தோரை மன்னிக்க மனமின்றி மறந்திருக்கலாம்

ஆனால் மரித்தோர் ஏங்குகையில் நாம் மறக்கலாமா...?

ஆத்துமாக்களை நினைவுகளினின்று ஒதுக்கலாமா....?

நம்மை இந்நிலைக்கு உயர்த்தியோரை உதாசீனப்படுத்தலாமா..?

ஆன்மாக்களை நினைப்போம்
ஆன்மாக்களுக்காக
செபிப்போம்
ஆன்மாக்கள் காட்டிய வழிநடப்போம்

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

செசீலியம்மாவுக்கு கவிப்பா

செசீலியம்மாவுக்கு கவிப்பா

இறைவன் தந்த அருட்கொடையை
இறைவனுக்கே அர்ப்பணித்த குயிலே

கற்பு என்ற உன்னதத்தை உவப்புடன்
கடவுளுக்குக் காணிக்கையாக்கிய கீதமே

பாடலால் மட்டுமல்ல தவத்தாலும்
பார் போற்ற வாழ்ந்த நற்பாடகியே

மணந்த மணவாளனையே இயேசு
மன்னவனைத் துதிக்க வைத்த சௌந்தர்யமே

வலேரியன் என்ற கணவரை மனமாற்றி
வாழ்வையே அர்ப்பணித்தத்  தூண்டுகோலே

கணவர் மட்டுமல்லாது குடும்பத்தையே மறைசாட்சியாக்கிய ஞானப்பறவையே

எம் பாடகருக்கு இன்றளவும் பாதுகாவலான
எம் மனங்கவர் பண்ணிசையே

பாடல்களாலும் இன்னிசையாலும் திரு அவையால் போற்றப்படும் இறை நாதமே

வாழிய வாழியவே !

அன்புடன்,

கஸ்மீர் ரோச், சின்னமலை,சென்னை 9382709007

What do you think about Jesus? What is Jesus for you?

What do you think about Jesus? What is Jesus for you?
1) Jesus means my God
2) Jesus means my Creator
3) Jesus means Life to me
4) Jesus means my Health
5) Jesus means my Healing
6) Jesus means my Righteousness
7) Jesus means my Holiness
8) Jesus means my Strength
9) Jesus means my Wisdom
10) Jesus means my Understanding
11) Jesus means my Knowledge
12) Jesus means my Shepherd
13) Jesus means Hope to me
14) Jesus means my Glory
15) Jesus means my Honor
16) Jesus means my Savior
17) Jesus means my Provider
18) Jesus means Peace never failing
19) Jesus means Protection to me
20) Jesus means Success to me
21) Jesus means Path of life
22) Jesus means Truth to me
23) Jesus means Forgiver
24) Jesus means Father
25) Jesus means Friend forever
26) Jesus means Lover of my life
27) Jesus means Giver of my life
28) Jesus means Mother
29) Jesus means Hope of tomorrow
30) Jesus means my Anointing
31) Jesus means Care Taker
32) Jesus means Perfection
33) Jesus means Purpose of life
34) Jesus means Boldness
35) Jesus means Confidence
36) Jesus means Shield
37) Jesus means Revelation
38) Jesus means Completeness
39) Jesus means Love unfailing
40) Jesus means Joy unending
41) Jesus means Faith never failing
42) Jesus means one who paid for my sins
43) Jesus means one who took away all my sickness in his body and suffered for me
44) Jesus means "Goodness" to me
45) Jesus means Mercy unparalleled
46) Jesus means Kindness unbelievable
47) Jesus means Grace undeserved
48) Jesus means Health to my Bones
49) Jesus means Healing to my Flesh
50) Jesus means Stability to my emotions
51) Jesus means purifier of my thoughts
52) Jesus means Brightness of my eyes
53) Jesus means my Physician
54) Jesus means Supplier of my money
55) Jesus means my Bread
56) Jesus means my Water
57) Jesus means "Love of my life"
58) Jesus means Trust
58) Jesus means Compassion
59) Jesus means Supernatural
60) Jesus means Destiny
61) Jesus means Reward
62) Jesus means "Fruit of Life"
63) Jesus means Resident forever in Me
64) Jesus means he who compels me Love Godliness
65) Jesus means he who compels me Love others
66) Jesus means he who compels me walk in Righteously
67) Jesus means he who follows me everywhere I go
68) Jesus means he who leads me safe when I choose to follow
69) Jesus means he who never get's sick of me
70) Jesus means he who never get's tiered of me
71) Jesus means he who never get's frustrated with me
72) Jesus means he who always there for me
73) Jesus means Giver of ONLY good things.
74) Jesus means Never violator of my will
75) Jesus means he who values my choice
76) Jesus means he who stands for my decision
77) Jesus means he who listens to my stories
78) Jesus means he who can change the my future anytime
79) Jesus means he who set me on right path anytime I call on him
80) Jesus means my eternal security
81) Jesus means he who guards me day
82) Jesus means he who watches over me in night
83) Jesus means he who heals my wounds
84) Jesus means he who Encourages me
85) Jesus means he who puts me ahead
86) Jesus means he who wants me win
87) Jesus means he who fights for my victory
88) Jesus means he who wiped away my tears
89) Jesus means he who knows me inside out
90) Jesus means he who cloths me with splendor
91) Jesus means he who lifts up my head where it matters
92) Jesus means he who never sleeps
92) Jesus means he who never forgets me
93) Jesus means ever present help
94) Jesus means my true companion
95) Jesus means Beauty I put on
96) Jesus means merriness in my heart
97) Jesus means refreshing to my soul
98) Jesus means energy to my body
99) Jesus means my Promotor
100) Jesus means to me "a love song"
101) Jesus means Unlimited
102) Jesus means Nothing is Impossible
103) Jesus means my LORD.

HALLELUJAH!!!

வழியாய் வா இறைவா...

 வழியாய் வா இறைவா...

மூங்கில் துளை வழி வந்த காற்று மெல்லிசையைத் தந்திடுதே

ஊசிக் காது வழி வந்த நூல் துணியை இறுகப் பற்றிடுதே

கண்ணாடி வழி வந்த ஒளி படக் காட்சியாய் மாறிடுதே

நீர் அருவி வழி வந்த வேகம் மின்சாரத்தைத் தந்திடுதே

பார்வை வழியாய் படித்த  இறைவசனம் மனதில் ஒட்ட மறுப்பதேனோ ?

செவி வழியாய் வந்த நற்செய்தி மனதில் நிற்க மறுப்பதேனோ ?

உரை வழியாய் வந்த நல்வார்த்தை மனதில் தங்க மறுப்பதேனோ ?

நாவு வழியாய்  வந்த எம் ஆன்ம உணவு பலனின்றி இருப்பதேனோ ?

அன்பின் இறைவா

செவி வழி

பார்வை வழி

உரை வழி

நாவு வழி

உட் செல்லும்  நற்பலன்கள் யாவும்
என்னில் பலன் தர
என்னோடு தங்கும் இறைவா......

பயனளித்து பலன்தரவும்
பலனளித்து
உம்மை தொடரவும் வழியாய் வா இறைவா...

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

நம் திருத் தந்தை முதல் முறையாக...

நம் திருத் தந்தை முதல் முறையாக...

1. 1272 ஆண்டுகளுக்குப்பின் ஐரோப்பிய நாட்டை சாராத திருத் தந்தை

2. தென் அமெரிக்க நாட்டை சேர்ந்த முதல் திருத் தந்தை

3.பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்தெடுத்த முதல் திருத்தந்தை

4. தேர்வு செய்யப்பட்ட பின் அலங்கார ஆசனத்தில் அமராமல் எளிமையாக அளவளாவிய முதல் திருத்தந்தை

5. சிவப்பு காப்பாவை அணியாமல் மக்களை சந்தித்த முதல் திருத்தந்தை

6. "ஆயர்  உங்களுக்கு ஆசி வழங்குமுன் நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என மக்களின் மன்றாட்டைக் கேட்ட முதல் திருத்தந்தை

7. தனக்கென ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் ஏறாமல் மற்ற கர்தினால்களோடு இணையாக நின்று ஆசீரளித்த முதல் திருத்தந்தை

8. இயேசு சபை உறுப்பினர்களில் முதல்வர் நம் திருத்தந்தை

9. பதவியேற்ற பின் தனக்கென உள்ள வாகனத்தில் ஏறாமல் மற்ற கர்தினால்களோடு மினி வேனில் பயணித்த முதல் திருத்தந்தை

10. தேர்வு செய்யப்பட்ட பின் தான் தங்கிய அறைக்கு உண்டான பணத்தை நேரில் சென்று வழங்கிய முதல் திருத்தந்தை

11. ஆடம்பரமான தங்கச் சிலுவையை அணியாமல் தான் ஏற்கனவே அணிந்திருந்த எளிய இரும்புச் சிலுவையை அணிந்த முதல் திருத் தந்தை

12. திருத்தந்தையர்களுக்கென அணிவிக்கப்படும் சிவப்பு காலணிகளை துறந்த முதல் திருத்தந்தை

13. திருத்தந்தை ஆன பின் நடத்திய முதல் திருப்பலியில் எளிய ஆடைகளை அணிந்த முதல் திருத்தந்தை

14. முதல் ஊடக சந்திப்பில் ஆடம்பர சிவப்பு, மற்றும் நீளமான அங்கியை அணியாத முதல் திருத்தந்தை

15. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையைப் பயனபடுத்தாமல் தன்னிச்சையாக சொற்பொழிவாற்றிய முதல் திருத்தந்தை

16.ஒரே ஒரு நுரையீரலோடு வாழ்ந்து கொண்டே மகிழ்வுடன் திருச்சபையை வழிநடத்தும் முதல் திருத்தந்தை

( அருட்திரு. தம்புராஜ் சே.ச.அவர்கள் எழுதியது)

தொகுப்பு
அன்புடன்
கஸ்மீர் ரோச்

இறைவா உம்மை மறந்தால்......

 இறைவா உம்மை மறந்தால்......




மழைப் பொழிய மறந்தால்

நாட்டில்  வளமில்லை


காய் காய்க்க மறந்தால்

மரத்தில்  பழமில்லை


வனம் செழிக்க மறந்தால்

எல்லாம் பாலை


நதி ஓட மறந்தால்

கரையில் பசுமையில்லை


பூ பூக்க மறந்தால்

நம்மில் மகிழ்வில்லை


வழிகாட்டி திசை மறந்தால்

வழி தெரியவில்லை


தென்றல் வீச மறந்தால்   

 வசந்தமில்லை


நியாயம் சொல்ல மறந்தால்

நீதியில்லை


ஊழியன் உழைக்க மறந்தால்

ஊதியமில்லை


இறைவா இந்த ஏழை உனை நினைக்க மறந்தால்...........


அன்புடன்,


கஸ்மீர் ரோச்,

சின்னமலை,

சென்னை

9382709007

⛪⛪⛪இயேசு நம் இரட்சகர்⛪⛪⛪

⛪⛪⛪இயேசு நம் இரட்சகர்⛪⛪⛪

கோழி தன் குஞ்சுகளோடு இரை தேடி போகும்போது குஞ்சுகள் தன் தாயின் அருகே  தான் மேய்ந்து கொண்டு இருக்கும் .அதே நேரத்தில் அந்த குஞ்சுகளை பிடித்து தின்ன  காகம் பார்த்துக் கொண்டிருக்கும் அது எப்போ தன் தாயை விட்டு கொஞ்சம் தூர போகுமோ அந்த நிமிடமே காகம் பறந்து வந்து கவ்வி பிடித்து கொன்று தின்று விடும்

கிறிஸ்தவ வாழ்வும் அப்படித்தான் தினமும் வேதம் வாசிப்பது, திவ்வியபலி பூசை காண்பது, ஜெபிப்பது ,ஜெபமாலை சொல்வது ,நற்கருணை சந்திப்பது  போன்ற ஆன்ம காரியங்களில் இருப்பதால் நாம் இயேசுவின் பாதுகாப்பில் இருக்கிறாம் அவருடைய ஆளுகையில் வாழ்கிறோம்.அப்போது சாத்தன் நம்மை ஒன்றும் செய்ய முடியாது . அதே ஒரு கிறிஸ்தவன் இதில் இருந்து விலகி பாவ வாழ்க்கை ஈடு பட்டு வாழ்ந்து வந்தால் அய்யோ அவனுக்கு பரிதாபம் தேவ கிருபை, தேவ காருண்யம், தேவ தயவு எல்லாவற்றையும் இழந்து சாத்தான் அவன் வாழ்வை சீரழித்து அவன் வாழ்வே இருளடைந்து மரித்து போகிறான் அவன் ஆன்மா நரகம் செல்லும்

எப்பொழுதும் ஜெப வாழ்வில் அன்லாக இரு

நமது அன்றாட ஜெப வாழ்வு பதில் வராமல் போனாலும்  ஒரு நாளும் ஜெபத்தை விட்டு விட வேண்டாம்
      திருத்தந்தை பிரான்சிஸ்

ஆமென் ஆமென் ஆமென்

மனதுருக செபித்தால்......

மனதுருக செபித்தால்......

ஆவியின் அனல் - செபிக்கையில் பரவும்

குளுமை - மற்றோருக்காக செபிக்கையில் அவர்களை அடையும்

இன்பம் - பிறருக்காக செபிக்கையில் அவர்களுடன் தங்கும்

துன்பம் - செபிக்க செபிக்க குறையும்

தனிமை - செபிக்கையில் நம்மை விட்டு நீங்கும்

வலிமை - செபிக்க செபிக்க நம்மை சூழும்

மனக்காயம் - செபிக்க செபிக்க ஆறும்

தெம்பு - செபிக்கையில் மனதில் நிறையும்

பாவம் - செபிக்க செபிக்க கரையும்

பணிவு - செபிக்க செபிக்க நம்முள் உறையும்

கனிவு - செபிக்கையில் நம்முடன் பயணிக்கும்

சோகம் - செபிக்க செபிக்க நீர்த்துப் போகும்

இறை பற்று - செபிக்க செபிக்க நம்மில் உறுதியாகும்

அன்பின் இறைவா
இவையெல்லாம்
நனவாக
நிஜமாக
உறுதியாக
வல்லமை தாரும் இறைவா...

அன்புடன்,
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

உலகின் ஒரே அரசர்

உலகின் ஒரே அரசர்

மாசற்றவராய் நாம் மாற மாசின்ற பிறந்த ஒரே அரசர்

பெற்றோருக்கு என்றும் கீழ்படிந்த
ஞானத்தின் அரசர்

முப்பது வயதில் முழு நிலவாய் வலம் வந்த தங்கமான அரசர்

தாழ்ச்சியுடன் திருமுழுக்கு பெற்ற இறை அன்பின் அரசர்

அன்னைக்கு கீழ்படிந்து அதிசயம் அளித்த தெய்வீக அரசர்

அறிவுக்குறையுள்ளோரை அருகமர்த்தி சீடராக்கிய கனிவின் அரசர்

மலைப் பொழிவில் மனங்களை கவர்ந்திட்ட மன்னாதி மன்னர்

தன்பசி மறந்து தன்னையே எமக்கு பசியாறத் தந்த தியாகத்தின் அரசர்

தனக்கென வாழா பிறர்நலம் நாடும் நல்லாட்சி அரசர்

தரணியை வாழ்விக்க வந்த தன்னிகரில்லாத அரசர்

பாவியை தேடி சென்று மகிழ்ந்த அருமை அரசர்

உத்தமரையெல்லாம்  உயர்த்தி வைத்த அன்பு அரசர்

அன்பாய் வாழ்ந்து அன்பை விதைத்த பாசத்தின் அரசர்

பகைவரை நேசிக்கச் சொன்ன மன்னிப்பின் அரசர்

சிறு குழந்தையாய் மாறச் சொன்ன அற்புத அரசர்

தன் தாயை உலகிற்கு அளித்த உன்னத அரசர்

உலகோர் பாவங்களை தானேச் சுமந்த அரசர்

தேடும் யாவர்க்கும் நலமளிக்கும் அருமை அரசர்

நியாயத் தீர்ப்பளிக்க நாளை வரும் வான்லோக அரசர்

அயலாருக்காக செபிக்கச்  சொன்ன நித்தியஅரசர்

என்றும் நன்றியின் மக்களாக்கிய சத்தியஅரசர்

உருமாறி ஆற்றலின் உச்சமான ஒப்பில்லா அரசர்

இனிய கிறிஸ்து அரசர் திருவிழா நல்வாழ்த்துகள் !

அன்புடன்,

கஸ்மீர் ரோச், சின்னமலை, 9382709007

உலக விதிகளை மீறிய மன்னர்

உலக விதிகளை மீறிய மன்னர்

அரசு என்றால் மாளிகை உண்டு
நம் அரசர் பிறந்ததே ஏழ்மையில் தானே....

அரசு என்றால் ஆற்றல் உண்டு
நம் அரசர் ஆற்றலை துறந்தவர் தானே...

அரசு என்றால் படை பலம் உண்டு
நம் அரசர் ஏழைகளின் நண்பர் தானே...

அரசு என்றால் மகிமை உண்டு
நம் அரசர் மகிமையை மறைத்தவர் தானே...

அரசு என்றால் ஆட்சி
உண்டு
நம் அரசர் இறையாட்சியை
உருவாக்கியவர் தானே...

அரசு என்றால் கிரீடம் உண்டு
நம் அரசர் நம் பாவ
முள் கிரீடம் அணிந்தவர்தானே....

மன்னர் என்றால் மார்புக்கவசம உண்டு
நம் அரசர் நமக்காக மார்பில் நொறுங்கியவர் தானே....

 ஆனால் ,

மன்னர் என்றால் எல்லை உண்டு
நம் மன்னர் உலகுக்கே மன்னர்

மன்னர் என்றால் ஒரு பிரிவு மக்கள் உண்டு
நம் அரசருக்கு எல்லையில்லா  மக்கள்

மன்னர் என்றால் சாம்ராஜ்யம் உண்டு
நம் அரசருக்கு சகலமும் அவரின் அசைவில்....

அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா
உம் அரசாட்சியின் உரிமை மக்களாய் எமை காத்திடுமே...

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

எண்ணில்லா அன்பே...

எண்ணில்லா அன்பே...

கணக்கற்ற பாவம் செய்தும் என்னைக்
கண்ணிமை போல் காத்திட்ட தனிப்பட்ட அன்பே

அனேக முறை அச்சமின்றி தவறியும் என் அருகில் வந்த அதீத அன்பே

சினங்கொண்டு சீறிப்பாய்ந்தும் சிறிதும் வருந்தாது என்னை காக்கும்
சிறந்த அன்பே

உரையாலும் மொழியாலும்
உறவினை சிதைத்தும்
உடன் வந்திடும் என் உயரிய அன்பே

நிகழ்ந்த கசப்புகளை
நித்தமும் நினைத்து
நிந்தித்தாலும் என் நிழலாய் வரும் நிலையான அன்பே

நிம்மதி தரவே
நித்தமும் எனை நாடிடும்
 நிரந்தர அன்பே

அகிலம் படைத்த அரட்கரத்தாலே
அனுதினமும் எனை காக்கும்
 அக்கறை அன்பே

நிர்மூலமாய் போனாலும்
நிர்கதியாய் ஆனாலும் எந்தன்
 நிபந்தனையில்லா அன்பே

ஏளனப்படுத்தி இகழ்வடையினும்
ஏழ்மையில் வாடினும் என்னை
 ஏற்றுக்கொள்ளும் அன்பே

பாரச் சுமைகளை தாங்கி
பாவ மாசை கழுவிய என்
 பாரபட்சமற்ற அன்பே

ஆவலில் தவறிடினும்
ஆசையில் உழன்றிடுனும் எனக்கு
ஆதரவான ஆற்றிடும் அன்பே

எத்தனை அன்பு......
எத்தனை அன்பு.....
அத்தனையையும் நான்உணர
அத்தனையையும் வாழ்வாக்க
என்னை மாற்றிடு இறைவா......

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

பொன்னான காலம்

 பொன்னான காலம்

திருச்சபை மகிழ்ந்து கொண்டாடும் காலம்

வான் சேனையர் வாயார பாடி புகழ்ந்த காலம்

இல்லத்திலும் உள்ளத்திலும் உற்சாகம் தங்கிடும் காலம்

மனங்களை ஒருமுகப்படுத்தும் தயாரிப்பின் காலம்

கடவுளோடும் மற்றவரோடும் ஒப்புறவாகும் ஒப்பற்ற காலம்

பாடல்களும் கீதங்களும் ரீங்காரமிடும் இனிய காலம்

புத்தம்புது உடைகளும் புத்தம்புது எண்ணங்களும் உலவும் காலம்

மனம் மாறி நற்செயல்களால் நிறைவாக்கும் காலம்

பரிசுகளும் பலகாரங்களும் பரிமாற்ற தயாராகும் காலம்

இந்த மேலான காலத்தை மிகுந்த மகிழ்வுடன் வரவேற்போம்

கஸ்மீர் ரோச்


உம்மை விட்டு பிரிக்க முடியாது.....

 உம்மை விட்டு பிரிக்க முடியாது.....

மண்துகளையும் இரும்பு துகளையும் காந்தத்தால் பிரிக்கலாம்

இறைவா ! உம்மிடமிருந்து எம்மை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது

பாலையும் நீரையும் காய்க்க காய்க்க பிரிக்கலாம்

இறைவா ! உம்மிடம் யாம் வைத்த நம்பிக்கையை எப்படியும் பிரிக்க முடியாது

கச்சா எண்ணையிலிருந்து எரிவாயுவை இயந்திரத்தால் பிரிக்கலாம்

இறைவா ! உம்மில் கரைந்திட்ட என்னை எதுவும் பிரிக்க முடியாது

எள்ளிலிருந்து எண்ணையை செக்கினால் பிரிக்கலாம்

இறைவா ! எம்மில் உறையும் உம்மை எள் முனையளவு கூட யாராலும் பிரிக்க முடியாது

மண்ணிலிருந்து தாதுப்பொருளை பலவகையாகப் பிரிக்கலாம்

மண்ணாகப் போகும் எம்மை உம்மிடமிருந்து எந்த தீதும் பிரிக்க முடியாது

பஞ்சிலிருந்து நூலை ஆலையில் பிரிக்கலாம்

ஆனால் இறைவா
நான் உம்மீது கொண்ட அன்பை எந்த நஞ்சாலும் பிரிக்க முடியாது

எந்த சக்தியும்
எந்த தீயதும்
எந்த கரமும்
எம்மை பிரிக்காது
என்றுமே எம்மைக்
காத்திடும் இறைவா....

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

அருளின் நிறைவே......

அருளின் நிறைவே......

அருள் நிறைந்த அம்மா !
அருளாக யாம் மாறவே
அருகில் என்றும் இரும் அம்மா

அருள் அமலியாய் வலம் வந்து
அருள் வரங்கள் பல தந்து
அருளாக எமை வைத்த அம்மா !

அருள் ஐயமின்றி யாம் சுவைக்க
அருள் தரும் திருமகனை
அருள் பாலிக்க பரிந்திடும் அம்மா !

அருள் முழுமை பெற்றும்
அருள் மழையில் நனைந்தும்
அருளை தானமாய் பொழியும் அம்மா !

அருள் பரப்பி இருள் நீக்கி
அருள் கரத்தால் எமைத் தாங்கி
அருமையாய் துணைவரும் அம்மா !

அருள் சாரலில் எமை தொட்டு
அருள் ஊற்றில் எம்மை சூழ்ந்து
அருள் விட்டு நீங்கா காத்திடம்மா !

அருள் நித்தம் எம்மில் தங்கிட
அருள் பகைவனிடம் யுத்தம் புரிந்து
அருள் வழங்கி சுத்தம் ஆக்கிடம்மா !

அருள் நிறைந்த மரியே வாழ்க !

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

தூய ஆவியின் அருள் தாங்கியே......

 தூய ஆவியின் அருள் தாங்கியே......

வானோர் வாழ்த்தொலி தாங்கியே
காலமெல்லாம் காத்த கருத் தாங்கியே
மானிட மகனின் உருத் தாங்கியே
அருமை துணைவர் நலம் தாங்கியே
பேறுகால வலி தாங்கியே
மூடர் தம் பழி தாங்கியே
மன்னவரை எமக்களித்த அம்மா !

உறவினர் நலம் தாங்கியே
கால் கடுக்க பயணம் துவங்கியே
அவரின் வல்ல வாழ்த்தை  தாங்கியே
தம் வலி மறந்து உற்றாரை
தாங்கியே
பெரும் பேறு பெற்றீர் அம்மா

வழிநெடுக துயர் தாங்கியே
மாடடை குடில் மணம் தாங்கியே
யாருமற்ற பரிதாப நிலை தாங்கியே
தூய ஆவியின் துணை தாங்கியே
இறைமகனை எமக்களித்த அம்மா

கடவுள் திட்டம் தாங்கியே
கர்த்தரின் பிஞ்சு கரம் தாங்கியே
சீராட்டி பாராட்டி மலரடி தாங்கியே
விண்ணக முடி தாங்கியே
வேந்தனாம் மைந்தனை  தந்திட்ட அம்மா

எம் வேண்டுதல் தாங்கியே
எம் வேதனை தாங்கியே
எம்மோடு இருந்திடம்மா...

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

உயிருள்ள கிறிஸ்மஸ்

 உயிருள்ள கிறிஸ்மஸ்


வெறுக்கும் அயலான் மனம் மகிழச் செய்யணும்

கடவுளின் அன்பை அனைவரிலும் உடனடியா பகிரணும்

உண்மையான இரக்கம் உள்ளத்தில் நிற்கணும்

பரிவு கொள்ளும் பண்பே நாளும் வீட்டில் தங்கணும்

சாதிய உணர்வை வேறோடு நீக்கணும்

தூய ஆவியின் ஆடையையே என்றும் அணியணும்

இறை வார்த்தையே பலகாரமாய் மாறணும்

ஐம்புலன்களை அடக்குதலே தோரணமாய் ஆகணும்

பாவம் ஆட்சி செய்யும் அழுக்கை அகற்றி கனிவுள்ள வண்ணம் பூசணும்

உயர்ந்த அன்பை உருவாக்கியே புதிய குடில் அமைக்கணும்

மூன்று ஞானியர் போலவே இயேசுவை நாமும் கண்டபின் வேறு பாதையில் நடக்கணும்

அன்புடன்
கஸ்மீர் ரோச்

திரி ஒன்று ஒளிர்கிறது.,..

திரி ஒன்று ஒளிர்கிறது.,..

திருவருகையை முன் சொல்லி ஒரு திரி ஒளிர்கிறது

திருமகனின் வருகையில் ஒன்றிக்கவே நம்மை அழைக்கிறது

பெருவிழாவில் நாம் வளம் பெற்றிடவே நினைக்கிறது

ஒன்றிப்பில் நிறைவு காண வழி காட்டுகிறது

ஒரு மனமாய் நாமெல்லாம் உருகிடவே தன்னை உருக்குகிறது

தயாரிப்பு பகட்டிலல்ல, தன்னைத் தருவதிலே என கூறி அசைகிறது

இனியென்றும் இப்படி மாற கரம் கூப்புவது போல தோன்றுகிறது

வரும் நாட்கள் தூய
ஆவி கனலாய் மாறவே
தீயாய் தெரிகிறது

 அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

புனித சவேரியாருக்கு அன்பாஞ்சலி

புனித சவேரியாருக்கு அன்பாஞ்சலி

உலகமனைத்தையும் குப்பையெனக்
கருதி அதை உதறிய *உத்தமரே*

கால்கள் புண்ணாகிய போதும்
பொன்னான மறை போதித்த புண்ணியரே

மொழி அறியாமலும் திசை தெரியாமலும்
எம் முன்னோரை வசப்படுத்திய ஞான ஒளியே

சிலுவையே சீர்மகுடம் என அதை மட்டுமே
ஆயுதமாக்கி ஆன்மாக்களை வென்றவரே

இறை வார்த்தைக்கேடயமாக இறை நம்பிக்கை
வாழ்வாக வலம் வந்த வெற்றி வீரரே

இந்தியாவை நேசித்து இந்தியாவுக்காக
என்றும் பரிந்து பேசும் எம் தந்தையே

ஸ்பெயின் தேசத்தில்  அரச குடும்பத்தில்பிறந்து
இறை அன்பினால் ஏழையான எம்  முனிவரே

கோவாவிலும் தென்தமிழகத்திலும் போதித்து
மீனவரையும் மற்றவரையும் மனமாற்றியதவமே

ஆசீரளித்த கரத்தையே சுயவிமர்சனம் எழுதி
அறிவிக்கச் செய்த அற்புதமானவரே

தவத்தின் வலிமையைக் கூட்ட தன்னையே
பலவீனமாக்கிய தன்னிகரில்லா தூயவரே

தொலைத்த சிலுவையை மீட்டுக் கரை சேர்த்த
கடல் வாழ் நண்டின் நல்ல நண்பரே

நூற்றாண்டாக நினைவில் கொள்ள எம்மோடு உறையும் இயேசுவின் நற்சீடரே

எங்கள் அண்ணல் பிரான்சிஸ் சவேரியாரே !

எங்கள் பாதுகாவலரே

எங்கள் வழிகாட்டியே

உம் பணியைத் தொடர்வோம் நன்றே ! !

கஸ்மீர் ரோச்,
சின்னமலை,
சென்னை
9382709007

பாலனே வருக

பாலனே வருக

தேவக்குமாரன் அவதரிக்க

தேடும் மாந்தர் யாம் மெய்சிலிர்க்க,

சின்னஞ் சிறியோர் குதூகலிக்க,

தோரணங்கள் மின் விளக்குகள் கண்சிமிட்ட,

புல் வெளியும் மண் தரையும் குடிலை சூழ,

பளபள தாளும் பகட்டு விளக்கும் பளிச்சிட,

பரிசு பொருளும் சிறுசிறு பொம்மைகளும் மரத்தில் தொங்கி தாலாட்ட,

புத்தம் புது துணி வாசம் மேனியில் சரசரக்க,

பூந்தொட்டிகளும் வால் நட்சத்திரங்களும் அழகு கூட்ட

பலகாரங்களும் இனிப்புகளும் வகைவகையாக நாவில் சுவையூட்ட

கிறிஸ்மஸ் தாத்தா விதவிதமாக பாடி ஆடி சின்னக் குட்டிகளை மகிழ்விக்க

குளிருக்கு இதமாய் உடையுடுத்தி ஆடவரும் பெண்டிரும் கீதமீட்டிட

காண்போரெல்லாம் சொந்தமாக மாறி வாழ்த்தும் வணக்கமும் பரிமாறிட

அன்பு பாலனே வருக.....

இனிய வேந்தனே வருக.....

கஸ்மீர் ரோச், சின்னமலை,சென்னை

நாளையல்ல - இன்றே...

 நாளையல்ல - இன்றே...


கதிரும் - களையும்

அறுவடையில் சரிசெய்யலாம்


மழையும் -  வெள்ளமும்

வடிகையில் சரிசெய்யலாம்


பாடமும் -

மதிப்பெண்ணும்

படிக்கையில் சரிசெய்யலாம்


தமிழும் - உச்சரிப்பும்

பேசப்பேச சரிசெய்யலாம்


தேவையும் - கடனும்

உழைக்கையில் சரிசெய்யலாம்


பயணமும் - விபத்தும்

கவனிக்கையில் சரிசெய்யலாம்


( எந்த விளைவையும் தள்ளிப் போடலாம் )


ஆனால்,



தூய ஆவியும் -  எதிரானபாவமும் அதை

இன்றே சரி செய்யணும்


அன்பின் இறைவா

உம் தூய ஆவிக்கெதிரான பாவங்களிலிருந்து இன்றே நான் விடுதலை பெற உதவியருளும்.


அன்புடன்

கஸ்மீர் ரோச்

திருவருகைக் காலம்

திருவருகைக் காலம்

மகிழ்வையும்                               மாற்றத்தையும்.                      மலர்ந்திடுதே

அன்பையும்
ஆசீரையும்                              அளித்திடுதே

நட்பையும்.                               நம்பிக்கையையும்.             நல்கிடுதே

பொருளையும்
பொறுமையையும்
பொழிந்திடுதே

காயத்தையும்
கவலையையும்
களைந்திடுதே

பயத்தையும்
பாவத்தையும்
பகைத்திடுதே

உறவையும்
உணர்வையும்
உறுதியாக்கிடுதே

வரங்களையும்
வானக நிறைவையும்
வாரி வழங்கிடுதே

இவ்வரங்களை
இரக்க செயல்களால் நம்முள்
இருக்க செய்திடுவோமே !

இக்கொடைகளை
இல்லாரோடு பகிர்ந்து
இனிமை காண்போமே !

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

குழந்தையின் பாட்டு...

 குழந்தையின் பாட்டு...

கனமான மனசும்
சினமான மனசும்
இயேசு உள்ளே வந்தா
லேசாத் தான் மாறுதே மாறுதே

சிக்கலான மனசும்
கல்லான மனசும்
இயேசு பக்கம் வந்தா
பூப் பூவாத் தோணுதே தோணுதே

அழுக்கான மனசும்
பழுதான மனசும்
இயேசு அழுத்தம் தந்தா
புதுசாத் தான் பூக்குதே பூக்குதே

வலிக்குற மனசும்
சலிக்குற மனசும்
இயேசு வழி வந்தா
களிப்பாத் தான் தெரியுதே தெரியுதே

ஏங்குற மனசும்
நோகிற மனசும்
இயேசு தொட்டாலே
தாங்குற மாதிரி இருக்குதே இருக்குதே

கசக்கிற மனசும்
நசுக்குற மனசும்
இயேசு பார்த்தாலே
சுகம் சுகமாத் தான் இனிக்குதே இனிக்குதே

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

அமலோற்பவமே அழகோவியமே....

அமலோற்பவமே அழகோவியமே....

அமலனை பாவியாம் எமக்களித்த மங்கலமே

அமல உற்பவமாய் பிரகாசித்த மகுடமே

அத்தனை அழகும்
மொத்தமான பிரகாசமே

நலம் தேடி வந்தோரை
கைவிடாத சௌந்தர்யமே

தீய சாத்தானை காலால்
மிதித்து சாய்த்த திரவியமே

இறை மைந்தனோடு கைகோர்த்த நற்கரமே

மாசு மருவேதுமற்ற
மாதா என்றான மரகதமே

அருள் நிறைந்து வழியும் எங்கள் தடாகமே

பெர்னத்தம்மாவுக்கு காட்சியளித்த அற்புதமே

நாமே அமலோற்பவம் என்றறிவித்த வற்றாவரமே

நீல வண்ணக் கோலம்
கொண்ட மலர்முகமே

கைக் கூப்பி
பார்த்தாலே உருகிடுதே எம்மனமே

எந்நாளும் எமை காக்க இந்நாளில் உமை நினைத்தோமே

அமலோற்பவமே
அமைதித் தலமே
அளவில்லா மகிழ்வே
அணைக்கின்ற நிறைவே !!

வாழ்க மரியன்னையே !!!

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

நம்பிக்கையும் - எதிர்நோக்கும்

நம்பிக்கையும் - எதிர்நோக்கும்


அன்பும் அரவணைப்பும்

ஆண்டவரின் இயல்பாயிருக்க

ஆதரிக்கும் கரம் அவரின் பரிவாய் மாற

அவர் மேலுள்ள நம்பிக்கையும்

எதிர் நோக்கும் நம் மகிழ்ச்சியின் நுழைவாயிலாய் மாறும்


இரக்கமும் ஈகையும்

இறைவனின் வரங்களாய் பரிமளிக்க

இறைப் பிரசன்னம் அவரின் கருணையாய் பொழிய

அவரைப் பற்றிய நம் நம்பிக்கையும்

எதிர்நோக்கும் மகிழ்ச்சியின் நுழைவாயில்களாய் மின்னிடும்


சமாதானமும் சகோதரத்துவமும்

சரித்திர நாயகனின் மொழியாகி

சங்கடங்கள் மறையும் உறைவிடமானால்

ஆண்டவரின் வழி நம் நம்பிக்கையும் எதிர் நோக்கும் நம் மகிழ்ச்சியின் நுழைவாயிலாய் தோன்றிடும்


வேண்டுதலும் தேடுதலும்

வேந்தனாம் இயேசுவை பற்றியிருந்தால்

வேறெந்த கோளாறும் நீங்கி

இறை இயேசுவின் மேல் நம்பிக்கையும் எதிர் நோக்கும் நம் மகிழ்ச்சியின் நுழைவாயில்களாய் மாறிடும்


சிறுவிதை விருட்சமாக நம்பிக்கையோடு காத்திருக்க

சிறு சறுக்கல்கள் நம்மை சிதறடிக்கா என நம்பிக்கையோடு எதிர் நோக்கியிருப்போம்


நாணலும் புல்வெளியும்

நம்பிக்கையோடு வளர்ந்திருக்க

நம் இறைவன் நம்மை கைவிடார்

என்றே நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருப்போம்


இயற்கையும் படைப்பும்

நம்பிக்கையோடு பலனளிக்க

நம் வானகத்தந்தை காப்பார்

என்றே நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருப்போம்


நுழைவாயில்கள் மகிழ்வைத் தர

இன்முகமாய் பயணமாவோம்

இன்முகமாய் பயணிக்க

நம்பிக்கையை கைக்கொண்டு

நம்பிக்கையை சுவாசித்து

நம்பிக்கையை வாழ்வாக்கி

நம்பிக்கையை தலைக்கவசமாக்கி

நம்பிக்கையை முழுமையாக்குவோம்.


அன்புடன்

கஸ்மீர் ரோச்

சின்னமலை

9382709007

கரம் விரிப்போமா.....

கரம் விரிப்போமா.....

பொக்கை வாய் சிரிப்போடு கரம் விரித்தீரே
தலை வணங்கி மண்டியிட்டு பிறரிடம் தலை வணங்கா கழுத்தினராய் ஆனோமே

சிறு வயதில் ஞானத்தோடு கரம் விரித்தீரே
ஞானம் பெற்றாலும்
நியாயமின்றி நடக்கிறோமே

தந்தைக்கு உறுதுணையாய்
கரம் விரித்தீரே
உற்றவர் கதறினும்
உதவாமல் போனோமே

மலைப்பொழிவில் எங்களை நோக்கி கரம் விரித்தீரே
அறிவுரை கேட்டாலும்
அறிவின்றி நடக்கிறோமே

சிறுவர்களை வரச்சொல்லி
கரம் விரித்தீரே
சிறார் தமக்கு நற்போதனை சொல்ல மறந்தோமே

ஏழையரை கண்டு வருந்தி
கரம் விரித்தீரே
வசனங்களை தினமும் படித்தாலும்
வறியவரை வெறுத்தோமே

பாவிகளை கண்ணுற்று கலங்கி
கரம் விரித்தீரே
சகோதரர்களின் தவறுகளை மன்னியாமல்  வருத்துகிறோமே

எமக்காக சிலுவையில் தொங்கி
கரம் விரித்தீரே
கண்ணீர் குளமாக அழுதும்
பாவச் சேற்றில் வீழ்ந்தோமே

இறுதியில் விண்ணுக்கு செல்கையில் கரம் விரித்தீரே
விண்ணை நோக்கி பார்த்துவிட்டு மண்ணில் மனம் போல வாழ்கிறோமே

என்று உம்மைப் போல நல்லவற்றுக்காய் கரம் விரிப்போம்?
என்று உம்மைப் போல ஏழைகளுக்காய் கரம் விரிப்போம்?

இறைவா திருவருகைக்காலத்தில் இதோ வருகிறோம்.

இன்றே புறப்படுகிறோம் கரம் விரிக்க.......

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

சகோதரமே.. சகோதரமே....

 சகோதரமே.. சகோதரமே....

வாழ்வில் வளம் தந்த சகோதரமே
அன்பை ஊட்டிய அருமை சகோதரமே

களிப்புடன் உண்டு உறங்கிய சகோதரமே
கவனமுடன் கண்காணித்த சகோதரமே

இனிக்க இனிக்க உரையாடிய சகோதரமே
இல்லத்தில் மகிழ்வை பகிர்ந்த சகோதரமே

துன்ப துயரங்களில் ஆறுதலான சகோதரமே
துணையாக நண்பனாக அருகிருந்த சகோதரமே

பாசத்தை நேசத்தை பார்த்து பார்த்து பரிசளித்த சகோதரமே
பார்க்க பார்க்க உருகிய ஒப்பில்லா சகோதரமே

தனிமையில் தைரியமளித்த இனிய சகோதரமே
தவிப்பிலும் கொண்டாட்டத்திலும் பங்கேற்ற சகோதரமே

இறைவனிடம் எனக்காக மன்றாடும் சகோதரமே
இத்தரணி உள்ளளவும் மறவோம் சகோதரமே

பெற்றோர் எனக்களித்த பாசப்பறவையே
பெற்ற நன்மைக்கெல்லாம் நன்றி பகர்வோம் சகோதரமே

பிறந்தது முதல் ஒளிர் விளக்காய் வலம் வந்த சகோதரமே
பிழை ஏதும் செய்தாலும் மன்னித்து ஏற்ற சகோதரமே

ஐயங்கள் தோல்விகள் கண்டால் ஆறுதல் தந்த சகோதரமே
ஐம்பெரும்காப்பியமாய் ஒன்றித்து வாழ்ந்த சகோதரமே

சகோதரத்துவத்தை போற்றுவோம்.

சகோதரத்துவத்தை வாழவைப்போம்.

சகோதரத்துவத்தை மகிழ்விப்போம்.

கஸ்மீர் ரோச், சின்னமலை, 9382709007

அப்பா....அப்பா...

அப்பா....அப்பா...

அப்பா எனக்கு ஆசான் நான் படிக்கும் வேளையில்


அப்பா எனக்கு நண்பன் நான் கலங்கும் வேளையில்


அப்பா எனக்கு மாதிரி நான் வென்றிடும் வேளையில்


அப்பா எனக்கு அரசன் நான் பயந்திடும் வேளையில்


அப்பா எனக்கு மந்திரி நான் சாதிக்கும் வேளையில்


அப்பா எனக்கு தோழன் நான் தனியே இருக்கையில்


அப்பா எனக்கு மருத்துவர் நான் சோர்ந்திடும் வேளையில்


அப்பா எனக்கு ஆசிரியர் நான் திகைத்திடும் வேளையில்


அப்பா எனக்கு குரு நான் ஜெபித்திடும் வேளையில்


அப்பா எனக்கு செல்லம் நான் விளையாடும் வேளையில்


வாழ வைத்து,

மகிழ்ந்து பாராட்டி,

உழைத்து  உருவாக்கிய.

வாழும், வாழ்ந்த

அப்பாவுக்காக செபிப்போம்.


கஸ்மீர் ரோச்,

சின்னமலை,

சென்னை

9382709007

மீனவ நண்பரே எம் இறைவா....

 மீனவ நண்பரே எம் இறைவா....

மீனவரை கண்டதும் ஆனந்தப்பட்ட இறைவா
மீளாத்துயருறும் எம் மீனவரையும் கண்ணோக்குமைய்யா

மீனவரை பின்னே வர சொன்ன இறைவா
மறைந்திட்ட எம் மீனவ குடும்பங்களுக்கு ஆறுதல் தாருமைய்யா

மீனவ பேதுருவை மனிதரை பிடிப்போனாக்கிய இறைவா
மீன் பிடிக்கப்போனோரை மீட்டுத் தாருமைய்யா

மீனவக் கரையினில் காலார நடந்த இறைவா
கரையில் சிந்தும் மீனவர் கண்ணீரை துடைத்திடுமைய்யா

மீனவரை ஆழ்கடலில் வலை வீசச் சொன்ன இறைவா
ஆழ்கடலில் மீன் பிடித்த மீனவரை மீட்டிடுமைய்யா

மீனவர் துயர் நீக்க காற்றைக் கடிந்த எம் இறைவா
காற்றுக்கும் இரைச்சலுக்கும் கலங்கா மீனவரை தாருமைய்யா

மீன் வாய் நாணயத்தால் வரி கொடுத்த இறைவா
வரிவாங்கி வாளாவிருக்கும் அரசுக்கு ஞானமளித்திடைய்யா

மீன் உணவை உயிர் மீண்டதும் சுவைத்த இறைவா
உயிர் பசி போக்கவே உயிரோடு போராடும் எமை காத்திடுமைய்யா

மீனவரின் கண்ணீர் குளமான கண்களுடனும்,
மீனவரின் அசைக்க இயலா நம்பிக்கையுடனும்
சேர்ந்து மன்றாடும்

கஸ்மீர் ரோச்
சின்னமலை
 சென்னை
9382709007

உமக்கே நன்றி இறைவா

 உமக்கே நன்றி இறைவா


ஆவியிலும்,உண்மையிலும் வழிநடத்தியமைக்காக


ஆச்சரியமாய் பெற்ற அனேக நலன்களால் மகிழ்ந்ததற்காக


ஆனந்தமான தருணங்கள் சூழ்ந்ததற்காக


ஆரோக்கியமான நல்வாழ்வை அருளியதற்காக


ஆவல் யாவும் உம் கடைக் கண் பார்வையால் உருப்பெற்றதற்காக


ஆற்றலும் வல்லமையும் உம்மால் தானமாகக் கிடைத்ததற்காக


ஆபத்து வேளைகளில் காவல் காத்தமைக்காக


ஆயிரமாயிரம் நன்மைகள் வாழ்வில் நிறைந்ததற்காக


ஆத்திரமும், கோபமும் குடிகொள்ளாமல் நீங்கியதற்காக


ஆழமான நட்பும்,நல்லுறவும் குடும்பங்களில் தங்கியதற்காக


ஆலமரத்தின் விழுதுகளைப் போல அயலார் ஒற்றுமைக்காக


ஆவலுடன் உம் விழுமியங்களை வாழ்வாக்க யாம் முயல்வதற்காக


உமக்கே நன்றி இறைவா


அன்புடன்,


கஸ்மீர் ரோச்,

சின்னமலை,

சென்னை

9382709007

குயவன் கையில் களிமண்

குயவன் கையில் களிமண்

மண்ணை வெட்டி நீரை பாய்ச்சி
நேர்த்தியாய் வடிவம் கொடுத்து
நெருப்பில் சுட்டு வெயிலோ மழையோ எதுவும் தாக்கா செங்கல் போல

களிமண்ணான என் மனதை உம் வார்த்தையான நீரை பாய்ச்சி
நற்செயலால் வடிவம் கொடுத்து
தூய ஆவியால் சுட்டு தீமையோ,சோதனையோ எதுவும் தாக்காமல் காத்திடு என் இறைவா

நீரானது காலமெல்லாம் நனைத்தாலும், நீருக்குள்ளே கிடந்தாலும் கூழாங்கல் உள்ளே நீர் புகாததை போல

தீயவை என்னை சுற்றி சுழன்றாலும் தீதொன்றும் என் உள் மனதை தீட்டாக்காமல் காத்திடு என் இறைவா

எக்கால சூழலும், எத்தனை முறை உடைத்தாலும், சின்னாபின்னமாக்கினாலும்கருங்கல் தன் தன்மை மாறாதது போல

வேதனைகள்,சோதனைகள், ஏமாற்றங்கள்,தோல்விகள் என்னை நிலைகுலைய செய்தாலும் கற்பாறை போன்ற உறுதியான உள்ளம் தா என் இறைவா

கால்படாத பள்ளத்திலும்,ஏற முடியா உயரத்தில் இருந்தாலும் வடிவாக வெட்டி, வெட்டி எடுத்து பளபளப்பாய் மின்னும்பளிங்கு கல் போல

எட்டா உயரத்தில் வாழ்ந்தாலும், செல்வத்திலே திளைத்தாலும் ஒவ்வொரு அசைவும்,உம்மை நினைத்து ஒளிவீச உள்ளம் தா இறைவா

அன்புடன்,

கஸ்மீர் ரோச், சின்னமலை, 9382709007

தமிழும் உயிரும்

தமிழும் உயிரும்



தமிழன் என மார் தட்டு

தமிழாகப் பேசிப் பழகு

தமிழின் பண்பாடு

தமிழீட்டிய மண்ணுக்கு மதிப்பளி

தமிழுக்கு புகழ் சேர்

தமிழூர் எங்கும் மகிழ்ந்து பாடு

தமிழெந்தன் உயிர் மூச்சென அறிவி

தமிழே எனப் பெருமைக் கொள்

தமிழை தினமும் போற்று

தமிழொன்றே சிறந்ததென ஆர்ப்பரி

தமிழோடு விளையாடு

தமிழௌவ்வை ஆத்திசூடி பற்றிக்கொள்

அன்புடன்
கஸ்மீர் ரோச்

குமரி கரையோர அருட்தந்தையருக்கு சமர்ப்பணம்

 குமரி கரையோர அருட்தந்தையருக்கு சமர்ப்பணம்

திரு உடை உடுத்த மட்டுமல்ல
தெருவில் இறங்கி போராடவும் கூட

அறையில் தங்க மட்டுமல்ல
முடிந்தால் சிறை செல்லவும் கூட

பூசை வைக்க மட்டுமல்ல
ஓசையுடன் குரல் எழுப்பவும் கூட

மறையுரை சொல்ல மட்டுமல்ல
தவறினை தட்டிக் கேட்கவும் கூட

ஆசீர் அளிக்க மட்டுல்ல
மசியா அரசை நிர்பந்திக்கவும் கூட

தேவாலய பராமரிப்பு மட்டுமல்ல
தேவையானால் களமிறங்கவும் கூட

திருப்பலி நிறைவேற்ற மட்டுமல்ல
திரும்பாத மீனவ குடும்ப துயர் துடைக்கவும் கூட

ஒப்புறவு வழங்க மட்டுமல்ல
ஒப்பற்ற உயிர்களை மீட்கப் போராடவும் கூட

நியாயத்துக்காக களம் இறங்கி
நின்றிடும் குமரி கரையோர அருட்தந்தையர்களுக்காக குழுவினருடன்
மன்றாடும்

கஸ்மீர் ரோச்
சின்னமலை

​திருத் தந்தைக்கு வாழ்த்துப் பா​

​திருத் தந்தைக்கு வாழ்த்துப் பா​

 *உலகமெத்திசையும்
உம் வரவை நாடிடுதே*

 *உம் அழகு வதனமும்
உள்ளார்ந்த நட்பும் ஆசீரளித்திடுதே*

 *எளிய வழியும் எளிய நடையும்
எல்லைகளை தகர்த்திடுதே*

 *இளைஞரை இனிமையாய் ஈர்த்து
இறைப்பற்றில் இருத்திடுதே*

 *புன் சிரிப்பும் புதுமை கருத்தும்
புதுத் தெம்பை தந்திடுதே*

 *எத்தனை கூட்டத்திலும்
எளியோருக்கு நற்செய்தி கிடைத்திடுதே*

 *ஆண்டவரில் தாழ்ந்து
ஆகட்டும் என பணிந்த
இறை குரலே*

 *ஆழமான சாட்சியளித்து
ஆரவாரமின்றி வாழ்ந்து
 திரு அவை தாங்கிடும் ஆலமரமே*

 *பெயருக்கேற்ற பணிவோடு நடை போடும் மெய் ஞானமே*

 *வாழ்க பல்லாண்டு
உலகே மகிழுதுந்தன் உறவோடு....*

அன்புடன்
கஸ்மீர் ரோச்

குழந்தை மனதை தாருமே......

 குழந்தை மனதை தாருமே......

 குழந்தையாய் யாம் மாறவே விண்ணை விட்ட மன்னவனே

குழந்தைக் கோலம் கொண்டே எம்மை மகிழ்வித்த வானமுதே

குழந்தைப் போலவே மாற கற்பித்த எமதருமை பாலகனே

குழந்தைக் கரம் பற்றி வளர்த்த தாதை சூசையின் அருந்தவமே

குழந்தையாய் கண்ட எளியோரை மகிழ்வித்து  இருளகற்றிய பேரொளியே

குழந்தைகளும்  பெரியோரும் கொண்டாட காத்திருந்த நற்றுணையே

குழந்தை பாலனாய் எமக்காக மண்ணில் வந்திட்ட அதிசயமே

குழந்தை வரம் கேட்போருக்கும் வரமழையாய் வந்திட்ட மெய்ஞானமே

பிஞ்சு கரம் பிடித்து எம்மை காத்திடுமே....

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

Wednesday, December 6, 2017

வியாகுலத் தாய்

வியாகுலத் தாய்



அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவள் உம்முடனே
என்று வானதூதர் சொல்லக்கேட்ட அந்த நிகழ்வு மட்டுமே அன்னைக்கு ஒருவேளை மகிழ்ச்சியான நேரமாக இருந்திருக்கும். மரியாளுக்கு மங்கள செய்தி கிடைத்தாலும் எல்லாமே மங்களகரமாக இருந்ததா என்று பார்க்கும்போது இல்லையென்றுதான் தெரிகிறது. 
நிறைமாதக் கர்ப்பிiணியாய் பெத்லகேமுக்குக் கணவருடன் போன போது இடமில்லை என்று எல்லோரும் கதவைச் சாத்திய போதும் சரி,
உன் உள்ளத்தை ஒரு வாள் ஊருவும்
என்று சிமியோன் முன்னுரைத்ததைக் கேட்ட போதும் சரி, ஒரு கொலைகார அரசனுக்குப் பயந்து, பச்சிளம் குழந்தையோடு அந்நிய நாட்டிற்கு அகதியாய் ஓடியபோதும் சரி, மரியாள் கலங்கிப்போய்விட்டாள். கோயிலில் காணாமல் போன சிறுவன் இயேசு ‘ஏன் என்னைத் தேடினீர்கள் என்று கேட்டபோதும் சரி, தன் மகன் மயக்கத்தில் இருக்கிறான், புத்திமாறிப்போனான் என்று ஊரார் பேசியபோதும் சரி தன் ஒரே மகனை உலகம் பழிகாரனாக கொலைகாரனாக தேசத்துரோகியாக பார்த்தபோதும் சரி துடித்துப்போனாள். தன் மகன் சிலுவை சுமந்துகொண்டு வந்ததைக் கண்ட தாய் கலங்கிப்போனாள்.அன்னை மரியின் இதயத்தை வாள் ஊடுருவியது: இரத்தம் உள்ளுக்குள் கசிந்தது. 
ஆசீர்வதிக்கப்பட்டவள் அவல நிலை காண்கிறாள்.
செருக்குற்றோரை சிதறடித்தார், தாழ்ந்தோரை உயர்த்தினார்
என்று ஆனந்த பள்ளு பாடிய மரியாள் நிஜமான போர்க்களத்தில் தன் மகனை சந்திக்கிறாள். சென்ற இடமெல்லாம் நன்மை தவிர வேறெதுவும் செய்யாத தன் மகனை – அன்பைத் தவிர வேறெதுவும் அறியாத தன் மகனை இந்நிலையில் காணும் இந்தத் தாய் எப்படிப் பரிதவித்திருப்பாள்
தாயும் சேயும் சந்திக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் பேசிக்கொண்டதாக எதுவுமே எழுதப்படவில்லை. பேசிக்கொள்ள என்ன இருக்கிறது? அவர்கள் கண்கள் கண்ணீரில் மறைந்து துயரத்தில் சந்திக்கின்றன. “மகனே, எங்களுக்கு ஏன் இவ்வாறு செய்துவிட்டாய்?” என்று ஆலயத்தில் கேட்ட அதே கேள்வியை அன்னை கேட்காமல் கேட்கின்றாள்.
அம்மா என் தந்தையின் அலுவலில் ஈடுபட்டுள்ளேனே தெரியவில்லையா?
என்று அன்று சொன்ன பதிலை இயேசு சொல்லாமல் சொல்கிறார்”.
ஆனால் உலகில் எந்த தாய்க்கும் ஏற்படாத இதயத்தை பிளக்கும் கொடூரமான நிகழ்ச்சி சடலமான தனது மகனின் உடலை மடியில் வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பது: அத்தாயின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்.
33 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குளிர்ந்த இரவில் விரிந்த மொட்டு இப்போது வாடி வதங்கி உதிர்ந்து கிடப்பதைப்பார்த்து அன்னை கதறி அழுகிறாள். மடை திறந்தாற்போல பெருக்கெடுத்து வரும் தாயின் கண்ணீர் மகனின் உடலை நனைக்கிறது.
இறைவனின் வார்த்தையைக் கருத்தாய்த் தாங்கியவள், இறைமகனைக்கருவில் குழந்தையாய்த் தாங்கியவள், இப்போது அவரது உயிரற்ற உடலை மடியில் தாங்குகிறாள்.
இயேசுவின் பணி வாழ்வில் இனிதான பொழுதுகளில் இணைந்திருந்த சீடர்கள் இன்னல் வந்தபோது ஓடி விட்டார்கள். ஆனால் இயேசுவின் இனிய பொழுதுகளில் தன்னை வெளிக்காட்டி கொள்ளாத அன்னை மரியாள் இயேசுவின் கல்வாரி பாடுகளில் தன்னை முழுவதும் கரைத்துக்கொண்டார். சிக்கல்கள் வந்தபோது ஒதுங்கி கொள்ள வேண்டுமென்று மரியாள் நினைத்ததில்லை. கல்வாரிக் குன்றில் தன் கருணைமகன் காகிதத்துண்டுபோல் கிழிக்கப்பட்டபோது அந்த சிலுவையின் நிழலில் உடைந்த இதயத்தோடு மௌனமே வடிவமாய் மரியாள் நின்றார்.
தனது வியர்வைத் துளிகளாலும் உதிரத் துளிகளாலும், ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்கி உயர் நிலையில் உட்கார வைத்த தெய்வீகத்தின் மனித மொழிபெயர்ப்பாகிய அம்மாவை கண்கலங்க வைக்கும் மனிதர்களே கேளுங்கள். உங்களின் கொண்டாட்டங்களில் அவளை நீங்கள் சேர்க்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் திண்டாடும்போது உங்கள் கண்ணீரைத் துடைக்கும் கருணை வடிவம் நீங்கள் ஓதுக்கித் தள்ளிய உங்கள் அம்மாதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அவள் கண்விழித்த நாட்களை குழந்தைகள் அறியமாட்டார்கள். எனவேதான் முதுமைக் காலத்தில் அவளுக்காக குழந்தைகள் கண் விழிப்பது இல்லை. மனைவியைக் கண்ட மகிழ்ச்சியில் தூக்கி வளர்த்த அன்னையை தூர எறிகிற புதல்வர்கள், நாளைக்கு நடக்கப்போவதைப் பற்றி எண்ணுவதில்லை. வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளுக்காகவே உழைத்து ஒடாய்த்தேய்ந்துபோன பெற்றோர்கள் பிள்ளைகளாலேயே கைவிடப்பட்டு தெருக்களில் பிச்சையெடுப்பதை நாம் காண்பதில்லையா? 
உறவுகளுக்கெல்லாம் முதன்மையான உறவு தொப்புள் கொடி உறவு. அதாவது தாய்-சேய் இரத்த உறவு. வீட்டிலும் தாலிக்கொடி உறவு வந்ததும் தொப்புள் கொடி உறவு தரையில் தள்ளப்பட்டு மிதிபடுகிறது. மனைவியின் பேச்சைக்கேட்டு ஒரு சில பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரை வீட்டை விட்டே விரட்டுகின்றனர். தங்களுடைய வீட்டுக்கு ‘அன்னை இல்லம்‘ என்று பெயர் சூட்டிவிட்டு தங்களுடைய அன்னையை அனாதை இல்லத்தக்கோ, முதியோர் இல்லத்துக்கோ விரட்டி விடுகின்றனர்.
ஒரு மாவட்ட ஆட்சியர் ஓர் அனாதை இல்லத்தைத் திறக்கச்சென்றபோது அங்கே தம் அப்பாவைக் கண்டு வெட்கத்தால் தலைகுனிந்தார். கொடுமையிலும் கொடுமை!
அம்மா என்றழைக்காத உயிரில்லையே. அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே. நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயின்றி வேறில்லை’ . காலையில் எழுந்ததும் கைதொழும் தேவதை அம்மா. அம்மாவின் அன்புக்கு முன் வானம் பூமி யாவும் சிறியதே…” இவை அனைத்தும் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாத வெறும் தத்துவப்பாடல்களாக நின்று விடுகின்றன.
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள் நீடிக்கும்படி உன் தந்தையையும் தாயையும் போற்று (விப 20:12)
மகன் தன் அப்பாவை அடித்து வீட்டுக்கு வெளியே இழுத்துக்கொண்டு போனான். அப்போது அப்பா அழுதுகொண்டு “மகனே, என் அப்பாவை வீட்டுக்கதவு வரை தான் இழுத்துக்கொண்டு போனேன். ஆனால், நீயோ என்னை வீதிக்கே இழுத்துக்கொண்டு போகிறாயே” என்றார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நாம் பிறருக்கு முற்பகல் செய்யும் தீமை பிற்பகல் நம்மை வந்தடையும்.
ஒரு மனைவி தன் கணவரின் கல்லறைக்குச் சென்று அவரை வானளாவப் புகழ்ந்து பல அடைமொழிகள் கூறி அழுதாள். கணவரின் ஆவி அவளிடம்,”நான் உயிரோடு இருந்தபோது இப்படி என்னைப்புகழ்ந்திருந்தால் நான் இறந்திருக்கவே மாட்டேன்” என்றதாம். பலர் தங்களுடைய பெற்றோர் இறந்தபின் அவர்களை மேளதாளத்துடன் வாண வேடிக்கையுடன் பூச்சொரிந்து ஊரார் மெச்சும் வண்ணம் அடக்கம் செய்கின்றனர். இறந்த பெற்றோரின் ஆன்ம சாந்திக்காக ‘கிரகோரியார் திருப்பலி’ (30 நாள்களுக்குத் தொடர்ந்து) ஒப்புக் கொடுக்கின்றனர். பளிங்குக் கல்லறைகளைக் கட்டுகின்றனர். ஏழைகளுக்கு அன்னதானம் செய்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் உயிரோடு வாழ்ந்தபோது அவர்களை மதிக்கவோ பராமரிக்கவோ இல்லை. இரண்டு கண்ணும் கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு?
ஒரு பாட்டிக்கு நான நோயில் பூசுதல் அருளடையாளம் வழங்கினேன். அப்போது அப்பாட்டி தன்னுடைய ஒட்டிப்போன வயிறைக்காட்டி “பத்துப்பிள்ளைகளைப்பெற்ற வயிறு பட்டினியாகக் கிடக்குது” என்று சொல்லி அழுதார். ஒரு தாய் பத்துப் பிள்ளைகளைப்பெற்று வளர்க்க முடிந்தது. ஆனால் பத்துப் பிள்ளைகளும் சேர்ந்து அத்தாய்க்குச் சாப்பாடு கொடுக்க முடியவில்லை. தாய் தன்னுடைய பிள்ளைகளைச் சுமையாகக்கருதவில்லை. ஆனால் பிள்ளைகள் தங்களுடைய தாயைச் சுமையாகக் கருதுகின்றனர். காலத்தின் கோலம்.
உன் தந்தையை உன் முழு உள்ளத்துடன் மதித்து நட. உன் தாயின் பேறுகாலத்துன்பத்தை மறவாதே. அவர்கள் உன்னைப்பெற்றெடுத்தார்கள். அதற்கு ஈடாக உன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நினைவில் இருத்து (சீஞா 7:27-28)
முதுமையில் பெற்றோர் அறிவுத்திறன் குறைந்து, குழந்தைகளைப்போல செயல்பட்டு எரிச்சல் ஊட்டும் வகையில் நடக்கின்றனர். அந்நிலையில் அவர்களைச் சகித்துக்கொள்ள வேண்டும்.
உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு. அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி. அவரை இகழாதே(சீஞா 3:12)
பழைய ஏற்பாட்டில் நோவா என்பவர் குடிபோதையில் நினைவிழந்து ஆடையின்றி இருந்ததைக்கண்ட அவருடைய மகன் காம் என்பவன் தன்னுடைய இரண்டு சகோதர்களான சேம், எப்பேத்து என்பவர்களைக் கூப்பிட்டுத் தன் தந்தையின் நிர்வாணத்தைக்காட்டி ஏளனம் செய்தான். ஆனால், அவ்விரு சகோதரர்கள் தங்களுடைய தந்தையின் உடல்மேல் போர்வை ஒன்றைப் போர்த்தினர். நோவா நினைவு தெளிந்து, நடந்ததை அறிந்து, காம் என்பவனைச் சபித்தார். சேம், எப்பேத்து என்ற இருவரையும் ஆசீர்வதித்தார் (தொநூ 3:20-27). பெருந்தன்மை உடையவர்கள் மற்றவர்களுடைய குறைகளை மறைப்பர். ஆனால் சில்லறைப் புத்தியுள்ளவர்கள் பிறருடைய குறைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவர்.

Wednesday, November 22, 2017

வாழ்க்கை என்னும் கொடை

வாழ்க்கை என்னும் கொடை  -  லூக்கா  19: 11-28

வாழ்க்கை என்பது கடவுள் கொடுத்த கொடை. இந்த கடவுள் கொடுத்த கொடையைப் பயன்படுத்தி நாம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறுகிறோம், வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்றுகிறோம், வாழ்க்கையை எப்படி வாழுகிறோம், என்பதுதான், நம் முன்னால் இருக்கக்கூடிய சவால்.
இந்த உவமையில் வரக்கூடிய மினாவை நாம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசலாம். ஒருவருடைய வாழ்வில் அவருக்கென்று பல திறமைகள் இருக்கலாம். அந்த திறமைகள் வெறுமனே புதைக்கப்பட்டு விடக்கூடாது. மாறாக, அவைகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அது இன்னும் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும். அதனைப் பயன்படுத்துவோர்க்கு மட்டுமல்லாது, எல்லாருக்கும் பயன் கொடுக்கக்கூடியதாக அமைய வேண்டும். அதைத்தான் இந்த உவமை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
நாம் வாழக்கூடிய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இங்கே திறமைகளை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறி, அனைவரும் சிறப்பாக, இந்த உலகத்தை, கடவுள் கொடுத்திருக்கிற திறமைகள் மூலமாக மெருகேற்ற வேண்டும். அதற்கு நாம் முழுமையாக முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

மனந் தளராமல் செபிப்போம் !

இடைவிடாது, மனந்தளராது செபிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஆண்டவர் இயேசு சொன்ன அருமையான உவமையை லூக்கா 18: 1-8 நற்செய்தியில் வாசிக்கிறோம். மானிட உறவுகளில்கூட ஒருவரின் தளரா முயற்சிக்குப் பலன் கிடைக்குமென்றால், இறைவனோடு நாம் கொள்கின்ற உறவில் நிச்சயமாகப் பலன் கிடைக்கும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். எனவே, மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் வேண்ட முயற்சி எடுப்போம். இடைவிடாமல் செபிக்க என்ன தடைகள்? இன்றைய உவமையின் அடிப்படையில் பார்த்தால் நம்பிக்கைக் குறைவும், மனத்தளர்ச்சியும். அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆர்வமின்மையும், பழக்கக் குறைவும். எனவே, இந்த நான்கு தடைகளையும் தகர்க்க நாம் முயற்சி செய்வோம். இந்த நான்கு தடைகளையும் உடைக்க நாம் பயன்படுத்தும் எளிய உத்தி இறைபுகழ்ச்சி செபம். எப்போதும் இறைவனைப் புகழ்வதும், என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவதும் இந்த நான்கு தடைகளையும் நிச்சயமாகத் தகர்த்து விடும் என்பது அனுபவம் தருகின்ற பாடம்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன். அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலி;க்கும் என்கிறார் திருப்பாடலின் ஆசிரியர் (34:1). ஆம், எந்நேரமும் இறைவனுடைய புகழ்ச்சி நம் நாவில் ஒலித்துக்கொண்டே இருந்தால், அது நமக்கு ஆர்வத்தைத் தரும். பழக்கமாக உருவாகும். அத்துடன், இறைபுகழ்ச்சி நமது நம்பிக்கையின்மையைக் குறைத்து, நாம் கேட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இறைவனுக்கு நன்றி கூறும் மனநிலையை நம்மில் உருவாக்குகிறது. எனவே, காலையிலும், இரவிலும், எந்நேரமும் இறைவனுக்குப் புகழ் பாடுவோம். இடைவிடாது செபிப்பதைப் பழக்கமாக்குவோம்.

மன்றாடுவோம்: புகழ்ச்சிக்குரியவரான ஆண்டவரே, எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், நொடியும் உமது பேரன்பை, இரக்கத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். அதற்காக நன்றி கூறுகிறோம். உம்மைப் புகழப் புகழ, உமது மாட்சிமை உயர்வதில்லை. மாறாக, எங்கள் மீட்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றன. எனவே, எந்நேரமும் உம்மைப் போற்றுகின்ற அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


-- அருள்தந்தை குமார்ராஜா

இடைவிடாத செபம் கேட்கப்படும்

இடைவிடாத செபம் கேட்கப்படும்

லூக்கா 18: 1-8   நற்செய்தியில் வருகிற நடுவர் ஏரோதாலோ, அல்லது உரோமையர்களாலோ நியமிக்கப்பட்ட நடுவர். பணம் இருந்தால், எதையும் செய்யலாம் என்பதாகத்தான், இந்த நடுவர்கள் செயல்பட்டனர். நீதிக்கு அங்கே இடமில்லை. எந்த அளவுக்கு பணத்தை வாறி இறைக்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நாம் விரும்பியபடி நீதி கிடைக்கும். நீதி, நியாயத்தைப்பற்றி அங்கு யாரும் பேசமுடியாது. பணம்தான் எல்லாம் செய்யும்.

இங்கே நற்செய்தியில் குறிப்பிடப்படுகிற பெண் ஏழைகளை, எளியவர்களை அடையாளப்படுத்தும் பெண். பணத்தினால் நிச்சயம் அவர்களுக்கு நீதி கிடைக்காது. ஏனென்றால் அவர்களால் பணம் கொடுக்க முடியாது. ஆனாலும், அந்த பெண் நீதியை பெற்றிட பிடிவாதமாய் இருக்கிறாள். எப்படியாவது, நீதி கிடைத்திட தொடர்ந்து அவள் நச்சரிக்கிறாள். நச்சரிப்பின் காரணமாக, அவள் நீதியைப்பெறுகிறாள். இயேசுவின் செய்தி இதுதான்: பணத்திற்கா விலைபோகிற நேர்மையற்ற நடுவரே இப்படி இருந்தால், நம்மைப்படைத்துப்பாதுகாத்துவரும் கடவுள் நம்மை அவ்வளவு எளிதில் கைவிட்டு விடுவாரா? நிச்சயம் நம்மைக்காப்பார். நமது சார்பில் அவர் என்றும் இருப்பார். நம்மை வழிநடத்துவார். நம்மோடு எந்நாளும் அவர் பயணிப்பார்.

கடவுளிடத்தில் செபிக்கின்றபோது, எப்போதும் நாம் மனம் உடைந்துவிடக்கூடாது. நாம் கேட்பது கிடைக்கவேண்டிய நேரத்தில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். செபத்திலே நாம் நினைத்தது கேட்கப்படவில்லை என்பதால் நாம் சோர்ந்துவிடக்கூடாது. உறுதியாக, நம்பிக்கையோடு, விடாமுயற்சியோடு கேட்க வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

ஏழைகளின் கடவுள்

ஏழைகளின் கடவுள்

லூக்கா 18: 1-8 நற்செய்தியில் நேர்மையற்ற நடுவர் மற்றும் கைம்பெண் பற்றிய உவமை தரப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் நேர்மையற்ற நடுவர் கடவுளுக்கு ஒப்பிடப்படவில்லை. நேர்மையற்ற நடுவரை, நிச்சயம் நம்மால் கடவுளுக்கு ஒப்பிட முடியாது. அவரது இரக்கத்திற்கு முன்னால், இந்த நேர்மையற்ற நடுவரின் செயல், ஒரு பொருட்டே அல்ல. ஆனால், அவருக்கு எதிராக, கடவுள் ஒப்பிடப்படுகிறார். நேர்மையற்ற நடுவரே இப்படி இருந்தால், கடவுள் எப்படி இருப்பார்? என்று, எதிர்மறையான விதத்தில், நற்செய்தி சொல்லப்படுகிறது.

இந்த நற்செய்தியில் நாம் காண்கிற மற்றொரு செய்தி: ஏழைகள்பால் கடவுள் கொண்டிருக்கிற அன்பு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் பெண், கணவனை இழந்த பெண். அவளுக்கு ஒரு பிரச்சனை. அவளுக்கு ஒரு எதிரி. அவளுக்கு ஒரு அநீதி நடந்து விட்டது. அவளுக்கு அநீதி செய்தவன், இவள் சார்பாக யார் வர முடியும்? என்ற மமதையோடு, நடந்திருக்கிறான். அந்த பெண், நடுவரிடம் நிச்சயம் செல்வாள் என்பது, அவளது எதிர்க்கு தெரிந்திருக்கும். இருந்தபோதிலும், பணத்தைக்கொண்டு எதையும், சாதிக்கலாம் என்று, அவளுடைய எதிரி நினைத்திருந்தான். ஆனால், அவன் ஒன்றை மறந்து விட்டான். எளியவர்கள் சார்பாக, கடவுள் எப்போதும் இருப்பார், என்கிற செய்தியை அவன் முற்றிலும் புறக்கணித்துவிட்டான்.

நமது கடவுள் எளியவர்களின் கடவுள். ஏழைகளின் கடவுள். துன்பப்படுகிற மக்களின் சார்பாக இருந்து பேசுகிற கடவுள். ஏழைகளுக்காக இரங்குகிற கடவுள். ஏழைகளாக இருக்கக்கூடிய மக்கள், நமக்காக யார் இருக்கிறார்கள்? நம் சார்பாக யார் வாதாடுவார்கள்? என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், கடவுள் அவர்களுக்காக இருக்கிறார்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

தளராத இறைநம்பிக்கை

தளராத இறைநம்பிக்கை

இந்த உலகத்தில் நமக்கு பல தேவைகள் இருக்கிறது. எல்லா தேவைகளையும நாமே நிறைவேற்றிவிட முடியுமா? நம்மால் முடியாதது இருக்கிறதா? என்றால், இருக்கிறது. நமக்கென்று பல தேவைகள் இருந்தாலும், அவையனைத்தையும் நம்மால் நிறைவேற்ற முடியாது. நம்மை கடந்த ஒரு ஆற்றல் நமக்கு தேவைப்படுகிறது. அதுதான் கடவுள் சக்தி. அந்த கடவுளிடம் நம் தேவைகளை எடுத்துரைக்கிறபோது, அவர் நமது தேவையை நிறைவேற்றித் தருகிறவராக இருக்கிறார்.

இந்த உலகத்தில் நமது தேவையை நிறைவேற்றுகிறவர்கள் நமது தந்தையும், தாயும். நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாது, நம்மை மகிழ்ச்சிப்படுத்துவதையே, தங்களது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்கிறவர்கள் நமது பெற்றோர். அதைப்போலத்தான் கடவுள் நம் தந்தையாக, தாயாக இருந்து நமது தேவைகளை உடனிருந்து நிறைவேற்றித்தருகிறார். நமது பெற்றோர் நமக்கு தேவையானதை, நாம் கேட்பதற்கு முன்னமே நிறைவேற்றித்தருகிறார்கள். அதுபோல கடவுளும் நமது தேவைகளை அறிந்து, நமக்கு நிறைவேற்றித்தரக்கூடியவராக இருக்கிறார்.

எப்படி நம்முடைய பெற்றோர் நமக்கு தேவையான காரியங்களை நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறோமோ, அதேபோல கடவுளும் நம் தேவைகளை நிறைவேற்றுவார் என்று, நம்பிக்கை கொள்ள வேண்டும். நமது நம்பிக்கை தளர்ச்சியடையாமல் இருக்க வேண்டும். அதற்கான வரத்தை ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

கடவுளுக்கு அஞ்சுகின்ற வாழ்க்கை

கடவுளுக்கு அஞ்சுகின்ற வாழ்க்கை

கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மக்களையும் மதிப்பதில்லை என்று நேர்மையற்ற நடுவர் தனக்குள் சொல்லிக்கொள்வதாக இன்றைய உவமை நமக்கு வருகிறது. இன்றைய பெரும்பாலான மனிதர்களின் மனநிலையை இது பிரதிபலிப்பதாக அமைகிறது. ஒரு காலத்தில் தவறு செய்பவர்களை இந்த உலகம் வெறுத்து ஒதுக்கியது. தவறு செய்வதற்கு மனிதர்கள் பயப்பட்டார்கள். தவறு செய்கிறவர்கள் அதனை வெளியில் தெரிவதை மிகப்பெரிய அவமானமாக நினைத்தார்கள். இன்றைய நிலை என்ன?

தவறு செய்கிறவர்கள் தான், இந்த சமுதாயத்தில் நிமிர்ந்த நடையோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். தவறு செய்வது பாவம் என்கிற மனநிலை அறவே இல்லை. அதையெல்லாம் பெரிதாக நினைப்பதும் இல்லை. நல்லவர்கள் தான், அவமானப்பட்டு வாழ்வது போல வாழ வேண்டியுள்ளது. இப்படியொரு காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு காலம் வரும். அதற்கான பலனையும், விளைவையும் தவறு செய்கிறவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

இந்த உலகத்தில் கடவுளுக்கு பயப்படாமல், மனிதர்களை மதிக்காமல் இருப்பவர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்குள் செல்லாமல், நம்முடைய ஆன்மாவைக் காத்துக்கொள்ள நாம் சிரத்தை எடுப்போம். நமது வாழ்க்கையை கடவுளுக்கு பயந்து நடக்கக்கூடிய வாழ்க்கையாக மாற்றியமைப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

Tuesday, November 21, 2017

செசீலியம்மாவுக்கு கவிப்பா

செசீலியம்மாவுக்கு கவிப்பா

இறைவன் தந்த அருட்கொடையை
இறைவனுக்கே அர்ப்பணித்த குயிலே

கற்பு என்ற உன்னதத்தை உவப்புடன்
கடவுளுக்குக் காணிக்கையாக்கிய கீதமே

பாடலால் மட்டுமல்ல தவத்தாலும்
பார் போற்ற வாழ்ந்த நற்பாடகியே

மணந்த மணவாளனையே இயேசு
மன்னவனைத் துதிக்க வைத்த சௌந்தர்யமே

வலேரியன் என்ற கணவரை மனமாற்றி
வாழ்வையே அர்ப்பணித்தத்  தூண்டுகோலே

கணவர் மட்டுமல்லாது குடும்பத்தையே மறைசாட்சியாக்கிய ஞானப்பறவையே

எம் பாடகருக்கு இன்றளவும் பாதுகாவலான
எம் மனங்கவர் பண்ணிசையே

பாடல்களாலும் இன்னிசையாலும் திரு அவையால் போற்றப்படும் இறை நாதமே

வாழிய வாழியவே !

அன்புடன்,

கஸ்மீர் ரோச், சின்னமலை,சென்னை 9382709007

மரித்தோரை மறந்தால்...

மரித்தோரை மறந்தால்...

வாழும் உறவுகளை வருந்தி மறந்திருக்கலாம்

வாழ்வித்தவர்களை தெரிந்து மறந்திருக்கலாம்

நோயுற்றவர்களை காணாமல் மறந்திருக்கலாம்

வீழ்ந்தோரை அருகில் நில்லாமல் மறந்திருக்கலாம்

தாழ்ந்தோரை எள்ளி நகையாடி மறந்திருக்கலாம்

இழந்தோரை இகழ்ந்து பரிகசித்து மறந்திருக்கலாம்

மறந்தோரை மன்னிக்க மனமின்றி மறந்திருக்கலாம்

ஆனால் மரித்தோர் ஏங்குகையில் நாம் மறக்கலாமா...?

ஆத்துமாக்களை நினைவுகளினின்று ஒதுக்கலாமா....?

நம்மை இந்நிலைக்கு உயர்த்தியோரை உதாசீனப்படுத்தலாமா..?

ஆன்மாக்களை நினைப்போம்
ஆன்மாக்களுக்காக
செபிப்போம்
ஆன்மாக்கள் காட்டிய வழிநடப்போம்

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

முந்தியின் முடிச்சு

முந்தியின் முடிச்சு  - லூக்கா  19: 11-28

'நான் என்ன முந்தியிலயா முடிச்சு வச்சிருக்கிறேன்!'
என் அய்யாமை லட்சுமி அம்மாவிடம் காசு கேட்கும்போதெல்லாம் அவர் இப்படித்தான் சொல்வார். ஆனால், தன் முந்தியின் நுனி முடிச்சை அவிழ்த்துக் காசைக் கொடுத்துவிடுவார்.
அவர் காசை முடிந்து வைத்தே அவரின் முந்தி நுனி சுருக்கமாக இருக்கும். முந்தியில் முடிய வெட்கப்படும் சிலர் கைக்குட்டையில் முடிந்து அதைத் தங்களின் இடுப்பில் சொருகி வைத்திருப்பார்கள் - குறிப்பாக ஆண்கள். முந்தியில் நாணயங்களைத்தான் முடிய முடியும். நோட்டுக்களை முடிந்து வைப்பது பாதுகாப்பானது அல்ல. மேலும் உடலின் வியர்வையால் நோட்டுக்கள் நனைந்துவிடவும் வாய்ப்புக்கள் உண்டு.
முந்தியின் முடிச்சு - ஒரு பாதுகாப்பு பெட்டகம்.
நெல்வயலில் இறங்குமுன் கழற்றப்படும் மெட்டி, கைவிரலின் மோதிரம், வீட்டுச் சாவி, புகையிலை, பாக்கு, பணம் என எல்லாம் முடியப்படுவது முந்தியில்தான்.
முந்தியின் முடிச்சு எளிதாக அவிழ்வதில்லை. மேலும், அவை நம் உடலை உரசிக்கொண்டே இருப்பதால் அவைகள் தவறவும் வாய்ப்பில்லை.
'உன் வீட்டுக்காரரை உன் முந்தியில் முடிசுசுக்கோ!' என்று தாய் தன் மகளுக்கு அறிவுரை கொடுப்பதும் இதனால்தான்.
மனிதர்கள் காசை சேகரித்து வைக்கத் தொடங்கியதின் முதற்படி இதுவாகத்தான் இருக்கும். முதலில் முந்தி, அடுத்து சுருக்குப் பை, அடுத்து பர்ஸ், அடுத்து ஏடிஎம் அட்டை என வளர்ந்து கொண்டிருக்கிறது.
முந்தியோடு நிறுத்திக் கொள்தல் பொருளாதாரத்தின் முதல்படியே.
அப்படி முந்தியோடு முடிந்து வைத்து, தன் பொருளாதார வளர்ச்சியை தானே நிறுத்திக் கொண்ட ஒருவரைத்தான் லூக்கா 19:11-28  நற்செய்தி வாசகத்தில் பார்க்கின்றோம்.
 நாம் லூக்கா நற்செய்தியாளர் எழுதிய தாலந்து எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.
மத்தேயு நற்செய்தியாளர் எழுதும் தாலந்து எடுத்துக்காட்டுக்கும் (25:14-30) மூன்று முக்கிய வித்தியாசங்கள் இருக்கின்றன:
1. மத்தேயு, 'தாலந்து' என குறிப்பிடுவதை, லூக்கா 'மினா' எனக் குறிப்பிடுகிறார். 60 மினாக்கள் சேர்ந்ததுதான் ஒரு தாலந்து.
2. மத்தேயுவில் மூன்று பேருக்கு, ஐந்து, இரண்டு, ஒன்று என தாலந்துகள் கொடுக்கப்படுகின்றன. லூக்காவில் பத்து பேருக்கு, ஆளுக்கு ஒன்று வீதம் பத்து மினாக்கள் கொடுக்கப்படுகின்றன.
3. மத்தேயுவில் மூன்றாம் நபர் தாலந்தை நிலத்தில் புதைக்கிறார். லூக்காவில் மூன்றாம் நபர் கைக்குட்டையில் முடிகிறார். மேலும் முதல் நபர் ஒன்றை பத்தாகவும், இரண்டாம் நபர் ஒன்றை ஐந்தாகவும் பெருக்குகின்றார். மற்ற ஏழுபேர் தங்கள் மினாக்களை என்ன செய்தார்கள் என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
இந்த இரண்டு எடுத்துக்காட்டுக்களில் எது இயேசு சொன்னது என்பது குழப்பமாக இருக்கிறது.
ஆனால் இந்த இரண்டு எடுத்துக்காட்டுக்களிலும், மூன்றாம் நபர் கண்டிக்கப்படுகிறார்.
எதற்காக? அவரின் சோம்பலுக்காகவும், அவருக்குக் கொடுக்கப்பட்டதைப் பெருக்காததற்காகவும்.
டாடா மோட்டார்ஸ் விளம்பரத்தில் அழகாக ஒரு வரி வரும்:
'நமக்கு உள்ளிருந்து நம்மை இயக்குவதே நம்மை மேன்மையானவராக்குகிறது!'
அதாவது, நம் கைகளில் எத்தனை மினாக்கள் இருப்பதைப் பொறுத்து அல்ல நம் மேன்மை. மாறாக, அந்த மினாக்களைப் பயன்படுத்தவும், பயன்படுத்தாமல் இருக்கவும் வைக்கின்ற நம் உள்மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்பதே முக்கியம்.
ரூபிக்ஸ் க்யூப் பார்த்திருப்பீர்கள்.
இதில் உள்ள நிறங்களை அந்தந்த பகுதியில் சரியாகச் சேர்க்க 43,252,003,274,489,856,000 வழிமுறைகள் உள்ளன.
ஒரு கையடக்க க்யூபே இத்தனை வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது என்றால், கைக்குள் அடங்காத நம் மனித வாழ்க்கைக்கு எத்துணை வழிமுறைகள் இருக்கும்.
ஒரு வழிமுறை தவறாய்ப்போனாலும், அல்லது ஒரு வழிமுறையை நாம் தவறவிட்டாலும், அடுத்த ஒன்றுக்கு முயற்சிக்கலாமே. – Fr. Yesu, Madurai.

இறைவன் கொடுத்த தாலந்தை நாம் என்ன செய்தோம்?

இறைவன் கொடுத்த தாலந்தை நாம் என்ன செய்தோம்? -  லூக்கா  19: 11-28


ஆங்கிலேய ஆட்சியில் கடைசி வைஸ்ராயாக இருந்தவர் மவுண்பேட்டன் பிரபு அவர்கள். தனது சாதூயர்த்திற்கும், புத்திக்கூர்மைக்கும் பேர்போனவர். எப்படிப்பட்ட பிரச்சனையையும் தனது புத்திக்கூர்மையால் தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்.
ஒருமுறை பத்திரிக்கையாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்விகேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அவர் மிகவும் பொறுமையாக, அறிவுத்தெளிவோடு பதிலளித்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் எழுந்து நின்று அவரை வாழ்த்திவிட்டு கேட்டார், “ உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?” என்று.
அதற்கு அவர், “நான் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய பெற்றோர்கள்கூட விவசாயிகள்தான். ஆனால் என்னுடைய இந்த வெற்றிக்குக் காரணமாக இருப்பது என்னுடைய கடின உழைப்புதான். உழைப்பால்தான் நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறேன்” என்றார்.
அதைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் அவரை வெகுவாக வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
ஒருமுறை ரஷ்ய அதிபர் லெனின் இவ்வாறு சொன்னார், “நாடு முன்னேறத் தேவையான மூன்று: உழைப்பு, கடின உழைப்பு, ஓயாத உழைப்பு இவைதான்” என்று. ஒருமனிதன் தன்னுடைய வாழ்வில் கடுமையாக உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா உவமையைக் குறித்துப் பேசுகிறார். (மத்தேயு நற்செய்தியில் இது தாலந்து உவமையாக வருகின்றது). உயிர்குடிமகன் ஒருவர் தன்னுடைய பணியாளர்களை அழைத்து அவர்களிடம் பத்து மினாக்களைக் கொடுத்துவிட்டு தொலைதூரம் செல்கிறார். சில நாட்களுக்குப் பிறகு தன்னுடைய பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் கணக்குக் கேட்கிறபோது ஒருவன் பத்து மினாக்களையும், இன்னொருவன் ஐந்து மினாக்களையும் ஈட்டியதாக கொண்டுவந்து தருகிறான். கடைசியில் வந்தவனோ தலைவன் தனக்குக் கொடுத்த மினாவை கைகுட்டையில் முடிந்துவைத்து அப்படியே கொடுக்கிறான். இதனால் தலைவனுடைய சினத்துக்கு ஆளாகிறான்.
இங்கே மினா – தாலந்து – என்பதை கடவுள் நமக்குக் கொடுத்தாக திறமைகள், வாய்ப்பு, வசதிகள் என்பதாக புரிந்துகொள்ளலாம். கடவுள் யாரையுமே திறமையற்றவராகவோ அல்லது ஜடமாகவோ படைக்கவில்லை. அதை நாம் எசா 43:4 ல் வாசிக்கின்றோம், “என் (கடவுள்) பார்வையில் நீ விலையேற்றப் பெற்றவன்; மதிப்பு மிக்கவன்” என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் திறமையானவர்கள், ஆற்றல்மிக்கவர்கள்.
ஆனால் பலர் இன்று தங்களிடம் இருக்கும் திறமையை உணராமல்; தங்களுடைய மதிப்பை அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். “உன்னையே நீ அறிவாய்” என்பான் தத்துவஞானி சாக்ரடிஸ். நாம் நம்மிடம் என்ன திறமை இருக்கிறது, என்ன ஆற்றல் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடையலாம். உவமையில் வரும் முதல் இரண்டு பணியாளர்களும் தங்களிடம் இருந்த திறமையை, உழைப்பைப் பயன்படுத்தி பத்து, ஐந்து மினாக்கள் முறையே ஈட்டினார்கள். அதனால் அவர்கள் தங்களுடைய தலைவரிடமிருந்து அதற்கான வெகுமதியைப் பெற்றார்கள். நாம் நமது திறமையை, உழைப்புப் பயன்படுத்தினால் என்றும் உயர்வுதான்.
அதேவேளையில் உழைக்காமல் சோம்பித்திரிவது என்பது கடவுளின் தண்டனைக்கு உரியதாக கருதப்படுகிறது. உவமையில் வரும் கடைசிப் பணியாளர் தலைவன் தனக்குக் கொடுத்த மினாவை வைத்து மேலும் செல்வம் ஈட்டாமல் கைகுட்டையில் பொதிந்து வைத்திருக்கிறான். அதனால் தலைவனின் சினத்திற்கு உள்ளாகிறான். நாமும்கூட பலவேளையில் உழைக்காமல், ஏனோதானோ என்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். “சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவர், அது நின்றாலும் ஓடினாலும் ஒன்றுதான்” என்பார் கூப்பர் என்ற அறிஞர். ஆம், சோம்பேறி ஒன்றுக்கும் உதவாதவன். அதனால் அவன் அழிவையே சந்திப்பான்.
ஆதலால் கடவுள் நமக்குக் கொடுத்த தாலந்துகளை, திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி வாழ்வோம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.


கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளை நாம் எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றோம்?

கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளை நாம் எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றோம்? - லூக்கா  19: 11-28


ஒரு மாலைப் பொழுதில் தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் உலவிக்கொண்டிருந்தன. 
குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். தாய் ஒட்டகம் அவற்றிற்கெல்லாம் மிகப் பொறுமையாகப் பதில்சொல்லும். 
அன்றைக்கும் அப்படித்தான். குட்டி ஒட்டகம் தாய் ஒட்டகத்தைப் பார்த்து “அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?” என்றது. “நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் தண்ணீர் கிடைக்கும். அதுவும் தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துகொண்டு, வேண்டும்போது உபயோகப்படுத்திக் கொள்வதற்காக. தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்க்கை திமிலைக் கொடுத்திருக்கு” என்றது தாய் ஒட்டகம். 
குட்டி ஒட்டகம் திரும்பவும் கேட்டது. “அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக்கொள்ள மூடி இருக்கே? மற்ற மிருகங்களுக்கு அப்படி இல்லையே. அது ஏன்?”. தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக்கொண்டு சொன்னது. “பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும். அப்போது சற்றென்று ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைனா கண்ணுலயும் மூக்குலயும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு”.
குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது, “இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?”. “அது கண்ணு... மணல்ல நடக்கும்போது நம் கால் மணல்ல புதையாம நடக்கத்தான்” பொறுமையாகப் பதில் சொன்னது தாய் ஒட்டகம். “பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே, அது ஏன்? இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி. அதற்கு தாய் ஒட்டகம் சொன்னது, “பாலைவனத்தில் செடி கொடி எல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சுவைத்துத் தின்ன வேண்டாமா?”.
இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக்கொண்டு இலண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம இரண்டு பேரும் என்ன செஞ்சிக்கிட்டு இருக்கும்?”. குட்டி ஒட்டகம் கேட்ட இந்தக் கேள்விக்கு தாய் ஒட்டகத்தால் பதில் சொல்ல முடியவில்லை.
ஆம், நாமும்கூட இந்த ஒட்டகங்களைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் அளப்பெரிய திறமைகளைக் கொண்டிருந்தும், நம் திறமைகளை சரியாகப் பயன்படுத்தாமல் வீணடித்துக்கொண்டு தேவையில்லாத இடத்தில் பயனில்லாத வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா நாணய உவமையை எடுத்துக்கூறுகின்றார். இயேசு கூறிய மற்றெல்லா உவமைகளை விடவும் இந்த உவமை வரலாற்றில் நிகழ்ந்தவற்றோடு மிகவும் ஒத்துப் போகின்றனது. எப்படி என்றால், பெரிய ஏரோதுவின் இறப்புக்குப் பிறகு அவருடைய மூன்று மகன்களான அந்திப்பா, பிலிப் அர்கிலஸ் ஆகியோர் தங்களுக்கென்று குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு ஆண்டு வந்தார்கள். இதற்கிடையில் அற்கிலஸ் உரோமை நகருக்குச் சென்று, அங்கிருந்த உரோமை அரசனாகிய அகுஸ்துஸ் என்பவரிடம் தன்னை யூதேயாவிற்கு அரசனாக ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார். இதற்கு யூதர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. அவர்கள் அர்கிலசை அரசராக ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு ஆண்டவர் இயேசு மினா நாணய உவமைச் சொல்கின்றார்.
உவமையில் வரும் உயர்குடிமகன் தன்னுடைய பணியாளர்களை அழைத்து மினாக்களைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு வாணிபம் செய்யச் சொல்லிவிட்டு, ஆட்சியுரிமை பெறப் போகின்றார். ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தபிறகு தன்னிடம் மினாக்களை பெற்றவர்களிடமிருந்து கணக்கைக் கேட்கின்றார். அவர்களில் இருவர் சரியாகக் கணக்கைக் கொடுக்க, கடைசியில் வரும் பணியாளர் பெற்ற மினாவை அப்படியே திரும்பக் கொடுக்கின்றார். இதனால் சினங்கொள்ளும் அவர், அந்தப் பணியாளருக்கு உரிய தண்டனையைக் கொடுக்கின்றார்.
இந்த உவமை நமக்கு மூன்று முக்கியமான உண்மைகளை எடுத்துக்கூறுகின்றது. ஒன்று, கடவுள் நம்மை நம்பி பொறுப்புகளை/ திறமைகளை கொடுக்கின்றார் என்பதாகும். இரண்டு, கொடுத்த பொறுப்புகளுக்குக் கணக்குக் கேட்கின்றார் என்பதாகும். மூன்று, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகின்றோமோ அதனடிப்படையில் நமக்கு வெகுமதி வழங்கப்படும் என்தாகும். ஒருவேளை, கடவுள் நமக்குக் கொடுத்த பொறுப்புகளை நாம் திறம்படச் செய்திருந்தால் ஆசிர்வாதத்தைப் பெறுவது என்பது உறுதி.
எனவே, கடவுள் நம்மை நம்பிக் கொடுத்திருக்கும் பொறுப்புகளை/ திறமைகளை நல்லவிதமாய் பயன்படுத்துவோம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும் - லூக்கா 18: 1-8

இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலையடிவாரக் கிராமத்தில் கார்முகில், வணங்காமுடி என்ற இணைபிரியா தோழர்கள் இருவர் வாழ்ந்து வந்தார்கள். அதில் கார்முகில் என்பவன் சோம்பேறியாக சுற்றுபவன். வணங்காமுடி என்பவன் தன்னம்பிக்கையோடும் சுறுசுறுப்பாகவும் எந்த வேலையையும் மிக அழகாக செய்து முடிக்க கூடியவன்.

ஒருநாள் அவர்களிடம் வயதான ஒருவர் ஓர் இரகசியத்தை கூறினார். "இந்த மலையின் மேற்பகுதியில் ஒரு கோயில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளைக்காரர்களுக்கு பயந்து நானும், என் மனைவியும் நவரத்தின கற்களை ஒரு வெண்கலப் பானையில் வைத்து கோயிலுக்கு எதிரில் உள்ள அரசமரத்தின் அடியில் அந்த பானையை புதைத்துவிட்டு வந்தோம், எனக்கு பிள்ளை குட்டிகளென்று யாரும் கிடையாது. எனவே நீங்கள் இருவரும் அங்கு சென்று, அந்தப் புதையலை கண்டறிந்து பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று கூறிச் சென்றார்.

பிறகு அவர்கள் இருவரும் அந்த புதையலை நோக்கி மலையின் மேற்பகுதிக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றவுடன் இருவருக்கும் தாகம் ஏற்பட்டது. தாகத்தை தணிக்க அவர்கள் அங்கும், இங்கும் அலை மோதினார்கள். தாகத்தின் தாக்கத்தால் கார்முகில் "இதற்கு மேல் என்னால் வர இயலாது, இவ்வளவு பெரிய மலையில் கோயிலை கண்டறிவதே மிக கடினம். இதில் அந்த புதையலை எப்படி கண்டறிவது. நாம் திரும்பி சென்றுவிடலாம்” என்று கூறினான். அதற்கு வணங்காமுடி "புதையலை கண்டறியத்தானே இங்கு வந்தோம். அந்த வேலையை முடிக்காமல் திரும்ப செல்வது கோழைத்தனம்" என்று கூறினான். கோவம் கொண்ட கார்முகில் “உன்னால் அதை கண்டறிய இயலுமென்றால் நீ தாராளமாக செல்லலாம். இனி என்னால் ஒரு அடி கூட மேல் நோக்கி செல்ல இயலாது” என்று கூறி திரும்பி சென்றுவிட்டான்.

பிறகு தனியாக வணங்காமுடி மட்டும் அந்த புதையலை தேடிச் சென்றான். சிறிது தூரம் சென்றவுடன் ஒரு அழகிய நீரோடையைக் கண்டான். ஆனால் காடுகள் அடர்ந்த பகுதியில் அந்த நீரோடைக்கு செல்லும் வழி அவனுக்கு தெரியவில்லை. ஒரு வயதான மூதாட்டியிடம் அந்த நீரோடைக்கு செல்லும் வழியை கேட்டான். அதற்கு அந்த மூதாட்டி "அதோ அந்த மாடுகள் செல்லும் வழியில் செல், அந்த நீரோடைக்கு செல்லலாம்" என்று கூறினார். பிறகு அந்த மாடுகளை பின் தொடர்ந்து நீரோடையில் தன்னுடைய தாகத்தை தணித்துக்கொண்டான்.

பிறகு மீண்டும் தன்னுடைய முயற்சியைத் தொடங்கினான். வழியில் ஒரு கடைக்காரரிடம் மலையில் இருக்கும் கோயிலை பற்றி விசாரித்தான். அதற்கு அந்த கடைக்காரர் "இங்கிருந்து ஒரு பர்லாங்கு தூரம் சென்றவுடன் வலது புறம் ஒரு வழி பிரியும், அந்த வழியில் சென்றால் அந்த கோயிலுக்கு செல்லலாம்" என்று கூறினார்.
அதேபோல் அவனும் ஒரு பர்லாங்கு தூரம் சென்று வலது புறமாக பிரியும் வழியை பிடித்து சென்றுகொண்டிருந்தான்; பாதையும் முடிவுக்கு வந்தது. ஆனால் எந்த கோவிலும் அங்கு இல்லை. பொழுதும் சாய்ந்து சிறிது சிறிதாக இருள் சூழத் தொடங்கியது. இருந்தும் அவன் மனதை தளரவிடவில்லை; அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான். அப்பொழுது ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் அந்த வழியில் வந்துகொண்டிருந்தான். வணங்காமுடி அவனிடன் “மலையில் கோயிலை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு அந்த சிறுவன் “ஓ நன்றாக தெரியுமே... வாருங்கள் நான் அழைத்து செல்கிறேன்” என்று கூறி அவனை அழைத்துச் சென்று அந்த கோயில் இருக்குமிடத்தை காட்டிச் சென்றான்.

கோவிலுக்குச் சென்ற அவன், அதற்கு எதிரே இருந்த அரசமரத்தின் அடியில் குழி தோண்டினான். இறுதியில் புதையலையும் கண்டுகொண்டான்.

தன்னம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியோடு மலைமீது ஏறியதன் பலனாக அந்த புதையல் வணன்காமுடிக்குக் கிடைத்தது. ஆனால் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இழந்த கார்முகிலனுகோ எதுவும் கிடைக்காமல் போனது. தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் ஒரு செயலைச் செய்தால், அதில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதை இந்த கதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மனந்தளராமல் இறைவனிடம் ஜெபிக்கவேண்டும் என்பதற்கு நேர்மையற்ற நடுவர், கைம்பெண் உவமையைச் சொல்கிறார். நடுவரோ யாருக்கும் ஏன் கடவுளுக்குக் கூட பயப்படாதவர். நிச்சயம் அவர் ஒரு உரோமை அரசாங்கத்தின் நடுவராகவே இருந்திருக்க வேண்டும். யூத நடுவர்கள் அப்படி கடவுல்க்குப் பயப்படாமல் இருக்கமாட்டார்கள். அவரிடத்திலிருந்து நீதி கிடைக்கவேண்டும் என்று யாதொரு துணையும் இல்லாத கைம்பெண் போராடுகின்றார். நேர்மையற்ற நடுவர் யாருக்கும் பயப்படதவராக இருந்தாலும், அக்கைம்பெண்ணின் தொல்லையின் பொருட்டு அவர் அவருக்கு நீதியை வழங்குகின்றார்.

இந்த உவமையைச் சொல்லிவிட்டு இயேசு, “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கி கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரோ” என்கின்றார். இறைவன் தன் மக்கள்மீது பேரன்பு கொண்டிருப்பவர். அவர் தம்மிடத்தில் மனந்தளராது மன்றாடுவோரின் குரலுக்கு நிச்சயம் செவிகொடுப்பார் என்பதே உண்மை.

எனவே, நாம் எல்லாம் வல்ல இறைவனிடம் மனந்தளராது மன்றாடுவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

தொந்தரவு

தொந்தரவு


ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள் என்று வற்புறுத்தும்

தன் தாயிடம்,

'டுவெண்டி ஃபோர் அவர்ஸ் சதா ட்ரபுள் குடுத்துகிட்டே இருக்க நீ!'

என்று கடிந்து கொள்வார் எம்.ஆர். ராதா.

தொந்தரவு –

ஒருவர் மற்றவருக்குச் செய்வது. இது நடக்கு இருவர் அல்லது இருவருக்கு மேல் அவசியம். எனக்கு நானே தொந்தரவு கொடுக்க முடியுமா? முடியாது. அடுத்தவர்தான் கொடுக்க முடியும். அல்லது நான்தான் அடுத்தவருக்குக் கொடுக்க முடியும்.

ஒரு புள்ளியில் தொடங்கும் வேலை மற்றொரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நகர்தலை மற்றவர் இடைநிறுத்தினால் அதற்குப் பெயர் தொந்தரவு.

ஆங்கிலத்தில் 'disturb' என்கிறோம். இதன் இலத்தீன் மூலம் 'dis-turbare'. Turbain என்பது ஒரு சக்கரம். அந்தச் சக்கரத்தின் ஓட்டத்தை தடுப்பது அல்லது நிறுத்துவதுதான் dis-turb.

  1. சில தொந்தரவுகள் தவிர்க்க முடியாதவை.

  2. உதாரணத்திற்கு, இப்போது தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்யும் கனமழை. இந்தக் கனமழையினால் நம் பயணம், பணி தடைபடுகிறது. ஆனால், இது தவிர்க்க முடியாத தொந்தரவு.

  3. சில தொந்தரவுகள் தவிர்க்க கூடியவை.

  4. நாம் படிக்கும் இடத்தின் அருகில் லவுட் ஸ்பீக்கரில் பாட்டு ஓடுகிறது என வைத்துக்கொள்வோம். இந்தத் தொந்தரவை தவிர்க்க நான் என் அறையின் கதவுகளை அடைக்கலாம். அல்லது வேறு இடத்திற்கு நானே மாறிச் செல்லலாம்.

  5. சில தொந்தரவுகள் நாமாக ஏற்படுத்திக் கொள்பவவை.

  6. முக்கியமான ப்ராஜக்ட் ஒர்க் செய்து கொண்டிருக்கும்போது, ஸ்கைப் அல்லது வாட்ஸ்ஆப் ஆன் செய்து வைத்து அந்த ஸ்க்ரீனில் ஒரு கண், கணிணி ஸ்க்ரீனில் மறு கண் என இருப்பது.

  7.  லூக்கா 18:1-8) தொந்தரவு கொடுக்கும் ஒரு கைம்பெண்ணைப் பார்க்கிறோம். யாருக்குக் கொடுக்கிறார்? நீதியற்ற நடுவருக்கு. எதற்காக? தனக்கு நீதி வேண்டி.

  8. இந்த நடுவர் 'கடவுளுக்கும் அஞ்சுவதில்லை', 'மனிதரையும் மதிப்பதில்லை'.

  9. இருந்தாலும் தொந்தரவின் பொருட்டு அடிபணிகிறார்.

  10. இந்தப் பெண்ணின் தொந்தரவுக்குப் பின் இருப்பது நம்பிக்கை. எப்படியும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை. நம்பிக்கையுடன் தட்டும் எந்தக் கதவும், மீண்டும் மீண்டும் தட்டப்படும்போது, கண்டிப்பாக திறக்கப்படும்.

  11. இந்தப் பெண் தன்னிடம் ஒன்றுமில்லாத ஒருநிலையில், தன் கையறுநிலையில் நடுவர்மேல் நம்பிக்கை கொள்கிறார்.

  12. இந்தப் பெண்ணின் நம்பிக்கை எப்படி இருக்கிறது தெரியுமா?

  13. ஆற்றுத் தண்ணீரில் அமிழ்த்தப்படும் ஒருவன் தன் தலையை முட்டிக்கொண்டு மூச்சுக்காற்றுக்கு வெளியே வருவானே அப்படியிருக்கிறது.

  14. தொந்தரவும் நல்லதே! – Fr. Yesu, Madurai.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

பீகார் மாநிலம் பாகலூர் என்ற குக்கிராமம். இங்கே இருக்கக்கூடிய மக்கள் நிலமில்லாத பரம ஏழைகள். வேலைக்குச் செல்வதாக இருந்தாலும் ஐம்பது கிலோமீட்டர் தூரம் தள்ளி இருக்கக்கூடிய பக்கத்து ஊருக்குத்தான் செல்லவேண்டும். இதனால் மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

ஆனால் பக்கத்துக்கு ஊருக்குச் செல்வதற்கான இன்னொரு வழியும் இருந்தது. அது இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் மலைக்கு உள்ளே இருந்த குறுகலான பாதை. சிலநேரங்களில் இதன்வழியாக போகமுனைவோர் உடலில் சிராப்புகளோடும், காயங்களோடுதான் திரும்பிவருவர். அரசாங்கத்திடம் ஊர் மக்கள் மலைப்பாதையை விரிவுபடுத்தவேண்டும் என்று எவ்வளவோ சொல்லியும் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் கேட்கப்படாமலே போனது. இதனால் ஊர்மக்கள் பெரிதும் அவஸ்தைக்கு உள்ளானார்கள்.

இவ்வேளையில் அவ்வூரில் இருந்த தஷ்ரத் மஞ்சி என்ற மனிதன் ஒவ்வொருநாளும் வேலைக்குச் சென்றுவிட்டு, உடம்பில் காயங்களோடும், சிராப்புகளோடும் வந்த தன்னுடைய மனைவியின் கஷ்டத்தை உணர்ந்து, “ஏன் நாமே இந்த மலையை உடைத்து பாதையை உண்டாக்கக்கூடாது” என்று சிந்தித்தான். ஊர் மக்களுக்காக அல்லாது தன்னுடைய மனைவிக்காகவே மலையில் முதலில் பாதையமைக்க முடிவெடுத்தான்.

1960 ஆம் ஆண்டு தன்னுடைய வேலையைத் தொடங்கினான். அப்போது ஊர் மக்களெல்லாம் அவனது செயலைப் பார்த்துக் கேலிசெய்தனர். ஆனால் அவன் தான் எடுத்த முயற்சியில் விடாமுயற்சியோடு உழைத்தான். இதற்கிடையில் ஒருநாள் அவனுடைய மனைவி மலைப்பாதையில் சென்றபோது ஒரு பாறாங்கல் அவள்மீது விழுந்து, அந்த இடத்திலே அவள் இறந்துபோனாள். “யாருக்காக இந்த மலையை உடைக்க ஆரம்பித்தோமோ அவளே இறந்துவிட்டாளே” என்று அவன் மனம்வருந்தி அழுதான்.

ஆனால் தான்கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருந்ததால் மலையை உடைத்து, பாதை அமைக்கும் வேளையில் மும்முரமாக இறங்கினான். அவனுடைய இடைவிடாத முயற்சியின் பலனால் 1982 ஆம் ஆம் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும் 30 அடி அகலமுள்ள ஒரு பாதை உருவானது. தனது மனைவிக்காக தொடங்கிய முயற்சி ஊர்மக்கள் அனைவருக்கும் பயன்படுவதை எண்ணி அவன் மிகவும் சந்தொசப்படான். மக்களும் தஷ்ரத் மஞ்சி என்ற அந்த மனிதனின் செயலை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

விடாமுயற்சியோடு செயல்படும்போது எப்படிப்பட்ட காரியமும் சாத்தியப்படும் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விடாமுயற்சியோடு ஜெபித்தால், இறைவனின் வேண்டினால் அவர் நமக்கு நிச்சயம் செவிசாய்ப்பார் என்பதை ‘கைம்பெண்ணும், நேர்மையற்ற நடுவரும்’ என்ற உவமையின் வாயிலாக அழகுபட எடுத்துக் கூறுகின்றார். உவமையில் வரும் நடுவர் கடவுளுக்கும் அஞ்சாதவர், மக்களையும் மதிக்காதவர். அப்படிப்பட்ட நடுவரே, கைம்பெண்ணின் விடாமுயற்சியால் – நச்சரிப்பால் – அவருக்கு தீர்ப்பு வழங்கினார் என்று சொன்னால், கடவுள் தன்னுடைய பிள்ளைகள் தன்னை நோக்கி அல்லும், பகலும் மன்றாடும்போது அதற்கு செவிசாக்காமல் போவாரோ? என்கிறார் இயேசு.

நாம் ஒவ்வொரும் இடைவிடாது, தொடர்ந்து இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதுதான் இயேசுவின் படிப்பினையாக இருகின்றது. ஆனால் பலநேரங்களில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ இறைவனின் ஜெபித்துவிட்டு, ‘கடவுள் என்னுடைய ஜெபத்தை கேட்கவில்லை’ என்று வேதனைப்படுகின்றோம். தானியேல் புத்தகம் 6:16 ல் வாசிக்கின்றோம், “நீ இடைவிடாது வழிபடும் கடவுள் உன்னை விடுவிப்பாராக” என்று. 1 தெச 5:17 ல் “இடைவிடாது இறைவனிடம் மன்றாடுங்கள்” என்று படிக்கின்றோம்.

ஆதலால் நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் இடைவிடாது மன்றாடுவோம். அதன் வழியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.

“கடின உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, உறுதியான சிந்தனைகள் இவையே வெற்றிக்கு அடிப்படை” – கார்லைஸ். Fr. Maria Antonyraj, Palayamkottai.

என் இல்லம் இறைவேண்டலின் வீடு

“என் இல்லம் இறைவேண்டலின் வீடு”

பெருநகர் ஒன்றில் பிரிவினை சபையைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர் இருந்தார். அவருக்கு குதிரைகளின்மீதும், குதிரைப் பந்தயத்தின்மீது அதிகமான ஈடுபாடு இருந்தது. தன்னுடைய வீட்டில்கூட ஒரு உயிர்தரக் குதிரையை வாங்கி வைத்திருந்தார். குதிரைகளின்மீது இவருக்கு இருந்த அதிகமான நாட்டத்தைக் கண்ட ஒரு குதிரை வியாபாரி ஒருவர், தன்னிடம் இருந்த குதிரையை விற்கவேண்டும் என நினைத்து, அவரிடம் பேச்சுக் கொடுத்தார்:

“ஐயா உங்களுக்கு குதிரையின்மீது அதிகமான நாட்டம் இருக்கிறது என்பதை நான் அறிவேன். என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அரபு நாட்டிலிருந்து பிரத்யோகமாக இறக்குமதி செய்யப்பட்ட குதிரை அது. பழகுவதற்கு மிகவும் சாதுவானது. சிறிய குழந்தைகள்கூட அதில் ஏறிக்கொண்டு சவாரி செய்யலாம். அதற்காக நீங்கள் பெரிதாக எதையும் செலவழிக்கவேண்டாம். பராமரிப்புச் செலவுகூட மிகக்குறைவு.

மேலும் அதைப் பார்த்து நீங்கள் போ என்றால் போகும். நில் என்று சொன்னால் நிற்கும். அவ்வளவு கீழ்படிதலுள்ள குதிரை அது. இப்படிப்பட்ட ஒரு குதிரையை உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். அதனால் நீங்கள் அந்தக் குதிரையை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று அந்த குதிரை வியாபாரி மதபோதகரைக் கெஞ்சிக் கேட்டார்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மதபோதகர் வியாபாரி,      “இவ்வளவு கீழ்படிதலுக்கு ஒரு குதிரையை என்னுடைய ஆலயத்தில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாமா?, ஏனென்றால் என்னுடைய ஆலயத்திற்கு வரும் இறைமக்கள் யாருமே என்னுடைய சொல்பேச்சுக் கேட்பதில்லை, எனக்குக் கீழ்படிந்து நடப்பதுமில்லை” என்றார்.

இதைக் கேட்டு அந்த குதிரை வியாபாரி பேச்சற்று நின்றார்.

ஆலயமும், அதில் நடக்கும் வழிபாடும் மக்களின் மனதில் மாற்றத்தையும், தூய அன்பையும் கொண்டுவரவேண்டும். அத்தகைய மாற்றமும், அன்பும் நிகழவில்லை என்றால், ஆலயத்தாலும், அதில் நிகழும் வழிபாட்டுக் கொண்டாட்டங்களாலும் ஒரு பயனும் இல்லை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலில் வியாபாரம் செய்துவந்தவர்களை விரட்டி அடிக்கின்றார்; அதன் புனிதத்தன்மையையும், மாண்பையும் நிலைநாட்டுகிறார். இயேசுவின் இந்த தீரமிக்க/வீரமிக்க செயலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையைச் சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும்.

தொடக்க காலத்தில் யூத சமூகம் ஒரு நாடோடிச் சமூகமாகவே வாழ்ந்துவந்தது. எனவே அவர்களுக்கென்று கோவில் கிடையாது. அவர்கள் இறைவனை மலைதனிலும், (யோவான் 4:20) இன்ன பிற இடத்திலும் வழிபாட்டு வந்தார்கள். அதன்பிறகு ஆண்டவராகிய கடவுள் மோசேக்கு சீனாய் மலையில் கொடுத்த பத்துக்கட்டளைகளையும், ஆரோனின் கோலையும், மன்னாவையும் உடன்படிக்கைப் பேழையில் வைத்து, அதில் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்ந்துவந்தார்கள். முதல்முறையாக தாவீது அரசன் கடவுளுக்குக் கோவில் கட்ட நினைத்தபோது, கடவுள் அவரிடம், “நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய், எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு  நீ கோவில் கட்டவேண்டாம்” என்கிறார். (1குறி: 22:8)

எனவே, யூத மக்களுக்கான முதல் ஆலயம் தாவீதின் மகனான சாலமோனின் காலத்தில்தான் கட்டப்படுகிறது. அவர் கடவுளுக்காக கோவிலைக் கட்டி, அதை இவ்வாறு நேர்ந்தளிக்கிறார், “இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து, மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்கு செவிசாய்த்து அந்த அன்னியர் கேட்பதை எல்லாம் அருள்வீராக”.

ஆதலால், சாலமோன் அரசரால் கட்டப்பட்ட ஆலயம் எல்லா மக்களுக்கும் பொதுவானது என்பதை நம்முடைய மனதில் இருத்திக்கொளகொள்ளவேண்டும். இறைவாக்கினர் எசாயா இக்கருத்தை இன்னும் அழுத்தம் திருத்தமாகக் கூறுவார், “என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு” என்று  (எசா 56:7). ஆகவே, எருசலேம் ஆலயம் யூதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவாக இருந்து, அதில் புறவினத்து மக்கள் ஜெபிக்கக்கூடிய பகுதியில் வியாபாரம் நடந்ததால்தால்தான் ஆண்டவர் இயேசு அங்கே வியாபாரம் செய்கின்றவர்களை விரட்டி அடிக்கின்றார். ஆலயம் இறைவேன்டலின் வீடு, அது வியாபாரத் தளமல்ல” என்பதை எண்பிக்கின்றார்.

இறைமக்கள் சமூகமாகிய நாம் இறைவன் தங்கிவாழும் இல்லத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்துவமும், மதிப்பும் தருகிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். “ஆண்டவன் சன்னதி, மனதிற்கு நிம்மதி” என்பார்கள்.

எனவே நாம் ஆலயத்தின் புனிதத்தன்மையை உணர்வோம். ஆர்வமாய் ஆண்டவரை நாடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

“He who doesnot go to church in bad weather will go to hell when it is fair”

Fr. Maria Antonyraj, Palayamkottai. 2016

ஆண்டவருக்கு மட்டும் ஊழியம் செய்வோம்

ஆண்டவருக்கு மட்டும் ஊழியம் செய்வோம்

நடுத்தர வயது நண்பர்கள் இருவர் காலார நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். அப்போது இருவரில் ஒருவரின் அலைபேசி ஒலித்தது. உடனே அவர் அதை எடுத்து பேச ஆரம்பித்தார். ஆனால் சத்தம் சரியாகக் கேட்கவில்லை. அதனால் வெளி ஒலிப்பானை (Speaker) அழுத்தினார். அப்போது சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது.

எதிர்முனையில் இருந்தது வெளியூரில் தங்கி படித்துக்கொண்டிருக்கும் அவருடைய அன்புமகன். இரண்டு பேரும் நீண்ட நேரம் அன்பொழுகப் பேசி, ஒருவர்மீது ஒருவருக்கு இருக்கும் தங்களது பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள்.

சிறுது நேரம் கழித்து மகன், “அப்பா! அடுத்த வாரம் எங்களுடைய கல்லூரியிலிருந்து ‘ஆல் இந்தியா டூர்’ போகிறோம். அதற்காக ஐந்தாயிரம் ருபாய் வேண்டும்” என்று பேசி முடிப்பதற்குள் அவனுடைய தந்தை, “ஹலோ மகனே! நீ பேசுவது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை. கொஞ்சம் சத்தமாகப் பேசு” என்றார். எதிர்முனையில் இருந்த மகன், “ஹெலோ அப்பா! நீங்கள் பேசுவது எனக்குத் தெளிவாகக் கேட்கின்றது. அடுத்த வாரம் எங்களுடைய கல்லூரியிலிருந்து ‘ஆல் இந்தியா டூர்’ போகிறோம்” என்று சொல்லி முடிப்பதற்குள் தந்தை இடைமறித்து, ‘மகனே! நீ பேசுவது எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. சிக்னல் இருக்கும் இடத்திற்கு வந்து பேசு’ என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார்.

இதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அவருடைய நண்பர், “உன் மகன் பேசுவது தள்ளிவரும் எனக்கே தெளிவாகக் கேட்கிறது. அப்புறம் எதற்கு உன்னுடைய மகனிடம் பொய் சொல்கிறாய்” என்று கேட்டார். அதற்கு அவர், “உனக்குத் தெளிவாகக் கேட்கிறதல்லவா? அப்படியானால் நீயே அவன் கேட்கும் ஐயாயிரம் ரூபாயை அனுப்பி வை” என்று ஒரு போடு போட்டார்.

பணத்திற்காக பெத்த மகனையே புறக்கணிக்கும் பெற்றோர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள் என்பதை இக்கதையானது அருமையாக எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “நீங்கள் செல்வத்திற்கும், கடவுளுக்கும் பணிவிடை செய்ய முடியாது” என்கிறார். காரணம் செல்வம் என்பது தன்னகத்தில் சுயநலத்தைக் கொண்டது. அதனால்தான் இயேசு தன்னைப் பின்பற்ற வந்த செல்வந்தனாகிய இளைஞனிடம், “நீ போய், உம் உடமைகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” என்கிறார் (மத் 19: 21). செல்வம் இறைவனின் ஆட்சியை அடைவதற்கு நமக்கு மிகப் பெரிய தடையாக இருக்கிறது என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கிறது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும்கூட பலவேளைகளில் நாம் ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவை மறந்து, நிரந்தரமற்ற செல்வமாகிய பணத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றோம். அதிலே நாம் மூழ்கி விடுகின்றோம். ஆனால் உண்மை என்னவெனில் அரும்பாடு பட்டு சேர்க்கும் செல்வத்தினால், நம்மால் நிம்மதியாக வாழ்க்கை வாழ முடியாது (லூக் 12:15). மாறாக இறைவனுக்குப் பணிந்து, அவர் காட்டும் வழியில் நடக்கும்போது நமக்கு எல்லா ஆசிரும், அருளும் கிடைக்கும்.

இணைச்சட்ட நூல் 6:13 ல் வாசிக்கின்றோம் “உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்குப் பணிந்து நட” என்று. அதேபோன்று திருத்தூதர் பணிகள் நூல் 16: 31 ல் வாசிக்கின்றோம் “ஆண்டவராகிய இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும், உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்று. ஆம், இறைவனால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இறைவன் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, அவருக்கு பணிவிடை செய்து வாழ்ந்தோம் என்றால் இறைவனின் ஆசி நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

ஆதலால் உலக செல்வங்களுக்குப் பணிந்து நடப்பதை விடுத்து, உண்மைச் செல்வமாகிய இயேசுவுக்கு பணிவிடை செய்துவாழுவோம். இறைவன் அருளை நிறைவாய் பெறுவோம். Fr Palay Maria Antonyraj, Palayamkottai.








நீங்கள் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது

‘நீங்கள் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது’ -  திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 16: 3-9, 16, 22-27 & லூக்கா 16: 9-15

வில்லி ஹோப்சும்மர் (Willi Hoffsuemmer) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் சொல்லக் கூடிய கதை இது.

முன்பொரு காலத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் பாடல்கள் பாடிக்கொண்டே செருப்புத் தைத்துக்கும் தொழிலைச் செய்து வந்தார். இதனால் அவர் பாடும் பாடல்களைக் கேட்பதற்காகவே சிறுவர் சிறுமியர் அவருடைய வீட்டுவாசல் முன்பாக வந்து நின்றார்கள்.

அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் வீட்டுக்குப் பக்கத்தில் பெரும் செல்வம் படைத்த செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் இரவு முழுவதும் தன்னிடம் இருக்கின்ற பணத்தை எண்ணிவிட்டு, அதிகாலையில்தான் தூங்கச் செல்வார். அப்படியிருந்தும் அவருக்குத் தூக்கம் வருவதே கிடையாது. அவர் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு ‘நம்மிடம் இவ்வளவு பணம் இருக்கின்றது, இருந்தாலும் நம்மால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை, ஆனால் இந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் பணமே இல்லை. அப்படியிருந்தும் அவன் நிம்மதியாக இருகின்றானே’ என்று. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

ஒருநாள் அவர் செருப்புத் தைக்கும் தொழிலாளியை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்தார். அவரிடத்தில் ஒரு சிறிய பையைக் கொடுத்து, இதை வைத்துக்கொள் என்று சொன்னார். செருப்பு தைக்கும் தொழிலாளியும் அதை அன்போடு வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார். வீட்டிற்குச் சென்று செல்வந்தர் கொடுத்த அந்த பையைத் திறந்து பார்த்தபோது செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு பேச்சு மூச்சு வரவில்லை. ஏனென்றால், அந்தப் பை முழுவதும் தங்க நாணயங்கள் இருந்தன. தன்னுடைய வாழ்நாளில் இவ்வளவு தங்க நாணயங்களை அவர் பார்த்ததே இல்லை. அவர் அந்தப் பையில் எவ்வளவு தங்க நாணயங்கள் இருக்கின்றன என்று எண்ணத் தொடங்கினர். இதனை அவருடைய வீட்டிற்கு, அவர் பாடும் பாடல்களைக் கேட்பதற்கு வரும் சிறுவர் சிறுமியர் பார்த்துவிட்டனர். இதனால் அவர் தங்க நாணயங்கள் தன்னிடம் இருக்கின்ற செய்தியை குழந்தைகள் தெரிந்துகொண்டு விட்டார்களே என்று பயமுற்றார். எனவே, அவர் தங்க நாணயங்களை தன்னுடைய படுக்கையறையில் கொண்டுபோய் வைத்தார்.

படுக்கையறையில் தங்க நாணயங்கள் இருப்பது யாருக்கும் தெரிந்துவிடுவோ என நினைத்து அதனை மொட்டைமாடியில் கொண்டுபோய் வைக்கத் திட்டமிட்டார். மொட்டைமாடியும் சரியான இடம் கிடையாது என நினைத்த அவர் அவற்றை சமையற்கட்டில் வைக்கலாம் என்று திட்டம் தீட்டினர். அதுவும் சரிபட்டு வராது என நினைத்த அவர்,  கொல்லைப்புறத்தில் ஒரு குழிதோண்டி அதைப் புதைத்து வைத்தால் யாரும் தெரியாது என நினைத்தார். அதன்படியே அவர் செய்தார். அப்போதும் அவர் மனம் அமைதி கொள்ளவில்லை. அவர் செருப்பு தைக்கும் தொழிலை விட்டுவிட்டு, பாடல் பாடுவதையும் விட்டுவிட்டு எப்போதும் தங்க நாணயங்களைக் குறித்தே நினைத்துக்கொண்டிருந்தார். இதனால் அவர் நிம்மதியின்றித் திரிந்தார். அவருடைய வீட்டிற்கு பாடல்களைக் கேட்க வரும் குழந்தைகளும்கூட வரவே இல்லை.

ஒருநாள் அவர் தான் எதற்கு இப்படி நிம்மதியின்றி இருக்கின்றோம், இதற்குக் காரணம் என்ன? என்று ஆற அமர யோசித்துப் பார்த்தார். அப்போது அவர் தங்க நாணயங்கள்தான் தன்னுடைய நிம்மதியின்மைக்குக்  காரணம் எனப் புரிந்துகொண்டு, கொல்லைப்புரத்தில் புதைத்து வைத்திருந்த தங்க நாணயங்களை எடுத்து, அவற்றை செல்வந்தரிடம் கொடுத்து, “இவற்றை நீரே வைத்துக்கொள்ளும்” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினார். இப்போது அவரால் நிம்மதியாக பாடல்களைப் பாடிக்கொண்டு செருப்பு தைக்க முடிந்தது. முன்பு அவருடைய வீட்டிற்கு பாடல்களைக் கேட்பதற்காக வந்த சிறுவர் சிறுமியரும் வரத்தொடங்கினார்.

கதையில் வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி பணமில்லாதபோது நிம்மதியாக இருந்தார். பணம் வந்த பின்பு அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பணத்திற்கும் நிம்மதிக்கும் – நிம்மதியைத் தரும் கடவுளுக்கும் – வெகு தூரம் என்பதை இந்த கதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ‘நீங்கள் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது’ என்கிறார். காரணம், பணம் எப்போதும் ஒருவனுக்குள் தன்னலத்தை மட்டுமே வருவிக்கும்; இவ்வுலகம் தொடர்பாகவே சிந்திக்கத் தூண்டும். இப்படிப்பட்டவர் கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் கடவுளுக்கு உண்மையாகப்  பணிவிடை செய்யும் ஒருவர் பணத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டார். ஆனால், அப்படி இறைப்பணி செய்யும் ஒருவருக்கு எல்லா ஆசிர்வதங்களுக்கும் நிரம்பக் கிடைக்கும் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதனால்தான் இயேசு அப்படிச் சொல்கின்றார்.

எனவே, நமக்கு நிலையான, நிறைவான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும் கடவுள் ஒருவருக்கு மட்டுமே பணி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.