தூய ஆவியின் அருள் தாங்கியே......
வானோர் வாழ்த்தொலி தாங்கியே
காலமெல்லாம் காத்த கருத் தாங்கியே
மானிட மகனின் உருத் தாங்கியே
அருமை துணைவர் நலம் தாங்கியே
பேறுகால வலி தாங்கியே
மூடர் தம் பழி தாங்கியே
மன்னவரை எமக்களித்த அம்மா !
உறவினர் நலம் தாங்கியே
கால் கடுக்க பயணம் துவங்கியே
அவரின் வல்ல வாழ்த்தை தாங்கியே
தம் வலி மறந்து உற்றாரை
தாங்கியே
பெரும் பேறு பெற்றீர் அம்மா
வழிநெடுக துயர் தாங்கியே
மாடடை குடில் மணம் தாங்கியே
யாருமற்ற பரிதாப நிலை தாங்கியே
தூய ஆவியின் துணை தாங்கியே
இறைமகனை எமக்களித்த அம்மா
கடவுள் திட்டம் தாங்கியே
கர்த்தரின் பிஞ்சு கரம் தாங்கியே
சீராட்டி பாராட்டி மலரடி தாங்கியே
விண்ணக முடி தாங்கியே
வேந்தனாம் மைந்தனை தந்திட்ட அம்மா
எம் வேண்டுதல் தாங்கியே
எம் வேதனை தாங்கியே
எம்மோடு இருந்திடம்மா...
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
வானோர் வாழ்த்தொலி தாங்கியே
காலமெல்லாம் காத்த கருத் தாங்கியே
மானிட மகனின் உருத் தாங்கியே
அருமை துணைவர் நலம் தாங்கியே
பேறுகால வலி தாங்கியே
மூடர் தம் பழி தாங்கியே
மன்னவரை எமக்களித்த அம்மா !
உறவினர் நலம் தாங்கியே
கால் கடுக்க பயணம் துவங்கியே
அவரின் வல்ல வாழ்த்தை தாங்கியே
தம் வலி மறந்து உற்றாரை
தாங்கியே
பெரும் பேறு பெற்றீர் அம்மா
வழிநெடுக துயர் தாங்கியே
மாடடை குடில் மணம் தாங்கியே
யாருமற்ற பரிதாப நிலை தாங்கியே
தூய ஆவியின் துணை தாங்கியே
இறைமகனை எமக்களித்த அம்மா
கடவுள் திட்டம் தாங்கியே
கர்த்தரின் பிஞ்சு கரம் தாங்கியே
சீராட்டி பாராட்டி மலரடி தாங்கியே
விண்ணக முடி தாங்கியே
வேந்தனாம் மைந்தனை தந்திட்ட அம்மா
எம் வேண்டுதல் தாங்கியே
எம் வேதனை தாங்கியே
எம்மோடு இருந்திடம்மா...
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
No comments:
Post a Comment