அமலோற்பவமே அழகோவியமே....
அமலனை பாவியாம் எமக்களித்த மங்கலமே
அமல உற்பவமாய் பிரகாசித்த மகுடமே
அத்தனை அழகும்
மொத்தமான பிரகாசமே
நலம் தேடி வந்தோரை
கைவிடாத சௌந்தர்யமே
தீய சாத்தானை காலால்
மிதித்து சாய்த்த திரவியமே
இறை மைந்தனோடு கைகோர்த்த நற்கரமே
மாசு மருவேதுமற்ற
மாதா என்றான மரகதமே
அருள் நிறைந்து வழியும் எங்கள் தடாகமே
பெர்னத்தம்மாவுக்கு காட்சியளித்த அற்புதமே
நாமே அமலோற்பவம் என்றறிவித்த வற்றாவரமே
நீல வண்ணக் கோலம்
கொண்ட மலர்முகமே
கைக் கூப்பி
பார்த்தாலே உருகிடுதே எம்மனமே
எந்நாளும் எமை காக்க இந்நாளில் உமை நினைத்தோமே
அமலோற்பவமே
அமைதித் தலமே
அளவில்லா மகிழ்வே
அணைக்கின்ற நிறைவே !!
வாழ்க மரியன்னையே !!!
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
அமலனை பாவியாம் எமக்களித்த மங்கலமே
அமல உற்பவமாய் பிரகாசித்த மகுடமே
அத்தனை அழகும்
மொத்தமான பிரகாசமே
நலம் தேடி வந்தோரை
கைவிடாத சௌந்தர்யமே
தீய சாத்தானை காலால்
மிதித்து சாய்த்த திரவியமே
இறை மைந்தனோடு கைகோர்த்த நற்கரமே
மாசு மருவேதுமற்ற
மாதா என்றான மரகதமே
அருள் நிறைந்து வழியும் எங்கள் தடாகமே
பெர்னத்தம்மாவுக்கு காட்சியளித்த அற்புதமே
நாமே அமலோற்பவம் என்றறிவித்த வற்றாவரமே
நீல வண்ணக் கோலம்
கொண்ட மலர்முகமே
கைக் கூப்பி
பார்த்தாலே உருகிடுதே எம்மனமே
எந்நாளும் எமை காக்க இந்நாளில் உமை நினைத்தோமே
அமலோற்பவமே
அமைதித் தலமே
அளவில்லா மகிழ்வே
அணைக்கின்ற நிறைவே !!
வாழ்க மரியன்னையே !!!
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
No comments:
Post a Comment