அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, December 20, 2017

வழியாய் வா இறைவா...

 வழியாய் வா இறைவா...

மூங்கில் துளை வழி வந்த காற்று மெல்லிசையைத் தந்திடுதே

ஊசிக் காது வழி வந்த நூல் துணியை இறுகப் பற்றிடுதே

கண்ணாடி வழி வந்த ஒளி படக் காட்சியாய் மாறிடுதே

நீர் அருவி வழி வந்த வேகம் மின்சாரத்தைத் தந்திடுதே

பார்வை வழியாய் படித்த  இறைவசனம் மனதில் ஒட்ட மறுப்பதேனோ ?

செவி வழியாய் வந்த நற்செய்தி மனதில் நிற்க மறுப்பதேனோ ?

உரை வழியாய் வந்த நல்வார்த்தை மனதில் தங்க மறுப்பதேனோ ?

நாவு வழியாய்  வந்த எம் ஆன்ம உணவு பலனின்றி இருப்பதேனோ ?

அன்பின் இறைவா

செவி வழி

பார்வை வழி

உரை வழி

நாவு வழி

உட் செல்லும்  நற்பலன்கள் யாவும்
என்னில் பலன் தர
என்னோடு தங்கும் இறைவா......

பயனளித்து பலன்தரவும்
பலனளித்து
உம்மை தொடரவும் வழியாய் வா இறைவா...

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

No comments:

Post a Comment