அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, December 20, 2017

குயவன் கையில் களிமண்

குயவன் கையில் களிமண்

மண்ணை வெட்டி நீரை பாய்ச்சி
நேர்த்தியாய் வடிவம் கொடுத்து
நெருப்பில் சுட்டு வெயிலோ மழையோ எதுவும் தாக்கா செங்கல் போல

களிமண்ணான என் மனதை உம் வார்த்தையான நீரை பாய்ச்சி
நற்செயலால் வடிவம் கொடுத்து
தூய ஆவியால் சுட்டு தீமையோ,சோதனையோ எதுவும் தாக்காமல் காத்திடு என் இறைவா

நீரானது காலமெல்லாம் நனைத்தாலும், நீருக்குள்ளே கிடந்தாலும் கூழாங்கல் உள்ளே நீர் புகாததை போல

தீயவை என்னை சுற்றி சுழன்றாலும் தீதொன்றும் என் உள் மனதை தீட்டாக்காமல் காத்திடு என் இறைவா

எக்கால சூழலும், எத்தனை முறை உடைத்தாலும், சின்னாபின்னமாக்கினாலும்கருங்கல் தன் தன்மை மாறாதது போல

வேதனைகள்,சோதனைகள், ஏமாற்றங்கள்,தோல்விகள் என்னை நிலைகுலைய செய்தாலும் கற்பாறை போன்ற உறுதியான உள்ளம் தா என் இறைவா

கால்படாத பள்ளத்திலும்,ஏற முடியா உயரத்தில் இருந்தாலும் வடிவாக வெட்டி, வெட்டி எடுத்து பளபளப்பாய் மின்னும்பளிங்கு கல் போல

எட்டா உயரத்தில் வாழ்ந்தாலும், செல்வத்திலே திளைத்தாலும் ஒவ்வொரு அசைவும்,உம்மை நினைத்து ஒளிவீச உள்ளம் தா இறைவா

அன்புடன்,

கஸ்மீர் ரோச், சின்னமலை, 9382709007

No comments:

Post a Comment