விழிப்பாய் இருங்கள்.
Fr Palay Mariaantony, Palayamkottai.
ஒரு பெரிய நிறுவனத்திலே வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்ற விளம்பரத்தை செய்தித்தாளிலே படித்துவிட்டு நிறைய பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களைக் கடந்து போகக்கூடிய நிர்வாகத்தின் பொறுப்பாளர்களை தங்களது ஆங்கில அறிவால் எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலேயே மிகவும் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அதிலே ஒரே ஒரு இளைஞன் மட்டுமே மிகவும் அமைதியாக இருந்தான்.
அந்நேரத்தில் ஒலிபெருக்கியிலே “அமைதியான சுபாவம் கொண்ட, நிறுவனத்தின் வேலைகளைத் திறம்படச் செய்யக்கூடிய ஓர் இளைஞர் வேலைக்குத் தேவை” என்றதொரு அறிவிப்பு வந்தது. எல்லாருமே சத்தமாகப் பேசிக்கொண்டிருந்ததால் ஒலிபெருக்கியில் வந்த அறிவிப்பு எந்த விதமானது என்பதை ஒருவருமே காதுகொடுத்துக் கேட்டவில்லை. அமைதியாக அமர்ந்திருந்த அந்த இளைஞன் மட்டுமே அறிவிப்பைக் கேட்டுவிட்டு நேர்முகத் தேர்வு நடக்கக்கூடிய அறைக்குள்ளே சென்றான்.
சிறுது நேரத்தில் வேலைக்குத் தேர்வாகி, மகிழ்ச்சியோடு வெளியே வந்தான். அப்போது அங்கே இருந்த மற்ற ஆட்களைப் பார்த்துவிட்டுச் சொன்னான், “எல்லாரும் உங்களுடைய ஆங்கில அறிவால் எப்படியாவது நிறுவனத்தின் பொறுப்பாளர்களைக் கவர்ந்துவிட வேண்டும் என்பதிலேயே கவனமாய் இருந்தீர்கள். அதனால் ஒலிபெருக்கியிலே வந்த அறிவிப்பைக் கேட்கத் தவறிவிட்டீர்கள். ஆனால் நான் அந்த அறிவிப்பைக் கேட்டேன். இப்போது நான் வேலைவாய்ப்பைப் பெற்று உங்கள் முன்பாக நிற்கிறேன்” என்றான். இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
விழிப்புணர்வோடு இருக்கிறபோது – கவனமாக இருக்கிறபோது – எப்படிப்பட்ட நன்மைகளை எல்லாம் பெறலாம் என்பதை இந்நிகழ்வானது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து விழிப்பாய் இருங்கள் என்றதொரு அழைப்பினைத் தருகிறார். விழிப்பாய் இருத்தல் என்பது எப்போதுமே தூங்காமல் இருப்பது அல்ல, மாறாக எப்போதும் தயார்நிலையில் இருப்பது. நம்முடைய மனதை, உடலை எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருப்பது.
வீட்டிற்குள் எந்த நேரத்தில் திருடன் வருவான் என்பது யாருக்கும் தெரியாது. ஆகையால் வீட்டுத்தலைவர் எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும், இல்லை என்றால் திருடன் வந்து எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுவிடுவான். அதேபோன்றுதான் ஆண்டவருடைய வருகைக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிற நாமும் எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும். ஏனென்றால் ஆண்டவர் வருக்கூடிய நாளோ, நேரமோ யாருக்குமே தெரியாது.
தூய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் திருமுகத்திலே ஆண்டவரின் நாள் இரவில் ஒரு திருடன் வருவதைப் போன்று வரும் என்பார் (1 தெச 5:2). ஆம் ஆண்டவருடைய நாள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வரும். எனவே இயேசுவின் சீடர்களாக இருக்ககூடிய நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து, நற்காரியங்கள் புரிந்து, ஆண்டவரது நாளுக்காக நம்மையே நாம் தயார்நிலையில் வைத்திருப்போம். அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
“ஆண்டவரின் நாள் வருகிறது. அப்போது உன்னிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் யாவும், உன் கண்ணெதிரே பங்கிடப்படும்” (செக் 14:1).
Fr Palay Mariaantony, Palayamkottai.
ஒரு பெரிய நிறுவனத்திலே வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்ற விளம்பரத்தை செய்தித்தாளிலே படித்துவிட்டு நிறைய பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களைக் கடந்து போகக்கூடிய நிர்வாகத்தின் பொறுப்பாளர்களை தங்களது ஆங்கில அறிவால் எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலேயே மிகவும் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அதிலே ஒரே ஒரு இளைஞன் மட்டுமே மிகவும் அமைதியாக இருந்தான்.
அந்நேரத்தில் ஒலிபெருக்கியிலே “அமைதியான சுபாவம் கொண்ட, நிறுவனத்தின் வேலைகளைத் திறம்படச் செய்யக்கூடிய ஓர் இளைஞர் வேலைக்குத் தேவை” என்றதொரு அறிவிப்பு வந்தது. எல்லாருமே சத்தமாகப் பேசிக்கொண்டிருந்ததால் ஒலிபெருக்கியில் வந்த அறிவிப்பு எந்த விதமானது என்பதை ஒருவருமே காதுகொடுத்துக் கேட்டவில்லை. அமைதியாக அமர்ந்திருந்த அந்த இளைஞன் மட்டுமே அறிவிப்பைக் கேட்டுவிட்டு நேர்முகத் தேர்வு நடக்கக்கூடிய அறைக்குள்ளே சென்றான்.
சிறுது நேரத்தில் வேலைக்குத் தேர்வாகி, மகிழ்ச்சியோடு வெளியே வந்தான். அப்போது அங்கே இருந்த மற்ற ஆட்களைப் பார்த்துவிட்டுச் சொன்னான், “எல்லாரும் உங்களுடைய ஆங்கில அறிவால் எப்படியாவது நிறுவனத்தின் பொறுப்பாளர்களைக் கவர்ந்துவிட வேண்டும் என்பதிலேயே கவனமாய் இருந்தீர்கள். அதனால் ஒலிபெருக்கியிலே வந்த அறிவிப்பைக் கேட்கத் தவறிவிட்டீர்கள். ஆனால் நான் அந்த அறிவிப்பைக் கேட்டேன். இப்போது நான் வேலைவாய்ப்பைப் பெற்று உங்கள் முன்பாக நிற்கிறேன்” என்றான். இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
விழிப்புணர்வோடு இருக்கிறபோது – கவனமாக இருக்கிறபோது – எப்படிப்பட்ட நன்மைகளை எல்லாம் பெறலாம் என்பதை இந்நிகழ்வானது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து விழிப்பாய் இருங்கள் என்றதொரு அழைப்பினைத் தருகிறார். விழிப்பாய் இருத்தல் என்பது எப்போதுமே தூங்காமல் இருப்பது அல்ல, மாறாக எப்போதும் தயார்நிலையில் இருப்பது. நம்முடைய மனதை, உடலை எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருப்பது.
வீட்டிற்குள் எந்த நேரத்தில் திருடன் வருவான் என்பது யாருக்கும் தெரியாது. ஆகையால் வீட்டுத்தலைவர் எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும், இல்லை என்றால் திருடன் வந்து எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுவிடுவான். அதேபோன்றுதான் ஆண்டவருடைய வருகைக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிற நாமும் எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும். ஏனென்றால் ஆண்டவர் வருக்கூடிய நாளோ, நேரமோ யாருக்குமே தெரியாது.
தூய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் திருமுகத்திலே ஆண்டவரின் நாள் இரவில் ஒரு திருடன் வருவதைப் போன்று வரும் என்பார் (1 தெச 5:2). ஆம் ஆண்டவருடைய நாள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வரும். எனவே இயேசுவின் சீடர்களாக இருக்ககூடிய நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து, நற்காரியங்கள் புரிந்து, ஆண்டவரது நாளுக்காக நம்மையே நாம் தயார்நிலையில் வைத்திருப்போம். அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
“ஆண்டவரின் நாள் வருகிறது. அப்போது உன்னிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் யாவும், உன் கண்ணெதிரே பங்கிடப்படும்” (செக் 14:1).
No comments:
Post a Comment