அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, September 17, 2017

”ஆண்டவர் பொறுமையும் பேரன்பும் கொண்டவர்”

திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 9 – 10, 11 – 12
”ஆண்டவர் பொறுமையும் பேரன்பும் கொண்டவர்”
கடவுளுக்குரிய பண்புகளாக திருப்பாடல் ஆசிரியர் பலவற்றை எடுத்துக்கூறுகிறார். அதில் சிறப்பான ஒன்று கடவுளின் பேரன்பு. கடவுள் பேரன்பு மிக்கவராக இருக்கிறார். அன்பு என்கிற வார்த்தையே உன்னதமான வார்த்தை தான். அன்பு என்கிற வார்த்தையே ஒருவரின் மகிமையை எடுத்துரைக்கக்கூடிய வார்த்தை தான். ஒருவர் அன்பானவர் என்று சொல்கிறபோது, அந்த மனிதரின் நல்ல குணம் வெளிப்படுவதாக அமைகிறது. இங்கு கடவுள் ”பேரன்புமிக்கவர்” என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால், எந்த அளவுக்கு கடவுள் அன்புமிக்கவராக இருக்கிறார் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதைத்தான் பேரன்பு என்கிற வார்த்தை நமக்கு எடுத்துச் சொல்வதாக அமைந்திருக்கிறது.
இந்த பேரன்பு என்கிற வார்த்தையோடு மற்றொரு பண்பும் இணைந்து நமக்குத் தரப்படுகிறது. அதுதான் கடவுளின் பொறுமை. கடவுள் அன்புள்ளவராக மட்டுமல்ல, பொறுமையுள்ளவராகவும் சித்தரிக்கப்படுகிறார். மற்றவர்களை அன்பு செய்ய வேண்டுமென்றால், நமக்கு நிறைய பொறுமை வேண்டும். ஏனென்றால், மற்றவர்கள் நமக்கு எதிராக தீங்கு செய்தாலும் அதனை மறந்து அன்பு செய்ய வேண்டும். இது எளிதான காரியமல்ல. கடினமான காரியம். அதனைச் செய்வதற்கு நிச்சயம் பொறுமை வேண்டும். மக்கள் செய்கிற தவறான செயல்களை பொறுமையோடு கடவுள் அணுகுகிறார். எனவே தான், கடவுளால் அவர்களை அன்பு செய்ய முடிகிறது.
நம்முடைய வாழ்வில் நாமும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும் என்கிற அழைப்பு நமக்கு விடுக்கப்படுகிறது. அன்பை மற்றவர்களுக்கு நிறைவாக வழங்குவதற்கு நமக்கு பொறுமை தேவை. அந்த பொறுமைக்காக ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம். இறைவன் நம் அனைவருக்கும் மற்றவர்களை அன்பு செய்வதற்கான பொறுமையை வழங்க நாம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment