மறுகிறிஸ்துவாக மாற…….
பாலஸ்தீனப்பகுதியில் திராட்சைக்கொத்து பழுக்க ஆரம்பிப்பது செப்டம்பர் மாத இறுதியில். அதனைத்தொடர்ந்து மழைக்காலம் ஆரம்பித்துவிடும். சரியான நேரத்தில் திராட்சைப்பழங்களைப் பறிக்கவில்லையென்றால், மழைக்காலம் ஆரம்பித்தவுடன், அனைத்துமே வீணாகிவிடும். எனவே, எத்தனை பேர் வேலைக்கு வந்தாலும், அவர்களை வரவேற்று, எவ்வளவு விரைவாக அறுவடையை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிப்பதுதான் புத்திசாலித்தனம், என்பதை திராட்சைத்தோட்ட உரிமையாளர்கள் அறியாதவர்கள் அல்ல.
மத்தேயு 20: 1-16 நற்செய்தி வாசகம்யில் காலை முதல் மாலை வரை தலைவர், பணியாளர்களை வரவேற்று வேலை செய்யச்சொல்கிறார். மாலையில் வேலைக்கு வந்தவர்களும், வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கவில்லை. வேலை கிடைத்தால் செய்வதற்கு காத்திருக்கிறார்கள். ஆனால், வேலை கொடுப்பதற்கு ஆளில்லை. வேலை கிடைத்தவுடன், கூலியைப்பற்றிப் பேசாமல் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆனால், முதலில் வேலை செய்தவர்கள் ஒரு தெனாரியம் கூலி விலைபேசி, வேலை செய்கிறார்கள். கடைசியாக வேலை செய்ய வந்தவர்கள், கொடுப்பதை வாங்குகின்ற மனநிலையோடு வேலை செய்தவர்கள். இந்த உவமையை இயேசு யூதர்களுக்குச் சொல்கிறார். காரணம், யூதர்கள் தாங்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற எண்ணத்தோடு புறஇனத்தாரை இழிவாகக்கருதினார்கள். கடவுளின் அரசில் அனைவரும் சமம் என்ற கருத்தை இயேசு விதைக்கிறார்.
கிறிஸ்தவர்கள் என்பதால் நமக்கு வாழ்வு வந்துவிடாது. நாம் கிறிஸ்தவர்கள் என்பதால், மீட்பும் நமக்கு கிடைத்துவிடாது. மாறாக, நமது வாழ்வு கிறிஸ்துவுக்கு ஏற்ற ஒரு வாழ்வாக அமைய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வாழ்வு அமைய மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
பாலஸ்தீனப்பகுதியில் திராட்சைக்கொத்து பழுக்க ஆரம்பிப்பது செப்டம்பர் மாத இறுதியில். அதனைத்தொடர்ந்து மழைக்காலம் ஆரம்பித்துவிடும். சரியான நேரத்தில் திராட்சைப்பழங்களைப் பறிக்கவில்லையென்றால், மழைக்காலம் ஆரம்பித்தவுடன், அனைத்துமே வீணாகிவிடும். எனவே, எத்தனை பேர் வேலைக்கு வந்தாலும், அவர்களை வரவேற்று, எவ்வளவு விரைவாக அறுவடையை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிப்பதுதான் புத்திசாலித்தனம், என்பதை திராட்சைத்தோட்ட உரிமையாளர்கள் அறியாதவர்கள் அல்ல.
மத்தேயு 20: 1-16 நற்செய்தி வாசகம்யில் காலை முதல் மாலை வரை தலைவர், பணியாளர்களை வரவேற்று வேலை செய்யச்சொல்கிறார். மாலையில் வேலைக்கு வந்தவர்களும், வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கவில்லை. வேலை கிடைத்தால் செய்வதற்கு காத்திருக்கிறார்கள். ஆனால், வேலை கொடுப்பதற்கு ஆளில்லை. வேலை கிடைத்தவுடன், கூலியைப்பற்றிப் பேசாமல் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆனால், முதலில் வேலை செய்தவர்கள் ஒரு தெனாரியம் கூலி விலைபேசி, வேலை செய்கிறார்கள். கடைசியாக வேலை செய்ய வந்தவர்கள், கொடுப்பதை வாங்குகின்ற மனநிலையோடு வேலை செய்தவர்கள். இந்த உவமையை இயேசு யூதர்களுக்குச் சொல்கிறார். காரணம், யூதர்கள் தாங்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற எண்ணத்தோடு புறஇனத்தாரை இழிவாகக்கருதினார்கள். கடவுளின் அரசில் அனைவரும் சமம் என்ற கருத்தை இயேசு விதைக்கிறார்.
கிறிஸ்தவர்கள் என்பதால் நமக்கு வாழ்வு வந்துவிடாது. நாம் கிறிஸ்தவர்கள் என்பதால், மீட்பும் நமக்கு கிடைத்துவிடாது. மாறாக, நமது வாழ்வு கிறிஸ்துவுக்கு ஏற்ற ஒரு வாழ்வாக அமைய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வாழ்வு அமைய மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
No comments:
Post a Comment