விழிப்பாய் இருங்கள் !
விழிப்பாய் இருங்கள். இதுதான் ஆண்டவர் தம் சீடருக்கு வழங்கிய எச்சரிக்கை மொழி.
எந்த நேரத்தில், எந்த நாளில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே, விழிப்பாக இருப்பதை ஒரு தாரக மந்திரமாகக் கொள்வோம். சாரண இயக்கத்தின் விருதுவாக்கு; எப்போதும் தயாராக இருங்கள் என்பதுதான். எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். எதற்கும் சாரணர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது அந்த இயக்கம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்ற ஆரம்பப் பாடம்.
இயேசு தம் சீடராகிய நமக்கும் இந்தப் பாடத்தைக் கற்றுத் தருகின்றார். தொடர்ந்து விழிப்பாய் இருப்பதன் பொருளையும் இயேசு விளக்குகிறார். விழிப்பாய் இருக்கும் பணியாளர் தம் பணியை எந்த நேரத்திலும் தவறாது, பிறழாது செய்துகொண்டிருப்பவரே. இவரே அறிவாளி. நம்பிக்கைக்கு உரியவர் என்று இயேசு கூறுகிறார்.
எனவே, நாமும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற கடமைகளை, பணிகளை எந்த நேரத்திலும், நேர்மையுடன் செய்துகொண்டிருந்தால், நமக்கு எந்தக் கவலையும் இருக்க வேண்டிய தேவையில்லை. நமது கடமைகளை எப்போதும் நம்பிக்கைக்குரிய முறையில் ஆற்றுவோம். விழிப்பாய் இருக்கிறோம் என்று காட்டுவோம்.
மன்றாடுவோம்; காலத்தின் வேந்தனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். விழிப்பாய் இருங்கள் என்னும் உமது அறைகூவலுக்காக நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, நீர் என்னிடம் ஒப்படைத்திருக்கிற பணிகளை, கடமைகளை நான் எப்போதும் ஆர்வத்துடனும், அர்ப்பண உணர்வுடன் செய்ய எனக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருட்தந்தை குமார்ராஜா
விழிப்பாய் இருங்கள். இதுதான் ஆண்டவர் தம் சீடருக்கு வழங்கிய எச்சரிக்கை மொழி.
எந்த நேரத்தில், எந்த நாளில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே, விழிப்பாக இருப்பதை ஒரு தாரக மந்திரமாகக் கொள்வோம். சாரண இயக்கத்தின் விருதுவாக்கு; எப்போதும் தயாராக இருங்கள் என்பதுதான். எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். எதற்கும் சாரணர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது அந்த இயக்கம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்ற ஆரம்பப் பாடம்.
இயேசு தம் சீடராகிய நமக்கும் இந்தப் பாடத்தைக் கற்றுத் தருகின்றார். தொடர்ந்து விழிப்பாய் இருப்பதன் பொருளையும் இயேசு விளக்குகிறார். விழிப்பாய் இருக்கும் பணியாளர் தம் பணியை எந்த நேரத்திலும் தவறாது, பிறழாது செய்துகொண்டிருப்பவரே. இவரே அறிவாளி. நம்பிக்கைக்கு உரியவர் என்று இயேசு கூறுகிறார்.
எனவே, நாமும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற கடமைகளை, பணிகளை எந்த நேரத்திலும், நேர்மையுடன் செய்துகொண்டிருந்தால், நமக்கு எந்தக் கவலையும் இருக்க வேண்டிய தேவையில்லை. நமது கடமைகளை எப்போதும் நம்பிக்கைக்குரிய முறையில் ஆற்றுவோம். விழிப்பாய் இருக்கிறோம் என்று காட்டுவோம்.
மன்றாடுவோம்; காலத்தின் வேந்தனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். விழிப்பாய் இருங்கள் என்னும் உமது அறைகூவலுக்காக நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, நீர் என்னிடம் ஒப்படைத்திருக்கிற பணிகளை, கடமைகளை நான் எப்போதும் ஆர்வத்துடனும், அர்ப்பண உணர்வுடன் செய்ய எனக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-- அருட்தந்தை குமார்ராஜா
No comments:
Post a Comment