நம்பிக்கைக்குரிய பணியாளர்களாய் வாழ்வோம்!
ஆங்கில அகராதியைத் (அகரமுதலி) முதன்முதலில் தொகுத்தளித்தவர் டானியேல் வெப்ஸ்டர் (Deniel Webster).
ஒருசமயம் பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடத்தில், “மிகப்பெரிய அறிஞராகிய உங்களுடைய மனதில் அடிக்கடி தோன்றி மறைகின்ற சிந்தனை என்ன?” என்று கேட்டார். அதற்கு டேனியல் வெப்ஸ்டர் மிக சாதாரணமாக, “ஆண்டவருக்கு நான் கணக்குக் கொடுக்கவேண்டும் என்கிற சிந்தனைதான் என்னுடைய மனதில் அடிக்கடி தோன்றி மறைகின்ற சிந்தனை” என்றார்.
‘ஆண்டவருக்கு நாம் கணக்குக் கொடுக்கவேண்டும்’ எவ்வளவு ஆழமான அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். ஆண்டவருக்கு நாம் கணக்குக் கொடுக்கவேண்டும் என்றால், கடவுள் நம்மிடம் ஒப்படைத்திருக்கின்ற பொறுப்புகளில் நாம் நம்பிக்கையுடையவர்களாக இருக்கவேண்டும் என்றல்லவா அர்த்தம்.
இன்றைய நற்செய்தி வாசகம் நாம் நம்பிக்கையுள்ள பணியாளர்களாக வாழவேண்டும் என்றொரு அழைப்பினைத் தருகின்றது. நாம் எப்படி நம்பிக்கையுள்ள பணியாளர்களாக வாழ்வது என்று இறைவார்தையின் ஒளியில் நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நம்பிக்கையுள்ள பணியாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஆண்டவர் இயேசு ஓர் உவமையைச் சொல்கிறார். தலைவர் கொடுத்திருக்கின்ற பொறுப்புகளை சரிவர செய்யக்கூடியவர்; அவருடைய தலைவர் எப்போது வந்து பார்த்தாலும் ஆயத்தமாய் இருப்பவர் அப்படிப்பட்டவரே நம்பிக்கைக்குரிய பணியாளர். தலைவர் அத்தகைய நம்பிக்கைக்குரிய பணியாளருக்கு மேலும் மேலும் வெகுமதிகளைத் தருவார் என்பது உண்மை. அதற்கு மாறாக, தன்னுடைய தலைவர் வரக் காலம் தாழ்த்துவார் என்று சொல்லிக்கொண்டு, உடன் பணியாளர்களை அடித்தும், துன்புறுத்தியும் பொறுப்புகளை சரிவரச் செய்யாதவர் நம்பிக்கைக்குரிய பணியாளராய் இருக்க முடியாது. அப்படிப்பட்ட தலைவரிடமிருந்து சரியான தண்டனையைப் பெறுவார் என்பது உண்மை.
இயேசு சொல்லக்கூடிய இந்த உவமையிலிருந்து நம்பிக்கைக்குரிய ஒரு பணியாளர் எப்படி இருக்கவேண்டும் என்கிற உண்மையைக் கற்றுக்கொள்ளலாம். இந்த உவமையானது ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மூன்று உண்மைகளை நமக்குக் கற்றுத்தருகின்றது அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஆயத்தமாய் இருத்தல்: இதுதான் ஒரு நம்பிக்கைக் குரிய பணியாளருக்கு இருக்கவேண்டிய முதன்மையான தகுதியாகும். தலைவன்/ ஆண்டவர் இயேசு எந்த நேரத்தில் வருவார் என்று யாருக்கும் தெரியாது, அவர் இரவிலும் வரலாம், அதிகாலையும் வரலாம். ஏன் எந்த நேரத்திலும் வரலாம். எதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே இறைவார்த்தை நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.
காலதாமதம் கடவுளின் தண்டனையை நம்மீது வருவிக்கும்: ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளர் என்பவர் தன்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம், அல்லது நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடக்கூடாது. அன்றன்றைய வேலையை அன்றன்றைக்கே பார்க்கவேண்டும். அப்போதுதான் அவர் நல்ல நம்பிக்கைக்குரிய பணியாளராக இருக்கமுடியும்.
நிறைய நேரங்களில் நம்மிடம் இருக்கக்கூடிய குறைபாடே பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதுதான். இப்படி நாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டு கடைசியில் அந்தச் செயலை செய்யாமலே விட்டுவிட்டு மிகப் பெரிய இழப்பினைச் சிந்திப்போம். இது ஆண்டவருடைய நாளுக்கும் பொருந்தும். ஆண்டவரின் நாள் எப்போதோதானே வரப்போகிறது, இப்போது நாம் எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்படி வாழ்வோர் அழிவின் பாதையில் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.
ஆகையால், ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளர் காலம்தாமதம் செய்யாமல், அவ்வப்போது உள்ள பணிகளை அவ்வப்போதே செய்யக் கடமைப்பட்டவராக இருக்க வேண்டும்.
உண்மையுள்ளவராக இருக்கவேண்டும்: இதுதான் ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளருக்கு உள்ள மூன்றாவது தகுதியாக இருக்கின்றது. இன்றைக்கு எந்தனையோ பணியாளர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்ட பணிகளை திறம்படவும் அசாதாரண முறையில் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளில் உண்மையுள்ளவர்களாக இருக்கின்றார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. எனவே, நம்பிக்கைக்குரிய பணியாளர் உண்மையுள்ளவராகவும் இருக்கக் கடமைப்பட்டவராக இருக்கின்றார்.
நீதிமொழிகள் புத்தகம் 28:20 ல் வாசிக்கின்றோம், “உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவர் என்று. ஆம், ஒரு பணியாளர் உண்மையுள்ளவராக இருக்கின்றபோது அவர் இறைவனிடமிருந்து பல்வேறு ஆசிர்வாதங்களையும் நலன்களையும் பெற்றுக்கொள்வார் என்பது உறுதி.
ஆகவே, இறைவனின் மக்களாகிய நாம், இறைவனிடமிருந்து பல்வேறு பொறுப்புகளைப் பெற்றிருக்கின்றோம். அத்தகைய பொறுப்புகளில் நாம் நம்பிக்கையுள்ள பணியாளர்களாக இருக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, நம்பிக்கையுள்ள பணியாளர்களாக வாழ எதற்கும் ஆயத்தமாய் இருப்போம், காலதாமதமின்றி பொறுப்புகளைச் செய்வோம், பொறுப்புகளில் உண்மையாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.
ஆங்கில அகராதியைத் (அகரமுதலி) முதன்முதலில் தொகுத்தளித்தவர் டானியேல் வெப்ஸ்டர் (Deniel Webster).
ஒருசமயம் பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடத்தில், “மிகப்பெரிய அறிஞராகிய உங்களுடைய மனதில் அடிக்கடி தோன்றி மறைகின்ற சிந்தனை என்ன?” என்று கேட்டார். அதற்கு டேனியல் வெப்ஸ்டர் மிக சாதாரணமாக, “ஆண்டவருக்கு நான் கணக்குக் கொடுக்கவேண்டும் என்கிற சிந்தனைதான் என்னுடைய மனதில் அடிக்கடி தோன்றி மறைகின்ற சிந்தனை” என்றார்.
‘ஆண்டவருக்கு நாம் கணக்குக் கொடுக்கவேண்டும்’ எவ்வளவு ஆழமான அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். ஆண்டவருக்கு நாம் கணக்குக் கொடுக்கவேண்டும் என்றால், கடவுள் நம்மிடம் ஒப்படைத்திருக்கின்ற பொறுப்புகளில் நாம் நம்பிக்கையுடையவர்களாக இருக்கவேண்டும் என்றல்லவா அர்த்தம்.
இன்றைய நற்செய்தி வாசகம் நாம் நம்பிக்கையுள்ள பணியாளர்களாக வாழவேண்டும் என்றொரு அழைப்பினைத் தருகின்றது. நாம் எப்படி நம்பிக்கையுள்ள பணியாளர்களாக வாழ்வது என்று இறைவார்தையின் ஒளியில் நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நம்பிக்கையுள்ள பணியாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஆண்டவர் இயேசு ஓர் உவமையைச் சொல்கிறார். தலைவர் கொடுத்திருக்கின்ற பொறுப்புகளை சரிவர செய்யக்கூடியவர்; அவருடைய தலைவர் எப்போது வந்து பார்த்தாலும் ஆயத்தமாய் இருப்பவர் அப்படிப்பட்டவரே நம்பிக்கைக்குரிய பணியாளர். தலைவர் அத்தகைய நம்பிக்கைக்குரிய பணியாளருக்கு மேலும் மேலும் வெகுமதிகளைத் தருவார் என்பது உண்மை. அதற்கு மாறாக, தன்னுடைய தலைவர் வரக் காலம் தாழ்த்துவார் என்று சொல்லிக்கொண்டு, உடன் பணியாளர்களை அடித்தும், துன்புறுத்தியும் பொறுப்புகளை சரிவரச் செய்யாதவர் நம்பிக்கைக்குரிய பணியாளராய் இருக்க முடியாது. அப்படிப்பட்ட தலைவரிடமிருந்து சரியான தண்டனையைப் பெறுவார் என்பது உண்மை.
இயேசு சொல்லக்கூடிய இந்த உவமையிலிருந்து நம்பிக்கைக்குரிய ஒரு பணியாளர் எப்படி இருக்கவேண்டும் என்கிற உண்மையைக் கற்றுக்கொள்ளலாம். இந்த உவமையானது ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மூன்று உண்மைகளை நமக்குக் கற்றுத்தருகின்றது அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஆயத்தமாய் இருத்தல்: இதுதான் ஒரு நம்பிக்கைக் குரிய பணியாளருக்கு இருக்கவேண்டிய முதன்மையான தகுதியாகும். தலைவன்/ ஆண்டவர் இயேசு எந்த நேரத்தில் வருவார் என்று யாருக்கும் தெரியாது, அவர் இரவிலும் வரலாம், அதிகாலையும் வரலாம். ஏன் எந்த நேரத்திலும் வரலாம். எதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே இறைவார்த்தை நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.
காலதாமதம் கடவுளின் தண்டனையை நம்மீது வருவிக்கும்: ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளர் என்பவர் தன்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம், அல்லது நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடக்கூடாது. அன்றன்றைய வேலையை அன்றன்றைக்கே பார்க்கவேண்டும். அப்போதுதான் அவர் நல்ல நம்பிக்கைக்குரிய பணியாளராக இருக்கமுடியும்.
நிறைய நேரங்களில் நம்மிடம் இருக்கக்கூடிய குறைபாடே பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதுதான். இப்படி நாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டு கடைசியில் அந்தச் செயலை செய்யாமலே விட்டுவிட்டு மிகப் பெரிய இழப்பினைச் சிந்திப்போம். இது ஆண்டவருடைய நாளுக்கும் பொருந்தும். ஆண்டவரின் நாள் எப்போதோதானே வரப்போகிறது, இப்போது நாம் எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்படி வாழ்வோர் அழிவின் பாதையில் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.
ஆகையால், ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளர் காலம்தாமதம் செய்யாமல், அவ்வப்போது உள்ள பணிகளை அவ்வப்போதே செய்யக் கடமைப்பட்டவராக இருக்க வேண்டும்.
உண்மையுள்ளவராக இருக்கவேண்டும்: இதுதான் ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளருக்கு உள்ள மூன்றாவது தகுதியாக இருக்கின்றது. இன்றைக்கு எந்தனையோ பணியாளர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்ட பணிகளை திறம்படவும் அசாதாரண முறையில் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளில் உண்மையுள்ளவர்களாக இருக்கின்றார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. எனவே, நம்பிக்கைக்குரிய பணியாளர் உண்மையுள்ளவராகவும் இருக்கக் கடமைப்பட்டவராக இருக்கின்றார்.
நீதிமொழிகள் புத்தகம் 28:20 ல் வாசிக்கின்றோம், “உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவர் என்று. ஆம், ஒரு பணியாளர் உண்மையுள்ளவராக இருக்கின்றபோது அவர் இறைவனிடமிருந்து பல்வேறு ஆசிர்வாதங்களையும் நலன்களையும் பெற்றுக்கொள்வார் என்பது உறுதி.
ஆகவே, இறைவனின் மக்களாகிய நாம், இறைவனிடமிருந்து பல்வேறு பொறுப்புகளைப் பெற்றிருக்கின்றோம். அத்தகைய பொறுப்புகளில் நாம் நம்பிக்கையுள்ள பணியாளர்களாக இருக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, நம்பிக்கையுள்ள பணியாளர்களாக வாழ எதற்கும் ஆயத்தமாய் இருப்போம், காலதாமதமின்றி பொறுப்புகளைச் செய்வோம், பொறுப்புகளில் உண்மையாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.
No comments:
Post a Comment