அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, September 1, 2017

முன்மதி உடையோராய்... !

முன்மதி உடையோராய்... !


முன் மதி என்பது இறையாட்சியின் ஒரு மதிப்பீடு. இறையாட்சிக்கு உட்படுவோர் அந்தப் பண்பைப் பெற்றிருக்க வேண்டும். முன்மதி என்பது விழிப்புணர்வு, அறிவாற்றல், ஞானம், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை, திட்டமிடுதல் போன்றவற்றின் கலவை. எப்போதும் தயாராக இருக்கும் நேர்த்தி.

இயேசுவின் சீடர்கள் முன்மதி உடையோராய் விளங்க வேண்டும் என்பதற்காகவே பத்து கன்னியர்களின் உவமையை இயேசு சொன்னார். அறிவிலிகள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள். ஆனால், போதுமான எண்ணெய் எடுக்கவில்லை.

நமது வாழ்வையும் கொஞ்சம் ஆய்வு செய்து இறையாட்சிப் பார்வையில் நாம் முன்மதியுடையோராய் இருக்கிறோமா என்று ஆய்வு செய்வோம். ஒருவேளை எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்து வங்கியில் பணம் சேமித்து வைக்கிறவர்களாய் இருந்தால், அல்லது காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தால், உலகியல் பார்வையில் நாம் முன்மதி உடையோர்தான்.

இறையாட்சிப் பார்வையில் நம் நிறைவாழ்வுக்குத் தேவையான சேமிப்பை, காப்பீட்டைக் கொண்டிருந்தால்தான், விவிலியப் பார்வையில் நாம் முன்மதி உடையோராய் இருப்போம்.
எனவே, செபம், செல்வப் பகிர்வு, அறப் பணிகள், பிறரன்புச் சேவைகள் இவற்றில் நம் நேரத்தை முதலீடு செய்வோம். முன் மதி உடையோராய் வாழ்வோம்.

மன்றாடுவோம்; நிறைவாழ்வின் செல்வமே இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். இந்த உலகின் பார்வையில் மட்டுமல்ல, இறையாட்சிப் பார்வையிலும் நான் முன்மதி உடையவனாய் வாழ விரும்புகிறேன்.  அருள் தாரும் ஆண்டவரே. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா⁠⁠⁠⁠

No comments:

Post a Comment