'ஏரோது யோவானின் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும்,
அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்'' (மாற்கு 6:20)
-- ஏரோது அந்திப்பா என்னும் அரசன் திருமுழுக்கு யோவானைச் சந்திக்கிறான். யோவான் உண்மை பேச ஒருபோதுமே தயங்கியதில்லை. ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டது முறையல்லவென்று அவனைக் கடிந்துகொண்டார் யோவான். இந்நிலையில் யோவானைக் கொலைசெய்ய சதி நடக்கிறது. இதில் ஏரோதுக்குப் பங்கு உண்டு என மத்தேயு நற்செய்தி கூறுகிறது (காண்க: மத் 14:5). ஆனால் மாற்கு நற்செய்தியிலோ ''ஏரோது யோவானுக்கு மனமுவந்து செவிசாய்த்தான்'' (காண்க: மாற் 6:20) என்றுள்ளது. இந்த வேறுபாடு இருந்தபோதிலும் உண்மை என்பது நம் உள்ளத்தில் ''குழப்பத்தை ஏற்படுத்தும்'' என்பதில் ஐயமில்லை. உண்மையை அறிய விரும்பாதவர்கள் உண்டு; உண்மையை மறைப்பவர்கள் உண்டு; உண்மையை ஏற்றால் நம் வாழ்க்கையை மாற்றவேண்டிய சூழ்நிலை எழுமே என்றஞ்சி உண்மையை அறிவதையே தள்ளிப்போடுவோரும் உண்டு. ஏரோதுக்குக் குழப்பம் ஏற்படக் காரணம் அவன் யோவான் அறிவித்த உண்மையை ஏற்கத் தயங்கியதுதான்.
-- உண்மை என்பது இருளில் வீசுகின்ன ஒளி போன்றது. ஒளியின் முன் இருளுக்கு இடமில்லை. அதுபோல, உண்மையின் முன் பொய்ம்மைக்கு இடமில்லை. இரண்டும் இணைந்திருப்பது இயலாது. எனவேதான் உண்மையைக் கண்டுகொள்ள நம் உள்ளம் தயங்குகிறது. உண்மை ஏற்றுக்கொண்டால் அதன் கோரிக்கைகளை மறுக்க முடியாது என்பதால் உண்மையைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் சோதனை நமக்கு எழக்கூடும். உண்மையை மறுக்கும்போது தீமையையும் நாம் மறுக்கத் துணிந்துவிடுவோம். இதுவே ஏரோதின் வாழ்வில் நிகழ்ந்தது. யோவான் கூறிய உண்மையை ஏற்காத ஏரோது உண்மை பேசிய யோவானைக் கொன்றுபோட்டான். உண்மை பேசுவோரின் உயிர் மாய்ந்துவிடலாம், ஆனால் அவர்கள் உண்மைக்குச் சாட்சிகளாக என்றுமே உயிர்வாழ்வர்.
மன்றாட்டு
இறைவா, உண்மையின் ஒளியில் நாங்கள் நடக்க அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்'' (மாற்கு 6:20)
-- ஏரோது அந்திப்பா என்னும் அரசன் திருமுழுக்கு யோவானைச் சந்திக்கிறான். யோவான் உண்மை பேச ஒருபோதுமே தயங்கியதில்லை. ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டது முறையல்லவென்று அவனைக் கடிந்துகொண்டார் யோவான். இந்நிலையில் யோவானைக் கொலைசெய்ய சதி நடக்கிறது. இதில் ஏரோதுக்குப் பங்கு உண்டு என மத்தேயு நற்செய்தி கூறுகிறது (காண்க: மத் 14:5). ஆனால் மாற்கு நற்செய்தியிலோ ''ஏரோது யோவானுக்கு மனமுவந்து செவிசாய்த்தான்'' (காண்க: மாற் 6:20) என்றுள்ளது. இந்த வேறுபாடு இருந்தபோதிலும் உண்மை என்பது நம் உள்ளத்தில் ''குழப்பத்தை ஏற்படுத்தும்'' என்பதில் ஐயமில்லை. உண்மையை அறிய விரும்பாதவர்கள் உண்டு; உண்மையை மறைப்பவர்கள் உண்டு; உண்மையை ஏற்றால் நம் வாழ்க்கையை மாற்றவேண்டிய சூழ்நிலை எழுமே என்றஞ்சி உண்மையை அறிவதையே தள்ளிப்போடுவோரும் உண்டு. ஏரோதுக்குக் குழப்பம் ஏற்படக் காரணம் அவன் யோவான் அறிவித்த உண்மையை ஏற்கத் தயங்கியதுதான்.
-- உண்மை என்பது இருளில் வீசுகின்ன ஒளி போன்றது. ஒளியின் முன் இருளுக்கு இடமில்லை. அதுபோல, உண்மையின் முன் பொய்ம்மைக்கு இடமில்லை. இரண்டும் இணைந்திருப்பது இயலாது. எனவேதான் உண்மையைக் கண்டுகொள்ள நம் உள்ளம் தயங்குகிறது. உண்மை ஏற்றுக்கொண்டால் அதன் கோரிக்கைகளை மறுக்க முடியாது என்பதால் உண்மையைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் சோதனை நமக்கு எழக்கூடும். உண்மையை மறுக்கும்போது தீமையையும் நாம் மறுக்கத் துணிந்துவிடுவோம். இதுவே ஏரோதின் வாழ்வில் நிகழ்ந்தது. யோவான் கூறிய உண்மையை ஏற்காத ஏரோது உண்மை பேசிய யோவானைக் கொன்றுபோட்டான். உண்மை பேசுவோரின் உயிர் மாய்ந்துவிடலாம், ஆனால் அவர்கள் உண்மைக்குச் சாட்சிகளாக என்றுமே உயிர்வாழ்வர்.
மன்றாட்டு
இறைவா, உண்மையின் ஒளியில் நாங்கள் நடக்க அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
No comments:
Post a Comment