விழிப்பாயிருப்போம்
இயேசு இறந்து விண்ணகம் சென்ற பிறகு அவரது இரண்டாம் வருகை உடனடியாக இருக்கும் என்று கிறிஸ்தவர்கள் நம்பினர். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல அவர்களின் நம்பிக்கை படிப்படியாக குறையத்தொடங்கியது. எப்போது இயேசு மீண்டும் வருவார்? என்று, கேள்விகேட்போரின் எண்ணிக்கை அதிகமாகியது. இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த நற்செய்தி எழுதப்படுகிறது.
மனுமகன் வருகின்ற நாளோ, வேளையோ யாருக்கும் தெரியாது. விழிப்பாயிருக்கிறவர்கள் மட்டும் தான் மனுமகனை வரவேற்க முடியும் என்ற ஆழமான சிந்தனையை மத்தேயு 24: 42-51
நற்செய்தி நமக்கு தருகிறது. விழிப்பாயிருத்தல் என்பதை, “மனச்சான்றின் குரலுக்கு செவிமடுத்து, அதன்படி நடத்தல்” என்று நாம் புரிந்து கொள்ளலாம். மனச்சான்றின் குரலுக்கு செவிமடுத்து வாழ்ந்தால், நாம் இயேசுவை எந்த நேரத்திலும் வரவேற்க தயாராக இருக்கலாம். அப்படி இல்லையென்றால், ஆண்டவர் வரும் நாள் நமக்கு துன்பத்தை கொண்டுவரக்கூடிய நாளாகத்தான் இருக்கும். எனவே, கடவுள் கொடுத்த இந்த வாழ்வை உண்மையோடும், நேர்மையோடும், தூய்மையோடும் வாழ முயல, இயேசு நம்மை அழைக்கிறார்.
நமது வாழ்வு இந்த உலகத்தோடு இணைந்த வாழ்வாகத்தான் இருக்கிறது. மதிப்பீடுகளும், வாழ வேண்டிய நெறிமுறைகளும் இல்லாத உலகத்தோடு, நாமும் வாழப்பழகி விட்டோம். அப்படி வாழ்கிறவர்களையும் நாம் வாழ விடுவதில்லை. இயேசுவின் அழைப்பிற்கு செவிமடுப்போம். மதிப்பீடுகளை அணிகலன்களாகக் கொண்டு வாழ்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
இயேசு இறந்து விண்ணகம் சென்ற பிறகு அவரது இரண்டாம் வருகை உடனடியாக இருக்கும் என்று கிறிஸ்தவர்கள் நம்பினர். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல அவர்களின் நம்பிக்கை படிப்படியாக குறையத்தொடங்கியது. எப்போது இயேசு மீண்டும் வருவார்? என்று, கேள்விகேட்போரின் எண்ணிக்கை அதிகமாகியது. இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த நற்செய்தி எழுதப்படுகிறது.
மனுமகன் வருகின்ற நாளோ, வேளையோ யாருக்கும் தெரியாது. விழிப்பாயிருக்கிறவர்கள் மட்டும் தான் மனுமகனை வரவேற்க முடியும் என்ற ஆழமான சிந்தனையை மத்தேயு 24: 42-51
நற்செய்தி நமக்கு தருகிறது. விழிப்பாயிருத்தல் என்பதை, “மனச்சான்றின் குரலுக்கு செவிமடுத்து, அதன்படி நடத்தல்” என்று நாம் புரிந்து கொள்ளலாம். மனச்சான்றின் குரலுக்கு செவிமடுத்து வாழ்ந்தால், நாம் இயேசுவை எந்த நேரத்திலும் வரவேற்க தயாராக இருக்கலாம். அப்படி இல்லையென்றால், ஆண்டவர் வரும் நாள் நமக்கு துன்பத்தை கொண்டுவரக்கூடிய நாளாகத்தான் இருக்கும். எனவே, கடவுள் கொடுத்த இந்த வாழ்வை உண்மையோடும், நேர்மையோடும், தூய்மையோடும் வாழ முயல, இயேசு நம்மை அழைக்கிறார்.
நமது வாழ்வு இந்த உலகத்தோடு இணைந்த வாழ்வாகத்தான் இருக்கிறது. மதிப்பீடுகளும், வாழ வேண்டிய நெறிமுறைகளும் இல்லாத உலகத்தோடு, நாமும் வாழப்பழகி விட்டோம். அப்படி வாழ்கிறவர்களையும் நாம் வாழ விடுவதில்லை. இயேசுவின் அழைப்பிற்கு செவிமடுப்போம். மதிப்பீடுகளை அணிகலன்களாகக் கொண்டு வாழ்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
No comments:
Post a Comment