புதிய ஏற்பாட்டில் பாவ அறிக்கை ?? ஆதாரம்
பாவங்களை பிறரிடம் அறிக்கை இடுவதை குறித்து சிலர் தவறாக பேசி வருகின்றனர். நம் கத்தோலிக்க திருச்சபையை பாவசங்கித்தனத்தை குறித்து குறை கூறி மகிழ சிலர் முயல் கின்றனர். பிறரிடம் போய் நம் பாவங்களை அறிக்கை இடுவது தவறு , நாங்கள் ஆண்டவரிடம் நேரிடையாக மன்னிப்பு பெற்றுக் கொள்கின்றோம் என்கின்றனர். எப்போதுமே நம் கிறிஸ்துவத்தில் ஒரு காரியம் மறை பொருளாய் இருந்தால் , அக்காரியம் உள் அர்த்தமாகவும் , வெளியே ஒரு அடையாளமாகவும் இருக்கும். குறிப்பாக நாம் ஞானஸ்தானத்தை எடுத்துக் கொள்வோம். இதன் முக்கிய அர்த்தம் பரிசுத்த ஆவியானவர் ஞானஸ்தானம் பெறுபவரை ஆட்க்கொள்ளுதல் , அதன் மூலமாக பாவம் களைதல் . பிற சபையினர் வாக்குவாதத்தின் படி பரிசுத்த ஆவியானவரை இவர்களின் இசைகளோடும் ஆர்ப்பரிப்போடும் அழைத்து ஆட்க்கொள்ளவைத்து , இவர் திருமுழுக்கு பெற்றுக் கொண்டார் என்று சொல்ல வேண்டியது தானே===. பின் ஏன் இவர்கள் மக்களை மூச்சு முடட தண்ணீரில் முழுகி வதைக்கின்றனர்.??? எப்போதுமே இவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் அர்த்தம் இருக்காது !! ஆனால் இவர்கள் நம்மை குறை கூறுகின்றனர். திருமுழுக்கு கொடுக்க எவ்வாறு ஒரு அபிஷேகம் பெற்றவரின் துணையோடு நீரில் கொடுக்கின்றோமோ அதே போல் பாவம் களைய , உள்மனது பாவத்திற்கு வருந்தினாலும் , வெளி அடையாளமாக அபிஷேகம் பெற்றவரிடம் சொல்லி அதற்கான பரிகாரம் பெறுவது தான் முறை .இதற்க்கு பழைய ஏற்பாடு சான்றுகள் இதோ
பழைய ஏற்பாட்டில் திருச்சடத்திற்கு எதிராக பாவம் செய்தவர்கள் ஒவ்வொரு பாவத்திற்கு ஏற்றவாறு பரிகார பொருளை கொண்டு வர வேண்டும்.இது திருச் சட்டம் அதை ஆலயத்தில் குருக்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதன் பிரகாரம் அவர்கள் பாவ மன்னிப்பை பெறுகின்றார்கள் என்பதை பழைய ஏற்பாட்டில்பல இடத்தில் நாம் காண்கின்றோம்
13இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் அறியாமையினால் தவறிழைத்து, அது அவர்கள் கண்களுக்கு மறைவாய் இருந்தாலும், ஆண்டவரின் கட்டளைகளை மீறி, தகாதன செய்து குற்றத்திற்கு உள்ளானால், 14அவர்கள் செய்தது பாவம் எனத் தெரியவரும்போது, ஓர் இளங்காளையைச் சபையார் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகப் பாவம் போக்கும் பலியாகக் கொண்டு வர வேண்டும் (லேவியர் 5 : 13 , 14 )
26அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின் கொழுப்புக்குச் செய்வதுபோல, பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார். குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்; அவன் மன்னிப்புப் பெறுவான்.(லேவியர் 5 : 26 )
குரு பாவக்கழுவாய் செய்து குற்றம் போக்கும் பலியான ஆட்டுக்கிடாயை அவருக்காகப் பலியிடவேண்டும். அப்போழுது அவர் மன்னிப்புப்பெறுவார்.( 5 : 5 ) இவ்வாறு தங்கள் குற்றத்தின் காணாக்கனத்தை அவர்கள் அறிந்து கொண்டு அவர்கள் பரிகார பலி கொடுக்க , அவர்கள் குருக்களிடம் வந்து தான் ஆகவேண்டும். மேலும் அவர்கள் தங்கள் பாவங்களை குருக்களிடம் அறிக்கை இட்டு அதன் பின் தான் பரிகார பலியை கொண்டு வரமுடியும் . இதோ திருமறை நூல் கூறுவதை கேளுங்கள்
4தீமை செய்வதற்கோ நன்மை செய்வதற்கோ, எக்காரியத்திலும் ஒருவர் சிந்திக்காமல் வாய்விட்டு ஆணையிட்டபின்னர், தாம் அறியாமல் பதற்றத்தில் ஆணையிட்டு விட்டதாக அவர் உணர்ந்தால், இக்காரியத்தினாலும் அவர் குற்றவாளியே. 5மேற்குறிப்பிட்டவைகளில் அவர் தவறிழைத்தவராகக் காணப்படும்போது _தாம் இழைத்த குற்றத்தை அறிக்கையிட்டு__-, 6பாவம்போக்கும் பலிப்பொருளை ஆண்டவருக்குக் கொண்டுவரவேண்டும். ஆட்டு மந்தையிலிருந்து பிடித்த ஒரு பெண் ஆட்டையோ, செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டுக் குட்டியையோ பாவம்போக்கும் பலியாகக் கொண்டுவர வேண்டும். அவருக்காகக் குரு அவரது பாவம் நீங்குவதற்குப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்.( லேவியர் 5 : 5 ) இந்த வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள் தவறிழைத்து விடடால், ===தாம் இழைத்த குற்றத்தை அறிக்கை இட்டு ++++ யாரிடம் இவர்கள் அறிக்கை இடவேண்டும் என்றால்+++அபிஷேகம் பெற்ற குருக்களிடம் +++ என்பதையும் தெளிவாக கூறியுள்ளது. பிற சபை பிரசங்கிகளே பழைய ஏற்பாட்டில் ஒருவர் தவறிழைத்தல் அதை அறிக்கை இடடாள் தான் பலிப்பொருளை கொண்டுவரமுடியும். பாவத்தை குருக்களிடம் தான் அறிக்கை இடடால் தான் பக்லிப் பொருளை வாங்க முடியும், பரிகார பலியும் குருக்கள் தான் பலியிட முடியும் .என்று லேவியர் ஆகமம் படித்து படித்து சொல்ல இதை படிக்காமல் நீங்கள் இதை கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் உங்களால் எப்படி ஒரு பொய் குருட்டு பிரசங்கம் வைக்க முடிகிறது . ஏமாத்துக் காரர்கள்
இவர்கள் பழைய ஏற்பாட்டில் தானே இதை எடுத்தீர்கள் புதிய ஏற்பாட்டில் கூறப் பட்டுள்ளதா என்று கேட்பார்கள் ?? இதோ அவர்களுக்கு பதில்
16ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும் ( யாக்கோபு 5 : 16 ) ஒருவருக்கு ஒருவர் தங்கள் பாவங்களை அறிக்கை இட்டு கொள்ளுங்கள் என்று நம் திருமறை நூல் கூறுகின்றது . அப்படி ஒருவருக்கொருவர் அறிக்கை இட்டு தான் ஆதி திருச்சபை கிறிஸ்துவுக்குள் வளர்ந்தது
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேதுருவை பார்த்து நீ கோழி கூவும் முன் என்னை மூன்று முறை மறுதலிப்பாய் என்று எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார். பேதுரு, கைது செய்யபடட ஆண்டவரை என்ன செய்கின்றார்கள் என்பதை காண இரவு நேரத்தில் பிலாத்துவின் அரண்மனைக்குள் யூதர்கள் தங்கி இருந்த இடத்திற்கு வருகின்றார். அங்கு அவரை மூன்று ஆட்கள் , ஒரு பெண் உடபட இவன் இயேசுவோடு இருந்தவன் என்று குற்றம் சாற்று கின்றனர் . அதற்கு பேதுரு அது யார் என்றே எனக்கு தெரியாது என்று மூன்று முறை மறுதலிக்கின்றார், அப்போது பேதுரு அருகில் கிறிஸ்துவின் சீடர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிட தக்கது . அப்படியானால் இவர் மூன்று முறை மறுதலித்தார் என்பது எப்படி தெரியும் .திருத்தூதர்கள் காலத்திலேயே இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பாவ அறிக்கை இடும் போது, பேதுருவும் தன் பாவத்தை அறிக்கை இட்டு இருக்கின்றார். அதோடு மட்டும் அல்ல,, தன் பாவத்திற்காய் எப்படி தேம்பி தேம்பி அழுது இருக்கின்றார் என்பதையும் கூறியதால் இதை நாம் மாற்கு நற்செய்தியில் காண்கின்றோம்
72உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, “சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.( மாற்கு 14 : 72) இது எப்படி எல்லோருக்கும் தெரிய வந்தது என்றால் . பேதுரு தன் பாவத்தை அறிக்கை இட்டு அதற்காக தான் எப்படி வருந்தினேன் என்பதையும் தெளிவு படுத்தி இரு கின்றார். இதையே மத்தேயு நற்செய்தியிலும், லூக்கா நற்செய்தியிலும் நாம் காணலாம் . ஆகவே ஆதி திருச்சபையில் யாக்கோபு தன் திருமுகத்தில் கூறியதை போல மக்கள்தங்கள் பாவங்களை ஒருவர் ஒருவரிடம் அறிக்கை இடடனர் . ஆனால் அன்றிலிருந்து அபிஷேகம் பெற்றவர்களிடம் அறிக்கை இடும் பழக்கம் பழக்கமாய் இருந்து வருகின்றது . நாளடைவில் மக்கள் கூறும் பாவங்கள் அதை பிறருக்கு தெரிந்து விட கூடாது என்று கடுமையான உத்தரவை திருச்சபை கொடுத்து மக்கள் பாவமன்னிப்பு பெறுவதில் மனம் தளர்ந்து விடக் கூடாது என்பதில் அக்கறை காட்டி வருகின்றது
இப்போது பிரிவினை சபைகள் புரிந்து கொள்ளட்டும் பாவ சங்கீர்த்தனம் என்பது நமக்கு கொடுக்க படட பெரும் அருங்கொடை என்பதை . இனி இதை குறித்து தவறாக பேசிக் கூடாது என்பதே என் குறிப்பு . கேட்க செவியுள்ளவன் கேட்கட்டும்
பாவங்களை பிறரிடம் அறிக்கை இடுவதை குறித்து சிலர் தவறாக பேசி வருகின்றனர். நம் கத்தோலிக்க திருச்சபையை பாவசங்கித்தனத்தை குறித்து குறை கூறி மகிழ சிலர் முயல் கின்றனர். பிறரிடம் போய் நம் பாவங்களை அறிக்கை இடுவது தவறு , நாங்கள் ஆண்டவரிடம் நேரிடையாக மன்னிப்பு பெற்றுக் கொள்கின்றோம் என்கின்றனர். எப்போதுமே நம் கிறிஸ்துவத்தில் ஒரு காரியம் மறை பொருளாய் இருந்தால் , அக்காரியம் உள் அர்த்தமாகவும் , வெளியே ஒரு அடையாளமாகவும் இருக்கும். குறிப்பாக நாம் ஞானஸ்தானத்தை எடுத்துக் கொள்வோம். இதன் முக்கிய அர்த்தம் பரிசுத்த ஆவியானவர் ஞானஸ்தானம் பெறுபவரை ஆட்க்கொள்ளுதல் , அதன் மூலமாக பாவம் களைதல் . பிற சபையினர் வாக்குவாதத்தின் படி பரிசுத்த ஆவியானவரை இவர்களின் இசைகளோடும் ஆர்ப்பரிப்போடும் அழைத்து ஆட்க்கொள்ளவைத்து , இவர் திருமுழுக்கு பெற்றுக் கொண்டார் என்று சொல்ல வேண்டியது தானே===. பின் ஏன் இவர்கள் மக்களை மூச்சு முடட தண்ணீரில் முழுகி வதைக்கின்றனர்.??? எப்போதுமே இவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் அர்த்தம் இருக்காது !! ஆனால் இவர்கள் நம்மை குறை கூறுகின்றனர். திருமுழுக்கு கொடுக்க எவ்வாறு ஒரு அபிஷேகம் பெற்றவரின் துணையோடு நீரில் கொடுக்கின்றோமோ அதே போல் பாவம் களைய , உள்மனது பாவத்திற்கு வருந்தினாலும் , வெளி அடையாளமாக அபிஷேகம் பெற்றவரிடம் சொல்லி அதற்கான பரிகாரம் பெறுவது தான் முறை .இதற்க்கு பழைய ஏற்பாடு சான்றுகள் இதோ
பழைய ஏற்பாட்டில் திருச்சடத்திற்கு எதிராக பாவம் செய்தவர்கள் ஒவ்வொரு பாவத்திற்கு ஏற்றவாறு பரிகார பொருளை கொண்டு வர வேண்டும்.இது திருச் சட்டம் அதை ஆலயத்தில் குருக்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதன் பிரகாரம் அவர்கள் பாவ மன்னிப்பை பெறுகின்றார்கள் என்பதை பழைய ஏற்பாட்டில்பல இடத்தில் நாம் காண்கின்றோம்
13இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் அறியாமையினால் தவறிழைத்து, அது அவர்கள் கண்களுக்கு மறைவாய் இருந்தாலும், ஆண்டவரின் கட்டளைகளை மீறி, தகாதன செய்து குற்றத்திற்கு உள்ளானால், 14அவர்கள் செய்தது பாவம் எனத் தெரியவரும்போது, ஓர் இளங்காளையைச் சபையார் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகப் பாவம் போக்கும் பலியாகக் கொண்டு வர வேண்டும் (லேவியர் 5 : 13 , 14 )
26அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின் கொழுப்புக்குச் செய்வதுபோல, பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார். குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்; அவன் மன்னிப்புப் பெறுவான்.(லேவியர் 5 : 26 )
குரு பாவக்கழுவாய் செய்து குற்றம் போக்கும் பலியான ஆட்டுக்கிடாயை அவருக்காகப் பலியிடவேண்டும். அப்போழுது அவர் மன்னிப்புப்பெறுவார்.( 5 : 5 ) இவ்வாறு தங்கள் குற்றத்தின் காணாக்கனத்தை அவர்கள் அறிந்து கொண்டு அவர்கள் பரிகார பலி கொடுக்க , அவர்கள் குருக்களிடம் வந்து தான் ஆகவேண்டும். மேலும் அவர்கள் தங்கள் பாவங்களை குருக்களிடம் அறிக்கை இட்டு அதன் பின் தான் பரிகார பலியை கொண்டு வரமுடியும் . இதோ திருமறை நூல் கூறுவதை கேளுங்கள்
4தீமை செய்வதற்கோ நன்மை செய்வதற்கோ, எக்காரியத்திலும் ஒருவர் சிந்திக்காமல் வாய்விட்டு ஆணையிட்டபின்னர், தாம் அறியாமல் பதற்றத்தில் ஆணையிட்டு விட்டதாக அவர் உணர்ந்தால், இக்காரியத்தினாலும் அவர் குற்றவாளியே. 5மேற்குறிப்பிட்டவைகளில் அவர் தவறிழைத்தவராகக் காணப்படும்போது _தாம் இழைத்த குற்றத்தை அறிக்கையிட்டு__-, 6பாவம்போக்கும் பலிப்பொருளை ஆண்டவருக்குக் கொண்டுவரவேண்டும். ஆட்டு மந்தையிலிருந்து பிடித்த ஒரு பெண் ஆட்டையோ, செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டுக் குட்டியையோ பாவம்போக்கும் பலியாகக் கொண்டுவர வேண்டும். அவருக்காகக் குரு அவரது பாவம் நீங்குவதற்குப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்.( லேவியர் 5 : 5 ) இந்த வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள் தவறிழைத்து விடடால், ===தாம் இழைத்த குற்றத்தை அறிக்கை இட்டு ++++ யாரிடம் இவர்கள் அறிக்கை இடவேண்டும் என்றால்+++அபிஷேகம் பெற்ற குருக்களிடம் +++ என்பதையும் தெளிவாக கூறியுள்ளது. பிற சபை பிரசங்கிகளே பழைய ஏற்பாட்டில் ஒருவர் தவறிழைத்தல் அதை அறிக்கை இடடாள் தான் பலிப்பொருளை கொண்டுவரமுடியும். பாவத்தை குருக்களிடம் தான் அறிக்கை இடடால் தான் பக்லிப் பொருளை வாங்க முடியும், பரிகார பலியும் குருக்கள் தான் பலியிட முடியும் .என்று லேவியர் ஆகமம் படித்து படித்து சொல்ல இதை படிக்காமல் நீங்கள் இதை கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் உங்களால் எப்படி ஒரு பொய் குருட்டு பிரசங்கம் வைக்க முடிகிறது . ஏமாத்துக் காரர்கள்
இவர்கள் பழைய ஏற்பாட்டில் தானே இதை எடுத்தீர்கள் புதிய ஏற்பாட்டில் கூறப் பட்டுள்ளதா என்று கேட்பார்கள் ?? இதோ அவர்களுக்கு பதில்
16ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும் ( யாக்கோபு 5 : 16 ) ஒருவருக்கு ஒருவர் தங்கள் பாவங்களை அறிக்கை இட்டு கொள்ளுங்கள் என்று நம் திருமறை நூல் கூறுகின்றது . அப்படி ஒருவருக்கொருவர் அறிக்கை இட்டு தான் ஆதி திருச்சபை கிறிஸ்துவுக்குள் வளர்ந்தது
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேதுருவை பார்த்து நீ கோழி கூவும் முன் என்னை மூன்று முறை மறுதலிப்பாய் என்று எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார். பேதுரு, கைது செய்யபடட ஆண்டவரை என்ன செய்கின்றார்கள் என்பதை காண இரவு நேரத்தில் பிலாத்துவின் அரண்மனைக்குள் யூதர்கள் தங்கி இருந்த இடத்திற்கு வருகின்றார். அங்கு அவரை மூன்று ஆட்கள் , ஒரு பெண் உடபட இவன் இயேசுவோடு இருந்தவன் என்று குற்றம் சாற்று கின்றனர் . அதற்கு பேதுரு அது யார் என்றே எனக்கு தெரியாது என்று மூன்று முறை மறுதலிக்கின்றார், அப்போது பேதுரு அருகில் கிறிஸ்துவின் சீடர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிட தக்கது . அப்படியானால் இவர் மூன்று முறை மறுதலித்தார் என்பது எப்படி தெரியும் .திருத்தூதர்கள் காலத்திலேயே இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பாவ அறிக்கை இடும் போது, பேதுருவும் தன் பாவத்தை அறிக்கை இட்டு இருக்கின்றார். அதோடு மட்டும் அல்ல,, தன் பாவத்திற்காய் எப்படி தேம்பி தேம்பி அழுது இருக்கின்றார் என்பதையும் கூறியதால் இதை நாம் மாற்கு நற்செய்தியில் காண்கின்றோம்
72உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, “சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.( மாற்கு 14 : 72) இது எப்படி எல்லோருக்கும் தெரிய வந்தது என்றால் . பேதுரு தன் பாவத்தை அறிக்கை இட்டு அதற்காக தான் எப்படி வருந்தினேன் என்பதையும் தெளிவு படுத்தி இரு கின்றார். இதையே மத்தேயு நற்செய்தியிலும், லூக்கா நற்செய்தியிலும் நாம் காணலாம் . ஆகவே ஆதி திருச்சபையில் யாக்கோபு தன் திருமுகத்தில் கூறியதை போல மக்கள்தங்கள் பாவங்களை ஒருவர் ஒருவரிடம் அறிக்கை இடடனர் . ஆனால் அன்றிலிருந்து அபிஷேகம் பெற்றவர்களிடம் அறிக்கை இடும் பழக்கம் பழக்கமாய் இருந்து வருகின்றது . நாளடைவில் மக்கள் கூறும் பாவங்கள் அதை பிறருக்கு தெரிந்து விட கூடாது என்று கடுமையான உத்தரவை திருச்சபை கொடுத்து மக்கள் பாவமன்னிப்பு பெறுவதில் மனம் தளர்ந்து விடக் கூடாது என்பதில் அக்கறை காட்டி வருகின்றது
இப்போது பிரிவினை சபைகள் புரிந்து கொள்ளட்டும் பாவ சங்கீர்த்தனம் என்பது நமக்கு கொடுக்க படட பெரும் அருங்கொடை என்பதை . இனி இதை குறித்து தவறாக பேசிக் கூடாது என்பதே என் குறிப்பு . கேட்க செவியுள்ளவன் கேட்கட்டும்
No comments:
Post a Comment