அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, September 1, 2017

''விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது'' (மத்தேயு 24:42)

''விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார்
என உங்களுக்குத் தெரியாது'' (மத்தேயு 24:42)

-- கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைத்த இயேசு அவர்களிடமிருந்து பொருத்தமான பதில்மொழி எதிர்பார்த்தார். தம்மையே நமக்கு அருள்கூர்ந்து வெளிப்படுத்துகின்ற கடவுளுக்கு நாம் என்ன பதில் தருவோம்? முதன்முதலில் நம் உள்ளத்தில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். இதையே இயேசு ''மனம் திரும்புதல்'' எனக் கூறுகிறார் (மாற்கு 1:15). இந்த மன மாற்றத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. இவ்வுலக மாயைகளால் கவரப்பட்டு அலைமோதுகின்ற மனித உள்ளம் அந்த மாயைகளை விட்டுத் ''திரும்புவது'' முதல் படி. தொடர்ந்து நாம் கடவுளை நோக்கித் ''திரும்ப'' வேண்டும். இவ்வாறு திரும்பும்போது நம் உள்ளத்தில் வேரூயஅp;ன்றுகின்ற ஒரு நல்ல பண்புதான் ''விழித்திருத்தல்'' என்பதாகும். ''விழி'' என்றால் கண்; எனவே விழித்திருப்பது ''கண்துஞ்சாமல் காத்திருப்பது'' என்னும் பொருளைத் தரும். அதே நேரத்தில், விழித்திருப்பது நம் அகக் கண்களை அகலத் திறந்து, நம்முள்ளும் நம்மைச் சூழ்ந்தும் நிகழ்வனவற்றைச் சரியாக அறிந்து உணர்ந்துகொள்வதையும் உள்ளடக்கும். விழிப்பாயிருக்கும் மனிதர் தூக்கமயக்கத்தில் ஆழ்ந்துவிடாமல் ''எதிர்பார்ப்பு'' மனநிலையோடு வாழ்வார். அப்போது, அவரைத் தேடிவருகின்ற வீட்டுத் தலைவரான கடவுளை அவர் உடனடியாக எழுந்துசென்று வரவேற்று உபசரிப்பார்.
-- நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என இயேசு கேட்பது ஏதோ இவ்வுலகம் விரைவில் அழியப்போகின்றது, ஆகவே நாம் தயாராக இருக்கவேண்டும் என்னும் பொருளில் மட்டுமல்ல. நமது மண்ணக வாழ்வு எந்த நேரத்திலும் முடிவுக்கு வரலாம் என்பதால் நாம் ''விழித்திருக்க'' வேண்டும் என்னும் பொருளும் முழுமையான விளக்கம் அல்ல. மாறாக, நாம் விழிப்பாயிருக்கும்போது நம்மைத் தேடி ஒவ்வொரு நாளிலும் நொடியிலும் வருகின்ற கடவுளை நாம் அன்போடு ஏற்று, அவருடைய அன்பு வழிநடத்தலின்கீழ் பயணம் செல்வோம். எனவே, கடவுளின் உடனிருப்பு நம்மைவிட்டு ஒருபோதும் மறைவதில்லை என நாம் ஆழமாக உணரவேண்டும். நாம் வாழ்நாளின் ஒவ்வொரு நிகழ்விலும் கடவுளைக் கண்டுகொண்டு, அவரை முகமலர்ந்து வரவேற்றிட நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும். ''ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்'' (மத்தேயு 24:44).
மன்றாட்டு
இறைவா, உம் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

No comments:

Post a Comment