குற்றம் அல்லது பாவத்தின் உணர்வு அற்ற நிலை
மாற்கு 6:17-29
அடடா, இப்படி ஒரு பெண்ணா? இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு மனிதனின் தலையா? தன் குழந்தை அதை தட்டில் ஏந்தி வர வேண்டுமா? எப்படி இந்த கடின மனது? இது என்ன புதிது? நம்ம ஊர்களில் இன்று பெண்கள் இதுபோன்ற வன்செயல்களில் ஈடுபடவில்லையா என்று கேட்பது தெறிகிறது. தினசரிகள் தினமும் ஏதாவது ஒரு செய்தி தாங்கி வருகிறதல்லவா!
இதுபோன்ற பழிச் செயல்களைச் செய்ய ஆண் என்றும் பெண் என்றும் பேதம் அவசியமில்லை. எல்லோருக்கும் அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. அதுதான் குற்றம் அல்லது பாவத்தின் உணர்வு அற்ற நிலை. மனமும் உடலும் உணர்வும் ஆன்மாவும் பாவத்திற்கு உணர்வுகள் மறத்துப்போன ஒரு நிலை. திரும்பத் திரும்ப தவறுகள் பாவங்கள் செய்து மனச்சாட்சி மழுங்கிப்போன நிலை. அப்படிப்பட்ட நிலையில் அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய வன்கொடுமையாகத் தெறியாது.
ஏரோதியாள் ஏற்கெனவே பாவத்தில் வாழ்ந்து வந்தாள். ஒரு பாவம் செய்து மனம் இறுகிப்போனவளுக்கு இன்னொன்று ஒன்று பெரிதாகத் தோன்றாது. தொடர்ந்து பாவத்திலேயே வாழ்வாள். அதிலே அழிவாள். தொடக்க நிலையியே கிள்ளி எறியவில்லை என்றால் பெரிய தவறுகளைச் செய்து நாம் நம்மை அழிப்பது உறுதி. கற்றுக் கொள்வோம். கவனமாய் இருப்போம்.
-ஜோசப் லீயோன்
மாற்கு 6:17-29
அடடா, இப்படி ஒரு பெண்ணா? இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு மனிதனின் தலையா? தன் குழந்தை அதை தட்டில் ஏந்தி வர வேண்டுமா? எப்படி இந்த கடின மனது? இது என்ன புதிது? நம்ம ஊர்களில் இன்று பெண்கள் இதுபோன்ற வன்செயல்களில் ஈடுபடவில்லையா என்று கேட்பது தெறிகிறது. தினசரிகள் தினமும் ஏதாவது ஒரு செய்தி தாங்கி வருகிறதல்லவா!
இதுபோன்ற பழிச் செயல்களைச் செய்ய ஆண் என்றும் பெண் என்றும் பேதம் அவசியமில்லை. எல்லோருக்கும் அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. அதுதான் குற்றம் அல்லது பாவத்தின் உணர்வு அற்ற நிலை. மனமும் உடலும் உணர்வும் ஆன்மாவும் பாவத்திற்கு உணர்வுகள் மறத்துப்போன ஒரு நிலை. திரும்பத் திரும்ப தவறுகள் பாவங்கள் செய்து மனச்சாட்சி மழுங்கிப்போன நிலை. அப்படிப்பட்ட நிலையில் அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய வன்கொடுமையாகத் தெறியாது.
ஏரோதியாள் ஏற்கெனவே பாவத்தில் வாழ்ந்து வந்தாள். ஒரு பாவம் செய்து மனம் இறுகிப்போனவளுக்கு இன்னொன்று ஒன்று பெரிதாகத் தோன்றாது. தொடர்ந்து பாவத்திலேயே வாழ்வாள். அதிலே அழிவாள். தொடக்க நிலையியே கிள்ளி எறியவில்லை என்றால் பெரிய தவறுகளைச் செய்து நாம் நம்மை அழிப்பது உறுதி. கற்றுக் கொள்வோம். கவனமாய் இருப்போம்.
-ஜோசப் லீயோன்
No comments:
Post a Comment