அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, September 17, 2017

மன்னிக்கும் மனநிலை வளர்ப்போம்

மன்னிக்கும் மனநிலை வளர்ப்போம்


”இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” என்று மத்தேயு 5: 7 ல் பார்க்கிறோம். இயேசு பரலோக மந்திரம் செபத்தில், நாம் மற்றவர்களை மன்னிப்பதுபோல, நமது பாவங்களை கடவுள் மன்னிக்கிறார் என்பதற்கு அழுத்தம் கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து மீண்டும் பாவங்களை மன்னிப்பதைச் சொல்கிறார். ”மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” மத்தேயு 6: 15. யாக்கோபு தனது திருமுகத்தில் ”இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்பு தான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்” (2: 13). இதிலிருந்து மற்றவர்களை மன்னிப்பது, கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கான அடிப்படை என்பது தெளிவாகிறது.
ஒரு தாலந்து என்பது பதினைந்து வருடக்கூலிக்கு இணையானது. சாதாரண மாகாணத்தின் வரவு, செலவைத்தாண்டக்கூடிய பணமதிப்பு. இதுமேயா, யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளிலிருந்து கிடைக்கும் மொத்த ஆண்டு வருமானமே 600 தாலந்துகள் தான். பணக்கார மாகாணம் என்று அழைக்கப்படும் கலிலேயாவின் மொத்த ஆண்டு வருமானம் 300 தாலந்துகள் தான். பத்தாயிரம் தாலந்துகளை சுமார் 8,600 வீரர்கள் சுமந்து வந்தால், கிட்டத்தட்ட, அந்த வரிசையே ஐந்து மைல்களுக்கு அப்பால் இருக்கக்கூடிய அளவுக்கு தொகை பெரியது. மாறாக, தெனாரியம் என்பது தொழிலாளியின் ஒருநாள் கூலிக்கு இணையானது. 100 தெனாரியம் என்பது, பெரிய மதிப்பு அல்ல. 1000 தாலந்துகளைத் தலைவர் தள்ளுபடி செய்கிறார். தள்ளுபடி செய்யப்பட்டவன், 100 தெனாரியத்தைத்தள்ளுபடி செய்ய மறுக்கிறான்.
நாம் செய்கின்ற தவறுகள், குற்றங்கள் ஏராளம், ஏராளம். ஆனால், நமது பாவங்களை இறைவன், ஒரு பொருட்டாக எண்ணாமல், மன்னிக்கிறார். ஆனால், நாம் நமக்கெதிராக சிறிய தவறு செய்யும், நமது உடன் வாழ்கிற சகமனிதர்களை மன்னிக்க மறுக்கிறோம். நாம் மற்றவர்களை மன்னிக்கவில்லையென்றால், கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment