அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, September 24, 2017

வியாகுலத்தாய்

வியாகுலத்தாய்

செப்டம்பர் 15 ந் தேதி தூய மரியாளை வியாகுலத்தாய் எனக் கொண்டாடுகிறோம்...

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்'

என்ற பொய்யாமொழிப் புலவனின் வார்த்தைகள் பொய்யாய்ப் போனதோ இவரிடம்!

இவரின் மகனைப் பற்றி இவரிடம் என்ன சொல்லியிருப்பார்கள் மற்றவர்கள்?

அந்த நேரத்தில் இவரின் உள்ளக்கிடக்கை என்னவாக இருந்திருக்கும்?

தான் இறக்கும் அந்தத் தருணத்தில்கூட

இவர் வளர்த்த ஆசை மகன்

'இதோ! உன் அன்பார்ந்த மகன்!'

என்று தன்னை; சுட்டிக்காட்டாமல்
தன் சீடன் ஒருவரைக் காட்டி விடுகின்றார்.

'என்னது இவர் என் மகனா? அப்படின்னா நீ எனக்கு யார்?'

'இதோ உன் தாய்!' என உன் சீடனிடம் என்னை ஏன் தள்ளி விடுகிறாய்?

என்னையும் உன்னோடு எடுத்துக்கொள்ளேன்!

'நான் உனக்கு யார்?'

எனக் கேட்டிருப்பார் இந்தக் கன்னித் தாய்.

'உன் இதயத்தை ஒரு வாள் ஊடுருவும்!'

என்று சிமியோன் சொன்னது இந்த நாளைக் குறித்துத்தானோ?

மரியாளின் கன்னிமை, அமல உற்பவம், இறைத்தாய்மை

என எல்லா இறையியல்களும் நம்மைத் தொடவில்லையென்றாலும்,

அவர் வடித்த கண்ணீர் என்னவோ நம் மனதையும் பிசைந்து விடுகிறது.

இந்நாளை இந்த அன்னையின் கண்ணீரைக் கொண்டாடும் வேளையில்

அன்றாடம் கண்ணீர் வடிக்கும்  கண்கள் நோக்கி

என் கரம் நீண்டால்

இந்த நாள் திருநாள் வெற்றி!⁠⁠⁠⁠

No comments:

Post a Comment