மன்னியுங்கள், மன்னிப்புப் பெறுவீர்கள்
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர்கள் சிலர் தங்களுடைய சிறு சிறு தேவைகளுக்காக அவ்வப்போது அக்கம் பக்கத்தில் திருடத் தொடங்கினார்கள். அந்த சிறு சிறு திருட்டு வேலைகள் அவர்களுக்கு ஒருவிதமான போதையைத் தந்ததால் மேலும் மேலும் அவர்கள் திருடத் தொடங்கினார்கள். அதனால் ஒருசில ஆண்டுகளிலேயே அவர்கள் நகரில் பெரிய திருடர்களாய் மாறினார்கள்.
ஒருநாள் அவர்கள் ஊருக்கு வெளியே இருந்த துறவுமடத்தில் திருடலாம் என முடிவுசெய்து, துறவுமடத்தில் எல்லாரும் தூங்கிய பிறகு தங்களுடைய கையில் அகப்பட்டதை எல்லாம் திருடிக்கொண்டு வெளியே வந்தார்கள். அவர்கள் பொருட்கள், பணம் எல்லாவற்றையும் திருடிக்கொண்டு வரும்போது, அவர்களுக்கு முன்பாக அந்த துறவுமடத்தின் தலைமைத் துறவி நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் எல்லாருக்கும் தூக்கிவாரிப் போட்டது. நிச்சயமாக அவர் நம்மை காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவார். அதனால் நம்முடைய வாழ்வே சிறைக்கதவுகளுக்குப் பின்னால் சீரழியப் போகிறது என்று அவர்கள் வருந்தத் தொடங்கினார்கள்.
அப்போது அந்த தலைமைத் துறவு தன்னிடம் இருந்த ஒரு பெரிய பையை அவர்களிடம் கொடுத்து, “எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போகிறீர்கள். அப்படியே இந்த பையையும் எடுத்துக்கொண்டு போங்கள். இந்த பையில் எங்கள் அன்றாட உணவிற்குத் தேவையான பணம் இருக்கின்றது. இதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்” என்றார். இதைக் கேட்ட அந்த திருட்டுக் குப்பல் துறவி தங்களை மனதார மன்னித்ததோடு மட்டுமல்லாம், தங்களுக்கு இப்படி நன்மை செய்ய நினைக்கிறாரே என்று அவர்கள் தங்களுடைய தவற்றினை உணர்ந்து, தலைமைத் துறவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தாங்கள் இப்படிப்பட்ட திருட்டுத் தொழிலில் ஈடுபடப் போவதில்லை என்று வாக்குறுதி தந்து, அந்த வாக்குறுதிக்கு ஏற்ப மனமாறி வாழ்ந்தார்கள்.
தவறு செய்யும் ஒருவரை மன்னிக்கும்போது அவர் மனமாறி வாழ்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் இருபத்து நான்காம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை ‘மன்னியுங்கள், அப்போது மன்னிப்புப் பெறுவீர்கள்’ என்பதாகும். நாம் எப்படி நமக்கெதிராகத் தவறு செய்கிறவர்களை மன்னிக்கிறோம் என்பதையும், அதன்வழியாக கடவுள் தரும் மன்னிப்பை எப்படிப் பெற்றுக்கொள்கிறோம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் பேதுரு, ஆண்டவர் இயேசுவிடம் வந்து,” ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கெதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனைமுறை அவரை மன்னிக்க வேண்டும்?, ஏழுமுறை மட்டுமா?” என்று கேட்கிறார். பேதுரு இப்படிக் கேட்பதற்குப் பின்னால் ஏதேனும் ஆதாயம் இல்லாமலில்லை. தான் ஏழுமுறை தவறு செய்யும் தன் சகோதர சகோதரியை மன்னிக்கிறேன் என்று சொன்னால், இயேசு தன்னைப் புகழ்வார் என்று பேதுரு நினைத்தார். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அவரிடம், “ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை” என்கிறார். அதாவது நாம் ஒவ்வொருவரும் நமக்கெதிராக தீங்குசெய்வோரை நிபந்தனை இல்லாமல் அன்புசெய்யவேண்டும் என்கிறார் இயேசு, அதற்காக ஓர் உவமையையும் சொல்கிறார்.
இயேசு கூறும் உவமையில் அரசர் தன்னிடம் பத்தாயிரம் தாலந்து (ஒரு தாலந்து பொன் என்பது 1,80, 000 தெனாரியத்திற்குச் சமம்) கடன்பட்டிருந்த பணியாளரை மனதார மன்னித்து, அவன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்கிறார். ஆனால் அந்தப் பணியாளனோ தன்னிடம் நூறு தெனாரியம் (ஒரு தெனாரியம் என்பது ஒரு நாள் கூலி) கடன்பட்டிருந்த சக பணியாளரை சிறையில் அடைக்கின்றார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசர் அந்த பொல்லாத – தன் சக பணியாளனை மன்னிக்காத – பணியாளனை சிறையில் அடைக்கின்றார்.
இயேசு கூறும் உவமையில் வரும் அரசர் போன்று கடவுள் நாம் செய்த தவறுகளை தாராளமாக, மனதார மன்னிக்கின்றார், ஆனால் நாமோ நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகள் செய்யும் சிறுசிறு தவறுகளை மன்னிக்கத் தவறிவிடுகின்றோம். இதனால் இறைவன் தரும் மன்னிப்பைப் பெறமுடியாமலே போய்விடுகின்றோம். இயேசு கற்றுத்தரும் ஜெபத்தில், “எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னியும்” என்றுதான் வாசிக்கின்றோம். அதாவது, நாம் பிறர் செய்யும் குற்றங்களை மன்னிக்கின்றபோதுதான் இறைவன் நம் குற்றங்களையும் மன்னிப்பார். அப்படி நாம் பிறர் குற்றங்களை மன்னியாது இருந்தால் இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்பது எந்த விதத்திலும் நீதியாகாது.
சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகமானது நாம் நமக்கெதிராகத் தீங்குசெய்பவர்களை மன்னிக்கிறபோது பெறும் நன்மையையும், அப்படி மன்னியாது இருக்கும்போது பெறும் தண்டனைகளையும் எடுத்துக்கூறுகின்றது. முதலாவதாக நாம் நம் உடன் வாழும் சகோதர சகோதரிகள் செய்யும் தவறுகளை மன்னியாது, பழிவாங்க நினைத்தால் பெறும் தண்டனைகளைக் குறித்துப் பார்ப்போம்.
“பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குக்பழியே பெறுவர்” என்று அங்கே வாசிக்கின்றோம். எப்படியென்றால் ஒருவர் நமக்கெதிராகத் தீங்கு செய்கிறபோது அவரை மன்னியாமல் பழிவாங்கினால், அவர் நம்மை வெறுமென விட்டுவிடப் போவதில்லை. என்றைக்காவது ஒருநாள் சரியான நேரம் பார்த்து நம்மைத் தீர்த்துக்கட்டுவார். இது அதோடு நின்றுவிடப்போவதில்லை. மாறாக இப்படிப்பட்ட பகையும், வெறுப்பும் தலைமுறை தரைமுறையாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆதலால்தான் கடவுள் ‘பழிவாங்குவோர் பழிக்குப்பழி பெறுவர்’ என்கிறார்.
அடுத்ததாக நாம் நம் உடன் வாழும் சகோதர சகோதரிகள் செய்த தவறை மன்னிக்காது வாழும்போது, இறைவன் நமக்கு நலமான வாழ்வையோ, பாவ மன்னிப்பையோ அளிக்கப்போவதில்லை என்பது உறுதியாகும். “மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்கு எப்படி மன்றாட முடியும்” என்று இன்றைய இறைவார்த்தை இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலும் நாம் இதை ஒத்த கருத்தினை வாசிக்கின்றோம், “நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீ எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக்கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறீர்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் வேலையாட்கள் அனைவரையும் ஒடுக்குகிறீர்கள், அவர்களுக்கு இரக்கம் காட்டுவதில்லை. ஆகையால் நீங்கள் இப்படி நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னத்ததில் கேட்கப்படாது” என்று கூறுகிறார் இறைவன். ஆம், நாம் நம் சகோதர சகோதரிகள் செய்யும் தவற்றினை மன்னியாது, அவர்கள்மீது இரக்கம்காட்டாதபோது இறைவனிடமிருந்து அருளையும், ஆசிரியும் எப்படிப் பெற்றுக்கொள்ள் முடியும்?.
இதுவரை மன்னிக்காது வாழ்வதால் இறைவனிடமிருந்து பெரும் தண்டனையைக் குறித்து சிந்தித்த நாம், மன்னித்து வாழ்வதால் பெறும் நன்மைகளைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இறைவார்த்தை சொல்கிறது, “உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்து விடு; அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று (சீராக் 28:2). இது தான் உண்மையிலும் உண்மை. நாம் நமக்கெதிராக தீங்கு செய்யும் சகோதர சகோதரிகளை மன்னித்து வாழும்போது இறைவன் நிச்சயம் நமது பாவங்களை மன்னிப்பார். இது கட்டாயம் உறுதி.
ஆனால் இன்று மன்னிப்பு என்பதே தரம்குறைந்த சொல் போன்றும், அப்படி மன்னித்து வாழ்பவர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், கோழைகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். அண்ணல் காந்தியடிகள் ஒருமுறை இவ்வாறு சுட்டிக்காட்டினார், “பலவீனமானவர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள், ஏனென்றால் மன்னிப்பது பலசாலிகள் குணம்” என்று. வரலாற்றை ஒருமுறை திருப்பிப் பார்த்தால், காந்தியடிகள் சொல்வது உண்மையெனப் புரியும். பலவீனர்கள்தான் பழிவாங்கினார்கள். இயேசு, ஸ்தேவன், புத்தர், காந்தியடிகள் போன்றவர்கள் பகைவர்களையும், தங்களுக்கு எதிராகத் தீங்கு செய்தவர்களையும் மன்னித்தார்கள். அதனால்தான் அவர்கள் பலசாலிகளாக கருதப்படுகிறார்கள். நாம் நமக்கு எதிராகத் தீங்கு செய்தவரை மன்னிக்கத் தவறாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஒரு பெருநகரில் வாழ்ந்து வந்த ஒரு செல்வச் சீமாட்டிக்கு தீராத வியாதி. அவர் எத்தனையோ மருத்துவரிடம் சென்று பார்த்த பிறகும்கூட அவரிடம் என்ன நோய் இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அவர் மருத்துவரிடம் சென்று பார்த்தார். அவர் அந்த செல்வச் சீமாட்டியிடம் பேசிப் பார்த்தார். அப்போது அந்த மருத்துவர், சீமாட்டியிடம் இருப்பது உடல் நோயல்ல, மாறாக, உள்ளம் தொடர்பான நோய், எனவே இதற்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதை விடவும், உளவியலாளரிடம் அனுப்பி வைப்பது நல்லது என அறிந்து, தன்னுடைய நண்பரும், உளவியலாளருமானவரிடம் அனுப்பி வைத்து, ஒரு மாத காலத்திற்குப் பிறகு தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மருத்துவரின் ஆணைக்கிணங்க அந்த செல்வச் சீமாட்டி, உளவியலாளரைச் சென்று சந்தித்தார். அவரும் அவருக்கு நல்லதொரு ஆற்றுப்படுத்துதலைக் (Counselling) கொடுத்தார். ஏறக்குறைய ஒருமாத காலத்திற்குப் பிறகு அந்த செல்வச் சீமாட்டி, மருத்துவரை வந்து சந்தித்தார். அப்போது அவர் புதிய மனிதையாக மாறியிருந்தாள். இப்படிப்பட்ட ஒரு மாற்றத்திற்கு உளவிலாளர் என்ன சிகிச்சை அளித்தார்?” என்று கேட்டார். அதற்கு செல்வச் சீமாட்டி, “உன் கடந்த கால வாழ்வில் யாரேனும் உனக்கெதிராக தவறு செய்திருந்தால் அவரை மனதார மன்னி என்று உளவியலாளர் கேட்டுக்கொண்டார். நானும் என்னுடைய கல்லூரிப் பருவத்தில் என்னை ஏமாற்றிய நண்பன் ஒருவனை மனதார மன்னித்தேன். அதனால்தான் இப்படி பரிபூரணம் பெற்றேன்” என்றார்.
ஆம், நமக்கெதிராக தீங்கு செய்பவரை மனதார மன்னிக்கும்போது உடல் சுகம் மட்டுமல்ல, உள்ளசுகமும் பெறுகிறோம்.
எனவே, இறைவன் நம்மை அளவுகடந்த விதத்தில் மன்னிப்பது போல, நாமும் நம் உடன் வாழும் சகோதர சகோதரிகள் செய்யும் தவறை மனதார மன்னிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர்கள் சிலர் தங்களுடைய சிறு சிறு தேவைகளுக்காக அவ்வப்போது அக்கம் பக்கத்தில் திருடத் தொடங்கினார்கள். அந்த சிறு சிறு திருட்டு வேலைகள் அவர்களுக்கு ஒருவிதமான போதையைத் தந்ததால் மேலும் மேலும் அவர்கள் திருடத் தொடங்கினார்கள். அதனால் ஒருசில ஆண்டுகளிலேயே அவர்கள் நகரில் பெரிய திருடர்களாய் மாறினார்கள்.
ஒருநாள் அவர்கள் ஊருக்கு வெளியே இருந்த துறவுமடத்தில் திருடலாம் என முடிவுசெய்து, துறவுமடத்தில் எல்லாரும் தூங்கிய பிறகு தங்களுடைய கையில் அகப்பட்டதை எல்லாம் திருடிக்கொண்டு வெளியே வந்தார்கள். அவர்கள் பொருட்கள், பணம் எல்லாவற்றையும் திருடிக்கொண்டு வரும்போது, அவர்களுக்கு முன்பாக அந்த துறவுமடத்தின் தலைமைத் துறவி நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் எல்லாருக்கும் தூக்கிவாரிப் போட்டது. நிச்சயமாக அவர் நம்மை காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவார். அதனால் நம்முடைய வாழ்வே சிறைக்கதவுகளுக்குப் பின்னால் சீரழியப் போகிறது என்று அவர்கள் வருந்தத் தொடங்கினார்கள்.
அப்போது அந்த தலைமைத் துறவு தன்னிடம் இருந்த ஒரு பெரிய பையை அவர்களிடம் கொடுத்து, “எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போகிறீர்கள். அப்படியே இந்த பையையும் எடுத்துக்கொண்டு போங்கள். இந்த பையில் எங்கள் அன்றாட உணவிற்குத் தேவையான பணம் இருக்கின்றது. இதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்” என்றார். இதைக் கேட்ட அந்த திருட்டுக் குப்பல் துறவி தங்களை மனதார மன்னித்ததோடு மட்டுமல்லாம், தங்களுக்கு இப்படி நன்மை செய்ய நினைக்கிறாரே என்று அவர்கள் தங்களுடைய தவற்றினை உணர்ந்து, தலைமைத் துறவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தாங்கள் இப்படிப்பட்ட திருட்டுத் தொழிலில் ஈடுபடப் போவதில்லை என்று வாக்குறுதி தந்து, அந்த வாக்குறுதிக்கு ஏற்ப மனமாறி வாழ்ந்தார்கள்.
தவறு செய்யும் ஒருவரை மன்னிக்கும்போது அவர் மனமாறி வாழ்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் இருபத்து நான்காம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை ‘மன்னியுங்கள், அப்போது மன்னிப்புப் பெறுவீர்கள்’ என்பதாகும். நாம் எப்படி நமக்கெதிராகத் தவறு செய்கிறவர்களை மன்னிக்கிறோம் என்பதையும், அதன்வழியாக கடவுள் தரும் மன்னிப்பை எப்படிப் பெற்றுக்கொள்கிறோம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் பேதுரு, ஆண்டவர் இயேசுவிடம் வந்து,” ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கெதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனைமுறை அவரை மன்னிக்க வேண்டும்?, ஏழுமுறை மட்டுமா?” என்று கேட்கிறார். பேதுரு இப்படிக் கேட்பதற்குப் பின்னால் ஏதேனும் ஆதாயம் இல்லாமலில்லை. தான் ஏழுமுறை தவறு செய்யும் தன் சகோதர சகோதரியை மன்னிக்கிறேன் என்று சொன்னால், இயேசு தன்னைப் புகழ்வார் என்று பேதுரு நினைத்தார். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அவரிடம், “ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை” என்கிறார். அதாவது நாம் ஒவ்வொருவரும் நமக்கெதிராக தீங்குசெய்வோரை நிபந்தனை இல்லாமல் அன்புசெய்யவேண்டும் என்கிறார் இயேசு, அதற்காக ஓர் உவமையையும் சொல்கிறார்.
இயேசு கூறும் உவமையில் அரசர் தன்னிடம் பத்தாயிரம் தாலந்து (ஒரு தாலந்து பொன் என்பது 1,80, 000 தெனாரியத்திற்குச் சமம்) கடன்பட்டிருந்த பணியாளரை மனதார மன்னித்து, அவன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்கிறார். ஆனால் அந்தப் பணியாளனோ தன்னிடம் நூறு தெனாரியம் (ஒரு தெனாரியம் என்பது ஒரு நாள் கூலி) கடன்பட்டிருந்த சக பணியாளரை சிறையில் அடைக்கின்றார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசர் அந்த பொல்லாத – தன் சக பணியாளனை மன்னிக்காத – பணியாளனை சிறையில் அடைக்கின்றார்.
இயேசு கூறும் உவமையில் வரும் அரசர் போன்று கடவுள் நாம் செய்த தவறுகளை தாராளமாக, மனதார மன்னிக்கின்றார், ஆனால் நாமோ நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகள் செய்யும் சிறுசிறு தவறுகளை மன்னிக்கத் தவறிவிடுகின்றோம். இதனால் இறைவன் தரும் மன்னிப்பைப் பெறமுடியாமலே போய்விடுகின்றோம். இயேசு கற்றுத்தரும் ஜெபத்தில், “எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னியும்” என்றுதான் வாசிக்கின்றோம். அதாவது, நாம் பிறர் செய்யும் குற்றங்களை மன்னிக்கின்றபோதுதான் இறைவன் நம் குற்றங்களையும் மன்னிப்பார். அப்படி நாம் பிறர் குற்றங்களை மன்னியாது இருந்தால் இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்பது எந்த விதத்திலும் நீதியாகாது.
சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகமானது நாம் நமக்கெதிராகத் தீங்குசெய்பவர்களை மன்னிக்கிறபோது பெறும் நன்மையையும், அப்படி மன்னியாது இருக்கும்போது பெறும் தண்டனைகளையும் எடுத்துக்கூறுகின்றது. முதலாவதாக நாம் நம் உடன் வாழும் சகோதர சகோதரிகள் செய்யும் தவறுகளை மன்னியாது, பழிவாங்க நினைத்தால் பெறும் தண்டனைகளைக் குறித்துப் பார்ப்போம்.
“பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குக்பழியே பெறுவர்” என்று அங்கே வாசிக்கின்றோம். எப்படியென்றால் ஒருவர் நமக்கெதிராகத் தீங்கு செய்கிறபோது அவரை மன்னியாமல் பழிவாங்கினால், அவர் நம்மை வெறுமென விட்டுவிடப் போவதில்லை. என்றைக்காவது ஒருநாள் சரியான நேரம் பார்த்து நம்மைத் தீர்த்துக்கட்டுவார். இது அதோடு நின்றுவிடப்போவதில்லை. மாறாக இப்படிப்பட்ட பகையும், வெறுப்பும் தலைமுறை தரைமுறையாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆதலால்தான் கடவுள் ‘பழிவாங்குவோர் பழிக்குப்பழி பெறுவர்’ என்கிறார்.
அடுத்ததாக நாம் நம் உடன் வாழும் சகோதர சகோதரிகள் செய்த தவறை மன்னிக்காது வாழும்போது, இறைவன் நமக்கு நலமான வாழ்வையோ, பாவ மன்னிப்பையோ அளிக்கப்போவதில்லை என்பது உறுதியாகும். “மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்கு எப்படி மன்றாட முடியும்” என்று இன்றைய இறைவார்த்தை இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலும் நாம் இதை ஒத்த கருத்தினை வாசிக்கின்றோம், “நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீ எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக்கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறீர்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் வேலையாட்கள் அனைவரையும் ஒடுக்குகிறீர்கள், அவர்களுக்கு இரக்கம் காட்டுவதில்லை. ஆகையால் நீங்கள் இப்படி நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னத்ததில் கேட்கப்படாது” என்று கூறுகிறார் இறைவன். ஆம், நாம் நம் சகோதர சகோதரிகள் செய்யும் தவற்றினை மன்னியாது, அவர்கள்மீது இரக்கம்காட்டாதபோது இறைவனிடமிருந்து அருளையும், ஆசிரியும் எப்படிப் பெற்றுக்கொள்ள் முடியும்?.
இதுவரை மன்னிக்காது வாழ்வதால் இறைவனிடமிருந்து பெரும் தண்டனையைக் குறித்து சிந்தித்த நாம், மன்னித்து வாழ்வதால் பெறும் நன்மைகளைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இறைவார்த்தை சொல்கிறது, “உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்து விடு; அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று (சீராக் 28:2). இது தான் உண்மையிலும் உண்மை. நாம் நமக்கெதிராக தீங்கு செய்யும் சகோதர சகோதரிகளை மன்னித்து வாழும்போது இறைவன் நிச்சயம் நமது பாவங்களை மன்னிப்பார். இது கட்டாயம் உறுதி.
ஆனால் இன்று மன்னிப்பு என்பதே தரம்குறைந்த சொல் போன்றும், அப்படி மன்னித்து வாழ்பவர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், கோழைகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். அண்ணல் காந்தியடிகள் ஒருமுறை இவ்வாறு சுட்டிக்காட்டினார், “பலவீனமானவர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள், ஏனென்றால் மன்னிப்பது பலசாலிகள் குணம்” என்று. வரலாற்றை ஒருமுறை திருப்பிப் பார்த்தால், காந்தியடிகள் சொல்வது உண்மையெனப் புரியும். பலவீனர்கள்தான் பழிவாங்கினார்கள். இயேசு, ஸ்தேவன், புத்தர், காந்தியடிகள் போன்றவர்கள் பகைவர்களையும், தங்களுக்கு எதிராகத் தீங்கு செய்தவர்களையும் மன்னித்தார்கள். அதனால்தான் அவர்கள் பலசாலிகளாக கருதப்படுகிறார்கள். நாம் நமக்கு எதிராகத் தீங்கு செய்தவரை மன்னிக்கத் தவறாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஒரு பெருநகரில் வாழ்ந்து வந்த ஒரு செல்வச் சீமாட்டிக்கு தீராத வியாதி. அவர் எத்தனையோ மருத்துவரிடம் சென்று பார்த்த பிறகும்கூட அவரிடம் என்ன நோய் இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அவர் மருத்துவரிடம் சென்று பார்த்தார். அவர் அந்த செல்வச் சீமாட்டியிடம் பேசிப் பார்த்தார். அப்போது அந்த மருத்துவர், சீமாட்டியிடம் இருப்பது உடல் நோயல்ல, மாறாக, உள்ளம் தொடர்பான நோய், எனவே இதற்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதை விடவும், உளவியலாளரிடம் அனுப்பி வைப்பது நல்லது என அறிந்து, தன்னுடைய நண்பரும், உளவியலாளருமானவரிடம் அனுப்பி வைத்து, ஒரு மாத காலத்திற்குப் பிறகு தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மருத்துவரின் ஆணைக்கிணங்க அந்த செல்வச் சீமாட்டி, உளவியலாளரைச் சென்று சந்தித்தார். அவரும் அவருக்கு நல்லதொரு ஆற்றுப்படுத்துதலைக் (Counselling) கொடுத்தார். ஏறக்குறைய ஒருமாத காலத்திற்குப் பிறகு அந்த செல்வச் சீமாட்டி, மருத்துவரை வந்து சந்தித்தார். அப்போது அவர் புதிய மனிதையாக மாறியிருந்தாள். இப்படிப்பட்ட ஒரு மாற்றத்திற்கு உளவிலாளர் என்ன சிகிச்சை அளித்தார்?” என்று கேட்டார். அதற்கு செல்வச் சீமாட்டி, “உன் கடந்த கால வாழ்வில் யாரேனும் உனக்கெதிராக தவறு செய்திருந்தால் அவரை மனதார மன்னி என்று உளவியலாளர் கேட்டுக்கொண்டார். நானும் என்னுடைய கல்லூரிப் பருவத்தில் என்னை ஏமாற்றிய நண்பன் ஒருவனை மனதார மன்னித்தேன். அதனால்தான் இப்படி பரிபூரணம் பெற்றேன்” என்றார்.
ஆம், நமக்கெதிராக தீங்கு செய்பவரை மனதார மன்னிக்கும்போது உடல் சுகம் மட்டுமல்ல, உள்ளசுகமும் பெறுகிறோம்.
எனவே, இறைவன் நம்மை அளவுகடந்த விதத்தில் மன்னிப்பது போல, நாமும் நம் உடன் வாழும் சகோதர சகோதரிகள் செய்யும் தவறை மனதார மன்னிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.
No comments:
Post a Comment