''திராட்சைத் தோட்ட உரிமையாளர் வேலையாள்களுள் ஒருவரைப் பார்த்து,
'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை.
நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா?
உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமகுக்குக் கொடுத்தபடியே
கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்' என்றார்'' (மத்தேயு 20:13-14)
-- மாதச் சம்பளம் வாங்குவோருக்கும் அன்றாடம் செய்கின்ற வேலைக்குக் கூலி வாங்கிப் பிழைப்பு நடத்துவோருக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளதை நாம் அறிவோம். இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனப் பகுதிகளில் கூலி வேலை முறை வழக்கத்தில் இருந்தது. கூலி வேலை செய்தவர்களின் நிலை அடிமைகளின் நிலையை விட மோசமாக இருந்தது. அடிமைகளாவது ஒரு எசமானருக்கு ''உடைமை'' எனக் கருதப்பட்டனர். அன்றாடம் வேலை செய்து பிழைத்தவர்கள் சந்தை வெளியில் அதிகாலையிலேயே வந்து கூடுவர். அவர்களை வேலைக்கு அமர்த்த விரும்புவோர் அங்கே வந்து தமக்குத் தேவையான கூலியாள்களைக் கூட்டிச் சென்று வேலை செய்ய விடுவர். நம் நாட்டில் இன்றும்கூட இப்பழக்கம் பரவலாக உள்ளதை நாமறிவோம். அன்றுபோல இன்றும் கூலி வேலை செய்தவர்களுக்கு ஒரு நாள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிதான். வேலையில்லை என்பதற்காக அவர்களுக்கு நிவாரண உதவி அளிக்க யாரும் அக்காலத்தில் இருக்கவில்லை. அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என வாதாட தொழிலாளர் சங்கங்களும் கிடையாது. கூலி வேலைக்கு ஆள்களை அமர்த்தியவர்கள் தாங்கள் விரும்பியபடி செய்யலாம் (காண்க: மத் 20:15). எனவே, கூலியாள்களைப் பொறுத்தமட்டில் ஒரு நாள் வேலை கிடைக்காவிட்டால் அன்று அவரும் அவருடைய குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இயேசு கூறிய ''திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமை''யில் (காண்க: மத் 20:1-16) வருகின்ற நிலக்கிழார் (தோட்ட உரிமையாளர்) தமக்குத் தேவையான வேலையாள்களை விடியற்காலையிலேயே தேர்ந்துகொண்டார். ஆனால், அவர் மீண்டும் மூன்று முறை (காலை ஒன்பது மணி, நண்பகல், மாலை ஐந்து மணி) சந்தை வெளிக்குச் சென்று வேலை வாய்ப்பு இல்லாமல் நின்றிருந்தவர்களுக்கு வேலை கொடுக்கிறார். வேலை செய்து கூலி பெற்றால்தான் அன்றைய பிழைப்பு நடக்கும் என்னும் நிலையிலிருந்த அந்த கூலியாள்கள்மீது இரக்கம் கொண்டு தோட்ட உரிமையாளர் அவர்களுக்கு வேலை கொடுக்கின்றார்.
-- நாள் முழுதும் வேலைசெய்தவர்களுக்கும் ஒரு மணி மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் ஒரே சமமான கூலி கொடுக்கப்பட்டால் அது அநீதி என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனால் இயேசு வெறும் உலகப் பார்வையில் செய்யப்படுகின்ற மதிப்பீடுகள்படி கடவுள் செயல்படுவதில்லை என இந்த உவமை வழி நமக்கு உணர்த்துகிறார். உவமையில் வருகின்ற நிலக்கிழார் (தோட்ட உரிமையாளர்) கடவுளுக்கு உருவகம். அவர் தம் மக்களின் தேவைகளை உணர்ந்தவர். அவர்களை அவர் வேறுபடுத்திப் பிரித்துப் பார்த்து, ஒருவரை உயர்த்தவோ மற்றவரைத் தாழ்த்தவோ செய்வதில்லை. எல்லா மனிதரும் கடவுளுக்கு முன் சமமானவர்களே. விடியற்காலையிலேயே வந்து தோட்ட வேலை செய்தவர்கள், ''கடைசியில் வந்த இவர்களையும் நாள் முழுதும் வேலை செய்த எங்களையும் இணையாக்கிவிட்டீரே'' (மத் 20:12) என்று கேட்டது உலகப் பார்வைப் படி நியாயமான கேள்விதான். ஆனால் கடவுளின் நீதி இரக்கமும் பரிவும் தோய்ந்த அன்பு இதயத்திலிருந்து பிறக்கும் ஒன்று. கடவுளின் இரக்கத்திற்கு எல்லை கிடையாது. கடவுளின் இரக்கத்திற்கு நாம் மனித கணிப்புப்படி வேலி கட்ட முடியாது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் தத்துவம் கடவுளைப் பொறுத்தமட்டில் உண்மை ஆகாது. முதலில் வந்தாலும் சரி, கடைசியில் வந்தாலும் சரி எல்லாருக்கும் சம உரிமையே என்பதே கடவுளின் நீதி. கடவுள் நம்மை எவ்வாறு நடத்த வேண்டும் என நாம் அவருக்கு ஆலோசனை கூற நமக்கு உரிமையில்லை. அவர் ''தாராள உள்ளத்தோடு பிறருக்கு நன்மை செய்கிறாரே என நினைத்து நாம் பொறாமைப்படுவதும் முறையாகாது'' (காண்க: மத் 20:15). மாறாக, எல்லா மக்களையும் சமமாக நடத்துகின்ற ''நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும்'' (காண்க: மத் 5:48).
மன்றாட்டு
இறைவா, உம் அன்பின் பெருக்கை வியந்து உம்மைப் புகழ எங்களுக்கு அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை.
நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா?
உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமகுக்குக் கொடுத்தபடியே
கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்' என்றார்'' (மத்தேயு 20:13-14)
-- மாதச் சம்பளம் வாங்குவோருக்கும் அன்றாடம் செய்கின்ற வேலைக்குக் கூலி வாங்கிப் பிழைப்பு நடத்துவோருக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளதை நாம் அறிவோம். இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனப் பகுதிகளில் கூலி வேலை முறை வழக்கத்தில் இருந்தது. கூலி வேலை செய்தவர்களின் நிலை அடிமைகளின் நிலையை விட மோசமாக இருந்தது. அடிமைகளாவது ஒரு எசமானருக்கு ''உடைமை'' எனக் கருதப்பட்டனர். அன்றாடம் வேலை செய்து பிழைத்தவர்கள் சந்தை வெளியில் அதிகாலையிலேயே வந்து கூடுவர். அவர்களை வேலைக்கு அமர்த்த விரும்புவோர் அங்கே வந்து தமக்குத் தேவையான கூலியாள்களைக் கூட்டிச் சென்று வேலை செய்ய விடுவர். நம் நாட்டில் இன்றும்கூட இப்பழக்கம் பரவலாக உள்ளதை நாமறிவோம். அன்றுபோல இன்றும் கூலி வேலை செய்தவர்களுக்கு ஒரு நாள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிதான். வேலையில்லை என்பதற்காக அவர்களுக்கு நிவாரண உதவி அளிக்க யாரும் அக்காலத்தில் இருக்கவில்லை. அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என வாதாட தொழிலாளர் சங்கங்களும் கிடையாது. கூலி வேலைக்கு ஆள்களை அமர்த்தியவர்கள் தாங்கள் விரும்பியபடி செய்யலாம் (காண்க: மத் 20:15). எனவே, கூலியாள்களைப் பொறுத்தமட்டில் ஒரு நாள் வேலை கிடைக்காவிட்டால் அன்று அவரும் அவருடைய குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இயேசு கூறிய ''திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமை''யில் (காண்க: மத் 20:1-16) வருகின்ற நிலக்கிழார் (தோட்ட உரிமையாளர்) தமக்குத் தேவையான வேலையாள்களை விடியற்காலையிலேயே தேர்ந்துகொண்டார். ஆனால், அவர் மீண்டும் மூன்று முறை (காலை ஒன்பது மணி, நண்பகல், மாலை ஐந்து மணி) சந்தை வெளிக்குச் சென்று வேலை வாய்ப்பு இல்லாமல் நின்றிருந்தவர்களுக்கு வேலை கொடுக்கிறார். வேலை செய்து கூலி பெற்றால்தான் அன்றைய பிழைப்பு நடக்கும் என்னும் நிலையிலிருந்த அந்த கூலியாள்கள்மீது இரக்கம் கொண்டு தோட்ட உரிமையாளர் அவர்களுக்கு வேலை கொடுக்கின்றார்.
-- நாள் முழுதும் வேலைசெய்தவர்களுக்கும் ஒரு மணி மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் ஒரே சமமான கூலி கொடுக்கப்பட்டால் அது அநீதி என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனால் இயேசு வெறும் உலகப் பார்வையில் செய்யப்படுகின்ற மதிப்பீடுகள்படி கடவுள் செயல்படுவதில்லை என இந்த உவமை வழி நமக்கு உணர்த்துகிறார். உவமையில் வருகின்ற நிலக்கிழார் (தோட்ட உரிமையாளர்) கடவுளுக்கு உருவகம். அவர் தம் மக்களின் தேவைகளை உணர்ந்தவர். அவர்களை அவர் வேறுபடுத்திப் பிரித்துப் பார்த்து, ஒருவரை உயர்த்தவோ மற்றவரைத் தாழ்த்தவோ செய்வதில்லை. எல்லா மனிதரும் கடவுளுக்கு முன் சமமானவர்களே. விடியற்காலையிலேயே வந்து தோட்ட வேலை செய்தவர்கள், ''கடைசியில் வந்த இவர்களையும் நாள் முழுதும் வேலை செய்த எங்களையும் இணையாக்கிவிட்டீரே'' (மத் 20:12) என்று கேட்டது உலகப் பார்வைப் படி நியாயமான கேள்விதான். ஆனால் கடவுளின் நீதி இரக்கமும் பரிவும் தோய்ந்த அன்பு இதயத்திலிருந்து பிறக்கும் ஒன்று. கடவுளின் இரக்கத்திற்கு எல்லை கிடையாது. கடவுளின் இரக்கத்திற்கு நாம் மனித கணிப்புப்படி வேலி கட்ட முடியாது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் தத்துவம் கடவுளைப் பொறுத்தமட்டில் உண்மை ஆகாது. முதலில் வந்தாலும் சரி, கடைசியில் வந்தாலும் சரி எல்லாருக்கும் சம உரிமையே என்பதே கடவுளின் நீதி. கடவுள் நம்மை எவ்வாறு நடத்த வேண்டும் என நாம் அவருக்கு ஆலோசனை கூற நமக்கு உரிமையில்லை. அவர் ''தாராள உள்ளத்தோடு பிறருக்கு நன்மை செய்கிறாரே என நினைத்து நாம் பொறாமைப்படுவதும் முறையாகாது'' (காண்க: மத் 20:15). மாறாக, எல்லா மக்களையும் சமமாக நடத்துகின்ற ''நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும்'' (காண்க: மத் 5:48).
மன்றாட்டு
இறைவா, உம் அன்பின் பெருக்கை வியந்து உம்மைப் புகழ எங்களுக்கு அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
No comments:
Post a Comment