இறைவனின் பேரிரக்கம் !
மத்தேயு நற்செய்தி 18: 21-35
இறைவனின் பேரன்பைச் சிந்திக்க இந்த உவமை நமக்கு வாய்ப்பளிக்கிறது. இறைவன் நமக்குத் தருகின்ற மன்னிப்பு என்னும் கொடையையும், நாம் பிறரை மன்னிக்கின்ற தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு என்பது இந்த உவமையின் வழியாக நமக்கு உணர்த்தப்படுகிறது.
நூறு தெனாரியம் கடன் பட்ட மனிதனுக்கும், பத்தாயிரம் தாலந்து கடன் பட்ட மனிதனுக்கும் உள்ள வேறுபாடு ஏணி வைத்தாலும் எட்டாதது. ஆனால், நமக்கும் இறைவனுக்கும் இடையில் அதுதான் நடக்கிறது. நாம் நமக்குத் துன்பம் இழைத்தவர்களை, அல்லது நமக்குப் பிடிக்காதவர்களை மன்னிப்பதற்கு மிகவும் தயங்குகிறோம். ஆனால், இறைவனோ மன்னிப்பதில் கொடை வள்ளலாக, “அமுக்கிக், குலுக்கி, சரிந்துவிழும்படியாக” அவரது அன்பை, மன்னிப்பை நம்மீது பொழிபவராக இருக்கிறார். எத்தனை முறை நாம் பாவம் செய்தாலும், தவறிழைத்தாலும், அத்தனை முறையும் தயக்கமின்றி நம்மை மன்னிக்கின்றார். இந்த பேரன்புக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். மன்னிப்பில் நீர் கொடை வள்ளலாக இருப்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் என்னைத் தாராள மனதுடன் மன்னிப்பதுபோல, நானும் பிறரை மன்னிக்க அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
--அருள்தந்தை குமார்ராஜா
மத்தேயு நற்செய்தி 18: 21-35
இறைவனின் பேரன்பைச் சிந்திக்க இந்த உவமை நமக்கு வாய்ப்பளிக்கிறது. இறைவன் நமக்குத் தருகின்ற மன்னிப்பு என்னும் கொடையையும், நாம் பிறரை மன்னிக்கின்ற தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு என்பது இந்த உவமையின் வழியாக நமக்கு உணர்த்தப்படுகிறது.
நூறு தெனாரியம் கடன் பட்ட மனிதனுக்கும், பத்தாயிரம் தாலந்து கடன் பட்ட மனிதனுக்கும் உள்ள வேறுபாடு ஏணி வைத்தாலும் எட்டாதது. ஆனால், நமக்கும் இறைவனுக்கும் இடையில் அதுதான் நடக்கிறது. நாம் நமக்குத் துன்பம் இழைத்தவர்களை, அல்லது நமக்குப் பிடிக்காதவர்களை மன்னிப்பதற்கு மிகவும் தயங்குகிறோம். ஆனால், இறைவனோ மன்னிப்பதில் கொடை வள்ளலாக, “அமுக்கிக், குலுக்கி, சரிந்துவிழும்படியாக” அவரது அன்பை, மன்னிப்பை நம்மீது பொழிபவராக இருக்கிறார். எத்தனை முறை நாம் பாவம் செய்தாலும், தவறிழைத்தாலும், அத்தனை முறையும் தயக்கமின்றி நம்மை மன்னிக்கின்றார். இந்த பேரன்புக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். மன்னிப்பில் நீர் கொடை வள்ளலாக இருப்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் என்னைத் தாராள மனதுடன் மன்னிப்பதுபோல, நானும் பிறரை மன்னிக்க அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
--அருள்தந்தை குமார்ராஜா
No comments:
Post a Comment