அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, September 17, 2017

"மனமார மன்னிக்கா விட்டால் .. . என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்."

"மனமார மன்னிக்கா விட்டால் .. . என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்."

வாழ, உயிர் அவசியம். மனிதனாக வாழ, மன்னிப்பு அவசியம். மன்னிப்பு கொடுத்தும், பெற்றும் வாழாத மனிதன், மனிதன் அல்ல, புனிதன் அல்லது மிருகம். மனிதவாழ்வுக்கு இத்துணை அவசியமான மன்னிப்பு கொடுக்கின்ற மனிதனுக்கு மட்டுமே குறைவின்றி, தடையின்றி வேண்டியபோதெல்லாம் கிடைக்கும்.பேதுரு விரும்புவதுபோல ஏழு முறையும், இயேசு சொல்லியபடி ஏழுமுறை எழுபது முறையும் மன்னிப்பு கிடைக்கும்.
உண்மையிலே தன் தவறுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு கேட்டு, இனிமேல் இத்தவறைச் செய்வதில்லை என தீர்மானம் செய்து, தவறால் வந்த இழப்பை ஈடுசெய்து, பாதிக்கப்பட்டவரோடு உறவை வளர்க்கும் இப்பண்புகள் இருந்தால் மட்டுமே மன்னிப்பைப் பெற முடியும்.
மன்னிப்போடு தொடர்புடைய இன்னொரு பண்பு இரக்கம். இரக்கம் காட்டவும் பெறவும் தகுதியில்லாத மனிதன் மன்னிப்பு பெறும் உறிமையும் தகுதியும் இல்லாதவன்.இன்றைய வாசக உவமைக்கதை உணர்த்தும் செய்தி இந்த இரண்டாம் பகுதி.
மன்னிப்பும் இரக்கமும் தொடர் நிகழ்ச்சிகள். மனிதன் உள்ளவரை தொடர்ந்துகொண்டே இருக்கும். இறுதியில் இறைவனின் மன்னிப்பிலும் இரக்கத்திலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் நிறைவும் முழுமையும் பெறுவதே வாழ்வின் அமைப்பு. இதை இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்

No comments:

Post a Comment