அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, September 17, 2017

''நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்கவேண்டும் அல்லவா?'' (மத்தேயு 18:33)

''நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு
இரக்கம் காட்டியிருக்கவேண்டும் அல்லவா?'' (மத்தேயு 18:33)

-- ''மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை'' என்னும் தலைப்பில் வருகின்ற கதை வழியாக இயேசு நமக்கு மன்னிப்பின் மேன்மையைக் கற்பிக்கிறார். இக்கதையில் வருகின்ற ''அரசர்'' தமக்கு மிகப் பெரிய தொகை கடன்பட்டிருந்த ஒருவருக்கு அக்கடனை மன்னிக்கிறார். ஆனால் மன்னிப்புப் பெற்ற மனிதரோ தன் உடன்பணியாளர் தமக்குச் செலுத்த வேண்டிய ஒரு சிறு தொகையை மன்னிக்க மறுத்துவிடுகிறார். கடவுள் நம் குற்றங்களையும் பாவங்களையும் (''கடன்'') தாராள மனத்தோடு மன்னிக்கிறார். ஆனால் நாமோ நம் சகோதர சகோதரிகளின் சிறு பிழைகளையும் மன்னிக்கத் தயக்கம் காட்டுகிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் நாம் மன்னிப்பின் உண்மையான பொருளை உணராமல் இருப்பதே. மன்னிப்பு என்பது அன்பின் உச்சக்கட்டம்.
-- கடவுள் வழங்குகின்ற மன்னிப்பை நாம் பிறரோடு பகிர்ந்திட அழைக்கப்படுகிறோம். கடவுளுக்கு எதிராக நாம் செய்கின்ற குற்றங்கள் எவ்வளவுதான் கொடியனவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் மன்னிக்கக் கடவுள் எப்போதுமே தயாராயிருக்கிறார். ஆனால், நமக்கு எதிராக யாராவது குற்றம் செய்தால் நாம் மன்னிக்க மறுக்கிறோம். உண்மையிலேயே மன்னிப்பு என்னும் கொடையை நாம் கடவுளிடமிருந்து நன்றியோடு ஏற்றுக்கொண்டால் அக்கொடையைப் பிறரோடு பகிர்ந்துகொள்வது நமக்கு மகிழ்ச்சிதரும் ஒரு நிகழ்வாக அமையும். அதற்கு மாறாக, நாமே கடவுள் நமக்கு அளிக்கின்ற மன்னிப்பைப் பற்றிச் சிறிதேனும் கவலைப்படாமல், அம்மன்னிப்பின் மதிப்பை உணராமல் செயல்படும்போது பிறருடைய குற்றங்களை மன்னிக்கின்ற மனப்பான்மை நம்மில் தோன்றாது. எனவே மன்னிப்புப் பெற்ற நாம் மன்னிப்பை மகிழ்வுடன் வழங்கிட முன்வருவோம்.
மன்றாட்டு
இறைவா, நீர் எங்களை மன்னிப்பதுபோல நாங்களும் பிறரை மன்னித்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

No comments:

Post a Comment