அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, September 1, 2017

வாழ்வின் போராட்டம்

வாழ்வின் போராட்டம் - மாற்கு 6:17-29

”மனிதன் என்பவன் முரண்பாடுகளின் மூட்டை“ – என்று தத்துவ இயலில் சொல்வார்கள். ஒவ்வொரு மனிதரிடத்திலும் நல்ல குணங்களும் உண்டு. கெட்ட குணங்களும் உண்டு. ஏரோது அரசன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. யோவான் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தான் ஏரோது. அதே வேளையில் அவரை சிறையில் அடைத்ததும் ஏரோது தான். திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைக் கேட்டு குழப்பமுற்றிருந்தான். அதே வேளையில் அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். யோவானின் தலையை சிறுமி கேட்டபோது வருத்தமுற்றான், ஆனாலும் அவரைக்கொல்ல பணித்தான்.

மனித வாழ்வு உடல்சார்ந்த வாழ்வுக்கும், ஆவிக்குரிய வாழ்வுக்கும் இடையேயான மிகப்பெரிய போராட்ட வாழ்வு. இதைத்தான் பவுலடியார் தான் எதைச்செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ, அதை செய்ய முடியாமல் தவிப்பதாக கூறுகிறார். இந்தப்போராட்டம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் இருக்கும். நாம் அனைவரும் ஆவிக்குரிய வாழ்வு வாழ போராட வேண்டும். அதற்கு இறைவனுடைய துணையை நாட வேண்டும். அப்படிப்பட்ட இறைத்துணையோடு கூடிய ஆவிக்குரிய வாழ்வை வாழ, நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

நமது வாழ்வை எண்ணிப்பார்ப்போம். ஆவிக்குரிய வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறதா? அந்த எண்ணத்தை செயல்படுத்த நான் எடுக்கக்கூடிய முயற்சிகள் என்ன? அந்த வாழ்வு எனக்கு பிடித்தமான வாழ்வாக இருக்கிறதா? இந்த கேள்விகள் நமது உள்ளத்தில் எழும்போது, நிச்சயம் நமக்குள் தெளிவு பிறக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment