அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, September 28, 2017

புதிய ஏற்பாட்டில் பாவ அறிக்கை ?? ஆதாரம்

புதிய ஏற்பாட்டில் பாவ அறிக்கை ?? ஆதாரம்

பாவங்களை பிறரிடம் அறிக்கை இடுவதை குறித்து சிலர் தவறாக பேசி வருகின்றனர். நம் கத்தோலிக்க திருச்சபையை பாவசங்கித்தனத்தை குறித்து குறை கூறி மகிழ சிலர் முயல் கின்றனர். பிறரிடம் போய் நம் பாவங்களை அறிக்கை இடுவது தவறு , நாங்கள் ஆண்டவரிடம் நேரிடையாக மன்னிப்பு பெற்றுக் கொள்கின்றோம் என்கின்றனர். எப்போதுமே நம் கிறிஸ்துவத்தில் ஒரு காரியம் மறை பொருளாய் இருந்தால் , அக்காரியம் உள் அர்த்தமாகவும் , வெளியே ஒரு அடையாளமாகவும் இருக்கும். குறிப்பாக நாம் ஞானஸ்தானத்தை எடுத்துக் கொள்வோம். இதன் முக்கிய அர்த்தம் பரிசுத்த ஆவியானவர் ஞானஸ்தானம் பெறுபவரை ஆட்க்கொள்ளுதல் , அதன் மூலமாக பாவம் களைதல் . பிற சபையினர் வாக்குவாதத்தின் படி பரிசுத்த ஆவியானவரை இவர்களின் இசைகளோடும் ஆர்ப்பரிப்போடும் அழைத்து ஆட்க்கொள்ளவைத்து , இவர் திருமுழுக்கு பெற்றுக் கொண்டார் என்று சொல்ல வேண்டியது தானே===. பின் ஏன் இவர்கள் மக்களை மூச்சு முடட தண்ணீரில் முழுகி வதைக்கின்றனர்.??? எப்போதுமே இவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் அர்த்தம் இருக்காது !! ஆனால் இவர்கள் நம்மை குறை கூறுகின்றனர். திருமுழுக்கு கொடுக்க எவ்வாறு ஒரு அபிஷேகம் பெற்றவரின் துணையோடு நீரில் கொடுக்கின்றோமோ அதே போல் பாவம் களைய , உள்மனது பாவத்திற்கு வருந்தினாலும் , வெளி அடையாளமாக அபிஷேகம் பெற்றவரிடம் சொல்லி அதற்கான பரிகாரம் பெறுவது தான் முறை .இதற்க்கு பழைய ஏற்பாடு சான்றுகள் இதோ
பழைய ஏற்பாட்டில் திருச்சடத்திற்கு எதிராக பாவம் செய்தவர்கள் ஒவ்வொரு பாவத்திற்கு ஏற்றவாறு பரிகார பொருளை கொண்டு வர வேண்டும்.இது திருச் சட்டம் அதை ஆலயத்தில் குருக்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதன் பிரகாரம் அவர்கள் பாவ மன்னிப்பை பெறுகின்றார்கள் என்பதை பழைய ஏற்பாட்டில்பல இடத்தில் நாம் காண்கின்றோம்
13இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் அறியாமையினால் தவறிழைத்து, அது அவர்கள் கண்களுக்கு மறைவாய் இருந்தாலும், ஆண்டவரின் கட்டளைகளை மீறி, தகாதன செய்து குற்றத்திற்கு உள்ளானால், 14அவர்கள் செய்தது பாவம் எனத் தெரியவரும்போது, ஓர் இளங்காளையைச் சபையார் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகப் பாவம் போக்கும் பலியாகக் கொண்டு வர வேண்டும் (லேவியர் 5 : 13 , 14 )
26அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின் கொழுப்புக்குச் செய்வதுபோல, பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார். குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்; அவன் மன்னிப்புப் பெறுவான்.(லேவியர் 5 : 26 )
குரு பாவக்கழுவாய் செய்து குற்றம் போக்கும் பலியான ஆட்டுக்கிடாயை அவருக்காகப் பலியிடவேண்டும். அப்போழுது அவர் மன்னிப்புப்பெறுவார்.( 5 : 5 ) இவ்வாறு தங்கள் குற்றத்தின் காணாக்கனத்தை அவர்கள் அறிந்து கொண்டு அவர்கள் பரிகார பலி கொடுக்க , அவர்கள் குருக்களிடம் வந்து தான் ஆகவேண்டும். மேலும் அவர்கள் தங்கள் பாவங்களை குருக்களிடம் அறிக்கை இட்டு அதன் பின் தான் பரிகார பலியை கொண்டு வரமுடியும் . இதோ திருமறை நூல் கூறுவதை கேளுங்கள்
4தீமை செய்வதற்கோ நன்மை செய்வதற்கோ, எக்காரியத்திலும் ஒருவர் சிந்திக்காமல் வாய்விட்டு ஆணையிட்டபின்னர், தாம் அறியாமல் பதற்றத்தில் ஆணையிட்டு விட்டதாக அவர் உணர்ந்தால், இக்காரியத்தினாலும் அவர் குற்றவாளியே. 5மேற்குறிப்பிட்டவைகளில் அவர் தவறிழைத்தவராகக் காணப்படும்போது _தாம் இழைத்த குற்றத்தை அறிக்கையிட்டு__-, 6பாவம்போக்கும் பலிப்பொருளை ஆண்டவருக்குக் கொண்டுவரவேண்டும். ஆட்டு மந்தையிலிருந்து பிடித்த ஒரு பெண் ஆட்டையோ, செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டுக் குட்டியையோ பாவம்போக்கும் பலியாகக் கொண்டுவர வேண்டும். அவருக்காகக் குரு அவரது பாவம் நீங்குவதற்குப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்.( லேவியர் 5 : 5 ) இந்த வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள் தவறிழைத்து விடடால், ===தாம் இழைத்த குற்றத்தை அறிக்கை இட்டு ++++ யாரிடம் இவர்கள் அறிக்கை இடவேண்டும் என்றால்+++அபிஷேகம் பெற்ற குருக்களிடம் +++ என்பதையும் தெளிவாக கூறியுள்ளது. பிற சபை பிரசங்கிகளே பழைய ஏற்பாட்டில் ஒருவர் தவறிழைத்தல் அதை அறிக்கை இடடாள் தான் பலிப்பொருளை கொண்டுவரமுடியும். பாவத்தை குருக்களிடம் தான் அறிக்கை இடடால் தான் பக்லிப் பொருளை வாங்க முடியும், பரிகார பலியும் குருக்கள் தான் பலியிட முடியும் .என்று லேவியர் ஆகமம் படித்து படித்து சொல்ல இதை படிக்காமல் நீங்கள் இதை கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் உங்களால் எப்படி ஒரு பொய் குருட்டு பிரசங்கம் வைக்க முடிகிறது . ஏமாத்துக் காரர்கள்
இவர்கள் பழைய ஏற்பாட்டில் தானே இதை எடுத்தீர்கள் புதிய ஏற்பாட்டில் கூறப் பட்டுள்ளதா என்று கேட்பார்கள் ?? இதோ அவர்களுக்கு பதில்
16ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும் ( யாக்கோபு 5 : 16 ) ஒருவருக்கு ஒருவர் தங்கள் பாவங்களை அறிக்கை இட்டு கொள்ளுங்கள் என்று நம் திருமறை நூல் கூறுகின்றது . அப்படி ஒருவருக்கொருவர் அறிக்கை இட்டு தான் ஆதி திருச்சபை கிறிஸ்துவுக்குள் வளர்ந்தது
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேதுருவை பார்த்து நீ கோழி கூவும் முன் என்னை மூன்று முறை மறுதலிப்பாய் என்று எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார். பேதுரு, கைது செய்யபடட ஆண்டவரை என்ன செய்கின்றார்கள் என்பதை காண இரவு நேரத்தில் பிலாத்துவின் அரண்மனைக்குள் யூதர்கள் தங்கி இருந்த இடத்திற்கு வருகின்றார். அங்கு அவரை மூன்று ஆட்கள் , ஒரு பெண் உடபட இவன் இயேசுவோடு இருந்தவன் என்று குற்றம் சாற்று கின்றனர் . அதற்கு பேதுரு அது யார் என்றே எனக்கு தெரியாது என்று மூன்று முறை மறுதலிக்கின்றார், அப்போது பேதுரு அருகில் கிறிஸ்துவின் சீடர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிட தக்கது . அப்படியானால் இவர் மூன்று முறை மறுதலித்தார் என்பது எப்படி தெரியும் .திருத்தூதர்கள் காலத்திலேயே இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பாவ அறிக்கை இடும் போது, பேதுருவும் தன் பாவத்தை அறிக்கை இட்டு இருக்கின்றார். அதோடு மட்டும் அல்ல,, தன் பாவத்திற்காய் எப்படி தேம்பி தேம்பி அழுது இருக்கின்றார் என்பதையும் கூறியதால் இதை நாம் மாற்கு நற்செய்தியில் காண்கின்றோம்
72உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, “சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.( மாற்கு 14 : 72) இது எப்படி எல்லோருக்கும் தெரிய வந்தது என்றால் . பேதுரு தன் பாவத்தை அறிக்கை இட்டு அதற்காக தான் எப்படி வருந்தினேன் என்பதையும் தெளிவு படுத்தி இரு கின்றார். இதையே மத்தேயு நற்செய்தியிலும், லூக்கா நற்செய்தியிலும் நாம் காணலாம் . ஆகவே ஆதி திருச்சபையில் யாக்கோபு தன் திருமுகத்தில் கூறியதை போல மக்கள்தங்கள் பாவங்களை ஒருவர் ஒருவரிடம் அறிக்கை இடடனர் . ஆனால் அன்றிலிருந்து அபிஷேகம் பெற்றவர்களிடம் அறிக்கை இடும் பழக்கம் பழக்கமாய் இருந்து வருகின்றது . நாளடைவில் மக்கள் கூறும் பாவங்கள் அதை பிறருக்கு தெரிந்து விட கூடாது என்று கடுமையான உத்தரவை திருச்சபை கொடுத்து மக்கள் பாவமன்னிப்பு பெறுவதில் மனம் தளர்ந்து விடக் கூடாது என்பதில் அக்கறை காட்டி வருகின்றது
இப்போது பிரிவினை சபைகள் புரிந்து கொள்ளட்டும் பாவ சங்கீர்த்தனம் என்பது நமக்கு கொடுக்க படட பெரும் அருங்கொடை என்பதை . இனி இதை குறித்து தவறாக பேசிக் கூடாது என்பதே என் குறிப்பு . கேட்க செவியுள்ளவன் கேட்கட்டும்

Sunday, September 24, 2017

வியாகுலத்தாய்

வியாகுலத்தாய்

செப்டம்பர் 15 ந் தேதி தூய மரியாளை வியாகுலத்தாய் எனக் கொண்டாடுகிறோம்...

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்'

என்ற பொய்யாமொழிப் புலவனின் வார்த்தைகள் பொய்யாய்ப் போனதோ இவரிடம்!

இவரின் மகனைப் பற்றி இவரிடம் என்ன சொல்லியிருப்பார்கள் மற்றவர்கள்?

அந்த நேரத்தில் இவரின் உள்ளக்கிடக்கை என்னவாக இருந்திருக்கும்?

தான் இறக்கும் அந்தத் தருணத்தில்கூட

இவர் வளர்த்த ஆசை மகன்

'இதோ! உன் அன்பார்ந்த மகன்!'

என்று தன்னை; சுட்டிக்காட்டாமல்
தன் சீடன் ஒருவரைக் காட்டி விடுகின்றார்.

'என்னது இவர் என் மகனா? அப்படின்னா நீ எனக்கு யார்?'

'இதோ உன் தாய்!' என உன் சீடனிடம் என்னை ஏன் தள்ளி விடுகிறாய்?

என்னையும் உன்னோடு எடுத்துக்கொள்ளேன்!

'நான் உனக்கு யார்?'

எனக் கேட்டிருப்பார் இந்தக் கன்னித் தாய்.

'உன் இதயத்தை ஒரு வாள் ஊடுருவும்!'

என்று சிமியோன் சொன்னது இந்த நாளைக் குறித்துத்தானோ?

மரியாளின் கன்னிமை, அமல உற்பவம், இறைத்தாய்மை

என எல்லா இறையியல்களும் நம்மைத் தொடவில்லையென்றாலும்,

அவர் வடித்த கண்ணீர் என்னவோ நம் மனதையும் பிசைந்து விடுகிறது.

இந்நாளை இந்த அன்னையின் கண்ணீரைக் கொண்டாடும் வேளையில்

அன்றாடம் கண்ணீர் வடிக்கும்  கண்கள் நோக்கி

என் கரம் நீண்டால்

இந்த நாள் திருநாள் வெற்றி!⁠⁠⁠⁠

சிலுவை

சிலுவை

யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும், பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார். (1 கொரிந்தியர் 1:22-24)

நெம்புகோல் தத்துவத்தைக் கண்டுபிடித்த ஆர்க்கிமெடீஸ் ஒருநாள் என்ன சொன்னார் தெரியுமா? 'இந்தப் பால்வெளியில் நான் நிற்கக் கொஞ்சம் இடமும், நீண்ட நெம்புகோலும் கொடுங்கள். நான் இந்தப் பூமியின் இருப்பிடத்தை நகர்த்திக் காட்டுகிறேன்'. ஆனால் அன்று அதை அவருக்குக் கொடுப்பார் யாருமில்லை.

கல்வாரி என்ற இடத்தில் நின்று கொண்டு, சிலுவை என்ற நெம்புகோலால் அன்பை நோக்கி, மன்னிப்பை நோக்கி, தியாகத்தை நோக்கி பூமிப்பந்தை மாற்றிப் போட்டார் இயேசு.

நாளை திருச்சிலுவையின் மகிமை பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

எதற்காக தன் மகன் இயேசுவை கடவுள் சிலுவையில் அறையப்பட்டு இறக்க வேண்டும் என நினைத்தார்? ஒரு தந்தை எப்படி தன் மகனையே பலியாகக் கேட்டார்? சிலுவையில் இயேசு இறந்ததால் நம் பாவம் அழிக்கப்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? சிலுவையில் இயேசு அறையப்பட்டபோது அங்கே அவர் கடவுளாக இறந்தாரா? அல்லது மனிதராக இறந்தாரா? கடவுளாக இறந்தார் எனில் அந்த நாளில் கடவுளின் முழுமைக்குக் குறைவு வருமே? மனிதராக இறந்தார் எனில் அவரோடு இறந்த மற்ற மனிதர்களைப் போலத்தானே அந்த இறப்பும் இருந்திருக்க வேண்டும்? இயேசுவின் மேல் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு ஆலயம் சம்பந்தப்பட்டது. ஆலயம் சம்பந்தப்பட்ட குற்றத்திற்கு கல்லெறியே தண்டனை. பின் ஏன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்? - இவைகள் எல்லாம் விடைதெரியா மில்லியன் டாலர் கேள்விகள்.

சிலுவை என்ற ஒரு எதார்த்தத்தை இறையியலாக மாற்றியவர் தூய பவுலடியார். யூதர்கள் வலுவின்மை எனவும், கிரேக்கர்கள் மடமை எனவும் நினைத்ததை கடவுளின் வல்லமை என்றும், கடவுளின் ஞானம் என்றும் எதிர்ப்பதங்களின் வாயிலாக சிலுவை இறையியலுக்கு அடித்தளமிடுகின்றார். பவுலடியாரின் இறையியில் பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகம் 2ஆம் அதிகாரத்தில் நிறைவு பெறுகிறது. 'கெனோசிஸ்' (வெறுமை) என்ற கிரேக்க வார்த்தையை மையமாக வைத்து இயேசுவின் வாழ்விற்கு சிலுவையின் வழியாக ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார்.

இன்று நாம் வாழும் உலகம் 'ஐக்கன்களின்' உலகம். ஒவ்வொன்றையும் குறிக்க, அடையாளப்படுத்த நாம் 'ஐக்கன்களை' வைத்திருக்கிறோம். 'எஃப்' என்றால் ஃபேஸ்புக், 'டி' என்றால் டுவிட்டர், 'கடித்த ஆப்பிள்' என்றால் ஆப்பிள் தயாரிப்புகள், 'நான்கு ஜன்னல்கள்' என்றால் விண்டோஸ், 'கை உயர்த்தும் பச்சை மனிதன்' என்றால் ஆண்ட்ராய்ட், 'எம்' என்றால் மோட்டோரோலா, 'எம்' என்றால் மேக்டொனால்ட்ஸ் என ஐக்கன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அந்த வகையில் 'கிராஸ்' என்பதும் இன்று ஒரு ஐக்கன். மருத்துவமனையில், ஆம்புலன்சுகளில், முதலுதவிப் பெட்டிகளில், பள்ளிகளில், ஆலயங்களில், கொடிக்கம்பங்களில், கால்குலேட்டர்களில், பெண்களின் சங்குக் கழுத்துக்களில், மோதிர விரல்களில் என எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அதிகமாக நாம் பார்த்து அதன் பொருளை மறந்துவிட்ட ஒரு ஐக்கன் தான் 'கிராஸ்'.

சிலுவைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்க முடியும். சிலுவை என்றால் இணைப்பு, சிலுவை என்றால் பிறரன்பு மற்றும் இறையன்பின் பிணைப்பு, சிலுவை என்றால் துன்பம், சிலுவை என்றால் கூட்டல் என தனிநபரைப் பொறுத்தே அர்த்தம் இருக்கின்றது.

இன்று திருச்சிலுவையின் மகிமை என்று சொல்லும் போது கூட்டத்தோடு சேர்ந்து நாமும் அதே போல சொல்லிவிட்டு வருவதற்குப் பதிலாக, 'இந்தச் சிலுவை என்றால் என்ன?' 'இந்தச் சிலுவை அடையாளம் எனக்குக் கற்றுக்கொள்ளப்படாவிட்டால் அது எனக்கு என்ன அர்த்தம் கொடுக்கும்?' 'சிலுவை என்றால் என்ன?' என்று இன்று நம்மை யாராவது கேட்டால் நாம் என்ன சொல்வோம்?'

சிலுவை அன்றும், இன்றும், என்றும் மறைபொருளாகவே இருக்கும்.⁠⁠⁠⁠

‘என் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகள் அல்ல’

‘என் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகள் அல்ல’

முன்பொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகச்சிறந்த ஞாபகசக்தி உடையவன்; அதோடு கூர்மையான அறிவும் நிரம்பப் பெற்றவன். ஒரு கவிதையை ஒருமுறை கேட்டால் போதும்; அதை வரிமாறாமல், வார்த்தை மாறாமல் அப்படியே திருப்பிச்சொல்ல அவனால் முடியும். அவன் சபையில் விதூஷகன் ஒருவன் இருந்தான். அவனும் நினைவாற்றலில் சிறந்தவன்தான். எதையும் இரண்டு முறை கேட்டால், அப்படியே திருப்பிச் சொல்லும் சக்தி உடையவன் அவன். அந்த அவையில் அடிமைப்பெண் ஒருத்தி இருந்தாள்.  மூன்றுமுறை கேட்டால், அதை அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வாள் அவள்.

அந்த அரசன் ஓர் நயவஞ்சகன். எந்தப் புலவன் வந்து மன்னனைப் புகழ்ந்து பாடினாலும், 'நீ பாடவிருக்கும்  பாடல் இதுவரை நான் கேள்விப்படாத, உன்னுடைய சொந்தப் பாடலாக இருந்தால், தகுந்த சன்மானம் தருவேன்”  என்பான்.

வந்த புலவனும், தன் கவிதையைப் படிப்பான். ஒருமுறை கேட்டதுமே மன்னனுக்குத்தான் அது மனப்பாடம் ஆகிவிடுமே! எனவே, ஏதோ ஒரு பெயரைக் குறிப்பிட்டு, “அந்தக் கவிதை அவர் எழுதியது; நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்” என்று சொல்லி, அதை அப்படியே மளமளவென்று ஒப்பிப்பான். புலவன், ''இல்லை. இந்தக் கவிதை என் சொந்தக் கவிதை'' என்று சாதித்தால், “கிடையவே கிடையாது! இந்தக் கவிதை என் விதூஷகனுக்குக்கூடத் தெரியும்” என்று சொல்லி, விதூஷகனைப் பாடச்சொல்வான் மன்னன்.  புலவன் பாடி ஒருமுறை, மன்னர் திரும்பச் சொல்லி ஒருமுறை என விதூஷகன் அந்தக் கவிதையை இரண்டு முறை உன்னிப்பாகக் கவனித்திருப்பதால், அவனும் அதை வரி மாறாமல் சொல்லுவான். அப்போதும், ''இருக்க முடியாது! இந்தக் கவிதையை நான் நேற்றுத்தான் புனைந்தேன்!'' என்று புலவன் அழாக்குறையாகச் சொன்னால், “இல்லை. நீ பொய் சொல்கிறாய். என்னுடைய அடிமைப்பெண்கூட இந்தக் கவிதையைச் சொல்வாள்” என்று சொல்லி, அவளைச் சொல்லச் சொல்லுவான் அரசன். மூன்று முறை கேட்டதால், அவளும் வார்த்தை பிசகாமல் அந்தக் கவிதையைத் திரும்பச் சொல்ல, புலவன் குழம்பிப்போய் சித்தம் கலங்கி, புத்திசுவாதீனத்தை இழக்கும் அளவுக்கு வந்துவிடுவான்.

'அல் அஸ்மாய்' என்கிற கவிஞனுக்கு மட்டும் இந்த உண்மை தெரியும். அரசனுடைய நினைவாற்றல் குறித்தும் தெரியும். எனவே, இதுவரை யாரும் உபயோகிக்காத வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்தி, அவர் ஒரு கவிதையைத் தயார் செய்தார். அதை அரசனோ, விதூஷகனோ, அடிமைப்பெண்ணோ மனப்பாடம் செய்து திரும்பச்சொல்லவே முடியாது என்கிற அளவில் மிகக் கடினமான ஒரு கவிதையை உருவாக்கினார் அவர். பின்பு, ஒரு வழிப்போக்கரைப்போல மாறுவேடம் பூண்டு, அரசவைக்குச் சென்றார்.

“மன்னரே, நான் உங்களைப் புகழ்ந்து ஒரு கவிதை தயாரித்திருக்கிறேன்.  உங்களுக்கு படித்துக்காட்ட விரும்புகிறேன்” என்றார். அதற்கு அரசர், “புலவரே! என் நிபந்தனை உங்களுக்குத் தெரியும் அல்லவா?” என்றார். “நன்றாகத் தெரியும். அந்த நிபந்தனைக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்” என்று சொல்லி அவர் அந்தப் பாடலைப் பாடிக் காண்பித்தார்.  கடினமான பதங்களுடன்கூடிய, கரடுமுரடான வரிகள் கொண்ட அந்தப் பாடலைக் கேட்ட மன்னனால், திருப்பிச் சொல்ல முடியவில்லை. மன்னரே தடுமாறியதால், விதூஷகனும் மலங்க மலங்க விழித்தான். அடிமைப்பெண்ணாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் மன்னன் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டான். 'அல் அஸ்மாய்’ என்ற அந்த கவிஞனின் வழிமுறை, எண்ணம், அணுகுமுறை எல்லாம் வித்தியாசமாக இருந்தது. அதனாலேயே அவரால் நயவஞ்சக அரசனை வெற்றிக்கொள்ள முடிந்தது.

பொதுக்காலத்தின் இருபத்து ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் அனைத்தும் ‘கடவுளின் வழிமுறைகள், எண்ணங்கள் எல்லாம் மனிதரின் வழிமுறைகள், எண்ணங்கள் அனைத்தையும் விட உயர்வானது என்ற சிந்தனையை வழங்குகின்றது. அது எப்படி என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுகின்ற திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையில்,  வேலையாட்கள் திராட்சைத் தோட்டத்தில் உழைப்பதற்காக விடியற்காலை, காலை ஒன்பது மணி, பகல் பன்னிரண்டு மணி, பிற்பகல் மூன்று மணி, மாலை ஐந்து மணி என வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஆனால் கூலிகொடுக்கப்படும்போது எல்லாரும் சமமான கூலி பெறுகிறார்கள். இதனால் முன்கூட்டியே வேலைக்கு வந்தவர்கள் முணுக்கிறார்கள். ஆனால் திராட்சைத் தோட்ட உரிமையாளரோ, எல்லாருக்கும் சமமான கூலி கொடுப்பது  தன்னுடைய விருப்பம் என்று சொல்லி அவர்களுடைய வாயை அடைக்கின்றார்.

வேலைக்குத் தகுந்தவாறுதான் கூலிகொடுக்கவேண்டும் என மனித கண்ணோட்டத்தில் நாம் சொல்லலாம். ஆனால் கடவுளது பார்வை அப்படிக்கிடையாது, அது இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிப்பதுபோல ‘கடவுளின் எண்ணங்கள் மனிதர்களின் எண்ணங்களைவிட உயர்ந்ததாக, கடவுளின் வழிமுறைகள் மனிதர்களின் வழிமுறைகளைவிட உயர்ந்ததாக இருக்கின்றது. உவமையில் கடவுளின் எண்ணம் எந்தளவுக்கு மனிதர்களின் எண்ணங்களை விட உயர்ந்து நிற்கின்றது என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஏற்கனவே சொன்னதுபோல மனிதர்களாகிய நாம் வேலைக்குத் தகுந்த கூலியைத்தான் தருகின்றோம். ஆனால் ஆண்டவராகிய கடவுளோ அதற்கு மேலும் சென்று கூலியைத் தருகின்றார். இந்த உவமையைக் குறித்து சொல்கிறபோது ஒருசில விவிலிய அறிஞர்கள், “திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடைசியில் வந்த கூலியாட்களுக்கும் ஒரு தெனாரியம் கொடுக்கக் காரணம், அந்த கூலியாட்களை நம்பி அவர்களுடைய குடும்பம் இருக்கிறது. எனவே ஒரு தெனாரியத்திற்கும் குறைவாக ஊதியம் கொடுத்தால் அவர்களுடைய குடும்பம் பட்டினியில் வாடக்கூடும் என்பதற்காகத்தான் திராட்சைத் தோட்ட உரிமையாளர் இப்படிச் செய்தார்” எனக் கூறுவார்கள்.

அப்படியானால் விடியற்காலையிலிருந்தே வேலைபார்க்கும் கூலியாட்களுக்கு ஒரு தெனாரியம் என்ற கூலி அநீதியாக இல்லையா? என்று நாம் கேள்வி கேட்கலாம். அதற்கு உவமையிலே பதில் இருக்கின்றது. திராட்சைத் தோட்ட உரிமையாளார் தனக்கு எதிராக முணுமுணுத்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார், “நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விரும்பம்” என்று. ஆகவே திராட்சைத் தோட்ட உரிமையாளர் யாருக்கும் அநீதி இழைக்கவில்லை, மாறாக கடைசியில் வந்த கூலியாட்கள்மீது, அவர்கள் குடும்பத்தின்மீது கொண்ட இரக்கத்தினால் பெருந்தன்மையோடு நடந்துகொண்டார் எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆண்டவராகிய கடவுளும் எளியவர், சமுதாயத்தில் உள்ள வறியவர்பால் அதிக அன்பும், கரிசனையும் கொண்டு இருக்கிறார் என்றால், பணம்படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் கடவுள் அநீதியாக நடந்துகொள்கிறார் எனப் புரிந்துகொள்ளக்கூடாது. மாறாக எளியவரும், வறியவரும் தங்களுடைய வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இப்படிச் செயல்படுகின்றார் எனப் புரிந்துகொள்ளவேண்டும். (இடஒதுக்கீட்டையும் இங்கே இணைத்துப் பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்)

பல நேரங்களில் மனிதர்கள் அப்படியிருப்பதில்லை. கடவுளின் தயவு எளியவருக்குக் கிடைத்துவிட்டால் வலியவர்கள் அதைக்கண்டு பொறாமை கொள்கிறார்கள். உவமையிலும்கூட திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடையில் வந்த கூலியாட்களுக்கு ஒரு தெனாரியம் கொடுத்ததை முதலில் வந்தவர்கள் பொறாமைக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அதனால்தான் அவர், “நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?” என்கிறார். ஆகவே வாழ்க்கையில் எத்தகைய தருணத்திலும் ஒரு மனிதரின் வளர்ச்சியைக் கண்டு மகிழவேண்டுமே ஒழிய பொறாமைப்படக் கூடாது. பின்னர் பொறாமையே அம்மனிதரின் அழிவுவுக்குக் காரணமாகிவிடும்.

ஓர் ஊரில் துணி துவைப்பவனும் மண்பானை செய்கின்ற குயவனும் அருகருகே வசித்து வந்தார்கள். துணி துவைப்பவனோ வசதியாக இருந்தான். இதைக் கண்டு குயவனுக்குத் தாங்கமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் குயவன் துணி துவைப்பவனை பொறாமைக் கண்கொண்டு பார்த்தான். குயவன் துணிதுவைப்பவனை எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டும் எனத் தீர்மானித்தான்.

ஒருநாள் அவன் அந்நாட்டு அரசனிடம் சென்று, நயவஞ்சகமாகப் பேசி அவரைத் தன்பக்கம் இழுத்து, அழுக்குத் துணிகளை வெள்ளை வெளேரென வெளுக்கும் துணி துவைப்பவனை அரண்மனையில் இருக்கும் பட்டத்து யானையை வெள்ளை வெளேரென ஆக்கும்படி கேட்டுக்கொண்டான். அரசரும் குயவனுடைய பேச்சில் மயங்கி, துணி துவைப்பவனை அழைத்துக்கொண்டு வரச் சொல்லி அவனை யானையை வெள்ளையாக வெளுக்கும்படி கேட்டுக்கேட்டான். இதைக் கேள்விப்பட்ட துணி துவைப்பவன் இவையெல்லாம் தன்னுடைய வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் குயவனின் வேலையாகத் தான் இருக்கும் எனப் புரிந்துகொண்டான். எனவே அவன் அரசனிடம், “மன்னா! இந்த யானையை வெள்ளையாக ஆக்கவேண்டுமென்றால், அதற்கு ஒரு பெரிய மண்பானை தேவைப்படும். அந்த மண்பானையில் வைத்துத்தான் இந்த யானையை குளிப்பாட்டி, வெள்ளையாக்க முடியும்” என்றான்.

உடனே அரசன் குயவனிடம், யானையைக் குளிப்பாட்டும் அளவுக்கு ஒரு மண்பானையை செய்துகொண்டு வருமாறு கேட்டுக்கொண்டான். குயவனும் ஒருமாத காலம் கடுமையாகப் போராடி, யானை குளிக்கும் அளவுக்கு ஒரு மண்பானையைக் கொண்டுவந்தான். பின்னர் அரசன் அங்கே இருந்த சேவகர்களிடம், யானையை தூக்கி மன்பானைக்குள் இறக்கிவைக்குமாறு கேட்டுக்கொண்டான். சேவகர்களும் மன்னர் சொன்னதற்கு இணங்க யானையைக் கட்டி, மண்பானையில் இறக்கி வைத்தார்கள். ஆனால் அந்தோ பரிதாபம் யானையின் எடை தாங்காமல் மண்பானை உடைந்து போனது. இதைப் பார்த்த அரசன் குயவனிடம் இன்னொரு மண்பானை செய்துகொண்டு வருமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு குயவனோ, “அரசே! என்னால் இன்னொரு மண்பானை செய்யமுடியாது. துணி துவைப்பவன் மீது கொண்ட பொறாமையினால்தான் நான் இப்படி யானையை வெள்ளையாக்கும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அது எனக்கே வினையாகும் என்று நினைக்கவில்லை என்று சொல்லி, தன்னுடைய தவற்றை உணர்ந்து வருந்தி அழுதான்.

பொறாமையோடு வாழ்பவன் தன் பொறாமையினாலே அழிவான் என்பது இந்தக் கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஆகவே, பிறர் வளர்ச்சியடையும்போது பொறாமைப்படாமல், மகிழ்ச்சியுறுவோம். ஆண்டவர் எப்படி எளியவர்மீது அதிகமாக அன்பும், இரக்கமும், கரிசனையும் கொண்டு வாழ்கிறாரோ அதைப் போன்று நாமும் எளியவர், வறியவர்மீது அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.

சபைக் கண்காணிப்பாளராக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராக இருக்க வேண்டும்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-13

அன்பிற்குரியவரே, சபையைக் கண்காணிக்கும் பொறுப்பை நாடுகிற எவரும் மேன்மையானதொரு பணியை விரும்புகிறார். இக்கூற்று உண்மையானது. ஆகவே, சபைக் கண்காணிப்பாளராக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவி கொண்டவராயும், அறிவுத் தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றை உடையவராயும் இருக்க வேண்டும். அவர் குடி வெறிக்கும் வன்முறைக்கும் இடங்கொடாது, கனிந்த உள்ளத்தவராய் இருக்க வேண்டும்; சண்டையையும் பொருளாசையையும் தவிர்ப்பவராக இருக்க வேண்டும்; தமது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி, தம் பிள்ளைகள் பணிவுடனும் மிகுந்த கண்ணியத்துடனும் வளர ஆவன செய்பவராக இருக்க வேண்டும். தமது சொந்தக் குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவரால், கடவுளின் சபையை எவ்வாறு கவனிக்க முடியும்?

திருச்சபையில் புதிதாகச் சேர்ந்த ஒருவர் கண்காணிப்பாளராகக் கூடாது. அவ்வாறு ஆவாரானால் அவர் தற்பெருமை கொள்ளலாம். அதனால் அலகைக்குக் கிடைத்த தண்டனையை அவர் அடைய நேரிடும். சபைக் கண்காணிப்பாளர் திருச்சபைக்கு வெளியே உள்ளவர்களிடமும் நற்சான்று பெற்றவராய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் இழிச் சொல்லுக்கு ஆளாகலாம்; அலகையின் கண்ணியிலும் விழ நேரிடலாம்.

அவ்வாறே திருத்தொண்டர்களும் கண்ணியம் உடையவர்களாக இருக்க வேண்டும்; இரட்டை நாக்கு உள்ளவர்களாகவும் குடிவெறிக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இழிவான ஊதியத்தின் மேல் ஆசை உள்ளவர்களாகவும் இருத்தலாகாது. எச்சரிக்கை! தூய மனச்சான்று உடையவர்களாய் விசுவாசத்தின் மறைபொருளைக் காத்து வரவேண்டும். முதலில் இவர்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் குறையற்றவர்கள் எனக் காணப்பட்டால் திருப்பணியாற்றலாம்.

அது போலவே பெண்களும் கண்ணியமுடையவராயும் புறங்கூறாதவராயும் அறிவுத் தெளிவு உடையவராயும் எல்லாவற்றிலும் நம்பத்தக்கவராயும் இருக்கவேண்டும்.

திருத்தொண்டர்கள் ஒரு மனைவி கொண்டவர்களாயும், பிள்ளைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்துகிறவர்களாயும் இருக்க வேண்டும். நன்கு திருத்தொண்டு ஆற்றுவோர் உயர் மதிப்புப் பெறுவர். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையைக் குறித்து அதிகத் துணிவோடு பேசுவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நம்மை உயிர் வாழச்செய்த இறைவன் போற்றி!!!

 நம்மை உயிர் வாழச்செய்த இறைவன் போற்றி! - திபா 66: 1-3. 5,8. 16-17

1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்;
2 அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3 கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை என்று போற்றுங்கள்.

5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!
அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை.
8 மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்;
அவரைப் புகழ்ந்து பாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள்.

16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்!
கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
17 அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது;
அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.



நம்மை உயிர் வாழச்செய்த இறைவன் போற்றி!!

செபம் என்பது விண்ணப்பங்களையும் மன்றாட்டுக்களையும் அடுக்கிக்கொண்டே செல்வதாக இருக்கக்கூடாது. மாறாக, அது புகழ்ச்சியின் செபமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடல் தான், இன்றைய திருப்பாடல். நம்முடைய செபம் என்று சொல்லப்படுவது அடுக்கடுக்கான விண்ணப்பங்கள் தான். விண்ணப்பங்களையும், மன்றாட்டுக்களையும் தாண்டி, நம்மால் சிந்திக்க முடியவில்லை. அதற்குள்ளாகவே நம்முடய செபத்தை அமைத்துக் கொள்வதில் நாம் நிறைவு அடைகிறோம். உண்மையான செபம் புகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, நம்முடைய செபம் அமைய வேண்டும் என்பது இங்கே நமக்கு விடுக்கப்படுகிற செய்தி.

இஸ்ரயேல் மக்கள் செபத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தனர். ஒரு நாளில் பல வேளைகளில் செபித்தனர். அதனை கடமையாகவும் எண்ணினர். அவர்களுடைய செபம் புகழ்ச்சியை அடித்தளமாகக் கொண்ட செபங்களாக இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஏனென்றால், அவர்கள் இறைவனிடமிருந்து பெறுவதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் ஏற்கெனவே நிறைய பெற்றிருந்தனர். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னாலே, அவர்களுக்கு இந்த உலகம் போதாது. அந்த அளவுக்கு இஸ்ரயேல் மக்கள், மற்றவர்களைக் காட்டிலும் நிறைவாகப் பெற்றிருந்தனர். அதிகமாகப் பெற்றிருந்தனர். எனவே தான், இஸ்ரயேல் மக்களின் வழிபாடு புகழ்ச்சிக்கு அதிகமான நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தது.

இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட நன்மையான காரியங்களை நினைத்துப்பார்த்தால், அவற்றிற்காக நன்றி செலுத்துவதற்கே நம்முடைய நாட்கள் போதாததாக இருக்கும். நம்முடைய செபமும், விண்ணப்பத்தை அதிகமாக வலியுறுத்துவதை விட, புகழ்ச்சிக்கு அதிக நேரம் ஒதுக்குவதாக இருக்கட்டும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்⁠⁠⁠⁠


மறுகிறிஸ்துவாக மாற…….

மறுகிறிஸ்துவாக மாற…….

பாலஸ்தீனப்பகுதியில் திராட்சைக்கொத்து பழுக்க ஆரம்பிப்பது செப்டம்பர் மாத இறுதியில். அதனைத்தொடர்ந்து மழைக்காலம் ஆரம்பித்துவிடும். சரியான நேரத்தில் திராட்சைப்பழங்களைப் பறிக்கவில்லையென்றால், மழைக்காலம் ஆரம்பித்தவுடன், அனைத்துமே வீணாகிவிடும். எனவே, எத்தனை பேர் வேலைக்கு வந்தாலும், அவர்களை வரவேற்று, எவ்வளவு விரைவாக அறுவடையை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிப்பதுதான் புத்திசாலித்தனம், என்பதை திராட்சைத்தோட்ட உரிமையாளர்கள் அறியாதவர்கள் அல்ல.

மத்தேயு  20: 1-16  நற்செய்தி வாசகம்யில் காலை முதல் மாலை வரை தலைவர், பணியாளர்களை வரவேற்று வேலை செய்யச்சொல்கிறார். மாலையில் வேலைக்கு வந்தவர்களும், வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கவில்லை. வேலை கிடைத்தால் செய்வதற்கு காத்திருக்கிறார்கள். ஆனால், வேலை கொடுப்பதற்கு ஆளில்லை. வேலை கிடைத்தவுடன், கூலியைப்பற்றிப் பேசாமல் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆனால், முதலில் வேலை செய்தவர்கள் ஒரு தெனாரியம் கூலி விலைபேசி, வேலை செய்கிறார்கள். கடைசியாக வேலை செய்ய வந்தவர்கள், கொடுப்பதை வாங்குகின்ற மனநிலையோடு வேலை செய்தவர்கள். இந்த உவமையை இயேசு யூதர்களுக்குச் சொல்கிறார். காரணம், யூதர்கள் தாங்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற எண்ணத்தோடு புறஇனத்தாரை இழிவாகக்கருதினார்கள். கடவுளின் அரசில் அனைவரும் சமம் என்ற கருத்தை இயேசு விதைக்கிறார்.

கிறிஸ்தவர்கள் என்பதால் நமக்கு வாழ்வு வந்துவிடாது. நாம் கிறிஸ்தவர்கள் என்பதால், மீட்பும் நமக்கு கிடைத்துவிடாது. மாறாக, நமது வாழ்வு கிறிஸ்துவுக்கு ஏற்ற ஒரு வாழ்வாக அமைய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வாழ்வு அமைய மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்⁠⁠⁠⁠

கடவுள் மீதான நமது நம்பிக்கை

கடவுள் மீதான நமது நம்பிக்கை

மத்தேயு  20: 1-16  நற்செய்தி வாசகம் கடவுளின் அன்பிற்கும், இரக்கத்திற்கும் எடுத்துக்காட்டான ஒரு பகுதியாக இருக்கிறது. இரண்டு வகையான வேலையாட்களை நாம் பார்க்கிறோம். முதல் வகையான வேலையாட்கள், தலைவரோடு ஒப்பந்தம் போடுகிறார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்று கூலி கிடைக்கும் என்பதால், அவர்கள் வேலைக்கு ஒத்துக்கொள்கிறார்கள். அவர்களின் எண்ணம் வேலையின் மீது அல்ல, தாங்கள் வாங்கக்கூடிய கூலியின் மீது இருக்கிறது.

இரண்டாவது வகையான வேலையாட்கள், தலைவரோடு ஒப்பந்தம் எதையும் போடவில்லை. தங்களுக்கு இவ்வளவு கூலி வேண்டும் என்று, அவர்கள் அவரிடத்தில் முறையிடவும் இல்லை. தாங்கள் செய்யப்போகும் வேலைக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இல்லை. நாம் வேலையைச் செய்வோம், கூலியை தலைவரே முடிவு செய்யட்டும், என்று வேலையில் கவனம் செலுத்துகிறார்கள். கடவுளின் பணியைச் செய்கிறபோது, இத்தகைய மனநிலையோடு நாம் பணி செய்ய வேண்டும். பேதுருவைப்போல, எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்தொடர்ந்தோமே? எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்று எதிர்பார்க்கக் கூடாது. நமக்கான கூலியை கடவுள் நிச்சயம் தருவார்.

கடவுளின் பணியைச் செய்கிற பணியாளர்கள் நடுவில், கடவுளைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடு இருக்க வேண்டும். அத்தகைய மதிப்பீடு நம் உள்ளத்தில் இருக்கிறபோதுதான், நமது பணி உன்னதமான, புனிதமான பணியாக இருக்கும். இல்லையென்றால், முதல் வகையான பணியாளர்களைப் போலத்தான் நமது பணி இருக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

''தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா?

''திராட்சைத் தோட்ட உரிமையாளர் வேலையாள்களுள் ஒருவரைப் பார்த்து,
'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை.
நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா?
உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமகுக்குக் கொடுத்தபடியே
கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்' என்றார்'' (மத்தேயு 20:13-14)


-- மாதச் சம்பளம் வாங்குவோருக்கும் அன்றாடம் செய்கின்ற வேலைக்குக் கூலி வாங்கிப் பிழைப்பு நடத்துவோருக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளதை நாம் அறிவோம். இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனப் பகுதிகளில் கூலி வேலை முறை வழக்கத்தில் இருந்தது. கூலி வேலை செய்தவர்களின் நிலை அடிமைகளின் நிலையை விட மோசமாக இருந்தது. அடிமைகளாவது ஒரு எசமானருக்கு ''உடைமை'' எனக் கருதப்பட்டனர். அன்றாடம் வேலை செய்து பிழைத்தவர்கள் சந்தை வெளியில் அதிகாலையிலேயே வந்து கூடுவர். அவர்களை வேலைக்கு அமர்த்த விரும்புவோர் அங்கே வந்து தமக்குத் தேவையான கூலியாள்களைக் கூட்டிச் சென்று வேலை செய்ய விடுவர். நம் நாட்டில் இன்றும்கூட இப்பழக்கம் பரவலாக உள்ளதை நாமறிவோம். அன்றுபோல இன்றும் கூலி வேலை செய்தவர்களுக்கு ஒரு நாள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிதான். வேலையில்லை என்பதற்காக அவர்களுக்கு நிவாரண உதவி அளிக்க யாரும் அக்காலத்தில் இருக்கவில்லை. அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என வாதாட தொழிலாளர் சங்கங்களும் கிடையாது. கூலி வேலைக்கு ஆள்களை அமர்த்தியவர்கள் தாங்கள் விரும்பியபடி செய்யலாம் (காண்க: மத் 20:15). எனவே, கூலியாள்களைப் பொறுத்தமட்டில் ஒரு நாள் வேலை கிடைக்காவிட்டால் அன்று அவரும் அவருடைய குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இயேசு கூறிய ''திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமை''யில் (காண்க: மத் 20:1-16) வருகின்ற நிலக்கிழார் (தோட்ட உரிமையாளர்) தமக்குத் தேவையான வேலையாள்களை விடியற்காலையிலேயே தேர்ந்துகொண்டார். ஆனால், அவர் மீண்டும் மூன்று முறை (காலை ஒன்பது மணி, நண்பகல், மாலை ஐந்து மணி) சந்தை வெளிக்குச் சென்று வேலை வாய்ப்பு இல்லாமல் நின்றிருந்தவர்களுக்கு வேலை கொடுக்கிறார். வேலை செய்து கூலி பெற்றால்தான் அன்றைய பிழைப்பு நடக்கும் என்னும் நிலையிலிருந்த அந்த கூலியாள்கள்மீது இரக்கம் கொண்டு தோட்ட உரிமையாளர் அவர்களுக்கு வேலை கொடுக்கின்றார்.

-- நாள் முழுதும் வேலைசெய்தவர்களுக்கும் ஒரு மணி மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் ஒரே சமமான கூலி கொடுக்கப்பட்டால் அது அநீதி என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனால் இயேசு வெறும் உலகப் பார்வையில் செய்யப்படுகின்ற மதிப்பீடுகள்படி கடவுள் செயல்படுவதில்லை என இந்த உவமை வழி நமக்கு உணர்த்துகிறார். உவமையில் வருகின்ற நிலக்கிழார் (தோட்ட உரிமையாளர்) கடவுளுக்கு உருவகம். அவர் தம் மக்களின் தேவைகளை உணர்ந்தவர். அவர்களை அவர் வேறுபடுத்திப் பிரித்துப் பார்த்து, ஒருவரை உயர்த்தவோ மற்றவரைத் தாழ்த்தவோ செய்வதில்லை. எல்லா மனிதரும் கடவுளுக்கு முன் சமமானவர்களே. விடியற்காலையிலேயே வந்து தோட்ட வேலை செய்தவர்கள், ''கடைசியில் வந்த இவர்களையும் நாள் முழுதும் வேலை செய்த எங்களையும் இணையாக்கிவிட்டீரே'' (மத் 20:12) என்று கேட்டது உலகப் பார்வைப் படி நியாயமான கேள்விதான். ஆனால் கடவுளின் நீதி இரக்கமும் பரிவும் தோய்ந்த அன்பு இதயத்திலிருந்து பிறக்கும் ஒன்று. கடவுளின் இரக்கத்திற்கு எல்லை கிடையாது. கடவுளின் இரக்கத்திற்கு நாம் மனித கணிப்புப்படி வேலி கட்ட முடியாது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் தத்துவம் கடவுளைப் பொறுத்தமட்டில் உண்மை ஆகாது. முதலில் வந்தாலும் சரி, கடைசியில் வந்தாலும் சரி எல்லாருக்கும் சம உரிமையே என்பதே கடவுளின் நீதி. கடவுள் நம்மை எவ்வாறு நடத்த வேண்டும் என நாம் அவருக்கு ஆலோசனை கூற நமக்கு உரிமையில்லை. அவர் ''தாராள உள்ளத்தோடு பிறருக்கு நன்மை செய்கிறாரே என நினைத்து நாம் பொறாமைப்படுவதும் முறையாகாது'' (காண்க: மத் 20:15). மாறாக, எல்லா மக்களையும் சமமாக நடத்துகின்ற ''நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும்'' (காண்க: மத் 5:48).

மன்றாட்டு
இறைவா, உம் அன்பின் பெருக்கை வியந்து உம்மைப் புகழ எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்⁠⁠⁠⁠

''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' (மத்தேயு 20:16)

''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' (மத்தேயு 20:16)


-- திராட்சைத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்த நிலக்கிழார் வேலையாள்களைத் தேடிச்செல்கிறார். விடியற்காலையிலிருந்தே தொடங்கி, கதிரவன் மறையும் வரை வேலை செய்தவர்களும், காலை ஒன்பது மணி, நண்பகல், மாலை ஐந்து மணி என வெவ்வேறு நேரங்களில் வேலைக்குச் சேர்ந்தவர்களும் ஒரே கூலியைப் பெறுகின்றனர். நாள் முழுதும் வேலை செய்தவர்களுக்கும் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் சம கூலி வழங்குவது சரியா என்னும் கேள்வி எழுகிறது. அப்போது நிலக்கிழார் கேட்ட கேள்வி: ''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' இயேசு கூறிய இந்த உவமையை வெவ்வேறு மட்டங்களில் விளக்கிப் பொருள் உரைக்கலாம். அக்காலத்தில் நிலவிய சமூக-பொருளாதார பழக்கவழக்கங்களின் பின்னணியில் இந்த உவமையைப் பார்க்கலாம். அன்றாடம் செய்கின்ற வேலைக்குக் கிடைக்கின்ற கூலியைக் கொண்டுதான் வேலையாள்கள் பிழைப்பு நடத்த வேண்டியிருந்தது. அதே நேரத்தில் பெரிய நிலங்களை உடைமையாகக் கொண்டவர்களும் இருந்தார்கள். கடவுளாட்சி பற்றி இயேசு இந்த உவமையைக் கூறியதால் அந்த ஆட்சியில் புகுவதற்கு அழைப்புப் பெற்றவர்கள் சிலர் முதலிலும் வேறு சிலர் வெகு நாள்கள் கடந்தும் நுழைந்திருக்கலாம். இஸ்ரயேலர் முதலில் வந்தனர், பிற இனத்தார் வந்துசேர நேரம் பிடித்தது. ஆனால், தம் ஆட்சியில் பங்கேற்போர் அனைவருக்கும் கடவுள் வழங்குகின்ற கொடை ஒரே தன்மையதுதான். காலையிலிருந்தே உழைத்த இஸ்ரயேலருக்கும், மாலை ஐந்து மணிக்கு வேலையில் சேர்ந்த பிற இனத்தாருக்கும் ஒரே கூலிதான். ஆனால், பின்னால் வந்தவர்களுக்கும் முன்னால் வந்தவர்களுக்கும் ஒரே சம ஊதியமே வழங்கும் கடவுள் நீதியின்றி செயல்படவில்லையா?

-- கடவுளின் நீதி மனித நீதியைப் போன்றதல்ல. மனிதர் வழங்கும் நீதி வரையறைக்கு உட்பட்டது. ஆனால் கடவுள் வழங்கும் நீதி தாராள அன்பின் அடிப்படையில் அமைந்தது. கடவுளின் அன்புதான் அவருடைய நீதிக்கு அடிப்படை. எனவே, கடவுள் அநீதியாகச் செயல்படுகிறார் என்பதைவிட, தாராள உள்ளத்தோடு நடந்துகொள்கிறார் என்பதே உண்மை. கடவுளின் தாராள அன்பைக் கண்டு குறைகூறுவோர் உண்டு. அதாவது, அளவுக்கு மிஞ்சிய தாராளத்தைக் கடவுள் காண்பிப்பதால் அவர் அநீதியாக நடக்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுவர். கடவுளின் நீதி மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என நாம் உணர வேண்டும். கடவுள் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; அதே நேரத்தில் அவருடைய கொடை எப்போதுமே தாராளமாக நமக்கு வழங்கப்படுகிறது. எனவே, கடவுளின் தாராளத்தைக் கண்டு நாம் பொறாமைப்படுதல் பொருத்தமாகாது.

மன்றாட்டு
இறைவா, அன்பில் தோய்ந்த நீதிமுறையை நாங்கள் கடைப்பிடித்து வாழ அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்


இறைவனின் நீதி !

இறைவனின் நீதி !


நீதி என்பது என்ன? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் ஆய்வு செய்ய அழைக்கிறது மத்தேயு  20: 1-16  நற்செய்தி வாசகம். ஒருவருக்குரியதை அவருக்கு வழங்குவதுதான் நீதி. இந்த நீதியும் மனிதரின் பார்வையில் ஒன்றாகவும், இறைவனின் பார்வையில் வேறொன்றாகவும் இருப்பதை இன்றைய உவமை சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், மனித நீதியை விட்டு விலகி, இறைநீதியின் பக்கம் நம் நடைபோடவும் அறைகூவல் விடுக்கிறது. மனித நீதியின்படி முதலில் பணியில் சேர்ந்து, அதிக நேரம் உழைத்தவர்களுக்கு அதிக ஊதியம் கிடைத்திருக்க வேண்டும். தாமதமாக வந்து, குறைந்த நேரம் உழைத்தவர்கள் குறைவாகப் பெற்றிருக்க வேண்டும். இதுதான் சரி. அப்போதுதான் அனைவரும் நேர்மையாக உழைப்பர்.

ஆனால், இறைவனின் பார்வை அப்படி இல்லை. அது பரிவின் பார்வையாக, பாசத்தின் பார்வையாக இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால், சில வேளைகளில் மனித, சமூக காரணங்களால் எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்புகளும், திறமைகளும் அமைந்துவிடுவதில்லை. ஒரு சிலர் பிறரைவிட பிற்பட்டவர்களாக, அல்லது பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்துவிடுகின்றனர். அவர்கள்மீது சிறப்பான ஒரு பரிவைப் பொழிந்து அவர்களுக்கும் அதிக ஆற்றலும், வாய்ப்புகளும் கிடைத்தவர்களுக்கு இணையான ஊதியத்தை தலைவர் வழங்குகிறார். இதுதான் இறை நீதி.

இட ஒதுக்கீடு என்பதுவும் இறைநீதியின் ஒரு பார்வைதான். யாருக்கு எது உரியதோ, அதை அவர்களுக்குச் சேர்த்துக்கொடுப்பதுதானே இட ஒதுக்கீடு. நமது மனித பார்வையில் நீதியைப் பாராமல், இறைவனின் பார்வையில் நீதியை, மனிதர்களைக் காணக் கற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்; நீதியின் தலைவரே இறைவா, உமது பரிவின் பார்வைக்காக உம்மைப் போற்றுகிறேன். எந்த ஒரு மனிதரையும், நிகழ்வையும், மனிதப் பார்வையில் பாராமல், உமது நீதியின் பார்வையில், பரிவின் பார்வையில் பார்க்கவும், பிறரது ஆசீர்வாதங்களைக் கண்டு பொறாமைப்படாமல், உமது வள்ளன்மையைப் போற்றவும் எனக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.



-- அருட்தந்தை குமார்ராஜா

கிறிஸ்தவ ஒற்றுமை

கிறிஸ்தவ ஒற்றுமை

மத்தேயு  20: 1-16  நற்செய்தியில் நாம் பார்க்கிற வேலையாட்கள், வேலைக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்கள்,  சோம்பேறிகள் அல்ல. காலையிலிருந்து அவர்கள் யாராவது தங்களை வேலைக்கு அழைத்துச்செல்வார்களா? என்று காத்திருக்கிறார்கள். இவர்கள் அன்றாடக்கூலிகள். சமுதாயத்தின் அடிவிளிம்பில் இருக்கக்கூடிய மக்கள். அடிமைகளைவிட இவர்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது.

அடிமைகளின் நிலைமை அவர்கள் இருக்கும் வீட்டின் நிலைமையைப்பொறுத்து மாறுபடும். உணவுக்கு அவர்களுக்கு கஷ்டம் இருக்காது. என்னதான் அடிமை வேலை செய்ய வேண்டியிருந்தாலும், பட்டினி நிலைமை இருக்காது. ஆனால், இங்கே சொல்லப்படுகிற அன்றாடக்கூலிகளின் நிலைமை அப்படி அல்ல. உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற நிலைமை. கடுமையாக நாள் முழுவதும் உழைத்தாலும், அரைவயிற்று உணவு தான் அவர்களுக்கு கிடைக்கும். ஒருநாள் வேலையில்லை என்றாலும், அவர்களின் குடும்பமே பட்டினி கிடக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட தொழிலாளர்களைத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம்.

சீடர்கள் இயேசுவோடு தொடக்கமுதலே இருப்பதால் அவர்களுக்குத்தான் முதல் உரிமை என்பதல்ல. கிறிஸ்துவை, கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி வாழ்கிற ஒவ்வொருமே கடவுளின் முன்னிலையில் சமமே. தொடக்கமுதலே இருப்பதால், நமக்கென்று சிறப்பு சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்தவ மதிப்பீடுகளை வாழ்வதில் நமக்குள்ள ஒற்றுமையை, உறுதியைக்காட்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

வாக்குறுதி மாறாத கடவுள்

வாக்குறுதி மாறாத கடவுள்

கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிக்கிறவர் என்பதனை மத்தேயு  20: 1-16  நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துவதாக உணர்கிறேன். எவ்வளவு தடைகள் வந்தாலும், இடப்பாடுகள் வந்தாலும் கடவுள் தன்னுடைய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார். இதனை விவிலியத்தின் இஸ்ரயேல் மக்களின் வாழ்வும், இயேசுவின் போதனையும் நமக்கு தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக, இன்றைய உவமை அமைகிறது.

ஒரு நாளின் பல வேளைகளில் வேலை செய்வதற்கு வேலையாட்கள் வருகிறார்கள். அவர்கள் தலைவரிடத்தில் பேரம் பேசவில்லை. எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். இந்த தலைவர், இவ்வளவு தாமதம் ஆனாலும், நமக்கு வேலை தருவேன் என்று சொல்கிறார். வேறு யாராக இருந்தால், நிச்சயம் இவ்வளவு நேரம் கழித்து, நம்மை வேலைக்கு எடுத்திருக்க மாட்டார். அவர் நமக்கு “உரிய கூலியைக் கொடுப்பேன்“ என்று வாக்குறுதியைத் தந்திருக்கிறார். நிச்சயம் நமக்கு உரிய கூலி இவரிடத்தில் கிடைக்கும், என்று தலைவரின் வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் வேலை செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். அவர்கள் தலைவரின் சொல்லில் வைத்திருக்கிற நம்பிக்கை வீண்போகவில்லை. இங்கே தலைவர் இரக்கம் காட்டுகிறவராக, புரிந்து கொள்கிறவராக, அரவணைக்கிறவராக, எதிர்ப்புகளுக்கு நடுவில், தன்னுடைய வாக்குறுதியை நிலைநிறுத்துகிறார். தலைவரை கடவுளுக்கு ஒப்பிட்டு நாம் புரிந்து கொள்ளலாம்.

நாம் தந்தையாகிய கடவுள் நம்மிம் எதிர்பார்க்கிறவற்றை நிறைவாகச்செய்கிறபோது, நிச்சயம் கடவுள் நமக்கு அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். நமது தேவை அறிந்து அவர் செய்வார். நம்மை நேரிய வழியில் வழிநடத்தி, நிறைவாழ்வைப் பரிசாகத்தருவார். அந்த நம்பிக்கையை நமது வாழ்வில் நாம் பெற்றுக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

அன்பிய பொறுப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் :

Ø  உண்மையான பக்தி

Ø  பங்கின் மேல் பாசம்

Ø  இனிமையாக பழகும் தன்மை

Ø  இணைந்து பணியாற்றும் பண்பு

Ø  சரியான குறிக்கோள் / இலட்சியம்

Ø  எடுத்த வேலையை செய்து முடிக்கும் தன்மை

திருச்சபையின் கண்ணோட்டத்தில் அன்பியம்

அகில உலக திருச்சபை அளவில்

1.   அன்பியமாகக்கூடி உரையாடல் நடத்த, நட்புறவு கொள்ள, அனுபவப் பகிர்வு செய்ய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஏடு “பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி” எண் 17 பரிந்துரைக்கிறது. “பொதுநிலையினர் தங்களுக்கிடையே சிறு சிறு குழுக்களாகக் கூடி உரையாடல் நடத்துவது உகந்ததாகும். இவ்வாறு, உண்மையான அன்பின் சான்றே திருச்சபையின் அடையாளம் என விளங்கும். மேலும், இவ்விதம் நட்புறவு கொள்வதாலும், அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதாலும் இவர்கள் ஒருவருக்கொருவர் அருள் உதவி அளித்துக் கொள்கின்றனர்.”
2.    திருத்தந்தை ஆறாம் பவுல் 1975 ல் வெளியிட்ட தனது ‘நற்செய்தி அறிவிப்பு’ Evangeli Nuntiandi என்ற மடலில் அன்பியங்கள் பற்றி இவ்வாறு விளக்குகிறார்: “திருச்சபையின் வாழ்வில் ஆழம் வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் அன்பியங்கள் ஊற்றெடுக்கின்றன;  அல்லது மனித வாழ்வில் ஏக்கத்திற்கும் தேடலுக்கும் பெரிய குழுக்களில் விடை காண கடினமாக இருப்பதால் இவை உருவெடுக்கின்றன. நம்முடைய வழிபாடு அர்த்தம் பெறுவதற்கும், நம்பிக்கையை ஆழப்படுத்துவதற்கும் உடன் பிறப்புகளாக பிறரைக்கருதி உதவி செய்வதற்கும், தேவைக்கேற்ப சேர்ந்து செபிப்பதற்கும், மக்களுக்காக பணியாற்ற நியமிக்கப்பட்டிருக்கும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் இவர்களோடு நெருக்கமாக உறவு வைத்துக் கொண்டு அவர்களின் வழிகாட்டுதலைப் பெறுவதற்கும் குழுக்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.....”
3.   திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் “அன்பியங்களை, மறைக்கல்வியின் ஒரு தளம்” என விவரித்துள்ளார்.
4.   இலத்தின் அமெரிக்க ஆயர் பேரவையால் வெளியிடப்பட்ட மெடலின் (Medellin, 1968), பீயூபிலா (Puebla, 1979) அறிக்கைகளில் அன்பியம் பற்றிக் காணப்படும் சில அம்சங்கள்:
a.    அன்பியங்கள் பெரிய சமுகத்தின் அடித்தளத் தொகுதிகள்.
b.    அன்பியங்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு மக்களிடமிருந்து உருவெடுத்தவை.
c.    அன்பியங்கள் நற்செய்தியைப் பெற்று நற்செய்தியை அறிவிக்கும் நிரந்தரக் குழுக்களாக ஒரளவுக்கு சுதந்திரமாக செயல்படுகின்றன.
d.    அன்பியங்கள் திருச்சபைப் பணிகளை, திறமையாக நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றன.

5.   டிசம்பர் 1979 ல் மணிலாவில் நடந்த அகில உலக மறைபரப்பு மாநாடு அன்பியங்கள் பற்றி கூறுவதாவது : “அன்பியங்களை மறைமாவட்ட, தேசிய, அகில உலக அளவில் உருவாக்குவதன் மூலம் உண்மையாக மறுமலர்ச்சியையும் சேவையையும் உலகுக்கு வாக்களிக்க முடியும். இது காலப்போக்கில் திருச்சபையை அருட்பணியாளர்கள் ஆதிக்கத்திலிருந்தும், அதிதீவிர நிறுவனமயமாக்கலிருந்தும், சட்டத்தின் பிடியிலிருந்தும் விடுவிக்கும்.”
6.   ஒரு பங்குத்திருச்சபை என்பது பலசிறு கிறிஸ்துவ சமுகங்களைக் கொண்ட ஒரு பெரிய கிறிஸ்தவ சமூகம் என்பதை 1987 ஆம் ஆண்டில் பொதுநிலையினர் பற்றி நடைபெற்ற அகில உலக ஆயர் பேரவை வலியுறுத்திக் கூறுகின்றது:  “ஒவ்வொரு பங்குத்தளமும் பல்வேறு சிறு சமூகங்களைக் கொண்ட, உயிர்த்துடிப்புள்ள பெரிய சமூகமாக (Communion of Communities) வளர்ந்து வருவதை மனநிறைவுடன் காண்கிறோம்.”
7.   1988 ல் பல்வேறு சூழ்நிலைகளின் மத்தியில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வெளியிட்ட பொதுநிலையினரின் பொதுநிலையினரின் மறைத்தூது பற்றிய அறிக்கையில் பங்கு மறுமலர்ச்சி பற்றி பேசும் போது, அன்பியங்களை “வாழும் சமூகங்கள்” என்று விவரிக்கிறார். “இங்கு இறைமக்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பினாலும் பணியினாலும் இறைவார்த்தைக்குச் செயல்வடிவம் கொடுக்கிறார்கள், இக்குழுக்கள் தங்கள் மேய்ப்பர்களோடு இணைந்த நிலையில் திருச்சபையின் ஒன்றிப்பு, நற்செய்திப் பணி ஆகியவற்றில் வெளிப்படையாக நிகழ்கின்றன.” என மேலும் அவர் கூறுகிறார்.

மீட்பரின் பணி 51 (Redemptoris Mission) என்னும் சுற்றுமடலில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் “அன்பியங்கள் நற்செய்தி அறிவிப்பின் வல்லமை” எனக் குறிப்பிடுகிறார்.

“திருச்சபைக்குள் இக்குழுக்கள் திருச்சபையின் உயிர்த்துடிப்பின் அடையாளங்களாகவும், வாழ்வை அன்பு நாகரீகமாக மாற்றி புது சமூகம் உருவாக  புளிக்காரமாகவும், ஏழைகளுக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் வாழ்வு நல்கி, சமூக மாற்றத்திற்கும் உதவுகின்றன. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தான் ஒரு குழுவின் உறுப்பினர் என்ற உணர்வையும் அந்த குழுவுக்குத் தான் ஆற்ற வேண்டிய கடமைகளையும் இவைகள் உணர்த்துகின்றன. இவ்வாறு இக்குழுக்கள் நற்செய்தி அறிவிப்பின் சிறந்த கருவிகளாகும்.”

ஆசிய திருச்சபை அளவில் :

1)    1978 ம் ஆண்டு நடந்த திருச்சபையின் பணி பற்றிய ஆசிய மாநாட்டில், பங்கேற்றவர்கள் அன்பியங்கள் திருச்சபையின் அவசரத் தேவை எனச் சுட்டிக்காட்டினர். “ஆசியத் திருச்சபையில் அன்பியங்களின் தேவை பெரிதும் உணரப்படுகிறது. சமூகமாக ஒன்று சேர்ந்து வருவதையும் அதில் உறுப்பினர்களாக இருந்து உறவில் நாளும் வளர்வதையும், இதனால் ஒரு சமூகத்தின் சொந்தமாக இருப்பதையும் மக்கள் தேவை என்று உணர்கின்றார்கள். கிறிஸ்தவ வாழ்வின் முழுமையான பங்கேற்புக்குரிய தளமாகவும் இவை நிகழ்கின்றன. திருச்சபை வாழ்வின் பங்கேற்புக்கு அன்பியங்கள் தான் ஒரே வழி என்றில்லை, என்றாலும் தூய ஆவியானவர் அன்பியங்கள் மூலம் வல்லமையோடு செயல்படுகிறார் எனத் தோன்றுகிறது.”
2)    1980 ம் ஆண்டு நவம்பர் 20 முதல் 30 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மறைபரப்பு அலுவலுக்கான இரண்டாவது ஆயர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்ட ஆசிய ஆயர்களின் அறிக்கையில், “திருச்சபையின் ஒன்றிப்பிற்கு இக்குழுக்களின் ஒன்றிப்பும், ஒருங்கிணைந்த செயல்பாடும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஒன்றிப்பு நிலைத்திருக்க வேண்டுமானால் ஒருவர் ஒருவரோடு கொள்ளும் உறவு களங்கமற்றதாகப் பேணிக் காக்கப்பட வேண்டும். நம்பிக்கை வாழ்வும், அர்ப்பணம் உள்ள சேவையும் இக்குழுக்களில் பகிரப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட வேண்டும். இதற்கு அடிமட்டக் குழுக்களில் இருந்து இயல்பாகவே உருவாகிவரும் தலைவர்களின் தலைமைப் பண்புகள் அக்குழுக்களுக்குச் சிறப்பான வழிகாட்டுதலாக இருந்து திருச்சபையின் படிப்பினைகளையும் மறைமாவட்டத்தின் முதன்மை அழுத்தங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.”
3)    1982 அக்டோபர் 20 முதல் 27 வரை சாம்பிராணில் Sampran ‘ஆசியாவில் திருச்சபை ஒரு விசுவாச சமூகம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் அன்பியங்கள் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்திற்கும் செயல்பாட்டுக்கும் அடையாளமாக விவரிக்கப்பட்டன. “அடித்தள கிறிஸ்துவ சமூகங்கள் தொடக்க கிறிஸ்துவ மக்களிடம் இருந்த நட்புறவையும் அன்பையும் பகிர்தலையும் வெளிப்படுத்துவதோடு பல்வேறு பணிகளும் திறமைகளும் இயல்புகளும் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து சிந்திக்க முடியும், செயல்பட முடியும் என்ற உறுதிப்பாட்டையும் கொடுக்கின்றன” என மாநாட்டின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4)    1990 ல் இந்தோனேசியாவிலுள்ள பாந்தூங் நகரில் நடந்த 5 வது ஆசிய ஆயர்கள் மாநாட்டில் அன்பியங்கள் ஆசிய திருச்சபையின் ஒரு இலட்சிய மார்க்கமாக கொள்ளப்பட்டது. அம்மாநாட்டு அறிக்கை இவ்வாறு கூறுகிறது.  “அன்பியத்தை இலக்காகக் கொண்ட திருச்சபை எப்படி இருக்க வேண்டுமென்றால் பொதுநிலையினரும், துறவிகளும், அருட்பணியாளர்களும் ஒருவரையொருவர் அங்கீகரித்து, ஏற்றுக்கொண்டு சிறுசிறு சமூகங்களாக இயங்க வேண்டும். இறைவார்த்தையால் உருவாக்கபடும் இக்குழுக்கள் செபிப்பதற்கும், இயேசுவின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கும், அன்றாட வாழ்க்கையில் ஒருவர் ஒருவருக்குத் துணையாக இருந்து சேர்ந்து செயல்படவும் இதனால் ஆதித்திருச்சபைமக்களைப் போன்று ஒரே மனமும், ஒரே உள்ளமும் கொண்ட மக்களாக வாழவும் வேண்டும். இது ஒரு பங்கேற்பு திருச்சபையாகும். இங்குத் திருச்சபையைக் கட்டி எழுப்பவும்அதன் பல்வேறு பணிகள் செவ்வனே நடைபெறவும், பரிசுத்த ஆவியின் கொடைகள் உணரப்பட்டு செயலாக்கம் பெறுகின்றன.
இது மக்களின் இதயங்களில் கட்டி எழுப்பப்பட்ட திருச்சபையாகும். இதனால் இத்திருச்சபை வாக்குப் பிறழாமையாலும் அன்பாலும் உயிர்த்த இயேசுவுக்கு சான்று பகர்ந்து, உரையாடல் மூலம் பிற சமயத்தினரையும் இணைந்து அனைவரின் முழுவிடுதலைக்காக பாடுபடும் ஒன்றாகும்.
இறுதியாக இது புளிக்காரம் போல இவ்வுலகை உருமாற்றி இன்னும் நிறைவு பெறாத இறையாட்சியின் வருகையை அறிவிக்கும் இறைவாக்கின் அடையாளமாகவும் திகழ்கிறது.
5)    1999 ஆம் ஆண்டு டெல்லியில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வெளியிட்ட ‘ஆசியத்திருச்சபை’ என்னும் மடலில் கீழ்வரும் உண்மைகளை கோடிட்டுக் காட்டுகிறார்.
¨               நம்பிக்கையாளர்கள் அன்பும் தோழமையும் கொண்டு வாழ அன்பியங்கள் உதவுகின்றன. “அடிப்படைக் கிறிஸ்துவ சமூகங்கள் எல்லாப் பங்குகளிலும், மறைமாவட்டங்களிலும் ஒன்றிப்பையும், பங்கேற்பையும் வளர்க்கும் வழிமுறைகளாகவும், நற்செய்தி அறிவிப்பின் சக்தியாகவும் திகழ்கின்றன..........    தொடக்கக்கால கிறிஸ்துவர்களைப் போன்று நம்பிக்கையாளர்கள் நம்பவும், செபிக்கவும், அன்புச் சமூகங்களாக வாழவும் அன்பியங்கள் உதவிசெய்யும்.”
¨               அன்பியம், அன்புக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகும் “இறைமக்களுக்கு உதவும் நோக்கம் என்னவென்றால், நற்செய்தியை அன்பு, தொண்டு மனப்பான்மையாய் வாழ உதவுவதற்காகும். இந்த வகையில், புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் தொடக்கமாக இது அமைகிறது. அதுவே “அன்புக் கலாச்சாரத்தின்” (Civilization of Lover) வெளிப்படாகவும் அமையும்.
¨               பங்குத்தந்தையர்கள் அன்பியத்தைக்கட்டி வளர்க்க அழைக்கப்படுகின்றனர்.  “கிறிஸ்தவர்களுக்குள் ஒன்றிப்பையும் நம்பிக்கையையும் அருளடையாளங்கள் வழியாக நெருக்கமான இறையனுபவத்தையும், வாழ்வு மாற்றத்தையும் எற்படுத்தும் புதுப்பித்தல் இயக்கங்களை ஆயர் மற்றும் ஏற்றுக்கொண்டது. இக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள், பங்கு மறைமாவட்டத்தில் வாழ்வு பணியோடு இணைந்து செயல்படுவதற்காக அவர்களை பங்குத் தந்தையர்கள் வழிகாட்டி உற்சாகப்படுத்த வேண்டும்.”

            இந்திய திருச்சபை அளவில் :

1.    1981 ம் ஆண்டு பெங்களூரில் NBCLC நடத்திய கருத்தரங்கில் அன்பியங்கள் பற்றி அலசப்பட்டது. இக்கருத்தரங்கில் அன்பியங்கள் நீதியான ஒரு சமூதாயத்தை உருவாக்கும் தலத்திருச்சபை பணியில் ஒரு திருப்பு முனையாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
2.    அகில இந்திய ஆயர் பேரவை 1974 முதல் 1988 வரை நடத்திய பொது அமர்வுகளின் இறுதி அறிக்கைகள் நற்செய்தி அறிவிப்பு, உரையாடல், இறைவேண்டல், நீதி போண்றவை செயல்பட நம்பிக்கையையும், அன்பையும், செபத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தச் சிறுக்குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசுகின்றன.
3.    1992 ல் நடைபெற்ற அகில இந்திய ஆயர் பேரவையின் பொது மாநாட்டில் இறுதி அறிக்கையில் இந்தியத் திருச்சபை இன்று சந்திக்கும் தலித் கிறிஸ்தவர்களின் கிளர்ச்சி, பெண்களுக்குச் சமூகத்தில் இழைக்கப்படும் அநீதி, ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள் படும் அவதி, பாதுகாப்பின்மை ஆகிய மூன்று சமூக பிரச்சனைகளையும் மிகச்சிறந்த முறையில் சமாளிக்க அன்பியங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
4.    1992 ல் பூனாவில் நடைபெற்ற அகில இந்திய ஆயர் பேரவையில், இக்கால கட்டத்தில் திருச்சபையின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்யக்கூடிய விரும்பத்தக்க அமைப்பாக அடித்தளத் திருச்சபை சமூகங்கள் உள்ளன. இறைமக்கள் சமூகத்தில் எல்லா பிரிவினரும் சிறு குழுக்களில் ஒன்று கூடி தலத் திருச்சபையின் எல்லா திட்டங்களையும் தீர்மானங்களையும் எடுத்து அதன் பலவிதப் பணிகளை நிறைவேற்றுகிற நம்பிக்கையாளர்களின் சமூகமே பங்கு ஆகும். ஒவ்வொரு மறைமாவட்டமும் இத்தகைய பங்கேற்புத் திருச்சபையை உருவாக்க வேண்டும்.
5.    1996 ல் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய ஆயர் பேரவையில், சிறு கிறிஸ்துவ சமூகங்களின் ஒன்றியமே திருச்சபையின் மாதிரியாகத் துலங்குகிறது. பங்குப் பேரவை உறுப்பினர்களை அன்பிய பொறுப்பாளர்களிடமிருந்து தெரிவு செய்தல் சிறந்ததாகும். இத்தகைய அன்பியத் திருச்சபையை இந்நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்ற எமது 1992 ம் ஆண்டு புனே தீர்மானத்தை மீண்டும் இப்போது உறுதி செய்கிறோம்.
6.    1998 ல் வாரணாசியில் நடைபெற்ற அகில இந்திய ஆயர் பேரவையின் போது, நமது எல்லா மறைமாவட்டங்களிலும் சிறு கிறிஸ்துவ சமூகங்களை (அன்பியங்களை) அமைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அன்பியங்களின் வழியாகவே திருச்சபை சமூகத்தின் புளிக்காரமாக செயல்படுவதை நாம் இருக்கும் இடங்களில் அனுபவ அடிப்படையில் உணர்ந்துக்கொள்ள முடியும்.
7.    2001 ல் கொல்கொத்தாவில் நடைபெற்ற அகில இந்திய ஆயர் பேரவையில், இந்தியாவில் உள்ள எல்லா மறைமாவட்டங்களிலும் அன்பியங்களை 2001 ஆம் ஆண்டு முடிவதற்குள் தொடங்க வேண்டும் என்ற கொள்கை வரைவை ஏற்படுத்தியது.
8.    2007, ஜனவரி ஆல்வேயில் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டத்தில், “பொது நிலையினரை உருவாக்கும் நாற்றங்கால் அன்பியம் ஆகும்.”


    தமிழக திருஅவை அளவில் :

1)     தமிழக ஆயர் பேரவை 1989 ஆம் ஆண்டு “புது வாழ்வு – 2000” என்னும் திட்டத்தின் வழியாக “விசுவாசப்பகிர்வுக் குழுக்களை” தமிழகத்தில் கட்டியெழுப்ப முயன்றனர். இந்த விசுவாசப் பகிர்வுக் குழுக்களை சிறு கிறிஸ்துவ சமூகங்களாகக் கட்டியெழுப்ப முடிவு செய்தனர்.
2)     2007, ஜீலை 31 முதல் ஆகஸ்டு 5 முடிய தூத்துக்குடியில் கூடிய தமிழக இலத்தின் ஆயர்களின் பேரவை அன்பியத்தை மேய்ப்புப் பணி முதன்மையாக, முதன்மைகளில் முதன்மையாகத் தீர்மானித்து, பினி வருபவற்றை முன்னிருத்தியது.
v  அன்பியம் பணிக்குழுக்களில் ஒரு பணிக்குழு அல்ல : அன்பியம் என்பது ஒரு பக்த சபையோ, சமூக சேவை சங்கமோ, மக்கள் இயக்கமோ, குழுவோ, செபத்திற்காக மட்டும் கூடும் கூட்டமோ அல்ல. மாறாக மனித வாழ்வின் அத்தனை அம்சங்களையும் இறைவார்த்தையின் ஒளியில் வாழ முற்படும் ஒரு குட்டித் திருச்சபை.
v  அன்பியம் ஒரு வாழ்க்கை முறை. புதிய முறையில் திருச்சபை:  அன்பியங்கள் திருச்சபையை புதிய இயல்புக்கு இட்டுச் செல்லவும், நம்பிக்கை துடிப்பு மிக்க இறைமக்களின் இயக்கமாக மாறவும், அன்பும், நீதியும் கொண்ட சமூகமாக விளங்கவம், இறைவார்த்தைக்கு செவிமடுத்து, அதன் உண்மையான பொருளைத் தியானித்து, உள்ளன்புடன் ஏற்று நம்பிக்கையுடன் செயல்படுத்தி, அதனை அறிக்கையிட வேண்டும். இப்படி அன்பியங்கள் நற்செய்திப் பகிர்வை மேற்கொண்டு, இறைவார்த்தையை அடித்தளமாகவும், கிறிஸ்துவை மையமாகவும் கொண்ட சமூகங்களாக உருவாகும் போது திருச்சபை புதிய இயல்புடையதாக மாறும்.
v  அன்பியத்தைப் பற்றிய தெளிவுகள் தரப்பட வேண்டும் : பங்கேற்பு அமைப்புக்களான அன்பியம் பற்றிய தெளிவு, பங்கு பேரவை மற்றும் நிதிக்குழுக்களின் தேவை, இவற்றிற்கு வேண்டிய பயிற்சிகளுக்கு மாநில மற்றும் மறைமாவட்ட விவிலியம், அன்பியம் மற்றும் பொதுநிலையினர் பணிக்குழுக்கள் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம்.
v  அன்பியங்களில் சமூதாய மாற்றத்திற்கான கூறுகள் இருக்க வேண்டும் : அன்பியங்கள் கிறிஸ்துவ அறிவை வளர்க்கவோ ஆறுதல் தரவோ, பொருளாதர உதவி செய்யவோ மட்டுமல்ல, ஆனால், இயேசுவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை மையமாகக் கொண்ட ஒரு சமத்துவ சமதர்ம சமூதாயத்தை உருவாக்குவதற்காகவே ஆகும்.

v  நமது மேய்ப்புப்பணி விளிம்பில் உள்ள அன்பியங்களில் தான் இருக்க வேண்டும் : தற்போது பங்கு, ஆலயம், ஆலய வளாகம், மற்றும் அருட்பணியாளர் இல்லம் இவைகளைச் சுற்றியே பெரும்பாலும் வழிபாடுகள், பணிகள், செயல்பாடுகள், சுழன்று கொண்டிருக்கின்றன. இவை இனி விளிம்பில் உள்ள அன்பியங்களை நோக்கி செல்ல வேண்டும். இயேசுவின் இயக்கமும் அவரது பணியும் சமுதாயத்தில் ஒரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களை நோக்கியதாகவே அமைந்தது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. 

Wednesday, September 20, 2017

தொடக்கத் திருச்சபையின் வாழ்க்கை முறையும் இன்றைய அன்பியமும்:

தொடக்கத் திருச்சபை வாழ்க்கை முறையில் இரு முக்கிய அம்சங்கள் உண்டு
        1. சமய வாழ்வு                  2.  சமூக வாழ்வு

     1.    சமய வாழ்வு :

நம்பிக்கை கொண்டோரின் சமய வாழ்வின் நான்கு படிகளாக :
·     இறைவேண்டல்

·     கற்பித்தல்


·     பகிர்தல்


·     நட்புறவு

ஆகியவற்றை காண்கிறோம். இவை நான்கும் அன்பியத்தின் முக்கிய தூண்களாகும்.

இறைவேண்டல் :
யூதர்களின் வழக்கப்படி செபக்கூடங்களில் சென்று சென்று செபிக்கவேண்டும். அங்கு 300க்கு மேற்பட்ட செபக் கூடங்கள் இருந்ததாகவும், தினந்தோறும் மூன்றுமுறை இறைவேண்டல் நடைபெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இந்த இறைவேண்டலில் இறைவார்த்தையும், அதற்கான விளக்கவுரையும் இடம் பெற்றன. இவ்வாறு நமது அன்பியங்களிலும் இத்தகைய இறைவேண்டல் சிறப்பாக இடம் பெற வேண்டும்.

கற்பித்தல் பணி :
இயேசுவின் போதனைகள் “டிடாக்கே” என்று அழைக்கப்படுகிறது. இதன் மையம் இயேசு பாடுபட்டார், இறந்தார், உயிர்த்தெழுந்தார் என்பதாகும். இந்தப் போதனையின்படி இன்றைய சமுதாயத்தின் ஆக்கிரமிப்பு சக்தியை எதிர்க்கவும், நீதியை நிலைநாட்ட தேவையான உண்மை, அன்பு சமத்துவம், சகோதரத்துவம் போன்ற இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வில் கடைப்பிடிக்க உதவுவதே கற்பித்தல் பணியின் நோக்கமாகும்.

பகிர்தல் :
அன்றைய யூத கலாச்சாரத்தில் எல்லோரும் ஏற்றத்தாழ்வின்றி ஒரே இடத்தில் கூடி உணவை பகிர்ந்து உண்பது வழக்கம். இதுவே அன்பியத்தின் பிறப்பிடமாக அமைகிறது. மேலும் நம்மிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நாம் மறந்து, சாதி, சமயம், மொழி கடந்து பகிர்து வாழ அன்பியம் அறைகூவல் விடுக்கிறது.

நட்புறவு பணி :

சாதி, சமயம் கடந்து நட்புறவுடன் உரையாடுவது இயேசு கற்றுத்தந்த உன்னத போதனை. சாமரியப் பெண்ணோடு உறவாடி “இயேசுவே மெசியா” என்ற செய்தியை உணரச் செய்ய இயேசு பயன்படுத்திய வழிமுறையே நட்புறவு. இதுவே அன்பியத்தின் பணி. இச்சமாரியப் பெண்ணின் நிகழ்ச்சி அன்பியம் உருவாக்கத் தேவையான அம்சங்களை நமக்கு கற்றுத் தருகிறது.

    *   இறைவார்த்தையை அறிதல் :

சமாரியப் பெண் இயேசுவை மெசியா என்று அறிகிறாள்.

    *   உரையாடல் :
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள் சமாரியப் பெண் என்றாலும், அவளோடு இயேசு உரையாடி உறவை ஏற்படுத்துகிறார்.
       
   *   ஏற்றுக்கொள்ளுதல் :
சமாரியப் பெண், இயேசு மெசியா என்று அறிந்தபோது, அவரை மீட்பராக ஏற்றுக்கொண்டு தன் வாழ்வை மாற்றுகிறாள்.
     
  *   செயல்பாடு :
அவள் ஊருக்குள் சென்று, மெசியாவை வந்து பாருங்கள் என்று எல்லோருக்கும் அழைப்பு விடுத்தாள்..

   *   புதுவாழ்வு பெறுதல் :
மேலும் அவள் மற்றவர்களுக்கு மீட்பரை அறிமுகம் செய்த பின், பழைய பாவவாழ்வை விட்டு சான்று பகரும் புதுவாழ்வு வாழ்ந்தாள். அவ்வாறே அன்பியங்களில் நட்புறவுடன் நாம் உறவாடுவது, புதியதோர் சமுதாயம் உருவாக உதவுகிறது.


      2. சமுக வாழ்வு :

·   தேவைகளை அறிதல் :
இளம் திருச்சபையில் பாதிக்கப்பட்ட கிரேக்க கைம்பெண்கள் கவனிக்கப்படவில்லை என்று முறையிடப்பட்டது. அக்குறையை நிறைவு செய்ய 7 நபர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நாமும் நமது பகுதியில் தேவையில் உள்ளவர்களை கண்டறிந்து அன்பியங்கள் வழியாக உதவி செய்ய முயற்சி செய்யவேண்டும்.

·   ஏழைகளுக்கு உதவுதல் :
ஏழைகளின் தேவை அறிந்து உதவி செய்தல் அவசியம். இவ்வழியில் தூய பவுல் அடிகளார் தாமும் தொடர்ந்து ஏழைகள் வாழ்வு மேம்படவே உழைத்ததாகக் கூறுகிறார். இவ்வாறே நமது அன்பியம் வழியாக நாம் வாழும் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் தேவையை கண்டறிந்து அவர்களது வாழ்வு மேம்படவும், அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படவும், மாண்பு மதிக்கப்படவும் நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய முயற்சியேடுப்போம்..

·    தாராளகுணம் :
சைப்பிரசு தீவை சேர்ந்த யோசேப்பு தனக்கு உள்ளதெல்லாம் மனநிறைவோடு பகிர்ந்தார். தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து, திருத்தூதர்களது காலடியில் வைத்தார் (தி. ப. 4: 37). இவ்வாறே நாம் நமக்குள்ளவற்றை பிறரோடு பகிர, அன்பிய வாழ்வு நம்மை அழைக்கிறது.

நேர்மறை விளைவுகள் :
i)     எல்லாம் பொது உடைமையாய் மாறியது (தி.ப 4 : 32).
ii)    தேவையின் அடிப்படையில் பங்கீடு அமைந்தது (தி. ப 2 : 45, 4 : 35).
iii)    பகிர்ந்ததால் பசியில்லாத நிலை உருவானது (தி.ப 2 : 46).
iv)   மக்கள் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாய் வாழ்ந்தனர் (தி.ப 4 : 32).
v)    மக்கள் மீட்பு பெற்றனர் (தி.ப 2 : 47).

மீட்பு என்பது தனிமனிதனை மட்டும் சார்ந்தது அல்ல. ஒருவன் மீட்புப் பெறும்போது, ஒரு குழுமமே மீட்புப் பெறுகிறது. மேலும் ஒரு சமூதாயமே வாழ்வு பெறுகிறது. சமூதாயத்தில் காண்கின்ற அநீதியான ஆட்சிமுறை, முதாளித்துவ ஆட்சி அமைப்பு, ஊதியக் குறைவு, ஏற்றத்தாழ்வு, மதநல்லிணக்கமின்மை, சாதிய சாசனங்கள், அடிமைத்தன வாழ்வு போன்றவை மாற்றப்பட்டு, மக்கள் அனைவரும் ஒன்றேயென்ற இலக்கு உருவாகிறது. இதுவே உண்மையான அன்பியத் திருச்சபையின் வாழ்வாகும்.