அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 16, 2019

நற்கருணை நாதரை தகுதியான நொருங்கிய உள்ளத்துடன் அணுகுவோம்

நற்கருணை நாதரை தகுதியான நொருங்கிய உள்ளத்துடன் அணுகுவோம்
இன்று நாம் ஆலயம் சென்று திவ்ய நற்கருணை ஆண்டவரை வாங்க இருக்கிறோம். அவரைப் பெற நம்முடைய உள்ளம் தகுதியாக இருக்கிறதா? இந்த அகில உலகத்தையும் படைத்த நம் கடவுள், நம்மை உருவாக்கி காத்து வழி நடத்தி வரும் கடவுளை நம் உள்ளத்தில் பெற இருக்கின்றோம். அவரை வரவேற்க நம் உள்ளம் தகுதியாக இருக்கிறதா? நம் மேல் கொண்ட நேசத்திற்காக ஆதாம் ஏவாளால் நாம் இழந்த மோட்சத்தை நமக்கு திருப்பித் தர தன்னையே பலிப்பொருளாக்கி சொல்லோன்னாப் பாடுகள் பட்டு தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி நம்மை மீட்டு நமக்கு மோட்சத்தைத் தர காத்திருக்கும் தேவனிடம் மோட்சத்தை நம் சொந்தமாக்க அதற்குண்டான வழியில் நம்மை நடத்த தேவையான வலிமையை அவரிடம் கேட்டுப் பெற நாம் தகுதியாக இருக்கிறோமா?  நம் பாவங்களைக் களைந்து நம்மை பரிசுத்தமாக்க அந்த பரிசுத்தரிடம் நம்மையே ஒப்படைக்க தகுதியாக இருக்கிறோமா?

நன்மையே உருவான நம் தேவனைத் தவிர நமக்கு யார் நன்மை தர முடியும்… நற்கருணை ஆண்டவரைப் பெற முதல் தகுதி நம்முடைய பாவங்களையும், நம்முடைய தீய குணங்களையும் அவருக்காக விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்வதே… பின் அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்தல்…அதன் பின் உறுதியான உள்ளத்தோடு கடைப்பிடித்தல்…

நாம் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால்..அவர் நம்மை நோக்கி இரண்டு அடி எடுத்து வைப்பார்…. நாம் தயாரா… ? அவருக்காக அல்ல, நாம் வாழ்வு பெற அவரைப் பெற நாம் தகுதியுடன் இருக்கிறோமா?? 

நாம் எப்போதெல்லாம் வழுவற்று சோர்ந்து இருக்கிறோமோ அப்போதெல்லாம் நற்கருணை நாதரை தகுதியான நொருங்கிய உள்ளத்துடன் அணுகுவோம். நற்கருணை நாதர் பலத்தையும் வல்லமையும் நமக்கு அருள்வார்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

No comments:

Post a Comment