அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 16, 2019

நற்கருணையே நம் ஆன்மீக உணவு

✓நற்கருணையே நம் ஆன்மீக உணவு 
புனிதம் மிகுந்த நற்கருணை மாண்புமிக்க அருளடையாளம், அதில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே உடனிருக்கிறார். ஒப்புக்கொடுக்கிறார். உட்கொள்ளப்படுகிறார்.           
               - திருஅவைச் சட்டம்_897

✓நற்கருணை ஓர் உணவு என்ற பரிமாணம் தான் இந்த அருட்சாதனத்தின் மறைபொருள்களில் முக்கிய அம்சம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நற்கருணை பெரிய வியாழன் அன்று மாலை பாஸ்கா உணவின் சூழ்நிலையில் பிறந்தது. இதன் அமைப்பில் இது ஓர் உணவு என்பது ஒரு அரிய கூறுபாடு. "பெற்று உண்ணுங்கள்" பிறகு கிண்ணத்தை எடுத்து அவர்களுக்கு கொடுத்து "இதை பெற்று பருகுங்கள்" என்று சொன்னார் இயேசு. இவ்வாறு இறைவன் நம்மோடு ஏற்படுத்த விரும்பும் உறவை திருநற்கருணை வெளிப்படுத்துகிறது. இந்த உறவையே நாம் ஒருவர் ஒருவருடம் ஏற்படுத்த வேண்டும். எனினும் இந்த நற்கருணை உணவு இன்னுமோர் ஆழமான பொருளையும் அதாவது பலியுணவு என்னும் பொருளையும் தன்னுள் கொண்டுள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது! 
            - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல்_2004.

✓இறை அப்பமாகிய இயேசு கிறிஸ்துவின் தசையை உண்ண நான் விரும்புகிறேன். அழிவில்லா அன்பாகிய அவரின் இரத்தத்தை நான் குடிக்க விரும்புகின்றேன். நற்கருணையை உண்டும் குடித்தும் ஆண்டவர் மீண்டும் வரும் நாள் வரையிலும் அவரின் மரணத்தை அறிக்கையிடுவதன் மூலமாக, இயேசுவின் வாழ்வு நம் உடலில் வெளிப்படும் பொருட்டு அவரின் சாவை நம் உடலில் தாங்குகிறோம்!                      -புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்.

✓நற்கருணை நமது ஆன்மீக உணவு. மேலும், நற்கருணை நமது உள்ளுணர்வின் ஆதாரம். நற்கருணையை உட்கொள்ளும் நாம் அனைவரும், உடல்_உள்ளத் தூய்மையுடன் இறையாட்சியின் நிலையான அன்பிலும், நிலையான அமைதியிலும் வளர வேண்டியவர்கள். நிலையானதையும் நிறைவானதையும் வழங்கிடும் அடையாளமாக நற்கருணை அமைகிறது.  - புனித அன்னை தெரசா 

✓ "நம் வாழ்வில் நிகழும் பல்வேறு அனுபவங்களின் மையமாக திருநற்கருணை விளங்குகிறது. நம்பிக்கையும், அன்பும் இழந்து, பசித்திருப்போருடன், இந்த விருந்தை பகிர்ந்துகொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம்" - கர்தினால் பரோலின்.

✓ "திருநற்கருணை இல்லாமல், என்னால் வாழ இயலாது, அன்புகூர இயலாது, வறியோருக்குப் பணியாற்ற இயலாது" - புனித அன்னை தெரேசா  

✓ "இவ்வுலகம் சூரியன் இன்றி வாழமுடியும், ஆனால், திருப்பலியின்றி வாழ முடியாது" - புனித பாத்ரே பியோ  


✓ "சகோதரரே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட, முதலில் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்" (காண்க. மத். 5:23-24) 

#நற்கருணையை உட்கொண்ட பிறகு, இயேசுவுடன் உரையாடுகின்றேனா!! 

#அகவாழ்விற்கும், அருள் வாழ்விற்கும் உணவாக நற்கருணையை அணுகுகின்றேனா!

#நற்கருணை வெறும் பக்தி மட்டுமா? அல்லது சக்தியுமா?? 

திருமுழுக்கு பெற்று நற்கருணை உட்கொள்ளும் அனைவரும் சிந்திப்போம்.

No comments:

Post a Comment