அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, August 21, 2019

திவ்விய நற்கருணையை கழுதை வணங்கிய புதுமை!

திவ்விய நற்கருணையை கழுதை வணங்கிய புதுமை!

ஒரு முறை பதிதன் ஒருவன் அர்ச்சியசிஷ்ட அந்தோணியாரிடம் வந்து திவ்ய நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று வாதித்தான்.

அவன் அந்தோணியாரிடம் ஒரு போட்டி வைத்தான். தான் ஒரு கழுதையை மூன்று நாள் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டிணி போடுவேன். மூன்றவது நாள் நான் கழுதையை தெருவில் நிறுத்தி அதற்கு முன் நான் புல் மற்றும் தண்ணிர் வைப்பேன். நீர் நற்கருணையை கொண்டு வாரும்.

கழுதை முதலில் புல் தின்றால் நற்கருணையில் சேசுநாதர் இல்லை என்று அர்த்தம். மாறாக நற்கருணை முன் வணங்கினால் நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவேன். என்றான். அதற்கு அந்தோணியார் சம்மதித்தார்.

மூன்று நாட்களுக்கு பிறகு அந்த வீதியில் மக்கள் பலர் கூடினர். அதில் கிறிஸ்தவர்களும் பதிதர்களும் இருந்தனர். கழுதை கொண்டு வரப்பட்டது அதற்கு முன் புல் போடப்பட்டது. 

அந்தோணியார் கையில் திவ்விய நற்கருணையுடன் பவணியாக வந்தார். என்ன ஆச்சரியம் மூன்று நாள் பசியாக இருந்த கழுதை தனக்கு  முன் வைக்க பட்டு இருந்த புல் கட்டுகளைப் பாராமல் அந்தோணியார் வரும் திசையை நோக்கி முன்னங்கால்களை மடக்கி திவ்ய நற்கருணையை ஆராதித்தது.

அந்த பதிதனும் மனம் திரும்பினான்.

சிறு அதிபதி ரோமைச்சக்கரவர்த்தியான புதுமை!

சிறு அதிபதி ரோமைச்சக்கரவர்த்தியான புதுமை!

தேவநற்கருணை கொண்டு போகிற குருவானவருக்கு ஒருவன் உதவி செய்ததினால் அவனுக்கு கிடைத்த அற்புதம்.

ஜெர்மனியில் ஹாப்ஸபுர்கு என்ற பிரதேசத்தின் அதிபதியாகிய ரொதொல்ப் என்பவர் ஒருநாள் காட்டில் வேட்டையாடுகிற போது ஒரு குருவானவர் மரணபடுக்கையில் இருந்த ஒருவனுக்கு தேவநற்கருணை எடுத்துக் கொண்டு அந்த காட்டு வழியாக கால் நடையாய் போனார்.

அதிபதி இவரைக் கண்டு நினைத்ததாவது: இந்தக் குருவானவர் கொண்டு போகிற தேவநற்கருணையில் மன்னருக்கு மன்னராகிய இயேசுநாதர் இருக்கிறார் அல்லவா. அப்பேர்பட்டவரைக் கொண்டு போகிற குருவானவர் கால்நடையாய்ப் போக, நீச மனிதனாகிய நான் குதிரைமேல் போகலாமோ? இது நியாயமல்லவென்று நினைத்துக் குதிரையை விட்டு இறங்கி அந்த குருவானவரைத் தன் குதிரை மேல் ஏறிப்போகச் சொல்லி மன்றாடினான்.

அப்படியே குருவானவர் குதிரை மேல் ஏறின பிறகு அதிபதி குதிரைப் பக்கத்தில் ஒரு ஊழியனைப் போலப் போனான். நோயாளியின் வீட்டை அடைந்த பிறகு, குருவானவர் தேவநற்கருணையை நோயாளிக்கு கொடுக்கிறபோது, அதிபதி மாகா தாழ்ச்சியோடு முழங்காலிலேயிருந்தான். பிறகு, அதிபதி குருவானவரை மறுபடியும் குதிரை மேல் ஏறச்சொல்லி நீரும் சகதியுமுள்ள அந்தப் பாதையிலே கால் நடையாய் நடந்து அவருடைய கோயில் வரையில் கூடப் போனான்.

அங்கே போனபிறகு அதிபதி தன் குதிரையைக் காண்பித்து "இந்தக் குதிரை அரசர்களுக்கெல்லாம் அரசராகிய இயேசுநாதரை சுமந்ததினால் இந்தக் குதிரையின் மேல் நான் ஏறத்தகுதியற்றவன்" என்று சொல்லி அந்தக் குதிரையை கோவிலுக்கு கொடுத்து விட்டான். குருவானவர் இந்த அதிபதியின் விசுவாசத்தைக்கண்டு "தேவநற்கருணையைக் குறித்து நீர் இன்று செய்த புண்ணியத்தினால்உமக்கு இயேசுநாதர் அதிக பாக்கியம் கொடுப்பார் " என்றார் .

பிறகு ஒரு புண்ணியவதி அந்த அதிபதியைப் பார்த்து "நீர் தாழ்ச்சியோடு தேவநற்கருணைக்கு மகிமை செலுத்தினதற்காக உமக்கும் உமது குடும்பத்திற்கும் தேவநற்கருணையில் இருக்கிற ஆண்டவர் மிகுந்தவெகுமானமும் பாக்கியமும் கொடுப்பார்" என்றாள். அவ்வண்ணமே இந்த அதிபதிக்கு ரோமைச்சக்கரவர்த்தி என்கிற பெரிய பட்டம் வந்தது.

அன்பான கிறிஸ்தவ நண்பர்களே! உங்களுக்கு குருவானவர் கோவிலிலே தேவநற்கருணை கொடுக்கிறபோது நீங்கள் மிகுந்த தாழ்ச்சியுடன் இருக்க வேண்டும். தேவநற்கருணையில் பக்தியில்லாத சிலபேர்கள் அந்தச் சமயத்திலே முழங்காலில் இராமல் பட்டமரம் போல் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும், பயமில்லாமல் பேசிச் சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள் .

நீங்கள் தேவநற்கருணைக்குஎவ்வளவு தாழ்ச்சியுள்ள ஊழியம் செய்வீர்களோ, இறைமகன் அவ்வளவு வெகுமானமும், பாக்கியமும் உங்களுக்கு கொடுப்பார். அந்த அதிபதி தன் குதிரை ஒருமுறை மாத்திரம் இயேசுநாதரை சுமந்ததினால் தான் அதில் ஏறக்கூடாதென்றான் .

சகோதரரே! நீங்கள் தேவநற்கருணை வாங்கினால் உங்களுடைய உடலில் இயேசுநாதர் தாமே அநேகமுறை இருந்தார் அல்லவா? சாவான பாவம் இயேசுநாதர் இருந்த உங்களுடைய நாவிலும் இருதயத்திலும் இருக்கிறது நியாயமோ?

அந்த அதிபதி, தன் குதிரை இயேசுநாதரை சுமந்ததினால் அதை இயேசுநாதருக்குத் ஒப்புக் கொடுத்ததைப் போல, உங்களுடைய நாவிலும், இருதயத்திலும் தேவநற்கருணை வழியாகக் இறைமகன் எழுந்தருளி இருந்ததினால் அவைகளை முழுவதும் இந்த ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் .

எப்படியெனில், நாக்கைக் கொண்டு இயேசுநாதருக்கு தோத்திரம் சொல்லுவதேயல்லாமல், அவருக்குப் பொருந்தாத வார்த்தை சொல்லாமல் இருப்பது. இருதயத்திலே தேவன் வருவதற்கு அதைத் திறந்து வைக்கவேண்டும். தீய எண்ணங்கள் உள்ளே வராமல் கவனமாய் அதை அடக்க வேண்டும் .

Saturday, August 17, 2019

நற்கருணையில் நடந்த பிற புதுமைகள்

நற்கருணையில் நடந்த புதுமைகள்

பல பேர் இப்பொழுது சொல்வது போல் நற்கருணை வெறும் பகிர்வின் அடையாளம் மட்டும் அல்ல. அது இயேசுவின் திருவுடலும் கூட. நற்கருணையில் நடந்த புதுமை என்பது கத்தோலிக்க திருப்பலியில் எழுந்தேற்றம் செய்யும்போதோ அல்லது பிட்கும் போதோ நடந்த புதுமைகள், குறிப்பாக அப்பமும், திராட்சைரசமும் இயேசுவின் திருவுடலாகவும், திருரத்தமாகவும் மாறிய நிகழ்வாகும். கத்தோலிக்க விசுவாசத்தின்படி திருப்பலியில் எழுந்தேற்றம் நடக்கும் பொழுது அப்பமும் இரசமும் வெளித்தோற்றத்தில் அவ்வாறே இருந்தாலும் கிறிஸ்து இயேசுவின் திருவுடலும் திருரத்தமுமாக மாறுகிறது. ஆனால் சில கத்தோலிக்கர்கள் கூட இதில் அவிசுவாசம் கொள்கின்றனர். மிகவும் வருந்த வைக்கும் விதமாக விசுவாசத்தை வளர்க்க வேண்டிய சில குருக்களும் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் இல்லை என்றும் அது வெறும் பகிர்வின் அடையாளம் என்றும் கூறுகிறார்கள் அல்லது மறையுரையாற்றுகிரைர்கள்.

நற்கருணை புதுமையின் வகைகள்:

நடந்த புதுமைகளில் மிக அபூர்வமானது நற்கருணை மனித தசை போல் தோன்றியது. இத்தகைய புதுமை 8 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் லான்சியானோ- இல நடந்தது. லான்சியானோ நிகழ்வு மட்டும் தான் அப்பம் இயேசுவின் திருவுடலான நற்கருணை புதுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நற்கருணை புதுமை என்பது, நர்கருணையிலிருந்து இரத்தம் கசிவதாக மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நற்கருணையாக மாற்றப்பட்ட அப்பம்(எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பம்) பல நூறு வருடங்களாகியும் கேடாமளிருப்பது, நெருப்பினாலும் பாதிக்கப்படாமளிருப்பது, திருடப்பட்ட நற்கருணை மறைந்து தேவாலயத்தில் தோன்றுவது, நற்கருணை மிதப்பது அல்லது பறப்பது ஆகியவை வேறு சில புதுமைகளாக கருதப்படுகிறது.

பிற நற்கருணை புதுமைகள்

நற்கருணை பங்கிருப்பதாக எண்ணற்ற புதுமைகள் கூறப்படுகின்றன, அவற்றுள் சில இங்கே குறிப்பிடப்படுகின்றது

ஆம்ஸ்ற்றெர்டம் (Amsterdum) லிருந்து வரும் கூற்றானது 1345ம் ஆண்டு ஒரு குருவானவர் ஓர் இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதருக்கு நோயில் பூசுதல் திருவருட்சாதனம் வழங்கினார். அவர் அக்குடும்பத்தினரிடம் அம்மனிதர் அதை எறிந்துவிட்டால், அவர்களும் அதை எடுத்து நெருப்பில் எறிந்து விட வேண்டுமென்று கூறினார். அம்மனிதன் அதை எறிந்து விட்டான். குருவின் வேண்டுகோள்படியே அவர்களும் அதை நெருப்பில் எறிந்து விட்டார்கள். மறுநாள் காலை ஒரு பெண்மணி தீயை குறைக்க வந்தாள். அவள் அப்பமானது விழிம்பில் ஒளியுடன் சூழப்பட்டு இருப்பதை கண்டாள். இது ஒருவாறு மனித செரிமானப் பகுதியைய்ம், தீயையும் கடந்து விட்டதாகவே தோன்றினாலும் பாதிப்பேதும் அடையவில்லை.

மற்றொரு கூற்றின்படி, பவேரியா (Bavaria)ல் உள்ள ஒரு விவசாயி, எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பத்தை திருப்பலியிலிருந்து வீட்டிற்கு அது தனது குடும்பத்திற்கு நல்ல நேரத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் கொண்டு வந்தான். இருந்தாலும் அவன் தான் செய்வது மாபரும் தவறு என்ற உணர்வினால் மனம் நொந்து பாவமன்னிப்பு பெறுவதற்காக கோவிலுக்குச் செல்ல திரும்பினான். அங்ஙனம் அவன் திரும்பியதும் அந்த அப்பமானது கையிலிருந்து பறந்து சென்று தரையில் இறங்கியது. அவன் அதைத் தேடினான். ஆனால் அவனால் பார்க்க முடியவில்லை. அவன் திரும்பிச்சென்று உடன் பல கிராம வாசிகளுடனும் குருவுடனும் வந்தான். அவர்கள் அது சற்று தொலைவிளிருப்பதைக் கண்டார்கள். அவர்களோ அதை எடுக்க குனிந்தனர். அதுவோ மீண்டும் பறந்து சென்று மிதந்த வண்ணம் தரையில் அமர்ந்து மறைந்தது. இந்நிகழ்வு ஆயருக்கு அறிவிக்கப்பட்டு அவரும் அவ்விடம் வந்து அதை எடுக்க முயல அது மீண்டும் பறந்து சற்று அதிக நேரம் தொங்கி கீழே விழுந்து மறைந்தது.

நற்கருணை அற்புதங்கள் - விளக்கம்!

நற்கருணை அற்புதங்கள் - விளக்கம்! 

கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசம் மற்றும் போதனைப்படி, திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பம் கிறிஸ்துவின் உடலாகவும், இரசம் அவரது இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன; மேலும் இயேசு தனது ஆன்மாவோடும் இறைத் தன்மையோடும் அவற்றில் பிரசன்னமாகி இருக்கிறார். அர்ப்பண பொருட்களின் வெளித் தோற்றமும் பண்புகளும் மாற்றம் அடையாமலே இவை நடைபெறுகின்றன. 

இது பொருள் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவை தனித்தனியே ஒப்புக்கொடுக்கப்படுவது, கல்வாரியில் இயேசுவின் உடலில் இருந்து இரத்தம் தனியே பிரிக்கப்பட்டதை அடையாளப்படுத்துகிறது. இருந்தபோதிலும் அவர் உயிர்த்து எழுந்ததால், அவரது உடலும் இரத்தமும் எப்போதும் பிரிந்திருப்பதில்லை என்று திருச்சபை போதிக்கிறது; ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்றும் இருக்கிறது. எனவே, குருவானவர் அப்பத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் உடல்" என்றும், இரசக் கிண்ணத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் இரத்தம்" என்றும் கூறினாலும் அங்கு கிறிஸ்து முழுமையாக பிரசன்னமாகி இருக்கிறார், 

சீர்திருத்த காலத்துக்கு பிறகு, நற்கருணை மீதான பக்தி முயற்சிகள் தவறான கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டு சிலை வழிபாடாக கருதப்பட்டன. ஆனாலும் கத்தோலிக்க திருச்சபை, நற்கருணையில் இயேசு கிறிஸ்துவின் உண்மை பிரசன்னம் இருப்பதை இன்றளவும் நம்பி ஏற்று வருகிறது. இதற்கு காரணம் வரலாற்றில் நிகழ்ந்த பல்வேறு நற்கருணை அற்புதங்கள் ஆகும். 

நற்கருணை அற்புதங்கள் மூன்று வகைப்படும். அவை,
1. நற்கருணை அப்பமும் இரசமும், உண்மையான சதையாகவும் இரத்தமாகவும் மாறுதல். 
2. நற்கருணை அப்பம் பல ஆண்டுகள் அழியாமல் இருத்தல். 
3. நற்கருணையின் பிரசன்னத்தால் அதிசயங்கள் நிகழ்தல். 

பல பேர் இப்பொழுது சொல்வது போல் நற்கருணை வெறும் பகிர்வின் அடையாளம் மட்டும் அல்ல. அது இயேசுவின் திருவுடலும் கூட. நற்கருணையில் நடந்த புதுமை என்பது கத்தோலிக்க திருப்பலியில் எழுந்தேற்றம் செய்யும்போதோ அல்லது பிட்கும் போதோ நடந்த புதுமைகள், குறிப்பாக அப்பமும், திராட்சை ரசமும் இயேசுவின் திருவுடலாகவும், திருரத்தமாகவும் மாறிய நிகழ்வாகும்.

கத்தோலிக்க விசுவாசத்தின்படி திருப்பலியில் எழுந்தேற்றம் நடக்கும் பொழுது அப்பமும் இரசமும் வெளித்தோற்றத்தில் அவ்வாறே இருந்தாலும் கிறிஸ்து இயேசுவின் திருவுடலும் திரு இரத்தமுமாக மாறுகிறது. ஆனால் சில கத்தோலிக்கர்கள் கூட இதில் அவிசுவாசம் கொள்கின்றனர். மிகவும் வருந்த வைக்கும் விதமாக விசுவாசத்தை வளர்க்க வேண்டிய சில குருக்களும் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் இல்லை என்றும் அது வெறும் பகிர்வின் அடையாளம் என்றும் கூறுகிறார்கள் அல்லது மறையுரையாற்றுகின்றார்கள். 

நற்கருணை புதுமையின் வகைகள்: நடந்த புதுமைகளில் மிக அபூர்வமானது நற்கருணை மனித தசை போல் தோன்றியது. இத்தகைய புதுமை 8 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் லான்சியானோவில் நடந்தது. லான்சியானோ நிகழ்வு மட்டும் தான் அப்பம் இயேசுவின் திருவுடலான நற்கருணை புதுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நற்கருணை புதுமை என்பது, நற்கருணையிலிருந்து இரத்தம் கசிவதாக மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நற்கருணையாக மாற்றப்பட்ட அப்பம் (எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பம்) பல நூறு வருடங்களாகியும் கெடாமலிருப்பது, நெருப்பினாலும் பாதிக்கப்படாமலிருப்பது, திருடப்பட்ட நற்கருணை மறைந்து தேவாலயத்தில் தோன்றுவது, நற்கருணை மிதப்பது அல்லது பறப்பது ஆகியவை வேறு சில புதுமைகளாக கருதப்படுகிறது. 

இயேசுவுக்கு புகழ் !!! மாமரித்தாயே வாழ்க !! தாயே நீரே எங்கள் தஞ்சம்

நடமாடுவோம்…. நற்கருணை இயேசுவோடு….!.

நடமாடுவோம்…. நற்கருணை இயேசுவோடு….!.
வி.ப24:3-8 எபி9:11-15 மாற்14:12-16 22-26

கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே அனைவருக்கும் கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவின் வாழ்த்துக்கள்.திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பவுல் சொன்னது என் நினைவுக்கு வருகிறது..”நற்கருணை திருச்சபையை உருவாக்குகிறது திருச்சபை நற்கருணையை உருவாக்குகிறது”. திருச்சபையின் பிரிய உறுப்பினர்களாகிய நாம் இப்பெருவிழாவில் வீதிகளில் நற்கருணை பிரசன்னத்தோடு பவனி செல்வதுபோல என்றும் நற்கருணை இயேசுவோடு நடமாடி சாட்சி பகர சமூகமாக குடும்பமாக உறுதி எடுப்போம். 

கிறிஸ்தவ அழைப்பிற்கு பிராமாணிக்க பற்றுதலோடுயிருந்ததற்காக 21வருடங்களாக சிறையிலிருந்த சீன நாட்டு பேராயர் டோமினிக் டாங் மிக தைரியத்தோடு ஆற்றுதலோடு ஜந்துவருட இருண்ட அறையிலிருந்ததருணத்தில் இரண்டு மணிநேரம் தான்விரும்பியதை செய்ய வாய்ப்புகொடுக்கப்பட்டு வெந்நீரில் குளிக்கமணுமா……உடை மாற்றனுமா…..வெளியில் நடைபயிற்சி செய்யனுமா…..யாருக்காவது தொலைபேசியில் பேசனுமா….கடிதம் எழுதனுமா…..என்று கேட்டபொழுது ஆயர் டோமினிக் பதில்சொன்னது நான் நற்கருணை திருப்பலி நிறைவேற்றவிரும்புகிறேன் என்பதாகும். 

வியட்னாமில் இயேசுசபையை சார்ந்த ஜோசப் டோன் ஜந்து ஆண்டுகளாக சிறைக்கைதியாகயிருந்தபொழுது மறைவாக போரட்டங்களுக்கு மத்தியில் சககைதிகளோடு இரவில் பலசிறைக்கைதிகள் உறக்கத்திலிருக்கும்பொழுது திருப்பலி நிறைவேற்றியதை ஆனந்த கண்ணீரோடு இவ்வாறு நினைவு கூறுகிறார். “என் போர்வையே என் பீடமானது…என் சிறைஉடையே என் திருப்பலி ஆடையானது…..நான் அத்தருணத்தில் மனிதத்தோடும் அனைத்து படைப்புகளோடும் ஒன்றித்துபோனேன்”. என்பதே. 

இங்கிலாந்தின் புனித ஜோன் ஆப் ஆர்க் 1431-ல் சிறையிலிருந்தபொழுது மரணதண்டனையான எரிகின்ற நெருப்பிற்கு அழைத்துச்செல்வதற்கு முன்பாக உங்களுடைய இறுதி விருப்ப வேண்டும் உணவு என்ன என வினவியபொழுது அவள் சொன்னது நற்கருணை என்றாள். 

எவ்வாறு இவர்களின் அன்றாட வாழ்வின் நடைமுறையோடு நற்கருணை ஒன்றானதோ அதுபோல நாமும் நடமாடவேண்டும் நற்கருணை இயேசுவோடு என்ற அழைப்பை இன்றை திருவிழா நமக்கு சொல்லி அழைப்புவிடுக்கிறது

. மூன்று வாசகவார்த்தைகளும் முழுமையான பலி நிறைவுபெற்ற அன்பின் வாக்குறுதி நற்கருணையில் பிரசன்னமாகியிருக்கும் இயேவே என்பதை எடுத்துச்சொல்கிறது. இரத்தமில்லாத பலியில்லை. யூத எபிரேய வழக்கத்தில் இரத்தத்தில் தான் மனித உயிர் இருக்கிறது என பெரிய நம்பிக்கை நிலவியது. எனவேபலிசெலுத்தும் தருணத்தில் இரத்தம் சிந்தப்பட்டது பொழியப்பட்டது தெளிக்கப்பட்டது. துவக்கத்தில் இறைவன் தனிப்பட்ட நபர்களை அழைத்து அவர்களோடு தன் அழைப்பு அன்பு உடன்படிக்கையை செய்தார்.அபிராம்-ஈசாக்-யாக்கோபு போன்ற தலைவர்களாவர். பின்பு இனத்தோடு மோசேவழியாக முழு இஸ்ராயேல் சமூகத்தோடு நாட்டு மக்களோடு உடன்படிக்கைசெய்தார். 

இன்றைய முதல் வாசகவரிகளில் நாம் காண்பதுபோல உடன்படிக்கையின் பலகைகளைபெற்றபிறகு மலைஅடிவாரத்தில் நன்றியுணர்வோடு நன்றிபலியாக பாஸ்கா இரவு கடத்தலில் கிடைக்கப்பெற்ற தலைப்பிள்ளைகள் பன்னிரென்டுபேரை எரிபலி செய்ய அனுப்பி கொண்டு வந்த இறைச்சியை உணவாகவும் அதன் இரத்தத்தை சிறிது பீடத்தின்மேலும் மற்றதை கூடியிருப்போர் மேலும் தெளித்தார். எரிபலியின் வழியாக எரியும் புகை இறைவனை சேர்ந்தடைந்து தொடுகிறது தங்கள் வேண்டுதல் நன்றி என எண்ணினர். கொல்லப்பட்ட விலங்குகளின் வழியாக செலுத்தப்பட்ட பலிகள் சடங்காக மாறின பலிசெலுத்தும் குருக்கள் அர்த்தத்தை இழந்தனர். இரவும் பகலும் கொல்லப்பட்டு இரத்தம் சிந்தப்பட்டது. எருசலேம் கண்ணுக்கு தெரிவதற்கு முன்பு எருசலேமின் இரத்த வாடை உணரப்பட்டது என்றுசொல்லப்பட்டு வந்தது. 

எனவே நற்செய்தியில் இயேசு செயலால் உடன்படிக்கையை முழுமையாக்குகிறார்..எடுத்து…நன்றிசெலுத்தி…பிட்டு…அனவைருக்கும் கொடுத்து உண்ணுங்கள் …பருகுங்கள் என்ற அனைத்தும் வார்த்தைகளை கடந்த அர்த்தமுள்ள செயல்களாகும். 

பழைய உடன்படிக்கை….புதிய உடன்படிக்கை….என்ன வேறுபாடுகள்? 
பழையது கறைகளோடு குறைந்துபோனது….புதியது நிறைவானது முழுமையானது…
பழையது வெளிப்புற சுத்தம் கொடுத்தது…புதியது உள்ளத்து தூய்மை பெற்றுதந்தது…
பழையதில் விலங்குகள் கட்டாயப்படுத்தி கொல்லபட்டன…புதியதில் சுயவிருப்பத்தோடு இயேசு தன்னையே பலியாக்கினார்... 
பழையது சட்டத்தின் கட்டாயம்…புதியது அன்பின் செயல்…
பழையதில் மோசே கருவியாக செயல்பட்டார்……புதியதில் இயேசுவே பலிசெலுத்துபவராக..பலிபொருளாக பலிபீடமாக ஆனார்….
பழையது முறிந்த உடன்படிக்கை…..புதியது முடிவில்லா உடன்படிக்கை…..
நான் சொல்லவிருப்பது நாம் கொண்டாடும் இயேசுவின் திருஉடல் திருஇரத்த திருவிழாவின் வரலாற்று பின்னணி அற்புத புதுமை நிகழ்வாகும். 1263-ம் ஆண்டு ஜரோப்பிய தேசத்து செக்குடியரசின் பிராகுவேயிலிருந்து ஒரு கத்தோலிக்க குருவானவர் தன் அழைத்தலைப்பற்றிய பல்வேறு கேள்விகள் குழப்பங்கள் நம்பிக்கை குறைபாடுகள் சிந்தனைகளோடு திருப்பயணியாக உரோமை நகர் நோக்கி பயணமானார். பயணத்தின் பாதிவழியில் இத்தாலியில் உரோமையிலிருந்து 70கி.மீ தொலைவிலுள்ள போல்சேனா என்ற இடத்தில் புனித கிறிஸ்தினால் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலுள்ள பீடத்தில் திருப்பலியாற்றினார். அத்திருப்பலியில் அர்ச்சிப்பு வார்த்தைகள சொல்லி அப்பத்தை உயர்த்தியவுடன் அது சதையாகமாறி இரத்தம் கசிய துவங்கியது. .இரத்தம் பீடத்தில் மேலுள்ள கார்ப்பரோல் என்ற விரிப்புதுணிமீது படிந்தது. இந்த நற்கருணை அற்புததிற்குப்பிறகு 1264-ம்ஆண்டு திருத்தந்தை நான்காம் அர்பன் இதன் நினைவாக செய்தியாக இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை சிறப்பிக்க கட்டளைபிறப்பித்தார். இந்த அற்புதநிகழ்விற்கு பிறகுதான் அவ்வாலயத்தில் துவங்கி பல இடங்களில் நற்கருணை பவனி பகிரங்கமாக தெருக்களில் பயணமாகி வாழும் இயேசு நம்மத்தியில் நடமாடுகிறார் என்ற நற்கருணை இயேசுவோடு மக்கள் அன்றாட வாழ்வில் நடமாடதொடங்கினர். 2011-ல் மே மாதத்தில் இந்த அற்புத பிரசன்னத்தில் திருப்பலியில் இணைந்து செபித்தது புல்லரிக்ககூடிய முழுமனதை தொடக்கூடிய உணர்வு அனுபவத்தைதந்தது. இன்றும் அந்த இரத்தகறைப்பட்ட கார்ப்பரோல் (விரிப்பு துணியும்) குருவானவர் திருப்பலியாற்றிய இடமும் பாதுகாக்கப்பட்டு நம்பார்வையில் படும்பொழுது புரியஇயலா உணர்வையும் புதுவாழ்வில் புதுஅழைப்பை பெற்று தருகிறது. 

நான் அன்றாட வாழ்வில்….அனுதின நிகழ்வுகளில்…..சந்திக்கும் உறவுகளோடு…போராடும் தருணங்களில்…நற்கருணை இயேசுவோடு நடமாட தயாரா!-ஆமென். 

இது விசுவாசத்தின் மறைபொருள்

இது விசுவாசத்தின் மறைபொருள்
இச 8:2,3,14-16
1கொரி 10:16,17
யோவா 6:51-58
‘நற்கருணை இயேசு கிறிஸ்துவை முழுமையாகவும், நிறைவாகவும், பிரசன்னப்படுத்தும் அருளடையாளம்: பிற பிரசன்னங்களைவிட நிறைவாக இயேசு கிறிஸ்துவை பிரசன்னப்படுத்துவது நற்கருணை. நற்கருணை முழுமையாக இயேசு கிறிஸ்துவை தன்னகத்தே கொண்டுள்ளது. நற்கருணையே எல்லா அருளடையாளங்களின் நோக்கமும் நிறைவுமாக அமைகின்றது (திருவழிபாடு 7, விசுவாசத்தின் மறைபொருள் 38).
இன்று ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைச் சிறப்பிக்கிறோம். ஆண்டவருடைய திருவுடல் திருஇரத்தப்பெருவிழா விசுவாசத்தின் மறைபொருளாக விளங்கும் நற்கருணையை திறந்த மனதுடன் ஆழமான விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டு ஆண்டவருடைய திருப்பிரசன்னத்தை முழுமையாகப் புரிந்து வாழ அழைப்புவிடுக்கிறது. ‘இது விசுவாசத்தின் மறைபொருள்’ (அலளவநசரைஅ கனைநi) என்று திருப்பலியில் எழுந்தேற்றத்தின்போது நாம் அறிக்கையிடுவதை ஆழ்ந்து பொருளுணர்ந்து அறிக்கையிடவேண்டும். நற்கருணையைப்பற்றி குறிப்பிடும்போது அது புலப்படுத்தும், "3"> திருவிருந்து,(Communion) திருப்பலி, (Sacrifice), திருப்பிரசன்னம் (Presence)ஆகிய மூன்று கோட்பாடுகளை இறையியலாளர்கள் முன்வைப்பர். இவற்றுள் திருப்பிரசன்னம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் சொத்து திருப்பலி வழியாக கிடைக்கப்பெறும் ‘நற்கருணைப் பிரசன்னம்’ என்றால் அது மிகையன்று: திருவிருந்தாக தொடங்கிய நற்கருணையில் ஆண்டவரின் திருப்பிரசன்னம் பற்றிய விசுவாசப்போதனை முதல் நூற்றாண்டிலேயே ஆதித்திருச்சபைக் கண்டுணர்ந்தது.
1264 ஆம் ஆண்டு திருத்தந்தையால் ‘டிரான்சித்தூருஸ்’ என்ற ஆணை வழியாக இன்று நாம் கொண்டாடும் ‘ இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா அறிமுகப்படுத்தப்பட்டது. 

நற்கருணைப் பிரசன்னம்
புனித ஜஸ்டின் (+155) தன் எழுத்துக்களில் இயேசுவின் நற்கருணைப் பிரசன்னத்தை வெளிப்படுத்தியுள்ளார். ‘ஒவ்வொரு விசுவாசியும் எந்த உணவும் உண்பதற்கு முன் நற்கருணைப் பெற முயற்சிக்க வேண்டும்: விசுவாசத்தோடு அவர்கள் நற்கருணையை உண்டால் கொல்லும் நஞ்சு கூட அவர்களுக்கு தீங்கிழைக்காது’ என்று திருத்தூதர் மரபு எடுத்துரைக்கிறது. புனித அகுஸ்தினார், ‘கிறிஸ்துவின் திருவுடலை வணங்காமல் ஒருவர் அதனை உண்ணக்கூடாது’ என்று ஆணைப்பிறப்பிக்கிறார். என்கிறார். புனித சிரிலும் நற்கருணைப் பெறும்போது எப்படி மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று விவரிக்கிறார். இப்படித் திருச்சபை தொடக்கத்திலிருந்தே நற்கருணையைப் போற்றி வந்துள்ளது. நற்கருணை ஆண்டவரின் திருப்பிரசன்னத்தை வெளிப்படுத்தும் உன்னதமான அருளடையாளம். ஆகையால் கிறிஸ்தவர்களாகிய நாம் நற்கருணையை –நற்கருணையில் ஆண்டவரின் திருப்பிரசன்னத்தை- முழுமையாக உணர்ந்து விசுவசித்து அதற்கேற்ப வாழ்ந்துகாட்ட வேண்டும். 
‘இது என் உடல்’ என்று சொன்ன ஆண்டவர் பொய் சொல்லமாட்டார்: ‘இது என் இரத்தம்’ என்று சொன்ன ஆண்டவர் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார். ஆகையால் இயேசு கிறிஸ்துவே ஏற்படுத்திய நற்கருணை அழியாச்சின்னமாக, அவருடைய திருப்பிரசன்னதை;தை வலிந்து எண்பிக்கும் அருட்சாதனமாக எந்நாளும் விளங்குகிறது. ‘உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்’(மத் 28:20) என்ற சொன்ன ஆண்டவர் நற்கருணை வாயிலாகவும் நம்மிடம் பிரசன்னமாகிறார். ஆகையால் திருப்பலியில் கலந்துகொள்ளும் குரு உட்பட ஒவ்வொருவரும் நற்கருணைமீது உரிய ஆழமான விசுவாசத்தை வெளிப்படுத்தி பங்கேற்க வேண்டும். இது விசுவாசத்தின் மறைபொருள். 
திரித்தெந்து திருச்சங்கம் (13 டிசம்பர் 1545 முதல் மார்ச் 1547) இதனையே வலியுறுத்துகிறது. ஒவ்வொரு திருப்பலியிலும் உட்கருப்பொருள் மாற்றம் (வுசயளெரடிளவயவெயைவழைn) நிகழ்ந்து ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பிரசன்னம் உணரப்படுகிறது. நற்கருணைக்கு முன்பு செபிப்பதும், நோயில் இருப்போருக்கு வழியுணவாக நற்கருணையை வழங்குவதும், தொடக்கமுதல் இருந்து வரக்கூடிய பழக்கமாகும். 

5000த்திலிருந்து 11 வரை
ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும், இரண்டு மீன்களையும் அற்புதம் செய்து ஐயாயிரம் பேரையும் (ஆண்கள் மட்டுமே கணக்கில் உள்ளது) வயிறார உண்ணச் செய்தபின் அண்டவர் கடல்;மீது நடக்கிறார். மீண்டும் அதே கரை அதே எண்ணிக்கையிலான மக்கள்: அப்போதுதான் ஆண்டவர் போதிக்க ஆரம்பிக்கிறார். யோவான் நற்செய்தி ஆறாம் அதிகாரம் முழுவதும் நற்கருணையைப் பற்றி ஆழமாக போதிக்கிறது. அங்கே ஆண்டவர் நற்கருணையைப் பற்றி தானே வானின்று இறங்கி வந்து உணவு என்பதைப் பற்றிப் போதிக்கிறார். 
முதன் முறையாக ‘வாழ்வு தரும் உணவு நானே’ என்று (6:35) இயேசு கூறுகிறார். முதன் முறை சொன்ன போது அங்கே முணு முணுப்பு எழுகிறது. ‘இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? என்று (6:41) அவருடைய குலம் கோத்திரம் குடும்பச்சூழ்நிலை அலசி ஆராயப்படுகிறது. அதவாது எடுத்த எடுப்பிலேயே இதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. ஐயாயிரம் பேர் குறைந்து ஆயிரம் பேராக நிற்கின்றனர்.
ஆனாலும் ஆண்டவர் இயேசு தன்னுடைய நற்கருணைப் பிரசன்னத்தை வலியுறுத்துவதிலிருந்து பின்வாங்க வில்லை: மீண்டும், ‘வாழ்வு தரும் உணவு நானே’ (6:48) என்று ஆணித்தரமாக சொல்கிறார். மிஞ்சியிருந்த ஆயிரத்தவரிடையே மீண்டும் அதே சலசலப்பு. ‘நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? என்று எதிர்க்கேள்வி எழும்புகிறது. முதன் முதலில் குடும்பத்தை நினைத்து ஆச்சரியப்பட்டார்கள்: இரண்டாவது சூழலில் எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். ஆயிரத்தவர் நூறு பேராகின்றனர். ஆனாலும் ஆண்டவர் இந்த விசுவாசத்தின் மறைபொருளை விளக்காமல் விடப்போவதில்லை. 
மீண்டும் மூன்றாவது முறையாக, விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே’ (6:58) என்று தன்னை அடையாளப்படுத்துகிறார். அதே எதிர்ப்பு அங்கே காணப்படுகிறது. ‘இதை ஏற்றுக்கொள்வது மிக் கடினம்: இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?’ என்று ஒட்டுமொத்த வெறுப்பை உமிழ்ந்து இருந்த நூறுபேரும் கலைந்து பத்துக்களாகி நிற்கின்றனர். ஆண்டவர் இயேசு வெளிப்படையாகவே,சீடர்களிடம் ‘நீங்கள் நம்புவதற்கு தடையாக இருக்கிறதா? என்று கேட்ட கேள்வி நம் காதில் எதிரொலிக்கவில்லையா? 
மீண்டும் இயேசு போகாமல் மிஞ்சியிருந்த தம் பன்னிரண்டு சீடர்களிடம் ‘ நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? (6:67)என்று ஒளிவு மறைவின்றி கேட்கிறார். அப்போதுதான் பேதுரு யாரிடம் போவோம்: வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் தானே உள்ளன என்று சரணடைகிறார்.மிஞ்சியிருந்த பன்னிரண்டு பேரும் நிலைத்திருக்கவி;ல்லை: ‘உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்’ (6:70) என்று ஒருவரைச் சுட்டிக்காட்டுகிறார். அந்த அலகை யார்? என்பது நற்கருணையை இறுதி இராவுணவின் போது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. நான் யாருக்கு அப்பத்துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன் தான் எனச் சொல்லி, அப்பத்துண்டைத் தோய்த்து .. .. யூதாசுக்குக் கொடுத்தார்: அவன் அப்பத்துண்டைப் பெற்றதும், சாத்தான் (அலகை) அவனுக்குள் நுழைந்தான்: .. வெளியே போனான்: அது இரவு நேரம். (யோவா 13:26, 27, 30) என்று இருளில் மறைந்த விசுவாசமில்லாத யூதாசை ....இப்படி 5000 பேரில் ஆரம்பித்து வெறும் 11 பேரில் வந்து நிற்கிறது. முதலாவதாக, ஒட்டுமொத்த மக்கட்கூட்டம் நிராகரித்தது: இரண்டாவதாக படித்த சமயத்தலைவர்கள் நிராகரித்தனர்: மூன்றாவதாக, பயிற்சிப்பெற்ற பனிரெண்டு சீடருள் ஒருவர் நிராகரித்தார். ஆனால் எம்மாவூஸ் அனுபவம் உட்பட உயிர்ப்பிற்குப் பிறகு ஒட்டுமொத்த திருச்சபையும் நற்கருணையால் வாழ்வு பெற்றது: வாழ்வளிக்கும் அருட்சாதனத்தை வழங்கிட கருவியுமானது. 

விசுவாசத்தின் மறைபொருள்
‘இது விசுவாசத்தின் மறைபொருள்’ என்பது எத்துணை உண்மை. நற்கருணையில் ஆண்டவரின் பிரசன்னம் உண்மையானது: உலகம் முடியும் வரை நிரந்தரமானது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஆயிரமாயிரம் அற்புதங்கள் இதனைப் புலப்படுத்துகிறது. ‘இது என் உடல்: இது என் இரத்தம்’ என்று சொன்ன ஆண்டவர் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார். ஆகையால் விசுவாசத்தின் மறைபொருளான நற்கருணைப் பிரசன்னத்தை நாம் முழுமையாக விசுவசிக்க வேண்டும். நற்கருணை குறித்துக்காட்டும் ஒற்றுமை, அன்பு, வாழ்வு, மறையுடல், சமத்துவம் ... என ஒவ்வொரு மதிப்பீடுகளும் நற்கருணையில் ஆண்டவர் பிரசன்னாமாயிருக்கிறார் என்ற விசுவசிக்காத நிலையில் நம்மால் அவற்றைக் கடைபிடிப்பது இயலாத காரியம். அவற்றை செயல்படுத்தினாலும் அர்த்தமில்லை. ‘உமது பிரசன்னம் கூட வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச் செய்யாதீர்: நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ (விப33:15-16) என்று முறையிட்ட மக்களுக்கு ‘உங்களோடு என்றும் இருப்பேன்’ (யோசுவா 3:7) என்ற வாக்குறுதியை இறைவன் தந்தார். அவருடைய பிரசன்னமே அனைத்தையும்விட மேலானது. இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர்நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைப்பார் (திவெ21:3,4). என்ற இறைவாக்கு நற்கருணையில் உண்மையாகிறது. ஆகையால் தான் ‘நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்: மருள வேண்டாம் (யோவா14:27) என்று சொன்ன இம்மானுவேல் உலகை வென்றுவிட்டேன்’ என்று சொல்லி அதற்கு சாட்சியாய் இந்த நற்கருணைப் பிரசன்னத்தை விட்டுச் சென்றிருக்கிறார். எனவே விசுவாசத்தின் மறைபொருளான நற்கருணைப் பிரசன்னத்தை நாம் விசுவசித்து வாழ்வோம்.

நற்கருணை மீது நாம் கொண்டிருக்கிற பிரசன்ன விசுவாசம் நம்முடைய அன்றாட பக்தி நடவடிக்கைகளில் வெளிப்பட வேண்டும்: நற்கருணை ஆண்டவரை தினமும் சந்திப்பதும், முடிந்த வரை அன்றாடம் திருப்பலியில் கலந்துகொள்வதும், நற்கருணை ஆராதனை, நற்கருணைச் சுற்றுப்பிரகாரம் ஆகியவற்றில் பங்கெடுப்பதும், நற்கருணை வாங்கிய பிறகு அவரோடு விசுவாசநிலையில் உரையாடுவதும், நற்கருணையைக் கைகளில் வாங்கும்போது கவனத்துடன் வாங்கி பராக்குக்கு இடம்கொடுக்காமல் உண்ணுவதும் உறவாடுவதும் ..என நம்முடைய விசுவாசம் வெளிப்பட வேண்டும்.
எல்லாவற்றைவிட கிறிஸ்துவின் திருவுடலாகிய நற்கருணைமீது அதன் பிரசன்னத்தின்மீது நாம் கொண்டுள்ள விசுவாசம் கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபையில் செயலாக்கம் பெற வேண்டும். நற்கருணை விசுவாசம் செயலாக்கம் பெறுவது ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரே குடும்பமாக ஒன்றித்து, ஒற்றுமையில் வளரும் போதுதான். இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம், நமக்கு வலியுறுத்துகிறது. ‘நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்’ சிதைந்து கிடந்து கொரிந்து திருச்சபை, பிரிவினையில் வலிந்து நின்ற கொரிந்து திருச்சபை, ஒற்றுமையை வெளிப்படுத்தி நற்கருணையைச் செயலாக்கம் செய்தது. நாமும் பக்தி முயற்சியோடு நற்கருணையை சாதீயம் உட்பட அனைத்து பிரிவினைச் சக்திகளை அப்புறப்படுத்தி ஒரே உடலாய் ஒரே திருச்சபையாய் ஒன்றுபட்டு நிற்போம். 

உடல்நலம் அருளும் திவ்விய நற்கருணை

உடல்நலம் அருளும் திவ்விய நற்கருணை

எருசலேம் நகர் புகுந்த அதே கிறிஸ்து, இன்று கதிர்பாத்திரத்திலும் பிரவேசிக்கிறார், ஒரு கதிர்விடும் சூரியனாக! அவரது ஒளிச்சுடரை அணுகுவோர் உண்மையான உடல்நலம் பெற்று இறும்பூது எய்துவர்.

சூரியனிடமிருந்து வரும் ஆற்றலைப் பெற்றுக்கொள்ளாமல் பூமியில் எதுவுமே உயிர்வாழ முடியாது. “ஒளிரும் கதிரவன் அனைத்தையும் காண்கிறான். ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது” (சீரா 42:16) என திருவிவிலியத்தில் நாம் வாசிக்கி றோம். சூரிய ஒளியிலிருந்தே தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன. அவை அங்ஙனம் தயாரிக்கவில்லையென்றால் இந்த பூமியிலுள்ள விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ உண்ண எதுவும் கிடைக்காமற் போகும். இச்செயலினால் சூரியனுக்கோ சூரிய ஒளிக்கோ எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆயினும் சூரியன் இல்லாமல் யாதொன்றும் நடைபெறுவதும் இல்லை. இதைப் போன்றே திவ்விய நற்கருணை என்னும் சூரியனும் விளங்குகின்றார்.

திவ்விய நற்கருணையை வெளிக் காட்டுவதற்கு சூரியனை விட மேலான உருவகம் வேறொன்றும் இல்லை. இயற்கையில் உதய சூரியன் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதே முக்கியத்துவம் ஆன்மீக வாழ்வில் தேவ நற்கருணையும் பெறுகின்றது. அது ஆன்மாக்களை ஒளிரச் செய்கிறது. நம்முடைய மனச்சான்றைத் துயிலுணர்த்துகிறது. இதயங்களில் வெப்பத்தை உண்டாக்குகிறது. நமது வளர்ச்சியைக் கடவுள்பால் இட்டுச்செல்கிறது. அந்த நீதியின் கதிரவன் உடலையும் ஆன்மாவையும் உள்ளத்தையும் நலம்பெறச் செய்கிறது.

இதைப்பற்றி புனித ஜெர்த்தூதுவிடம் ஆண்டவர் கூறியதாவது : “இங்கே, திவ்விய நற்கருணையில், எனது அருள் நிறைந்த திரு இருதயத்தில் நான் அனைவரது காயங்களையும் சுகப்படுத்துகின்றேன். பாவிகளின் ஆன்மாக்களை எழுப்பி, அவர்களின் ஆன்மீக வறுமையைப் போக்கி நன்மைகள் செழிப்பாக்குகின்றேன். அவர்களின் துயரங்களில் நான் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறேன்” திவ்விய நற்கருணை நலமாக்கும் என்ற உறுதியைக் கொண்டிருந்த புனித ஜாண் கிறிசோஸ்தோம் கூறுவதாவது: “திவ்விய நற்கருணையை அணுகிவரும் போது ஒவ்வொருவரும் அவரவர்களின் நோய்நொடிகளுடன் வரட்டும். ஏனெனில் திவ்விய நற்கருணை அவர்களை முற்றிலும் நலமாக்கும்”.

அற்புதங்கள் பற்பல

திவ்விய நற்கருணையாகிய தெய்வீகக் கதிரவனிடமிருந்து புறப்படும் அற்புதச் சுடரொளிகள் எண்ணற்றவை. அது திருச்சபைக் குள்ளே மட்டுமல்ல, திருச்சபைக்கு வெளியிலும் கண்கூடாகக் காணலாம். சுமார் கால் நூற்றாண்டளவாக நற்செய்தித் திருப்பணிகளிலும், குருக்களுக்கான பரிந்துரை வேண்டுதல்களிலும் கால்பதித்த அருட்சகோதரி பிரிஜ் மெகன்னா என்னும் ஐரீஷிய பெண்துறவி எழுதிய ஒரு நூலில், தேவநற்கருணை வாயிலாக உலகம் பெற்ற எண்ணற்ற வியத்தகு அற்புதங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஒரு ‘நோய் நீக்கும் அற்புத நற்செய்திக் கூட்டத்தில்’ அமர்ந்திருந்த ஒரு சிறுவன், தன்னுடைய மூளையில் வளர்ந்திருந்த ஒரு கட்டியிலிருந்து அற்புதமாகச் சுகம் பெற்றான். குருவானவர் தேவநற்கருணையை எடுத்து உயர்த்திய போது அவனுடைய நோயிலிருந்து அவன் நலம் பெற்றான்.

இரண்டு கைகளும் சூம்பிப்போன ஒரு பெண்ணும் அங்கிருந்தாள். அவள் கிறிஸ்தவளாயினும் சில மூடநம்பிக்கைகளைக் காப்பாற்றி வந்த மோர்மண் என்னும் ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவள். திவ்விய நற்கருணையில் உயிருடன் எழுந்தருளியிருக்கும் இயேசுவைக் கண்ணோக்குமாறு அந்த அருட்சகோதரி அனைவரிடமும் கூறினார். அப்போது ஏதோ அதிசயம் நடப்பதைப் போல் அப்பெண் இயேசுவின் பால் தன் கைகளை நீட்டினாள். ஆச்சரியமான முறையில் நலம் பெற்றாள். இங்ஙனம் எத்தனையோ அற்புதங்களால் திவ்விய நற்கருணையின் வல்லமை உலகம் முழுவதும் எண்பிக்கப்பட்டிருக்கிறது!

மெய்யியலாளர் வாள்ட்டயர் என்பவர் ஒரு நாத்திகர். கடவுள் மீது அவருக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை. ஆனால் திவ்விய நற்கருணையினால் ஏற்பட்ட ஓர் அற்புதம் அவரையும் ஆத்திகராய் மாற்றியது. அன்னா லாப்போஸ் என்ற ஒரு பெண்மணி இருபது ஆண்டுகளாகப் பெரும்பாட்டினால் வருந்திக் கொண்டிருந்தாள். இயேசு தேவநற்கருணையில் வீற்றிருக்கிறார் என்னும் உண்மையை முதலிலில் அவள் நம்பவில்லை. இருப்பினும் தேவநற்கருணையின் திருநாளன்று அவள் இயேசுவிடம் மனமுருகி மன்றாடுவதென்று தீர்மானித்துக் கொண்டாள். அந்தத் திருநாளும் வந்தது. அன்று தேவ நற்கருணைப் பவனி தனது வீட்டு முற்றத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது அவள் களைப்புற்ற நிலையில் இருந்தாலும் அந்தப் பவனியில் அவளும் சேர்ந்துகொண்டாள். எருசலேம் வீதிகளில் பொடிநடையாய் நடந்துசென்றவர், இதோ இந்தக் கதிர்ப்பாத்திரத்தில் பிரசன்னமாய் இருக்கிறார் என அவள் உள்ளூர நம்பினாள். அந்தப் பவனி முடிவுற்றதும் அவள் அற்புதமாக நலம்பெற்றாள்.

தெய்வக் கதிரவனின் சுடரொளியில்

இதுபோன்ற எண்ணற்ற அற்புதங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எனினும் வெளிப்படையான அற்புதம் எதுவும் நடக்கவில்லையே என நினைத்து மனந்தளர வேண்டாம். ஏனெனில் சூரியக் கதிர்களால் எங்ஙனம் ஒரு காய் கனியாக மாறுகின் றதோ அதுபோலவே, தேவநற்கருணை என்னும் திவ்விய சூரியனால் நாமும் ஒவ்வொரு நாளும் பதப்படுத்தப்படுகிறோம். ஒவ்வோர் ஆன்மாவும் நித்திய வாழ்வை நோக்கி இக்கதிரவனால் வழி நடத்தப்படுகின்றன. நாம் சில தனிப்பட்ட அருள்வரங்களால் நிரப்பப்படவில்லையென்றாலும், நம்முடைய கதிரவன் நம்பால் இரங்குவதற்கு நாம் உகந்த வாய்ப்பை அளித்துத்தான் ஆக வேண்டும். இவ்வுண்மையை உணரவேண்டுமானால் நாம் முழுமனதோடு காத்திருக்க வேண்டும். ஆம். திவ்விய நற்கருணை ஆராதனையில் காத்திருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெல்ஜியம் நாட்டு அரசரான போதின் என்னும் மன்னர், கருச்சிதைவுக்கு ஆதரவாகக் கையெழுத்திடுவதினும் நல்லது தமது மன்னர் பதவியை விட்டுவிலகுவதுதான் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவர் தேவநற்கருணை சன்னிதியில் பலமணிநேரம் ஜெபத்தில் ஆழ்ந்திருப்பார். தமது ஜெப வாழ்வை அவர் குறிப்பிடுகையில், “தேவ நற்கருணைக்கு முன்னால் நாம் அமர்ந்திருக்கும் ஒரு நொடிப்பொழுதும் வீணானதாகக் கருதக்கூடாது. அப்போது நமக்குள்ளே எந்த அதிசயமும் நிகழாமல் போகலாம். ஆயினும், அது நிகழ்வதற்காக நாம் நம்மையே அந்தக் கதிரவனின் மலரடியில் விட்டுவிட வேண்டும். அதற்குத் தேவை நீடிய பொறுமை” என்கிறார்.

கதிர்ப்பாத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை நாம் மிகுந்த பொறுமையுடன் ஆராதிக்கும் வகையில் அதனுடைய திவ்வியமான கதிர்கள் நம்மைப் புதுப்பிக்கின்றன. ஒருவேளை நம் கண்கள் இதனை நேரிடையாகப் பார்க்காமல் இருக்கலாம். ஆனால் கடவுளின் கருணையால் இவ்வற்புதத்தைக் கண்கூடாகக் கண்டவர்களின் சாட்சியங்கள் இவ்வுண்மையை அரண்செய்கின்றன.

புனித பவுஸ்தீனாள் ஒருநாள் ஒரு காட்சி கண்டாள். அவள் கோவிலில் பாவசங்கீர்த்தனம் செய்வதற்காக அமர்ந்திருந்த நேரம். அப்போது கதிர்ப்பாத்திரத்திலிருந்து திவ்விய கதிர்கள் விளக்கமுற்று ஆலயம் முழுவதும் பரவுவதைக் கண்டாள். ஆலயத் திருச்சடங்கு முடியும் வரை இது தொடர்ந்தது. பின்னர் அக்கதிர்கள் கதிர் பாத்திரத்தில் சென்று ஒடுங்குவதையும் அவள் கண்டாள். திவ்விய நற்கருணையில் எழுந்தருளியிருக்கும் இயேசு இத்துணைக் கருணை வாய்ந்தவராய் இருக்க, அவரிடமிருந்து மானிடர்கள் ஓடிப்போக விழைவது ஏனோ? எனக் கேட்கிறார் சிஸ்டர் மரிய தெரேசா டியூபக்.

எதிர்பார்ப்புகள் முடிவு பெறும் போது

எல்லா எதிர்பார்ப்புகளும் முடிந்து இருள் நம்மை மண்டி நிற்கும்போது தேவநற்கருணை மட்டுமே நம்முடைய வெளிச்சமாக இருக்க முடியும். மேலும், புனித பவுஸ்தீனாள் தனது நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதியிருந்தாள். “மக்கள் தங்கள் வீடுகளில் திருவுடைகள் அணியாமலேயே திவ்விய இரகசியங்களுக்குக் குற்றேவல் புரிவதைக் கண்டேன்.

ஆனால் திவ்விய நற்கருணையாகிய தூவெள்ளை அப்பத்திலிருந்து தெய்வீக சோபை ஒன்று உதித்து எழுவதைக் கண்டேன்”. இந்தக் காட்சியின் அர்த்தம் புனிதைக்குப் பிடிபடவே இல்லை. ஆனால் அவருடைய மரணத்திற்குப் பின் இக்காட்சி மெய்யாயிற்று. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த அந்நாட்களில் கோவில்களும் கோவிலின் திருக்கருமங்களும் இல்லாமற்போயின. எனினும் ஆண்டவர் தமது திருச்சபையைக் கைவிடவில்லை. நீதியின் கதிரவன் மகாசோபையுடன் எழுந்து உலகத்தைக் காத்தார். ஆதிக்கிறிஸ்தவர்கள் இரத்தம் சிந்தி மடிவதற்கும் தங்களையே பலியாக ஒப்புக்கொடுப்பதற்கும் நற்கருணை பக்தியே வழிசெய்தது.

தீமையை எதிர்த்து நிற்க விரும்பும் கிறிஸ்தவர்களை தேவநற்கருணை வலுப்படுத்துகிறது. தேவநற்கருணையாலல்லாமல் வேறு எதனாலும் திருச்சபையைத் தாங்கி நிறுத்த முடியாது என்பது நிதரிசனம். “என் பெயருக்கு அஞ்சும் உங்களுக்காக நீதியின் கதிரவன் தோன்றும். அதனுடைய இறக்கைகளில் உடல் நலமும் இருக்கும். தொழுவத்திலிருந்து வெளிவரும் கன்றைப் போல் நீங்கள் துள்ளிக்குதிப்பீர்கள்” (மலாக்கி 4:2) என்னும் இறைவாக்கு நிறைவேறட்டும்.

– அரு. தந். ஆந்த்ரே துரோஜனோஸ்கி Schr.

நானும் அவரின் திருவுடல், திருஇரத்தமே!

நானும் அவரின் திருவுடல், திருஇரத்தமே!

'மானிட மகனின் உடல் மற்றும் இரத்தம்' பற்றிய போதனை யோவான் நற்செய்தி 6ல் காணக்கிடக்கிறது. 'நிலையான உணவு' - 'நிலையற்ற உணவு,' 'அழியாத உணவு' - 'அழிந்து போகும் உணவு,' 'மானிட மகனின் உடல்' - 'பாலைவனத்தில் மன்னா' என்று வாதம் தொடங்கித் தொடரும் இந்த நிகழ்வின் இறுதியில் அவருடைய சீடர்களில் சிலர்,

'இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று பேசிக்கொள்கின்றனர் (யோவா 6:60). இப்படிச் சொல்லிவிட்டு அவர்கள் இயேசுவை விட்டு விலகுகின்றனர் (6:66). அந்நேரம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று இயேசு தம் திருத்தூதர்களிடம் கேட்க, 'நாங்கள் யாரிடம் போவோம்? வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன' (6:68) என்று பதிலுரைக்கிறார் பேதுரு. போதனையும், விவாதமும் முடிவுக்கு வருகிறது.

'ஆண்டவரின் வார்த்தையே உணவு’

'இயேசுவே ஆண்டவரின் வார்த்தை’

ஆக, 'இயேசுவே உணவு!'

இதுதான் இன்று நாம் கொண்டாடும் திருநாளின் மறைபொருள்.

முதல் ஏற்பாட்டில் மன்னா உண்கின்றனர் இஸ்ராயேல் மக்கள் (காண். விப 16:14-15). இந்த நிகழ்வில் இறைவன் வேறு, மன்னா வேறு என்ற நிலை இருக்கிறது. அதாவது, உணவைக் கொடுப்பவரும், கொடுக்கும் உணவும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கக் கூடியவை. ஆகையால்தான் அந்த உணவுக்கு நிலைப்புத்தன்மையும், அழியாத்தன்மையும் இல்லை. ஆனால், இரண்டாம் ஏற்பாட்டில் இயேசு தரும் உணவு அப்படி அல்ல. 'இது என் உடல், இது என் இரத்தம்' என்று இயேசு சொல்லும் போது, இங்கே 'நான் வேறு,' 'இது வேறு' என்று இரண்டு கூறுகள் இல்லை. மாறாக, 'இதுவே நான்!' என்ற நிலை இருக்கிறது. இங்கே கொடுக்கும் இறைவனும், அவர் கொடுக்கும் உணவும் ஒன்றே ஆதலால் இந்த உணவு அழியாத் தன்மை பெறுகிறது. ஆகையால்தான் இயேசுவும், 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்' (யோவா 6:58) என்கிறார்.

உணவு அழியாத்தன்மை கொண்டிருக்கிறது என்றால், இதைக் கொடுத்தவரும் அழியாத் தன்மை கொண்டிருக்க வேண்டும் அல்லவா? ஏனெனில், உணவும் கொடுத்தவரும் இங்கே ஒன்றுதானே!

இதைக் கொடுத்த இயேசுவின் அழியாத்தன்மையை நமக்குக் காட்ட இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 14:18-20) நமக்கு மெல்கிசெதேக்கு என்னும் கதைமாந்தரை அறிமுகம் செய்கிறது. இன்றைய முதல் வாசகப்பகுதியில் 'டைரிக்குறிப்பு நடை,' 'நாடக நடை' என்னும் இரண்டு இலக்கியக்கூறுகள் உள்ளன. ஆபிராமின் வாழ்வில் ஓர் நாளில் நடந்த நிகழ்வைக் குறிப்பிடுவது போல தொடங்குகிறார் ஆசிரியர். மெல்கிசெதேக்கை 'சாலோமின் அரசர்' என அறிமுகம் செய்கின்றார். 'சாலேம்' என்னும் சொல்லாடலை 'எருசலேம்' என்றும் எடுக்கலாம். 'அமைதி' என்றும் எடுக்கலாம். ஆபிராம் தன் மற்றும் தன் சகோதரன் லோத்தின் சொத்துக்களை சண்டையிட்டு மீட்கின்றார். ஆக, போருக்குப் பின் ஆபிராமிற்கு அமைதி தேவைப்படுகிறது. மேலும், ஆபிராம் ஓர் அரசனைப் போல தன் அருகில் இருக்கிறவர்களை எல்லாம் அழித்து, ஒவ்வொரு இடமாகக் கைப்பற்றிக்கொண்டே முன்னேறுகிறார். இதைப்பற்றிக் கேள்வியுற்ற சாலேம் அரசரும், அடுத்த ஒருவேளை ஆபிராம் நம் நாட்டிற்கே வந்துவிடுவார் என்று நினைத்து முன்னதாகவே ஆபிராமுடன் சமரச நடவடிக்கையில் இறங்குகிறார். ஆகையால்தான், அவர்கள் சந்திக்கும் இடம் 'அரசர் பள்ளத்தாக்கு' என வழங்கப்படுகிறது.

அரசராக வந்தவர் சட்டென்று மாறும் வானிலைபோல குருவாக மாறுகின்றார். அவரைக் குருவாக உருவகிக்கும் காரணிகள் இரண்டு: (அ) அரசருக்குரிய அடையாளமான வாள் அல்லது பணமுடிப்பு போன்றவற்றை ஆபிராமிற்குக் கொடுப்பதற்குப் பதிலாக, காணிக்கைப் பொருள்களான அப்பமும் திராட்சை இரசமும் கொடுக்கின்றார். (ஆ) ஆபிராமை வாழ்த்தி ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகின்றார். இவரின் குருத்துவ நிலையை உறுதி செய்யும் விதமாக ஆபிராமும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கு கொடுக்கின்றார். பத்தில் ஒரு பாகம் கொடுக்க வேண்டிய கட்டளை இணைச்சட்ட நூல் காலத்தில் (அதாவது, இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறி வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி, மோவாபு பாலைநிலத்தில் நடந்து கொண்டிருந்தபோது) கொடுக்கப்பட்டாலும் (இச 14:22), இங்கே ஆசிரியர் மெல்கிசெதேக்கை குரு என்று அடையாளப்படுத்துவதற்காக, ஆபிராமும் இதைச் செய்ததாக எழுதுகின்றார்.

மெல்கிசெதேக்கின் ஆசீர் முதலில் கீழ்நோக்கியும் (ஆபிராமை நோக்கி), இரண்டாவதாக மேல்நோக்கியும் (ஆண்டவரை நோக்கி) இருக்கிறது. இந்த இரண்டு குணங்களை எடுத்து இறையியல் கட்டுரையாக வடிவமைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'இயேசுவே தனிப்பெரும் தலைமைக்குரு' (எபி 7) என்று முன்வைப்பதோடு, இயேசுவின் கீழ்நோக்கிய தன்மையை 'சகோதரர்களுக்கு இரக்கம்' என்றும், மேல்நோக்கிய தன்மையை 'கடவுளுக்கு பிரமாணிக்கம்' எழுதுகிறார் (காண். எபி 2:17). மேலும், மெல்கிசெதேக்கைப் போல இயேசுவும் 'அப்பமும்,' 'திராட்சை இரசமும்' தன் சீடர்களுக்குத் தருவதால் அவருக்கும், மெல்கிசெதேக்கிற்கும் உள்ள ஒற்றுமை இன்னும் வலுக்கிறது.

இந்த மெல்கிசெதேக்கு நிகழ்வில் கவனிக்க வேண்டிய இறுதி, ஆனால், முக்கியமான கூறு என்னவென்றால், மெல்கிசெதேக்கு எங்கிருந்து வந்தார் என்றும், ஆபிராமை சந்தித்த அவர் எங்கே சென்றார் என்றும் குறிப்பிடப்படவில்லை. முதலும், முடிவும் இல்லாமல் வந்த இவர் ஆண்டவராக இருக்கலாம் என்கின்றனர் சிலர். வந்தவர் ஆண்டவராக இருந்ததால்தான், ஆபிராம் பத்தில் ஒருபாகம் (காண். இச 14:22) கொடுத்தார் என்கின்றனர் இவர்கள்.

மெல்கிசெதேக்கின் 'நீடித்த,' மற்றும் 'குருத்துவ' என்னும் இரண்டு குணங்களை எடுத்து, அரசர்களுக்குப் புகழ்பாடுவது முதல் ஏற்பாட்டு அரசர்கள் காலத்தில் இருந்தது. ஆகையால்தான், ஆண்டவரே தாவீதிடம், 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' சொல்வதாக, திருப்பாடல் ஆசிரியர் பாடுகின்றார் (காண். 110:1-4. இன்றைய பதிலுரைப்பாடல்).

தாவீதின் மகனாக வந்தார் இயேசு என தன் நற்செய்தியில் எழுதும் லூக்கா, தாவீது 'தலைமைக்குரு' என்று ஆண்டவரால் அழைக்கப்பட்டதை மனத்தில் வைத்து, இயேசுவையும் ஒரு குருவாக முன்வைக்கின்றார்.

இன்றைய நற்செய்தியில் (காண். லூக் 9:11-17) நாம் வாசிக்கும் அப்பம் பலுகுதல் நிகழ்வு நான்கு நற்செய்திகளிலும் காணக்கிடக்கிறது (காண். மத் 14:13-21, மாற் 6:30-44, யோவா 6:1-14). மற்ற நற்செய்தியாளர்களைப்போல, குறிப்பாக மாற்குவைப் போலவே, லூக்கா இந்நிகழ்வை எழுதியிருந்தாலும், அப்பம் பலுகுதலுக்கு முக்கியத்துவம் தராமல், இயேசு என்ற கதைமாந்தரை மையப்படுத்தி எழுதுகின்றார். இந்நிகழ்வின்படி இயேசுவை மெசியா என்றும், குரு என்றும் மற்றவர்கள் அறிந்து கொள்ளச் செய்கின்றார்.

அ. இயேசுவே மெசியா

முதல் ஏற்பாட்டில் மெசியாவின் வருகையின் போது நடைபெறும் மாபெரும் விருந்தைப் பற்றி எசாயா எழுதுகின்றார் (காண். 25:6-9). மலையின்மேல் நடக்கும் அவ்விருந்தில் 'சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படுகின்றன' (25:6). 'இவருக்காகவே நாம் காத்திருந்தோம். இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்' (25:9) என்ற இறைவாக்கின் நிறைவாக இயேசு வருகின்றார். இயேசு தரும் விருந்தும் அபரிவிதமாக இருக்கின்றது. எல்லாரும் உண்டு நிறைவுபெற்றாலும், எஞ்சிய துண்டுகள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பப்படுகின்றன.

ஆ. இயேசுவே குரு

எம்மாவு சீடர்களுக்கு இயேசு தோன்றியபோது, அவரை அப்பம் பிட்கும் நிகழ்வில் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். எம்மாவு நிகழ்வில் (காண் லூக் 24:30), இயேசு, அப்பத்தை எடுத்து, கண்களை உயர்த்தி, இறைவனைப் புகழ்ந்து, உடைத்து, கொடுக்கின்றார். இந்த ஐந்து வினைச்சொற்களையும் அப்பம் பலுகுதல் நிகழ்விலும் பயன்படுத்துகின்றார் இயேசு. உயிர்த்தெழுந்த இயேசுவை தலைமைக்குருவாக உருவகிக்கிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல். ஆனால், இயேசுவை அவரின் பணியின்போதே குருவாக உருவகிக்கின்றார் லூக்கா.

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டு தலைமைக்குரு, இரண்டாம் ஏற்பாட்டில் தாவீதின் மகன் இயேசு என்று மாறி நிற்கின்றார்.

இந்தத் தலைமைக்குரு இயேசு தான் இறப்பதற்கு முன் என்ன செய்தார் என்பதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்கின்றோம் (1 கொரி 11:23-26).

அப்பம் பிட்குதல் என்பது தொடக்கக் கிறிஸ்தவர்களின் முதன்மையான வழிபாட்டு நிகழ்வு (காண். திப 2:42). இயேசு தான் இறப்பிற்குக் கையளிக்கப்படுமுன் செய்த, தன் உயிர்ப்புக்குப் பின் எம்மாவு சீடர்கள் நடுவில் செய்த இந்நிகழ்வு அவர்களுக்கு மூன்று விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதை நாம் இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழி அறிந்து கொள்கின்றோம்:

அ. 'காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில்'
இந்த வார்த்தைகள் இயேசுவின் கல்வாரிப் பலியை வாசகருக்கு நினைவூட்டுகின்றன. இயேசுவின் கல்வாரிப் பலியின், மீட்பின் பலியின் முன்னோட்டமாக இருந்தது அவரின் இறுதி இராவுணவும். தான் சிலுவையில் தன் உடலையும், இரத்தத்தையும் மனுக்குலத்தின் மீட்பிற்காக கையளிக்குமுன், அப்பம் மற்றும் இரசத்தின் வடிவில் அதை முந்திய இரவே தன் சீடர்களிடம் கையளித்துவிடுகின்றார்.

ஆ. 'என் நினைவாகச் செய்யுங்கள்'
அப்பம் பிட்குதல் என்பது ஒரு 'நினைவு' (memorial). 'நினைவுகூறுங்கள்' என்பது முதல் ஏற்பாட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். குறிப்பாக, யாவே இறைவன் எகிப்தில் செய்த அறிகுறிகளையும், முதல் பாஸ்கா நிகழ்வையும் 'நினைவுகூறுமாறு' இஸ்ரயேல் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 'நினைவுகூறலில்' இறந்த, நிகழ், எதிர்காலம் என மூன்று காலங்களும் அடங்கியுள்ளன. ஏனெனில் நாம் நடந்த ஒன்றை (இறந்த காலம்), நடந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் (நிகழ்காலத்தில்), ஆண்டவர் வரும் வரை (எதிர்காலம்) அறிக்கையிடுகின்றோம்.

இ. புதிய உடன்படிக்கை
பழைய உடன்படிக்கையில் (விப 24) கடவுளுக்கும், மக்களுக்கும் இடையே தூரம் இருந்தது. கடவுளின் கட்டளைகள் மனிதருக்கு வெளியே இருந்தன. எரேமியா முன்னுரைத்த புதிய உடன்படிக்கையில் (எரே 31:31-34) அந்த இடைவெளி இல்லை. கட்டளைகள் மனிதர்களின் மனத்திலேயே எழுதப்பட்டன. புதிய உடன்படிக்கையில் ஆட்டுக்குட்டியின் இரத்தத்திற்குப் பதிலாக, மானிட மகனின் இரத்தமே இணைக்கும் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.

மூன்று வாசகங்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மெல்கிசெதேக்கின் வழி வந்த என்றென்றும் தலைமைக்குருவாம் இயேசு, மெசியாகவும், குருவாகவும் நின்று ஏற்படுத்திய நிலையான பலியே நற்கருணைப் பலி என்றும், இந்தப் பலியின் வழியாக அவர் நம்மை மீட்டதோடு, தன்னையே உடலாகவும், இரத்தமாகவும் நாம் வாழ்வு பெறக் கொடுத்தார் என்றும் சொல்லலாம்.

ஆக, இயேசுவைப் போலவே அவரின் உடலும், இரத்தமும் அழியாத் தன்மை கொண்டிருப்பதால், அவை நமக்கு அழியா வாழ்வைக் கொடுக்க வல்லவை.

இன்றைய நாள் நமக்கு முன்வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. நம் கொடுத்தலும், இறைவனின் கொடுத்தலும்

நம் இந்து சமய சகோதரர்கள் வழிபாட்டிற்குக் கோவிலுக்குச் செல்கிறார்கள். கடவுளுக்குக் காணிக்கையாக தேங்காய், பழம், அகர்பத்தி, சூடம் என வாங்கிச் செல்கின்றனர். வழிபாடு செய்தபின் இவர்கள் கொண்டு சென்ற பூசைக்கூடையில் அர்ச்சகர் பழம், திருநீறு, இனிப்பு என திரும்ப வழங்குகின்றார். கடவுளுக்கு நாம் கொடுப்பதும், கடவுள் அதைத் திரும்ப நமக்கே கொடுப்பதும், இந்து மதத்திலும் இருக்கும் ஒரு கூறு. கடவுள் அல்லது அர்ச்சகர் கொடுப்பதை அவர்கள் பிரசாதம் என அழைக்கின்றனர். இந்த பிரசாதமும், நற்கருணையும் ஒன்றா? நாம் அப்பம், இரசம் ஆகியவற்றைக் கடவுளுக்குக் கொடுக்கிறோம். அதைக் கடவுள் தன் மகனின் உடல் மற்றும் இரத்தமாக மாற்றி நமக்கே திரும்பக் கொடுக்கிறார். அவர்கள் செய்வது போலத்தானே நாம் செய்கிறோம்? இல்லை. பிரசாதமும் கடவுளும் ஒன்றல்ல. கடவுள் பிரசாதத்தின் உருவை மேற்கொள்வதில்லை. ஆனால், நற்கருணையில் இரண்டும் ஒன்று. இயேசு அப்பம் மற்றும் இரசத்தின் வடிவை ஏற்கின்றார்.

நற்கருணை சொல்லும் முதல் பாடம் இதுதான்: 'நம் கடவுள் அளவற்ற விதத்தில் கொடுக்க வல்லவர்!’

முதல் வாசகத்தில், 'ஆபிரகாம் பத்தில் ஒரு பங்கு கொடுத்தார்'. ஆனால், 'மெல்கிசதேக்கு தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுத்தார்.' நற்செய்தி வாசகத்தில், 'சீடர்கள் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் கொடுத்தனர்.' ஆனால், 'இயேசு எல்லாரும் உண்டபின்னும் பன்னிரண்டு கூடைகள் எஞ்சும் அளவுக்குக் கொடுத்தார்.' இன்று நாம் அழியக்கூடிய குணங்களைக் கொண்ட அப்பத்தையும், இரசத்தையும் கொடுத்தாலும், கடவுள் அவற்றை அழியாத உணவாக மாற்ற வல்லவர்.
ஆக, இன்று நாம் கடவுளைப் போல கொடுப்பவர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம்.

இயேசுவின் ஒட்டுமொத்த வாழ்வும், பணியுமே கொடுத்தலாகவே இருந்தது. எந்த நிலையிலும் தன்னை மற்றவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இருந்தார் அவர்.

இன்று நம் உலகம் நமக்கு 'எடுக்கவே' கற்றுத்தருகிறதே அன்றி, 'கொடுக்க' கற்றுக்கொடுப்பதில்லை. நான் பயன்படுத்தும் ஒரு கணிணி அல்லது அலைபேசி சேவை என்றாலும் சரி, என் உற்ற நண்பராக இருந்தாலும் சரி, 'என்னால் முழுமையாக எடுக்க முடிகிறதா?' என்பதே என் நோக்கமாக இருந்தால், நான் கடவுளின் இயல்பிலுருந்து தூர இருக்கிறேன் என்றே அர்த்தம். சில நேரங்களில், நான் கொடுப்பதற்கேற்ற எடுத்தல் இருக்கிறதா என்றும் கணக்குப் போடுகிறேன். போட்டதை எடுக்க, அல்லது போட்டதிலிருந்து அதிகம் எடுக்க உறவுநிலை ஒன்றும் ஷேர் மார்க்கெட் அல்லவே! ஆக, எடுக்க முடியாது என்றாலும் கொடுக்கும் மனம் வேண்டும். நற்கருணையின் மறைபொருளே அதுதான். 'அப்பமும், இரசமும்,' 'இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும்' மாறிய பின் திரும்ப நாம் அவற்றை அப்பமாக அல்லது இரசமாக மாற்ற முடியுமா? அதற்க எந்த ஃபார்முலா இருக்கிறது? மாற்ற முடியாது. அது ஒருவழிப்பயணம். நம் கொடுத்தலும் ஒருவழிப்பயணமாக இருக்கலாமே!

2. ஐந்து வினைச்சொற்கள்

ஒரு குறிப்பிட்ட பலிபீடத்தில், ஒரு குறிப்பிட்ட ஆடை அணிந்து, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு ஃபார்முலாவை, ஒரு குறிப்பிட்ட டிகிரி கோணத்தில் நின்று சொல்லிக் கைகளை விரித்தால், அப்பமும், இரசமும், இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறிவிடும் என்ற மேஜிக் சிந்தனையை நாம் விட வேண்டும். இந்த மேஜிக் சிந்தனை பல நேரங்களில் அருட்பணியாளரையும், மக்களையும் இயேசுவிடமிருந்து அந்நியமாக்கிவிடுகிறது. அதாவது, அருள்பணியாளராகிய நான், உடல் அல்லது மனதளவில் என் வாழ்க்கை நிலைக்குத் தகுதியற்று இருந்தாலும், கைகளை விரித்து மந்திரம் சொன்னால் அப்பம் இயேசுவின் உடலாகிவிடும் என்றால், என்னில் மாற்றம் வருவது சாத்தியமா? இல்லை. நான் எப்படி இருந்தாலும், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், மந்திரம் சொல்லி, கைகளை விரித்தால் எல்லாம் நடந்துவிடும் என்று நான் நினைப்பது தவறல்லவா? அதேபோலவே, இந்த அப்பம் பிட்குதலில் பங்கேற்கும் மக்களும் இதை ஒரு மேஜிக் நிகழ்வாகக் கருதக் கூடாது. அப்படி மேஜிக்காக நினைக்கும்போது, நாம் நம் வழிபாட்டு முறைமைகள் மட்டும் சடங்குகளுக்கு அடிமையாகிவிடுகிறோம். ஒன்பது நாள் நற்கருணை உட்கொண்டால் நான் கேட்டது நடக்கும் என்றெல்லாம் சொல்லத் தொடங்கிவிடுகின்றோம். நற்கருணை விடுதலையின் விருந்து. அதை நாம் ஒரு சடங்காகப் பார்த்து அந்தச் சடங்கிற்கு அடிமையாகிவிடக்கூடாது.

நற்கருணை வழிபாட்டை நடத்தும் அருள்நிலை இனியவரும், அதில் பங்கேற்கும் பொதுநிலை இனியவர்களும் இன்றைய நற்செய்தியில் நாம் காணும் ஐந்து வினைச்சொற்களை வாழ்வாக்குபவர்களாக இருக்க வேண்டும்.
அந்த ஐந்து சொற்கள் எவை?

'எடுத்தல்,' 'அண்ணாந்து பார்த்தல்,' 'ஆசிகூறுதல்,' 'உடைத்தல்,' ‘கொடுத்தல்'

இந்த ஐந்து சொற்களும், இயேசுவின் பிறப்பு, பணி, இறப்பு என்னும் மூன்று நிகழ்வுகளையும் உள்ளடக்கி நிற்கிறது. இயேசு மனுவுரு 'எடுத்தார்.' 'அண்ணாந்து பார்த்து' தன் தந்தையோடு இணைந்திருந்தார். எந்நேரமும் 'இறைவனைப் புகழ்ந்து அவரை ஆசீர்வதித்தார்.' தன் வாழ்வு முழுவதும் தன்னை மற்றவர்களுக்காக 'உடைத்தார்.' இறுதியில், தன்னையே நமக்காகக் 'கொடுத்தார்.’

இந்த ஐந்து சொற்களில் இன்று நமக்கு அதிகம் தேவைப்படுவது 'அண்ணாந்து பார்ப்பது.' ஏன்?

இன்றைய நம் தொடுதிரைக் கலாச்சாரம் நம்மை 'குனிந்தே பார்ப்பவர்களாக' மாற்றிவிட்டது. எல்லாவற்றையும் சின்ன சின்ன செயலிகளைக் (apps) கொண்டு செய்து முடிக்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறது ஸ்மார்ட்ஃபோன். 'உனக்கு யார் துணையும் வேண்டாம் - கடவுளும் வேண்டாம், மனிதர்களும் வேண்டாம். என்னையே பார்த்துக் கொண்டிரு. உனக்கு எல்லாம் நடக்கும்' என்று சொல்கிறது தொடுதிரை என்னும் மாயக்கண்ணாடி. அந்த மாயக்கண்ணாடியில் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், குனிந்து பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், நாம் கடவுளுக்கும், மற்றவர்களுக்கும், ஏன், நமக்கு நாமே அந்நியமாகிவிடுகின்றோம். இக்கண்ணாடியை விட்டுவிட வேண்டும் என நான் சொல்லவில்லை. அப்பப்போ அண்ணாந்து பார்க்க வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.

அழியா உணவை நற்கருணை என உட்கொள்ளும் நாம் அழிந்து போகும், அல்லது நிலையற்ற இன்பத்தின்மேல் நம் கண்களைப் பணித்தல் சால்பா?

3. 'யாரைப் போல பேசுகிறேன்?’

'எல்லாரையும் போகச் சொல்லுங்க!' 'இருட்டாயிடுச்சு!' 'இது பாலை நிலம்!' 'பாம்பு, பல்லியெல்லாம் வந்துடும்!' 'இங்க சாப்பாடு ஒன்றுமில்லை!' என்று இயேசுவுக்கு ரிமைண்டர் கொடுக்கின்றனர் சீடர்கள். 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்று கட்டளை கொடுக்கின்றார் இயேசு.

இன்று நாம் இயேசுவைச் சந்தித்தபின், உட்கொண்டபின் அவரிடம் செபிக்கின்றோம். நம் செபங்கள் எல்லாம் ரிமைண்டர்களாகவே இருக்கின்றன. 'எனக்கு அது இல்லை. இது இல்லை. அவன் சரியில்லை. இவள் சரியில்லை. க்ளைமேட் சரியில்லை. சாப்பாடு சரியில்லை. சுகர் கூடிடுச்சு. பிரஷ்ஷர் கூடிடுச்சு. காசு இல்லை' - இப்படிப்பட்ட ரிமைண்டர்களை நாம் அவருக்குக் கொடுக்கும்போது அவர் சொல்லும் பதில் என்ன தெரியுமா? 'நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்!' நாம்தான் பார்க்க வேண்டும் நம் வாழ்க்கையை. ஆனால் அதில் என்ன அற்புதம் என்றால், நாம் நம் வாழ்வைப் பார்க்கத் தொடங்கிய உடனே அவர் அற்புதம் செய்யத் தொடங்குகிறார். 'ஆண்டவரே, இங்க பாருங்க ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் இருக்கு!' என்று சொன்னவுடன், அவர் 'எல்லாரையும் அமரச் சொல்லுங்கள்' என அற்புதம் செய்கின்றார்.

ஆக, நற்கருணையை உண்டபின் நம் பதிலும் இப்படித்தான் இருக்க வேண்டும்: 'ஆண்டவரே, இங்க பாருங்க சுகர் மாத்திரை இருக்கு!' 'ஆண்டவரே, இங்க பாருங்க பர்சில் கொஞ்சம் பணம் இருக்கு!' 'ஆண்டவரே, இங்க பாருங்க, கொஞ்சம் அரிசி இருக்கு!' என நம்மிடம் இருப்பவற்றை அவர்முன் கொண்டுவர வேண்டும். இல்லாத ஒன்றிலிருந்து புதிதாக புறப்பட்டு வருவது அல்ல நற்கருணை. ஏற்கனவே இருக்கும் அப்பமும், இரசமும் உருமாறுவதே நற்கருணை. ஆக, நம்மிடம் இருக்கும் ஒன்றிலிருந்துதான் அவரின் அற்புதம் தொடங்கும்.

இறுதியாக,

உணவு - மனித வாழ்வின் கையறுநிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு.

பசி, தாகம் என்னும் உணர்வுகள்தாம் நாம் மற்றவர்களைச் சார்ந்து நிற்கிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு உணர்வுகளின் நீட்சிகள்தாம் மற்ற எல்லா உணர்வுகளும். இந்த அடிப்படை உணர்வுகளை நிறைவு செய்யத் தேவையான உணவு என்ற குறியீட்டையே தன் நிலையான உடன்படிக்கையின் அடையாளமாகத் தெரிந்துகொள்கிறார் இயேசு.
நமக்குப் பசி இருக்கும் வரை இந்த உணவின் தேவை இருக்கும்!

கையை நீட்டி இவரை உணவாகக் கொள்ளுமுன்,
என் கையை நீட்டி மற்றவருக்கு என்னையே உணவாக நான் தந்தால்,
நானும் அவரின் திருவுடல், திருஇரத்தமே!

அருள்பணி இயேசு  கருணாநிதி

திவ்விய நற்கருணைப் பெருவிழாவும் இறைவனுடனான நமது உறவும்

திவ்விய நற்கருணைப் பெருவிழாவும் இறைவனுடனான நமது உறவும்

கத்தோலிக்கத் திருச்சபை எதிர்வரும் ஞாயிறு தினத்தில் திவ்விய நற்கருணைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது.

தவக்காலத்தோடு ஆரம்பித்த நிகழ்வுகள் திருநாட்கள் நிறைவடைந்து பொதுக் காலம் இதனோடு ஆரம்பமாகின்றது.

நம்பிக்கை ஆண்டாக இந்த ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திவ்விய நற்கருணை மீதான விசுவாசம் நம்பிக்கை மற்றும் ஒன்றிணைப்பை வலுப்படுத்தும் வகையில் இம்முறை திவ்விய நற்கருணைப் பெருவிழா விசேட பல அம்சங்களுடன் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்படவுள்ளது.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்து நம்முடன் வாழ்கின்றார். திவ்விய நற்கருணையில் வாழ்கின்ற நம் ஆண்டவர் ஒவ்வொரு திருப்பலியின் போதும் நாம் நற்கருணை பெற்றுக் கொள்ளும் போது அவர் நமக்குள் வாசம் செய்வது மட்டுமன்றி நமது இரத்தத்தோடும் மாம்சத்தோடும் கலக்கின்றார். இத்தகைய அனுபவத்தையே புனித சின்னப்பர் “வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்” என்று குறிப்பிடுகின்றார்.

நம்மைப் பலப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் வாழ்விக்கவும் அன்றாடம் நமது குறை நிறைகளுடன் நம்மை வழிநடத்துபவராகவும் நம் ஆண்டவர் நம்முடனே வாழ்கிறார் என்பதை நாம் உறுதியாக விசுவாசிக்க வேண்டும்.

திவ்விய நற்கருணை என்பது வெறும் சடங்குகளுக்கு மட்டும் மட்டுப்படுத் தப்பட்ட ஒன்றல்ல. நற்கருணை ஆண்டவரின் தரிசனம் அதுவாகும். இதன் முக்கியத்துவத்தை ஆலயங்கள் திருப்பலிகள் உணர்த்தினாலும் தனி மனித வாழ்வில் இதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவானது.

நற்கருணை மீதான விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்க இம்முறை நற்கருணைப் பெருவிழா வழிவகுக்கட்டும்.

இம்முறையும் வழமை போன்று சகல பங்குகளிலும் திவ்விய நற்கருணைப் பெருவிழாவை யொட்டி பல வழிபாடுகளும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திவ்விய நற்கருணை திருமணித்தியால வழிபாடுகள், நற்கருணைப் பவனிகள் திருவிழா திருப்பலிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

யாழ். மறை மாவட்டத்தில் ஜூன் 2 ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு யாழ். நகரில் நற்கருணைப் பேரணியொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக மறை மாவட்டம் அறிவித்துள்ளது. கொழும்பிலும் மற்றும் சகல பகுதிகளிலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அத்துடன் பரிசுத்த திருத்தந்தையோடு இணைந்து உலகம் முழுவதும் இணைந்து ஒரே நேரத்தில் நற்கருணை ஆராதனையில் ஈடுபட மாபெரும் நிகழ்வொன்றுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நம்பிக்கை ஆண்டை பிரகடனப்படுத்திய எமது முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ற் இதன் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக இவ்வாண்டு ஜுன் மாதம் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்ற இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா அன்று உலகம் முழுவதிலும் ஒரே நேரத்தில் ஒரு சிறப்பான நற்கருணை ஆராதனை நடைபெற வேண்டுமென்று கேட்டிருந்தார்.

எமது நம்பிக்கை வாழ்வின் ஊற்றும் உறைவிடமுமாகிய நற்கருணைப் பிரசன்னத்தில் எமது நம்பிக்கையை ஆழப்படுத்தி வளர்ச்சிபெறுவதே இதன் நோக்கமாகும்.

இதன் பிரகாரம் எமது திருத்தந்தை பிரான்சிஸ் அன்றைய தினத்தில் வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் இறைமக்களோடு ஒன்றுகூடி உரோம் நகர நேரடிப்படி மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை நற்கருணை ஆராதனை நடாத்தவுள்ளார்.

திருத்தந்தை ஆராதனை செய்யும் அதே நேரத்தில் உலகம் முழுவதிலுமுள்ள எல்லா மறை மாவட்டங்களினதும் பேராலயங்களிலும், எல்லாப் பங்குகளின் ஆலயங்களிலும் இறைமக்கள் ஒன்று கூடி திருமணி ஆராதனையில் ஈடுபட அழைப்பு விடுத்து செயற்படுத்துமாறு நம்பிக்கை ஆண்டின் நிகழ்வுகளுக்கான செயலகம் எல்லா ஆயர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள அறிவுறுத்தலில் கேட்டு நிற்கின்றது.

மறை மாவட்ட இறை மக்களும் திருத்தந்தையோடு இணைந்து நற்கருணை ஆராதனையில் ஈடுபடுமாறு அவர் அழைப்பு விடுக்கின்றார். இதன்படி வருகிற ஜுன் மாதம் 2 ஆம் திகதி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை (உரோம் நகர நேரம் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை) எல்லா பங்குகளிலும் இறை மக்கள் ஒன்று கூடி நற்கருணைப் பிரசன்னத்தில் திருமணி ஆராதனை செய்ய ஆவன செய்யுமாறு பங்குத் தந்தையர்களை கேட்டுக் கொள்வதோடு, இவ் ஆராதனையில் பங்கு பற்றி திருத்தந்தை யோடும் உலகெங்குமுள்ள எல்லா இறைமக்களோடும் இணைந்து உலகத் திருச்சபை நம்பிக்கையில் உறுதிபெறுமாறு செபிக்க ஆர்வத்தோடு ஒன்று கூடுமாறு குருக்கள், துறவியர், பொது நிலையினர் அனைவரையும் அழைத்து நிற்கின்றார்.

பேதைமையை விட்டுவிடுங்கள்; வாழ்வடைவீர்கள்!

பேதைமையை விட்டுவிடுங்கள்; வாழ்வடைவீர்கள்!

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் சேசு சபைத் தலைவராக இருந்தவர் அருட்தந்தை பெட்ரோ அருப்பே என்பவர். அவர் ஜப்பானில் உள்ள ஹீரோசிமாவுக்கு அருகில் இருந்த குருமடத்தில் அதிபராக இருந்தபோது நடந்த நிகழ்வு.

 அருட்தந்தை அருப்பே குருமாணவர்களுக்கு அதிபராக இருந்த சமயத்தில் பக்கத்து ஊர்களில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வதும் மறைக்கல்வி கற்றுக்கொடுப்பதும் நோயாளிகளைச் சந்தித்து திவ்விய நற்கருணை வழங்குவதும் அவர்களுடைய ஆன்மீகக் காரியங்களைக் கவனித்துக் கொள்வதுமாக இருந்தார். இப்படிப்பட்ட தருணத்தில்தான் அமெரிக்க இராணுவம் ஹீரோசிமாவில் அணுகுண்டு வீசி, 80,000  பேருக்குள் மேல் கொன்றுபோட்டது, நிறையப் பேர் கை கால்களை இழந்து போனார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். இப்படி குண்டுவீச்சில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் ஒருவேளை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்றால், அவர்களுக்கு மருத்துவ உதவியைச் செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்காக ஜெபித்து, திவ்விய நற்கருணையையும் வழங்கி வந்தார்.

ஒருநாள் அவர் தன்னுடைய குருமடத்திற்கு அருகில் இருந்த ஒரு குடிசையில் சாகும் தருவாயில் இருந்த நகமுரா சன் (Nakamura San) என்னும் பனிரெண்டு வயது சிறுமிக்கு மருத்துவ உதவிகள் செய்து, திவ்விய நற்கருணை வழங்கச் சென்றார். அவர் அந்த சிறுமி இருந்த குடிசைக்குச் சென்று, அவளைப் பார்த்தபோது அவரை அறியாமலே அவருக்கு கண்ணில் கண்ணீர் வரத் தொடங்கியது. ஏனென்றால் அந்தச் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள், அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை, அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அந்தச் சிறுமி அருட்தந்தை அருப்பே அவர்கள் தன்னைச் சந்திக்க வருகின்றார், தனக்கு திவ்விய நற்கருணையை வழங்க இருக்கின்றார் என்பதை அறிந்து எழுந்து உட்காரத் தொடங்கினார். ஆனால், முடியவில்லை.

அப்போது அந்தச் சிறுமி அருட்தந்தை அவர்களைப் பார்த்து, “தந்தை அவர்களே! எனக்கு திவ்விய நற்கருனையைத் தாருங்கள். இதற்காகதான் நான் இவ்வளவு நாட்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருகின்றேன்” என்றாள். உடனே அருட்தந்தை அருட்பே அந்தச் சிறுமியின் அருகே அமர்ந்து, அவளுடைய உடலில் இருந்த காயங்களில் மருந்து தடவி கட்டுப்போட்டார். அவ்வாறு அவர் சிறுமியின் உடலில் இருந்த காயங்களைத் துடைத்தபோது, சதைகள் எல்லாம் பிய்த்துகொண்டு வந்தன. ஆனாலும் அவள் அந்த வேதனைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டாள். பின்னர் அவர் சிறுமிக்கு திவ்விய நற்கருணை வழங்கியபோது அவ்வளவு பயபக்தியோடு வாங்கினாள். அவள் நற்கருணை ஆண்டவர்மீது காட்டிய பக்தியைக் கண்டு, அருட்தந்தை அருப்பே அவர்கள், “பனிரெண்டு வயதே நிரம்பிய இந்த சிறுமிக்கு நற்கருணை ஆண்டவர்மீது இவ்வளவு பக்தியா?” என்று ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார். அவள் திவ்விய நற்கருணையை வாங்கிய சில நிமிடங்களுக்குள் அவளுடைய உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. இருந்தாலும் அவள் நற்கருணை ஆண்டவரை உட்கொண்ட நிறைவில் மனநிம்மதியோடு தன்னுடைய உயிரைத் துறந்தாள்.

சிறுமி நகமுரா சன் நற்கருணை ஆண்டவர் மீது கொண்ட பக்தி, நற்கருணை ஆண்டவருக்கு அவள் செலுத்திய வணக்கம் எல்லாம் உண்மையிலே நாம் அனைவரும் வியந்து பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ‘நாங்கள் அதிகம் படித்த மனிதர்கள், நாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்’ என்று தங்களைக் காட்டிக்கொள்ளும் ஒருசிலர் நற்கருணையில் ஆண்டவருடைய பிரசன்னத்தைக் கேள்விக்குள்ளாகும்போது பனிரெண்டே வயதான சிறுமி நகமுரா சன் நற்கருணை ஆண்டவர் மீது கொண்ட பக்தியும், அவள் அவருக்குச் செலுத்திய வணக்கமும் நாம் என்றுமே நினைத்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘பேதைமையை விட்டுவிடுங்கள், வாழ்வடைவீர்கள்’ என்னும் சிந்தனையைத் தருவதாக இருக்கின்றன. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பேதைமையை விட்டுவிடுங்கள் என்றால் எதைக் குறித்த பேதைமையை  விட்டுவிடவேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைய இறைவார்த்தையின் படி சிந்தித்துப் பார்த்தால் - நற்கருணையை - ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தம் குறித்த பேதைமையை விட்டுவிடவேண்டும் என்பதுதான் மிகவும் பொருத்தமான பதிலாக இருக்கும். ஏனென்றால் நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஞானம் “வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தை பருகுங்கள்; பேதைமையை விட்டு விடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்” என்று சொல்வதாக வாசிக்கின்றோம். ஆம், நம்மிடம் இருக்கின்ற ‘நற்கருணை குறித்த பேதைமையை விட்டுவிட்டு, நற்கருணையில் ஆண்டவர் இயேசு உண்மையாகவே பிரசன்னமாக இருக்கின்றார் என்று நம்புகின்றபோது வாழ்வடைவோம் என்பது உறுதி.

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட, “ஞானமற்றவர்களாய் ஞானத்தோடு வாழுங்கள்; அறிவிலிகளாய் இல்லாமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள்” என்றுதான் வாசிக்கின்றோம். அப்படியானால், ஆண்டவர் இயேசு நற்கருணையில் பிரசன்னமாக இருக்கின்றார் என்று அறிவதே ஞானம், அந்த நற்கருணை ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதே வாழ்விற்கான வழி என்பதைப் புரிந்துகொண்டு வாழவேண்டும். இன்றைக்குப் பலர் (அன்றைக்கும் கூட ஒருசிலர்) நற்கருணையில் ஆண்டவர் இருக்கின்றா? அல்லது இயேசு எப்படி தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் நமது உணவாகவும் இரத்தமாகவும் தருகின்றார் என்றதொரு கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்கள் அனைவரும் பேதைமையில், அறிவிலிகளாக இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. எனவே, அவர்கள் நற்கருணையில் ஆண்டவர் இயேசு உடலோடும் ஆன்மாவோடும் பிரசன்னமாக இருக்கின்றார் என்று நம்பவதுதான் வாழ்விற்கான வழி என நாம் உறுதியாகச் சொல்லலாம்.

நற்கருணையில் ஆண்டவர் இயேசு உண்மையில் பிரசன்னமாக இருக்கின்றார் என்று நம்பினால் மட்டும் போதுமா? அதுவே நமக்கு வாழ்வினைப் பெற்றுத் தந்துவிடுமா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுகின்றார், “மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வடைய மாட்டீர்கள்” என்று. இயேசுவின் சதையை உண்டு, இரத்தத்தைக் குடித்தல் என்பது, இயேசுவாகவே வாழ்வதாகவும். இயேசுவாகவே நாம் வாழ்கின்றபோது நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘You are what you eat” என்று. அதாவது நாம் எதை உட்கொள்கின்றோமோ அதுவாகவே  மாறுகின்றோம் என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்கின்றது. இயேசுவின் உடலை ஒவ்வொருநாளும் நற்கருணை வடிவில் உட்கொள்ளக்கூடிய  நாம் இயேசுவாகவே மாறி இருக்கவேண்டும். ஆனால், நாம் இயேசுவாக மாறவில்லை என்பது இங்கே பிரச்சனையாக இருக்கின்றது. இயேசுவின் உடலை உட்கொண்டு இயேசுவாக மாறாததற்கு நம்முடைய பலவீனங்கள், குறைபாடுகள், கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப வாழாததுதான் காரணமாக இருக்கின்றன. ஆகவே. நம் நம்முடைய பலவீனங்களை, குற்றங்குறைகளைப் போக்கி ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையை வாழ்வாக்குகின்றபோது நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை வாழ்வாக்குகின்றோமா என்பது  சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு கேள்வியாக இருக்கின்றது.

மிகச் சிறந்த மறைபோதகரான பில்லி கிரஹாம் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒருசமயம் பில்லி கிரஹாம் தில்லிக்கு வந்திருந்தபோது, அங்கு அவரைச் சந்தித்த இந்து சமயத்தைச் சார்ந்த ஒரு நபர், “நான் மட்டும் இயேசுவின் போதனைக்கேற்ப வாழ்கின்ற ஒரே ஒரு மனிதரைப் பார்த்தால் போதும், உடனே நான் கிறிஸ்தவராக மாறிவிடுவேன்” என்றார். அதற்கு பில்லி கிரஹாம் அவரிடம், “யாராவது ஓர் உண்மையான கிறிஸ்தவர் உங்களுடைய பார்வைக்குக் கிட்டாமலா போய்விடுவார், அப்போது நிச்சயம் நீங்கள் கிறிஸ்தவர் ஆவீர்கள்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.

நாட்கள் நகர்ந்தன. பில்லி கிரஹாம் சில மாதங்கள் தில்லியில் தங்கியிருந்து நற்செய்தியை அறிவித்து வந்தார். அவரைக் கூர்ந்து கவனித்து வந்த அந்த இந்து நபர், அவருடைய வாழ்க்கையால் தொடப்பட்டார், ‘இவரல்லவா உண்மையான கிறிஸ்தவர், இவரைத்தானே நாம் இத்தனை நாட்களும் தேடிக்கொண்டு இருக்கின்றோம்’ என்று மனதிற்குள்ளே நினைத்தவராய், அவரிடம் சென்று, “நான் இத்தனை நாட்களும் தேடியலைந்த உண்மையான கிறிஸ்தவர், வாழும் நற்செய்தி நீங்கள்தான்” என்று சொல்லி, திருமுழுக்குப் பெற்று  கிறிஸ்தவராக வாழத் தொடங்கினார். நாம் இயேசுவின் போதனைகளை வாழ்வாக்குகின்றபோது, அவ்வாழ்க்கை பலரையும் இயேசுவுக்குள் கொண்டு வந்துசேர்க்கும் அப்போது நாம் மட்டுமல்லாமல், அவர்களும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள் என்பது உறுதி.

ஆம், இயேசுவின் உடலை உட்கொண்டு அவருடைய இரத்தத்தைக் குடிப்பது என்பது அவராக வாழ்வது, அவரோடு இணைந்திருப்பது, நிலவாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கு இணையானது.

எனவே, நாம் நற்கருனையைக் கருத்த ஐயத்தை, பேதைமையான எண்ணங்களைத் தவிர்ப்போம். ஆண்டவர் இயேசு நற்கருணையில் உண்மையாகவே பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை நம்புவோம், நம்பியதை வாழ்வாக்குவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.