அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, January 2, 2018

நான் என்ன தர....

நான் என்ன தர....

குடிலின் உறுப்பினர்களோடு ஒரு உரையாடல்.....

 நான் ;வாங்க...வாங்க....பாலனுக்கு நீங்க என்ன தரப் போறீங்க ?

 கழுதை ; துணிகளை சுமந்து பொதிந்து தரட்டுமா?

 காளை ; என் உழைப்பின் பலனை அர்ப்பணிக்கவா ?

 ஆட்டுக் குட்டி; துள்ளித் துள்ளிக் குதித்து பாலனை மகிழ்ச்சிப்படுத்தவா?

 ஒட்டகம் ; திருக்குடும்பத்தை சுமந்து செல்லட்டுமா ?

 புல் ; பாலன் நிழலை சுற்றி அழகு படுத்தவா ?

 பனி ; நீர் துளிகளை குறைத்து இதமளிக்கவா ?

 கூரை ; திருக்குடும்பம் நடுங்காமலிருக்க குளிரை தாங்கிக் கொள்ளவா ?

 மலைத் தாள்;
வண்ணம் தந்து பாலன் எண்ணம் கவரவா ?

 வண்ண விளக்குகள்; மின்மினியாய் அணைந்து எரிந்து கண் சிமிட்டவா ?

 நட்சத்திரம் ; உயரே நின்று உறவைப் பாடவா ?

 மண் ; பாலன் நடக்க பூக்களை  அள்ளிப் போடவா ?

எல்லாம் திரும்பி என்னைப் பார்த்து...

 அப்ப நீங்க பாலனுக்கு என்ன தரப் போறீங்க.....?

பதில்.............


அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709008

No comments:

Post a Comment