அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, January 2, 2018

*ஆண்டவரே... ஆனந்த ஒளியே....*

*ஆண்டவரே...
ஆனந்த ஒளியே....*

ஆதி மோசேயின் சட்டப்படியே
ஆலயம் நாடியே...
ஆண் தலைப்பேறு
ஆண்டவருக்கே என்றே
ஆங்கே புறாக்கள்
ஆசையாய் தந்தனரே...

ஆண்டவர் வாக்கறிந்த
ஆனந்த சிமியோன்
ஆறுதலை எதிர்நோக்கியவராமே...

ஆவியின் வரம்
ஆட்கொண்ட அவருமே
ஆள்பரை கண்ணால்கண்டாரே
ஆகையால் மகிழ்வடைந்தாரே.

ஆண்டவரை கையிலேந்தி
ஆகாயத்தை பார்த்தே
ஆனந்தக் கண்ணீர் வடித்தாரே

"ஆண்டவரே உம்மை ஏந்திய
ஆறுயிரை அமைதியுடன்
ஆற்றுப் படுத்திடுமே..
ஆசையுடன் காத்திருந்த
ஆண்டவரை என் கண்கள்
ஆராதித்து விட்டனவே...
ஆவலுடன் கண்ட உலக ஒளியே
ஆதரவாம் இஸ்ரயேலின்
ஆனந்தப் பெருமையே என்றே
ஆசீர் வழங்கினாரே"....

ஆகட்டும் என்ற அன்னையும்
ஆராயாத தந்தையும்
ஆச்சரியமடைந்தனரே...

"ஆளவந்த அரசர் பலரின்
ஆசீராகவும்,வீழ்ச்சியாகவும்
ஆகிடுவார் என்றுரைத்து
ஆழ் மனதில் இருத்தும்படியாய்
ஆற்றொண்ணா துன்ப வாள்
ஆட் கொள்ளும்"என்றே பகர்ந்தாரே....

லூக் 2:3-11

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

No comments:

Post a Comment